#வெறுப்புஅரசியல்: அசாதுதீன் ஓவைசி உருவம் பதிந்த கேக்கை வெட்டி ராஜ் தாக்கரே பிறந்த நாள் கொண்டாட்டம்!

ராஜ் தாக்கரே தனது 48வது பிறந்த நாளை மும்பையில் அவரது ஆதரவாளர்களுடன் கொண்டாடினார். அப்போது அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்ஹதுல் முஸ்லீமின் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்பியுமான அசாதுதீன் ஓவைசியின் புகைப்படம் பதித்த கேக்கை வெட்டிக் கொண்டாடினார்.

இந்த சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜ் தாக்கரே கைது செய்யப்பட வேண்டும் என்று ஓவைசி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ வாரிஸ் பதான் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் எனது கழுத்தில் கத்திவைத்து கேட்டாலும் பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்ல மாட்டேன் என்று கூறியிருந்தார் அசாதுதீன் ஓவைசி. இதற்கு எதிர்வினையாக மகாராஷ்டிராவுக்கு வாருங்கள், உங்கள் கழுத்தில் கத்தியை வைக்கிறேன் என ராஜ் தாக்கரே தெரிவித்திருந்தார்.

இப்படி தன் அரசியல் ‘எதிரி’களை கேக் பதிந்து அதை வெட்டிக் கொண்டாடுவது ராஜ் தாக்கரேவுக்குப் புதிதல்ல. சில வருடங்களுக்கு முன் வட இந்தியர்கள் மகாராஷ்டிரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்கிற வெறுப்பு அரசியலைக் கையில் எடுத்தபோது, ‘பைய்யா’(வட இந்தியர்களை குறிக்கும் மராத்தி சொல்) என்று எழுதிய கேக்கை வெட்டி கொண்டாடினார் ராஜ் தாக்கரே.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.