சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். அந்த பதிவு:
மிகச் சிறந்த..மிகச் சிறந்த…இரவாக இருக்கப் போகிறது இன்று. சென்னை மற்றும் வட மாவட்டங்களும் மற்றும் டெல்டா வரை உள்ள பகுதிகளும் கன மழை பெறும் வாய்ப்புகளை வெளிநாட்டு வானிலை முன் அறிவிப்பு மையங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இந்த மழை பரவலாகவும் மற்றும் தீவிர மழையாகவும் இருக்க போகிறது என்று வெளிநாட்டு வானிலை முன் அறிவிப்பு மையங்கள் சொல்கின்றன.(இந்த தென்மேற்கு பருவ மழை காலத்தில்).
நான் 1000% உறுதியான மழை என்ற வார்த்தையை உபயோகிக்க விரும்ப வில்லை. ஆனால் இன்று இரவு சென்னையும் மற்றும் வட மாவட்டங்களும் அந்த அளவுக்கு உறுதியான மழை பெறப் போகின்றன என்று கூறுகிறேன். நேற்று மாதிரியே அனைத்து அறிகுறிகளும் சரியாகவே இருக்கின்றன. இன்று கடல் காற்று 50 கிலோ மீட்டர் உள்ளே வந்து விட்டது. வேலூரில் இருந்து வரும் மேகங்கள் கடல் காற்றோடு கலக்க தயாராக இருக்கிறது.
சென்னையில் இன்று இரவு மழை ஆரம்பிக்க இருக்கிறது. அதாவது முக்கிய மழை மேகங்கள் சென்னை நகரை கடக்கும் வரை தீவிர மழை பெய்து கொண்டே இருக்கும். இன்று இரவு சென்னை நகர மக்கள் இயற்கை கொடுக்கும் ஏர் கண்டிஷனரை உபயோகிக்க தயாராக இருங்கள்.
இந்த மழையை அனுபவிக்க தயாராக இருங்கள்.