ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்களை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தெலுங்கு நடிகர் ரவி பாபு ஏடிஎம் வரிசையில் பன்றிக்குட்டியுடன் நின்றது சமூக ஊடகங்களில் வைரல் செய்தியாகியுள்ளது. அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இப்படி நடந்துகொண்டாரா என ஊடகங்கள் பரபரவென கேட்க, ரவி பாபு அளித்த விளக்கம் என்ன தெரியுமா?
‘பன்றிக்குட்டி ’அதிகோ’ எனும் படத்தில் என்னுடன் நடிக்கிறது. பன்றிக்குட்டியுடன் படப்பிடிப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது, காருக்கு பெட்ரோல் நிரப்ப பணம் இல்லாததால் ஏடிஎம்பில் பணம் எடுக்க வரிசையில் நின்றேன். கூடவே பன்றிக்குட்டியையும் வைத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது’ என்கிறார்.