ஞாயிறு தமிழ் தி இந்து(01.05.2016) பெண் இன்று இணைப்பில் முதல் பெண் தலித் அமைச்சர் என்ற தலைப்பில் சத்தியவாணிமுத்து பற்றி சிறு கட்டுரை ஒன்றை ஆதி எழுதியுள்ளார் .திமுக வின் தொடக்ககால தலைவர்களில் ஒருவர், 1967 ல் திமுகவின் முதல் அமைச்சரவையில் இடம்பெற்ற தலித்,தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் என்ற கட்சி நடத்தியது, மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட அவர் பற்றிய பெரும்பாலான தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. நல்ல பதிவு.
எல்லோரும் கருதுவதை போல சத்தியவாணிமுத்துவின் அரசியல் வாழ்க்கை திமுகவில் ஆரம்பித்ததல்ல. டாக்டர் அம்பேத்கரால் தொடங்கப்பட்டு வட மாவட்டங்களில் செல்வாக்கோடு திகழ்ந்த அகில இந்திய ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேஷனில் இவர் தந்தை நாகையாவோடு பணி ஆரம்பித்தது.திமுகவை இப்பகுதியில் வளர்த்ததில் இவருக்கு பங்குண்டு. இதைத்தான் திமுகவின் ஆரம்ப கட்டம் சென்னை சேரிகளில் செல்வாக்கு பெற்றதென்று அய்யா ஆ.சக்திதாசனார் குறிப்பிடுவார். தாழ்த்தப்பட்டோரின் முன்னோடி முயற்சிகளையும் மக்கள்திரளையும் பயன்படுத்தி திமுக வளர்ந்தது என்று நாமெல்லாம் கூறுவதற்கு இதெல்லாம் சான்றுகள். அதன் வளர்ச்சிக்கு துரும்பை கூட கிள்ளிபோடாத சாதிகள் தான் இப்போதே திராவிட கட்சிகளின் அதிகார பலன்களை பெரும்பான்மை எண்ணிக்கை மூலம் பயன்படுத்தி வருகின்றன.
சத்தியவாணிமுத்து 1957 -ல் தலித்துகள் அடர்த்தியாக இருந்த சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஒரு பெண்ணாக அதிலும் தலித் பெண்ணாக அவரின் அனுபவங்கள் சொல்லப்படாதவை. இன்றைக்கு கருணாநிதியை நோக்கி வீசப்படும் சாதியவசை இதே கட்சியினரால் அன்றைக்கு இவர் மீதும் வீசப்பட்டிருக்கின்றன. பல உண்மைகளை பேசும் எனது போராட்டம் நூலையும் அவர் எழுதியுள்ளார்.
ஸ்டாலின் ராஜாங்கம், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
இவருடைய நூல்கள் :
2. ஆரிய உதடும் உனது திராவிட உதடும் உனது
4. சனநாயகமற்ற சனநாயகம்