தமிழில் வட்டார வழக்குச் சொல்லகராதியினை முதலில் உருவாக்கியவர், தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லி, மக்கள்மொழியின் வழிகாட்டி, கடித இலக்கியத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர், நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்தவர் நாவலாசிரியர் கி.ரா என்றழைக்கப்படும் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப்பெருமாள் ராமானுஜன் நேற்றிரவு (17.05.2021) புதுச்சேரியில் காலமானார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகேயுள்ள இடைசெவல் என்ற சிற்றூரில் பிறந்தவர் கி.ராஜநாராயணன். அடிப்படையில் இவர் ஒரு விவசாயி. முப்பத்தைந்து வயசுக்குப் பிறகு எழுத ஆரம்பித்து தமிழ் இலக்கியத்தில் உன்னதமான இடத்தைப் பிடித்தவர். தமிழ் இலக்கியவெளியை ஆக்கிரமித்திருந்த … Continue reading கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா : தமுஎகச புகழஞ்சலி
ஆசிரியர்: timestamil
அதிமுகவின் வெற்றிகரமான தோல்விக்கு என்ன காரணம்? | அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன் இந்த மீம்ஸ் சிரிக்க வைத்தது போல உண்மையான காரணம் குறித்தும் சிந்திக்க வைப்பதாக உள்ளது.. இருநூறு தொகுதிக்கு மேலே வென்று திமுக கூட்டணி கிளீன் ஸ்வீப் செய்யும் என எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையிலே சுமார் 160 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றிருப்பதும் சுமார் 75 தொகுதிகளில் அஇஅதிமுக முன்னிலை பெற்றுள்ளதும் எடப்பாடி ஆட்சிக்கு ஒரு வெற்றிகரமான தோல்வியாக அமைகிறது.அதிமுகவில் ஜெயலலிதா இல்லாமல், பத்தாண்டு கால ஆளும்கட்சி எதிர்ப்புணர்வை எதிர்கொண்டும், பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்தும் பாஜகவை … Continue reading அதிமுகவின் வெற்றிகரமான தோல்விக்கு என்ன காரணம்? | அருண் நெடுஞ்செழியன்
கோவிட் இரண்டாம் அலை: என்னென்ன உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்? மரு. கு. சிவராமன்
மரு. கு. சிவராமன் கோவிட் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடிவருகிறது. ஒருபக்கம் ஊரடங்கு, வாக்சின் என பல முனைப்புகளை அரசும் எடுத்து வருகின்றது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெடம்சவிர் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என பயமுறுத்தும் விஷயங்களும் கூடவே..மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு முன்களத்தில் நிற்கும் அத்தனை மருத்துவ கார்பரேஷன் காவல் பணியாளர்களுக்கு உள்ள கடும் பணிச்சுமை நெருக்கடி... நம்மளவில் நாம் அக்கறையோடு இருக்க வேண்டிய சூழல் இது. நாம் அக்கறையாக இருந்தால் மட்டுமே அவர்களின் சுமை குறையும். முக … Continue reading கோவிட் இரண்டாம் அலை: என்னென்ன உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்? மரு. கு. சிவராமன்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் சிகிச்சையை விட்டுக்கொடுத்து மரணித்தாரா? உண்மை என்ன?
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 85 வயதான ஆர். எஸ். எஸ். அமைப்பைச் சேர்ந்த நாராயண்ராவ் தபாட்கர் என்ற முதியவர், 40 வயதான ஆண் ஒருவருக்கு சிகிச்சைக்காக தன் படுக்கையை விட்டுக்கொடுத்ததாகவும், வீடு திரும்பிய அவர் மூன்று நாட்களில் உயிரிழந்ததாகவும் சமூக ஊடகங்களில் வெகுஜென ஊடகங்களில் செய்தி வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த செய்தியை முதன்முதலில் அறிக்கையாக வெளியிட்டது ஆர். எஸ். எஸ் அமைப்பு. அந்த அறிக்கையில், “இந்திரா காந்தி ருக்னலே மருத்துவமனையில் நாராயண் படுக்கைகள் நிரம்பிய … Continue reading ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் சிகிச்சையை விட்டுக்கொடுத்து மரணித்தாரா? உண்மை என்ன?
ஒருவர்கூட உதவிக்கு வரவில்லை | இறந்த மனைவியை சைக்கிளில் எடுத்து சென்ற முதியவர்: உ.பி. அவலம்!
உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டம் மதியாரு கோத்வாலி பகுதியில் உள்ள அம்பேர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலக்தாரி சிங், இவருடைய 50 வயது மனைவி பல நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் உமாநாத் சிங் மாவட்ட மருத்துவமனையில் கிசிக்கைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த திங்களன்று அவருடைய மனைவியின் உடல்நிலை மோசமடைந்தது. சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததால் ஆம்புலன்ஸில் ஏற்றி அப்பெண்ணின் உடலை அவருடைய கிராமத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பிவைத்தது. இதனிடையே திலக்தாரி சிங்கின் மனைவியின் மரணத்திற்கு துக்கம் … Continue reading ஒருவர்கூட உதவிக்கு வரவில்லை | இறந்த மனைவியை சைக்கிளில் எடுத்து சென்ற முதியவர்: உ.பி. அவலம்!
கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்?
அதிகம் கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 1. கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்?கொரோனா பாதிக்கப்பட்டு சாதாரண அறிகுறிகள் இருப்பவர் வீட்டில் கழிப்பறையுடன் கூடிய அறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம் 14 நாட்கள்.தனிமைப்படுத்திக்கொண்டவரிடம் ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர் இருக்க வேண்டும். அவரது ஆக்சிஜன் அளவுகளை சோதிக்க வேண்டும். எப்போதும் 94-95% க்கு மேல் இருக்க வேண்டும்.தினமும் மூன்று வேளை காலை, மதியம், இரவு, ஆறு நிமிடம் நடந்து விட்டு … Continue reading கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்?
நாம் நாஜியா? சீமான் காரில் ஹிட்லரின் சுயசரிதை?
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஹிட்லரின் கருத்துக்களை பரப்பி வருவதாகவும் ஹிட்லரின் கொள்கைகளை தமிழ் இளைஞர்களிடம் திணித்து வருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதை மெய்ப்பிக்கும் விதமாக ஹிட்லரின் சுயசரிதையை தனது காரில் சீமான் வைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பத்திரிகையாளர் இலியாஸ் அகமது, ‘வெறும் 1000 ரூபாய் வருமானம் ஈட்டி, தமிழ்நாட்டில் நாஸிசத்தைப் பரப்ப Isuzu காரில் வலம்வருகிறார் அண்ணன் சீமான். படத்தில் இருப்பது சீமானின் காரில் எப்போதும் இருக்கும் … Continue reading நாம் நாஜியா? சீமான் காரில் ஹிட்லரின் சுயசரிதை?
சினிமாவில் நடிக்க உதயநிதி ரூ. 30 ஆயிரம்தான் சம்பளம் வாங்கினாரா?
நரேன் ராஜகோபாலன்முட்டாளாக போகும் தமிழக வாக்காளனுக்கு, ஒன்றும் செய்ய முடியாத, கையறு நிலையில் இருக்கும் ஒரு தமிழ்நாட்டு குடிமகன் எழுதுவது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திமுக வேட்பாளரும், இளைஞரணி தலைவருமான திரு. எஸ். உதயநிதி வேட்பு மனு தாக்கலின் போது சமர்பித்த affidavit விவரங்களை நேற்று பதிந்து இருந்தேன். சிரிக்கிறதுக்கான மேட்டர் இல்லை அது, ரொம்ப சீரியசான மேட்டர். உதயநிதி சமர்ப்பித்ததில் அவருடைய வருவாய் ரூ. 1,50,17,700 (2017-18) ரூ. 4,00,090 (2018-19) ரூ. 4,89,520 (2019-20) என்று சொல்லப்பட்டு … Continue reading சினிமாவில் நடிக்க உதயநிதி ரூ. 30 ஆயிரம்தான் சம்பளம் வாங்கினாரா?
ஸொமேட்டோ ஊழியர் பெண்ணை தாக்கினாரா? எது உண்மை?
ராஜசங்கீதன்ஹிதேஷா என்கிற ஒரு பெண் ஒரு காணொளி பதிவிடுகிறார். உணவு ஆர்டர் செய்ததாகவும் அதை டெலிவரி செய்ய வந்தவர் தாமதமாக வந்ததாகவும் அதன் காரணமாக Zomato Customer Care-ல் புகாரளித்து விட்டு பதில் வரும் வரை உணவு கொண்டு வந்தவரை காத்திருக்க சொன்னதாகவும் அது விவாதமாக டெலிவரி கொண்டு வந்தவர் அவர் மூக்கில் குத்தி விட்டதாகவும் மூக்கில் ரத்தம் வடியும் காட்சியையும் உள்ளிட்டு பேசியிருந்தார்.ஹிதேஷா சமூக தளங்களில் influencer ரகத்தை சேர்ந்தவர் என்பதால் காணொளி வைரல் ஆகியிருக்கிறது. … Continue reading ஸொமேட்டோ ஊழியர் பெண்ணை தாக்கினாரா? எது உண்மை?
“போயி வேற வேலை பாருங்கடா”!: காட்டமான விஜய் சேதுபதி
சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளின் பின்னணிக்கு கிறித்தவ மதமாற்ற நடவடிக்கைகளே காரணம் என பாஜக தரப்பினர் சொல்லி வந்தனர். நடிகர் விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் விஜய் சேதுபதி.
பழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI!
முதுமலை யானை முகாமுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணிகளை அகற்றச் சொன்னார். இது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். சிறுவன் காவல்நிலையத்தில் அமைச்சரின் செயல் குறித்து புகார் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் சிறுவன் குடும்பத்தினரை அழைத்து நேரில் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், சுயமரியாதை குறித்து அறியாத அமைச்சருக்கு பெரியாரின் சுயமரியாதை நூல்களை அனுப்பியுள்ளதாக கூறியுள்ளது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். https://twitter.com/DyfiNadu/status/1225678606291963905?s=20
‘விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்!
அண்மையில் நடிகர் விஜய் தொடர்புடைய தயாரிப்பாளர், ஃபைனான்சியர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நடிகர் விஜய்யிடம் அவருடைய குடும்பத்தாரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விஜய் - பாஜக மோதல் ஒரு காரணம் என சொல்லப்பட்டாலும், ஒரு சிலர் விஜய் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே பாஜக அரசின் கோபத்துக்குக் காரணம் என சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், பாஜக ஆதரவாளரான மாரிதாஸ், “திரைத்துறை கிறிஸ்தவ மதமாற்றும் கூட்டத்தின் பிடியில் வலுவாகச் சிக்கியுள்ளது. தமிழன் என்று அந்த கூட்டம் தன் … Continue reading ‘விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்!
“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா?”
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெசண்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கைது செய்தது தமிழக போலீசு. கைதானபோது போராட்டத்தில் ஈடுபட்ட மதன்குமார் உள்ளிட்டோர் "வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா?" என முழக்கம் எழுப்பினர். https://www.facebook.com/madhankumar.madhankumar.376/videos/1708861345917723/
“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”
ஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள்? பதில்: கௌகாத்தி பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி, படித்தேன். முதலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்திலும், பின்பு இளைஞர் பெருமன்றத்தி்லும் பணியாற்றினேன். அப்போது இருந்த தலைவர்கள் … Continue reading “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”
மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். இதை மங்களூரு போலீசு உறுதி செய்துள்ளது. https://twitter.com/IndiaToday/status/1207686276167749632?s=20 போராட்டங்களை அடுத்து மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை களைக்க போலீசார் முதலில் தடியடி நடத்தியதாகவும், பின்னர் போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. கல்வீச்சு சம்பவங்களை தடுக்க துப்பாக்குச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் இருவர் பலியானதாகவும் போலீசு தரப்பு கூறுகிறது. இந்த பலிக்கு … Continue reading மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு
“திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?”
டிசம்பர் 15-ஆம் தேதி, ஜார்க்கண்டில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கலவரக்காரர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும்” என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது இசுலாமியர்களுக்கு எதிரானது என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெடித்த நேரத்தில் மோடியின் பேச்சு அதை உறுதி செய்யும்வகையில் இருந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு, சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கொச்சியில் போராட்டம் நடத்தியபோது. ஒரு இளம்பெண் பிடித்திருந்த பதாகை அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. 18 … Continue reading “திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?”
பாகிஸ்தானில் இருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் போராடுகிறார்கள்: மாலன்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் நடக்கும் போராட்டங்கள், ‘பாகிஸ்தானிலிருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் என பத்திரிகையாளரும் மோடி அரசின் ஆதரவாளருமான மாலன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த போராட்டங்கள் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மாலன், ‘இந்தியாவில் இருக்கும் முசுலீம்களுக்கு பிரச்சினை இல்லை. எதிர்கால சந்ததியினருக்கும் பிரச்சினை இல்லை. பாகிஸ்தானில் இருந்துவரக்கூடிய இசுலாமியார்களுக்குத்தான் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. காங்கிரஸ் கட்சி இவங்களுக்கு ஏன் குடியுரிமை கொடுக்கவில்லை என்றுதான் போராடுகிறது’ என்றார் … Continue reading பாகிஸ்தானில் இருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் போராடுகிறார்கள்: மாலன்
‘இரண்டு குஜராத்தி குண்டர்கள்’: மோடி – ஷாவை விமர்சித்தவர் பாஜகவிலிருந்து நீக்கம்!
இந்தி பேசும் மாநில மக்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக இரண்டு குஜராத்தி குண்டர்கள் ஏமாற்றி வருகிறார்கள்
இவர்களின் வாழ்தலுக்கான போராட்டத்தை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?
சிவபாலன் இளங்கோவன் ஒட்டுமொத்த மாணவர்களின் போராட்டத்தின் முகமாக இருக்கும் அந்த பர்தா அணிந்த, கண்ணாடிபோட்ட பெண்ணிடம் பத்திரிக்கையாளர் “எதற்காக இந்த போராட்டம்” என கேட்கும்போது, அந்த பெண் ஒரே வார்த்தை தான் அதற்கு பதிலாய் சொல்கிறாள் “For existence”. இதை சொல்லும்போது அவள் அத்தனை பதட்டமாக இருக்கிறாள். அவளது கரங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டு ‘பயப்பட வேண்டாம்’ என சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் பயப்பட வேண்டாமா? “survival” ஐ தவிர மனிதனுக்கு வேறு என்ன தலையாக … Continue reading இவர்களின் வாழ்தலுக்கான போராட்டத்தை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?
ஜெலட்டின் குச்சி!
ரத்தவெறி கொண்டவர்கள் நாக்கை சப்புக்கொட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள்!
குடியுரிமை திருத்த சட்டம்: ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் அரசியலின் புதிய வடிவம்!
முருகானந்தம் இராமசாமி குடியுரிமை திருத்த சட்ட மசோதா ஒரு கொள்ளிக்கட்டையில் தலையைச்சொரியும் வேலை என நினைத்தேன். அதுவும் மயிருள்ள மண்டையிருந்தால் கூட பரவாயில்லை. அதுவுமில்லை என்றால் கபாலம் வரை கிர்ரென்று இறங்கத்தான் செய்யும். மண்டை மேல்மாடி காலியாயிருப்பது கூட பிரச்சனையில்லை. மண்டைக்குள்ளும் சரக்கில்லை என்பவன் இதைச்செய்யாமலிருந்தால்தான் அதிசயம். வங்கதேசத்திலிருந்து வரும் அகதிகளால் பெரிய பிரச்சனை என்பது சங்கிகள் வெகுகாலமாக இடும் ஊளை. காரணம் அவர்கள் பெரிதும் இஸ்லாமியர்கள் என்பது அவர்களின் கணிப்பு. எனவே வேகமாக ஊளையிட்டார்கள். வங்கதேசத்துடனான … Continue reading குடியுரிமை திருத்த சட்டம்: ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் அரசியலின் புதிய வடிவம்!
#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்!
பார்வையற்றவன் இலவசம்! இலவசம்! நான் எழுதி அமேசானில் வெளியிட்ட நூதன பிச்சைக்காரர்கள் நாடகத்தை இன்று மதியம் ஒரு மணியிலிருந்து நாளை நண்பகல் 12 59 வரை இலவசமாகப் தரவிறக்கிக் கொள்ளலாம். இதுதான் இந்த போஸ்டின் முக்கிய செய்தி. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இதனைத் தொடர்ந்து நீண்ட write-up ஒன்று இருக்கிறது. சில வரிகளை மட்டும் வாசிக்கும் அன்பர்களுக்காக போஸ்டின் மெயின் மேட்டரை மேலே குறிப்பிட்டு விட்டேன். பார்வையற்றவர்களுக்கு என்று எழுத்துக் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 200 ஆண்டுகள் … Continue reading #pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்!
தெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி!
இன்னும் சொன்னால் குற்றவாளிகளும், குற்றங்களுமே சமூகத்தின் உள்ளார்ந்த ஆன்ம நலத்தை பிரதிபலிக்கிறார்கள். a crime gives us the insight in to the cross section of a society's mental wellness. இதை நாம் ஆராய தொடங்கினால் மொத்தமாக இந்தியாவின் மீது அணுகுண்டு போட்டு அழிக்க வேண்டிய முடிவிற்கு நம்மை கொண்டு போய் நிறுத்தும்.
நூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’
இது ஒரு 'நவீன இதழியல் கையேடு.
“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி
“சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா?”, “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விசயதுள்ள நீங்க தலையிட கூடாது” இந்த இரண்டு கேள்விகள் திரும்ப திரும்ப தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி. மேட்டுப்பாளையத்தில் 2.12.19 காலை இருபது அடி உயரம் உள்ள சுவர் இடிந்து விழுந்து 17பேர் என்ன நடந்தது என்று எதனையும் யூகிக்கும் முன்பே கொடுரமான மரணத்தை சந்தித்துள்ள சூழலில் அவை அனைத்தையும் வேறு பக்கம் திருப்பிவிடும் வேலையை … Continue reading “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி
இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?
இரா. முருகவேள் மேட்டுப்பாளையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள் படுமோசமானவையாக உள்ளன. அது ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமல்ல. மேட்டுப்பாளையத்திலேயே வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியையும், அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும் பிரிந்த்து எழுப்பப்பட்டிருந்த சுவருமாகும். அருந்ததிய மக்கள் லே அவுட் சாலைகளில் நடமாடுவதைத் தடை செய்யவே அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவர் இது. மேட்டுப்பாளையத்தில் ஒரு கூட்டுறவு சங்கம் லேஅவுட் அமைத்த போது பெரும் பணக்காரர்கள் இங்கே வந்து குவிந்தனர். லேவுட்டுக்கு … Continue reading இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?
BSNL நட்டத்துக்கு என்ன காரணம்? முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்
தேசியத் தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் (NFTE) பல்வேறு பொறுப்புகளில் 39 ஆண்டுகள் இருந்தவர் ஆர்.பட்டாபிராமன். 63 வயதாகும் ஓய்வுபெற்ற தொலைபேசித் தொழிலாளியான இவர் ஒரு சிந்தனையாளர்; காத்திரமான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். 'நவீன சிந்தனையின் இந்திய பன்முகங்கள்' என்ற இவரது நூல் தற்போது வெளிவந்துள்ளது. 'Ideas of O.P.Gupta' என்ற நூலின் தொகுப்பு ஆசிரியர். இந்த நேர்காணலில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-ன் நெருக்கடி பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசுகிறார். தடைம்ஸ் தமிழ்.காமிற்காக இந்த நேர்காணலை செய்தவர் பீட்டர் … Continue reading BSNL நட்டத்துக்கு என்ன காரணம்? முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்
நூல் அறிமுகம்: ‘சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் – தொடரும் விவாதம்’
ரங்கநாயகம்மா எழுதிய 'சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கர் போதாது,மார்கஸ் அவசியத் தேவை' என்ற நூலை கொற்றவை மொழிபெயர்ப்பு செய்தார். இந்த நூலுக்கு வந்த எதிர்வினைகள் ஏராளம். கொற்றவை இந்த நூலின் மொழிபெயர்ப்பாளர்தான் ஆனாலும் அடிப்படையில் அவர் ஒரு சமூக செயற்பாட்டாளர். எனவே அந்த நூலை மையப்படுத்தி எழுந்த விவாதங்களை தொடர்ந்து நடத்த விரும்பியிருக்கக் கூடும். எனவே ஏறக்குறைய அதன் அடுத்த பாகமாக இந்த நூலை கொற்றவை தொகுத்து, மொழிபெயர்த்துள்ளார் போலும். குறளி பதிப்பகம்தான் இந்த … Continue reading நூல் அறிமுகம்: ‘சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் – தொடரும் விவாதம்’
“ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி?”
டாக்டர். ஷாலினி டாக்டர். தொல் திருமாவளவன் கோயில்களின் ஆபாச சிலைகளை பற்றி விமர்சித்தார். அதற்கு காயத்ரி ரகுராம் என்பவர், அது ஹிந்து மதத்திற்கு எதிரானது என்று, தொ. திரு. வின் விரைகளை பற்றி பேசினார். அதாவது ஆபாசத்திற்கு எதிரான புகாருக்கு பதில் இன்னும் கொஞ்சம் ஆபாசம். அதற்கு பிறகு ரொம்பவும் விசித்திரமாக அவர் பா ம காவின் தலைவர் டாக்டர் ராமதாஸுக்கு தூது அனுப்பி, அடியாள் வேண்டும் என்று வெளிபடையாகவே கேட்கிறார். இந்த காயத்ரி மாதிரி டுபுக்குக்கள் … Continue reading “ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி?”
ஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்!
படம் 1: ஐஐடி உணவுக்கூடத்தில் அசைவம் சாப்பிடுவோருக்கு மட்டும் எதிராக எழுதப்பட்ட #அதர்மம். படம் 2: #ஐஐடிசைவங்கள் இருவகைப்படும். 'வெங்காயம்-பூண்டு இல்லா சைவம்' அதில் ஒருவகை. இரண்டு சைவத்துக்கும் தனித்தனி உணவுக்கூடம். படம் 3: அசைவம்/சைவம் சாப்பிடும் இடம்தான் தனித்தனியாக பார்த்திருக்கிறேன்... ஆனால், #கைகழுவுமிடமும் #தனித்தனியாக ஐஐடியில்தான் காண்கிறேன். இதில் இரண்டை கேள்விக்குட்படுத்தி கொஞ்சம் சிந்திப்போம்: அசைவதுக்கு எதிராக மட்டும் வைக்கப்பட்டது போல... பூண்டு-வெங்காயத்துக்கு எதிரான ஏதேனும் ஒரு வாசகம், அதை சாப்பிடும் இடத்தில் ஏதுமில்லையே ஏன்..? … Continue reading ஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்!
அருண்மொழி: ஒரு நினைவாஞ்சலி – வெங்கடேஷ் சக்ரவர்த்தி
சில நாட்களுக்கு முன் ஒளிப்பதிவாளர், இயக்குநர், திரைக்கல்வி ஆசிரியர், குறிப்பாக மாற்று திரைப்பட கலாச்சாரத்திற்காக அயராமல் செயல்புரிந்த அருண்மொழி அவர்கள் திடீரென்று நம்மிடமிருந்து விடைப்பெற்று சென்றுவிட்டார். நாற்பது ஆண்டுகால நண்பர், என்னைவிட நான்கு வயது இளையவர் என்பதால் அந்த செய்தியை கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானவர்களில் நானும் ஒருவன். உடனே அந்த துயர்மிகு செய்தியை முகநூலில் பகிர்ந்துவிட்டு அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டேன். யாரிடம் பேசி உள்ளிருக்கும் குமுறலையும், கோபத்தையும், சோகத்தையும் பகிர்ந்துக்கொள்வது என்று … Continue reading அருண்மொழி: ஒரு நினைவாஞ்சலி – வெங்கடேஷ் சக்ரவர்த்தி
அயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டு பெண்கள் மீது தேச துரோக வழக்கு!
முசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்டுக்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.
கோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது!
இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையற்றவர்கள் இவர்கள். நாட்டில் உச்சநீதிமன்றம் இருக்கும்போது பிரிட்டீஷ் ராணியிடம் மன்னிப்பு மனுவை தானே அனுப்பியவர் கோட்சே
சமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து!
முருகானந்தம் ராமசாமி நான் சிலகாலம் முன்புவரை பிராமணீயம் என்றே சுட்டி வந்தேன்.. நவீீன ஜனநாயக சமூகப்ரக்ஞைக்கு எதிர்திசையில் இயங்கும் ஆதிக்க கருத்தியல் என்பதால் அதை கருத்தியல் ரீதியாக அப்படிச்சுட்டினேன். இந்திய சமூகவரலாற்றில் பிராமணீயத்தின் தடத்தை கருப்பு வெள்ளையாக அன்றி டி. டி. கோசாம்பி, கெ. தாமோதரன், டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், தேவிப்ரசாத் சட்டோபாத்யாய, ஆகிய அறிஞர்களை வாசித்த பின் பெற்ற தத்துவார்த்த பின்புலமும் எனது கண்டடைதலுக்கு உண்டு. சிறுகுழுவாக தங்கள் நேரடி … Continue reading சமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து!
பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்
பார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள். எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே..? ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின் CCTV பதிவுகளை ஐஐடி நிர்வாகம் தருவதற்கு தாமதிப்பது ஏன்..? என் மகள் கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்டாள் என்று … Continue reading பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்
கல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்?
ஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார்கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது?
டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ? ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை!
சின்னப்பன். எம். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வருடத்தில் ஓர் இரவு, டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ என்று அப்பா கேட்டார். என்னிடம் பதிலே இல்லை. பேச ஆரம்பித்த நாளிலிருந்து யாராவது பெரிய புள்ளையாகி என்ன படிக்கப்போற என்று கேட்டால், டாக்டர் என்று சொல்லி சொல்லியே பழக்கப்பட்டவன். ஒரு விதத்தில் எனக்கு அந்த பதிலை என்றோ ஒரு நாள் சொல்லிக்கொடுத்தவர் அப்பாவாகத்தான் இருக்கமுடியும். அவரே வந்து அது முடியாவிட்டால் என்ன செய்வாய் என்று கேட்டதும், அதற்கு என்னிடம் எந்த … Continue reading டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ? ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை!
அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்!
அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம் என தெரிவித்துள்ளார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சார்ந்த மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா நீட் தேர்வை எதிர்த்து தன்னை தானே மாய்த்து கொள்ளும் அறப்போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அனிதாவின் சாவு தற்கொலை அல்ல மத்திய மாநில அரசுகளை எதிர்க்கும் யுத்தம். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களை பெற்ற ஆற்றல் … Continue reading அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்!
உரிமைகள் மரத்தில் காய்ப்பவை இல்லை: குட்டிரேவதி
குட்டிரேவதி அனிதாவின் உயிர்ப்பலி நாம் எளிதாகக் கடந்துவிடக்கூடியதாக இல்லை. நண்பர்கள், ஃபோனிலும் ஃபேஸ்புக்கிலும் அலைமோதுகிறார்கள். இயலாமையின் எல்லையில் எல்லோரும் பரிதவிக்கிறோம். இதற்கிடையில் சிலர், இதற்கெல்லாம் போய் தற்கொலைசெய்துகொள்ளலாமா, இன்னும் போராடியிருக்கவேண்டாமா என்றெல்லாம் அறிவுரை வழங்குகிறார்கள். நீட்'டுக்கு எதிராகப் பேசுபவர்களும், அனிதாவிற்கு ஆதரவாகப் பேசுபவர்களுமே கூட, அரைகுறை புரிதலுடன், உணர்ச்சிவயப்பட்டுப் பேசுகிறமே அன்றி இதைத் தொடரும் வழியறியோம். அனிதா போன்றோரின் பின்னணியிலிருந்து வரும் ஒரு பெண் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்று, சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடியும் நீதி … Continue reading உரிமைகள் மரத்தில் காய்ப்பவை இல்லை: குட்டிரேவதி
இந்த நீட் விவகாரத்தில் இந்நேரம் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
ஜி. கார்ல்மார்க்ஸ் இப்போது என்ன நடக்கிறதோ அதேதான் நடந்திருக்கும். இந்த நீட் போன்ற தரப்படுத்துதல்கள் எல்லாம் நாம் அனுமதித்திருக்கிற புதிய பொருளாதாரக் கொள்கைகளின் ஒரு அங்கம். மன்மோகன் சிங்கைப் பற்றி நமக்குத் தெரியும். தனது எஜமானர்கள் காலால் இட்டதை தலையால் செய்யும் மாண்புடையவர் அவர். ஆனால் பிராந்தியக் கட்சிகளின் தயவுடன் ஆட்சியில் இருக்கிறபோது, இவ்வளவு மூர்க்கமாக இதை செயல்படுத்தியிருக்க முடியாது. பல மக்கள் விரோத நடவடிக்கைகள் சென்ற காங்கிரஸ் அரசால் முன்னெடுக்க முடியாமல் போனதற்கு அரசியல் ரீதியாக … Continue reading இந்த நீட் விவகாரத்தில் இந்நேரம் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?