உலக புத்தக தினத்தை ஒட்டி 50% வரையிலான சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளன பதிப்பகங்கள்.
சினிமா தொடர்பான நூல்களை வெளியிடும் பேசாமொழி பதிப்பகம்:
உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 22, 23 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களும் பியூர் சினிமா புத்தக அங்காடியில் பேசாமொழி பதிப்பக புத்தகங்கள்(மிஷ்கின், வஸந்த், சாரு நிவேதிதா, விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்) புத்தகங்கள் அனைத்தும் 50 சதவீத கழிவிலும், மற்ற பதிப்பக புத்தகங்கள் 15 சதவீத கழிவிலும் விற்பனைக்கு கிடைக்கும்.
முற்போக்கு-ஈழம் தொடர்பான நூல்களை வெளியிட்டு வரும் புலம் வெளியீட்டகம்:
உலக புத்தக தினத்தை ஒட்டி புலம் நூல்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி. ஏப்ரல் 21 முதல் 23 வரை இச்சலுகை. வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் வருக!
புலம், 97/55, நாத்திகம் கட்டிடம், ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், (கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில்)
தொடர்புக்கு: 9840603499/ 9840974053
உலக புத்தக தினத்தை முன்னிட்டு உயிர்மை நூல்களை 30% சிறப்பு தள்ளுபடியில் உயிர்மை அலுவலகத்தில் பெறலாம் . ஏப்ரல் 20 முதல் 23 இச்சலுகை.. வெளியூர் வாசகர்களுக்கும் இச்சலுகை உண்டு. உள்ளூரில் இருப்பவர்கள் உயிர்மை, 11/29 சுப்ரமணியன் தெரு, அபிராமபுரம், சென்னை – 18 என்ற முகவரிக்கு நேரில் வரலாம். வெளியூர் வாசகர்கள் uyirmmai@gmail.com என்ற முகவரிக்கு எழுதினால் நூல் பட்டியல அனுப்புகிறோம். பணம் செலுத்தும் முறையும் தெரிவுக்கப்படும். தொலைபேசி எண்: 044- 24993448, அலைபேசி எண்: 9003218208
எதிர் வெளியீடு:
ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படும் உலக புத்தக தினத்தை முன்னிட்டு எதிர் வெளியீடு புத்தகங்களுக்கு சிறப்பு சலுகை. எதிர் வெளியீடு புத்தகங்களை 50% கழிவிலும் பிற பதிப்பகங்களின் புத்தகங்களை 10% முதல் 30% கழிவிலும்
பெற்றுக்கொள்ளலாம்.
இச்சலுகையை உங்களுடைய நண்பர்கள் மற்றும் தெரிந்த வாசகர்களிடம் தெரிவித்து அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வெளியூர் வாசகர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்களின் புத்தக தேவையை தெரியப்படுத்தலாம். தபால் செலவு தனி.
தொடர்புகளுக்கு : 04259 226012, 99425 11302