விருதுநகரை சேர்ந்த 22 வயது தலீத் பெண் ஒருவர், ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதேப்பகுதி மேலரத வீதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகிய ஹரிஹரன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒருநாள், பெத்தனாட்சி நகரில் உள்ள மருந்து குடோனுக்கு அப்பெண்ணை அழைத்து சென்று,அங்கு நயமாக பேசி அப்பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொண்டான். இதை அப்பெண்ணுக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளான் ஹரிஹரன். கொஞ்ச … Continue reading தலித் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்: அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு!
குறிச்சொல்: மு.க.ஸ்டாலின்
அதிமுகவின் வெற்றிகரமான தோல்விக்கு என்ன காரணம்? | அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன் இந்த மீம்ஸ் சிரிக்க வைத்தது போல உண்மையான காரணம் குறித்தும் சிந்திக்க வைப்பதாக உள்ளது.. இருநூறு தொகுதிக்கு மேலே வென்று திமுக கூட்டணி கிளீன் ஸ்வீப் செய்யும் என எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையிலே சுமார் 160 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றிருப்பதும் சுமார் 75 தொகுதிகளில் அஇஅதிமுக முன்னிலை பெற்றுள்ளதும் எடப்பாடி ஆட்சிக்கு ஒரு வெற்றிகரமான தோல்வியாக அமைகிறது.அதிமுகவில் ஜெயலலிதா இல்லாமல், பத்தாண்டு கால ஆளும்கட்சி எதிர்ப்புணர்வை எதிர்கொண்டும், பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்தும் பாஜகவை … Continue reading அதிமுகவின் வெற்றிகரமான தோல்விக்கு என்ன காரணம்? | அருண் நெடுஞ்செழியன்
கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுக்கக்கூடாது: கி.வீரமணி அறிவுறுத்தல்
'கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து அவர் போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுத்து விடக்கூடாது' என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'கருணாநிதியை மதிப்பது என்பது அவர் கட்டிக் காத்த கொள்கையை மதிப்பதே. திமுக தலைவர் கருணாநிதி மருத்துவ நிபுணர்களின் சீரிய சிகிச்சையால் நலம் பெற்று வருகிறார். இந்த நிலையில், அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை என்பது போன்ற மூடநம்பிக்கை சடங்குகளில் திமுகவினர் ஈடுபடவேண்டாம். கருணாநிதி அவர்கள் … Continue reading கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுக்கக்கூடாது: கி.வீரமணி அறிவுறுத்தல்
டிடிவியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றி: ஆனால் திமுக?
கவிதா சொர்ணவல்லி டிடிவி ஜெயிப்பார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆர்கேநகர் நிலவரங்களை தொடந்து கவனிக்க... வேண்டாம் வேடிக்கை பார்த்திருந்தால் கூட இது தெரிந்திருக்கும். அவருக்கு அங்கு எதிரிகளே இல்லை. அதுதான் உண்மை. இந்த இடைதேர்தல் என்பது, வென்றேயாக வேண்டியது என்ற கட்டாயம் தினகரனுக்கு மட்டுமே இருந்தது.அவர் அதில் முழு முனைப்புடன் இறங்கினார். அவருக்காக, அவருடைய ஆட்கள் அங்கே உயிரைக் கொடுத்து பணியாற்றினார்கள். ஈபிஎஸ்-ஒபிஎஸ் அணி மீது மக்களுக்கிருந்த அதிருப்திகளை வாக்குகளாக்குவதில் கோட்டை விட்டது திமுக. அவ்வளவு ஏன் … Continue reading டிடிவியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றி: ஆனால் திமுக?
மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டியது என்ன?
உண்மையில், வேறு எந்த கட்சியைவிடவும், திமுகவிற்கு இந்த சிக்கலை தீர்ப்பதில் அதிக உரிமையும் கடமையும் இருக்கிறது.
“பெற்று எடுக்காத பிள்ளைக்கு” பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்: ஸ்டாலின் காட்டம்
சென்னை மெட்ரோ சுரங்க ரயில் பாதையை திறந்து வைத்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, மெட்ரோ ரயில் ஜெயலலிதாவின் கனவு என்று பேசினார். மெட்ரோ ரயில் திட்டம் திமுக தொடங்கியது என்பதும் ஜெயலலிதா அதை எதிர்த்தார் என்பதும் நிதர்சனமாக இருக்கும் நிலையில் மத்திய அமைச்சரின் கருத்து இது கடும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் … Continue reading “பெற்று எடுக்காத பிள்ளைக்கு” பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்: ஸ்டாலின் காட்டம்
முதலமைச்சரை மிரட்டியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: மு. க.ஸ்டாலின்
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினா கடிதத்தில் கையெழுத்து வாங்கியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு. க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்” என்று அதிமுகவின் “அதிரடி” வரவான பொதுச் செயலாளர் திருமதி சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது அவர் ஏற்கனவே “நான் பினாமி அல்ல” என்று “சொத்துக் குவிப்பு வழக்கில்” வைத்த உதவாக்கரை வாதம் போன்று இருக்கிறது. … Continue reading முதலமைச்சரை மிரட்டியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: மு. க.ஸ்டாலின்
”தேர்தல் லாபம் இல்லை என்பதற்காக தமிழக உரிமைகளை பறிக்கிறது மோடி அரசு!”
மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் நாளை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடியும், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் போராட்டம் நடத்தியும், தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் நேரடியாகச் சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்த பிறகும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர … Continue reading ”தேர்தல் லாபம் இல்லை என்பதற்காக தமிழக உரிமைகளை பறிக்கிறது மோடி அரசு!”
தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை: தமிழகத்திற்கு தலைகுனிவு
தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவது தமிழகத்திற்கு தலைகுனிவு என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத முன்னுதாரணமாக தலைமைச் செயலாளர் அவர்களின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே, தொழிலதிபர்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவை பற்றிய முழுமையான உண்மைத் தகவல்களை மத்திய … Continue reading தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை: தமிழகத்திற்கு தலைகுனிவு
கவிஞர் இன்குலாப் மறைவு: மு. க. ஸ்டாலின் இரங்கல்
கவிஞர் இன்குலாப் மறைவுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல்: புகழ் பெற்ற கவிஞர் இன்குலாப் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். தமிழ் மொழியின் மீதிருந்த தாகத்தின் விளைவாக தன் மாணவர் பருவத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற அவர் பிற்காலத்தில் பேராசிரியராக, பத்திரிக்கையாளராக, ஆற்றல் மிக்க பேச்சாளராக, எழுத்தாளராக, கவிஞராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. "மார்க்ஸ் முதல் மாசேதுங்" வரை என்ற மொழியாக்க நூலை மார்க்ஸிய- பெரியாரிய … Continue reading கவிஞர் இன்குலாப் மறைவு: மு. க. ஸ்டாலின் இரங்கல்
“தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல்; மு.க.ஸ்டாலின்
“தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “தாலிக்கு தங்கம் வாங்கும் திட்டத்தின் கீழ் 111.43 கோடி ரூபாய் அதிக விலை கொடுத்திருப்பதாக “ஜூனியர் விகடன்” பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள புலனாய்வுச் செய்தி அதிமுக ஆட்சியில் ஏழை எளியவர்களின் திருமாங்கல்யத் திட்டம் கூட முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. 18.8.2011 அன்று துவங்கி 29.12.2015 வரை சமூக நலத்துறை செய்துள்ள … Continue reading “தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல்; மு.க.ஸ்டாலின்
தத்தளித்தாலும் ஓ.பன்னீர் … : ஸ்டாலின் சொல்லாட்டம்
முதலமைச்சரின் துறைகளை முழுமையாக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி அவர் அறிக்கை வெளியிடாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் தலைமைச் செயலாளர் அல்லது நிதித்துறை செயலாளராவது ஒரு அறிக்கை விட்டிருக்கவேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று சென்னை, வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள அயனாவரம் சந்தை பகுதி, பெரம்பூர் இந்தியன் வங்கி ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 500 ரூபாய் ஒருவருக்கு வியாபாரம் … Continue reading தத்தளித்தாலும் ஓ.பன்னீர் … : ஸ்டாலின் சொல்லாட்டம்
கிராம பொருளாதாரத்தின் அஸ்திவாரமாக உள்ள கூட்டுறவு வங்கிகள் முடங்கும் நிலை: மு. க. ஸ்டாலின்
ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டால் கிராம பொருளாதாரத்தின் அஸ்திவாரமாக உள்ள கூட்டுறவு வங்கிகள் முடங்கும் நிலையைத் தவிர்க்க மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கறுப்புப் பணத்தை ஐம்பதே நாட்களில் ஒழிக்கப் போவதாகச் சொல்லி, மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவித்து எடுத்த நடவடிக்கையின் காரணமாக கூட்டுறவு அமைப்பின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் “கூட்டுறவு சங்கங்கள்” செயலிழந்து … Continue reading கிராம பொருளாதாரத்தின் அஸ்திவாரமாக உள்ள கூட்டுறவு வங்கிகள் முடங்கும் நிலை: மு. க. ஸ்டாலின்
மக்களை சந்தேகித்து மை வைப்பதா?: மு. க. ஸ்டாலின் கண்டனம்
“நாட்டு மக்களை சந்தேகிக்கும் போக்கை கைவிட்டு ’அழியாத மை வைப்போம்’ என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்” என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் “அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடி நிலையை” மத்தியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி அரசு உருவாக்கி ஏழை, எளிய, நடுத்தர மக்களை தாங்க முடியாத இன்னல்களுக்கு ஆளாக்கி வருவது கண்டனத்திற்குரியது. “500 மற்றும் 1000 … Continue reading மக்களை சந்தேகித்து மை வைப்பதா?: மு. க. ஸ்டாலின் கண்டனம்
“அரசியல் சட்டப் பிரிவு 360ன் படி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்”: தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை
அதிமுக அரசு மக்கள் நலத் திட்டங்களுக்கு மட்டுமல்ல நீதித்துறைக்கே நிதி ஒதுக்குவதில்லை என்பது உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தெரிவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ "தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை" அமலில் இருக்கிறதா என்று அதிமுக அரசைப் பார்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் அவர்கள் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பொருத்தமான கேள்வி எழுப்பியிருக்கிறது. "அரசியல் சட்டப் பிரிவு 360ன் படி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்" என்றும் … Continue reading “அரசியல் சட்டப் பிரிவு 360ன் படி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்”: தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை
ரூபாய் நோட்டை திரும்பப் பெறுதல்: மக்களின் சிரமங்களை அரசு போக்க வேண்டும்!
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் அறிவித்தது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின், "நாட்டினுடைய பொருளாதார நிலையை உயர்த்த, இந்திய நாட்டினுடைய சீர்திருத்தத்திற்காக இந்த அறிவிப்பு உண்மையிலேயே உதவியாக இருக்கும் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் இதை வரவேற்கக் கூடிய நிலையில் தான் இருக்கிறது” என தெரிவித்தார். மேலும் " பிரதமர் மோடி அவர்கள் தேர்தல் நேரத்தில் வெளிநாட்டில் இருக்கக் கூடிய கறுப்பு பணத்தை மீட்டு, … Continue reading ரூபாய் நோட்டை திரும்பப் பெறுதல்: மக்களின் சிரமங்களை அரசு போக்க வேண்டும்!
குளிர்காய நினைப்பது யார்- மு.க.ஸ்டாலின் கேள்வி
மாநிலத்தில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடியில் எங்கிருந்தோ குளிர் காய நினைப்பது யார்? பல வருடங்களாக அதிமுக அரசு எதிர்த்துவந்த பிரச்சினைகளில் திடீரென்று ஒப்புதல் அளிக்கவேண்டிய பின்னணி குறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு தமிழக அரசின் நிர்வாகத்தை யார் நடத்துகிறார்கள் என்ற மிகப் … Continue reading குளிர்காய நினைப்பது யார்- மு.க.ஸ்டாலின் கேள்வி
நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது: ஸ்டாலின்
“அதிமுக ஆட்சியில் நடக்கும் விவசாயிகள் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை செய்தி கேட்டு ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் இப்படி தற்கொலைக் களமாக மாறக் கூடிய அவலமான நிலை இந்த அதிமுக ஆட்சியில் உருவாகியிருக்கிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சை கீழ்த்திருப்பந்துருத்தி ராஜேஷ்கண்ணா, திருவாருர் கோட்டூர் அருகேயுள்ள ஆதிச்சியபுரம் அழகசேன், திருத்துறைப்பூண்டி கோவிந்தராஜ் ஆகிய … Continue reading நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது: ஸ்டாலின்
’டெல்டா காஷ்மோரா’: மு. க. ஸ்டாலின் அதிர்ச்சி அறிக்கை
‘டெல்டா காஷ்மோரா’ என்ற பெயரில் ஜுனியர் விகடன் வெளியிட்ட கட்டுரை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின். அந்த அறிக்கையில், “தமிழகத்தின் பழம்பெரும் இதழ் "ஆனந்த விகடன்". அதனை உருவாக்கிய திரு. எஸ்.எஸ். வாசன் அவர்கள் பத்திரிகைத் துறையிலும், திரைப்படத் துறையிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அத்தகைய "ஆனந்த விகடன்" குழுமத்திலிருந்து வெளிவரும் இதழ் "ஜுனியர் விகடன்". 9-11-2016 தேதிய "ஜுனியர் விகடன்"இதழில் "மிஸ்டர் கழுகார்" பகுதியில் வந்துள்ள ஒரு செய்தி; நம் … Continue reading ’டெல்டா காஷ்மோரா’: மு. க. ஸ்டாலின் அதிர்ச்சி அறிக்கை
மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்: ஸ்டாலின்
மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தை உலுக்கிய சென்னை, மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிட விபத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்த பயங்கரம் கடந்த 28.6.2014 அன்று நிகழ்ந்தது. அந்த கட்டிடத்திற்குள் சிக்கிய 88பேருக்கும் மேல் மீட்கப்பட்டாலும், அந்த பேராபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் மன உளைச்சலுக்கு இன்னும் மருந்து போட முடியவில்லை. மவுலிவாக்கத்தில் … Continue reading மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்: ஸ்டாலின்
புதிய கல்விக் கொள்கை ஆலோசனைக் குழு கூட்டத்தில் தமிழக அமைச்சர் பங்கேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
புதிய கல்விக் கொள்கையால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து 64-வது மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்று ஆணித்தரமான வாதங்களை முன் வைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய கல்விக் கொள்கையைப் புகுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் உள்ள மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இக்கொள்கையை உருவாக்க ஒரு கல்வியாளர் தலைமையில் குழுவை மத்திய மனித … Continue reading புதிய கல்விக் கொள்கை ஆலோசனைக் குழு கூட்டத்தில் தமிழக அமைச்சர் பங்கேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
அதிமுகவின் அரசியல் ஆதாயத்திற்காக காவல்துறை பயன்படுத்தப்படுகிறது: ஸ்டாலின்
"உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, அதிமுக தொழில் நுட்பப்பிரிவுடன் இணைந்து திமுகவினரை துன்புறுத்தும் செயல்களை காவல்துறை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பியதாக இதுவரை 7 பேரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். 52-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக … Continue reading அதிமுகவின் அரசியல் ஆதாயத்திற்காக காவல்துறை பயன்படுத்தப்படுகிறது: ஸ்டாலின்
’மர்மக் காய்ச்சலு’க்கு 4 குழந்தைகள் பலி: மு. க. ஸ்டாலின் கண்டனம்
"சென்னையில் 4 குழந்தைகள் இறப்புக்கு காரணமான சுகாதார சீர்கேட்டையும், மருத்துவத் துறையில் புரையோடியுள்ள அலட்சியப் போக்கையும் கவனிக்காத தமிழக அரசுக்கு எனது வன்மையான கண்டனம்" என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் காலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்திருக்கிறது. அடுத்து பொழிச்சலூரைச் சேர்ந்த … Continue reading ’மர்மக் காய்ச்சலு’க்கு 4 குழந்தைகள் பலி: மு. க. ஸ்டாலின் கண்டனம்
ஜெயலலிதா நலம் பெற்றுத் திரும்ப தலைவர்கள் வாழ்த்து
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் நலம்பெற்றுத் திரும்ப அரசியல் கட்சித் தலவர்கள் வைகோவும் மு. க. ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் < div class="mtm _5pco"> உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் விரைவில் முழுமையாக குணம் அடைந்து, நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் விரும்புகிறேன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: < … Continue reading ஜெயலலிதா நலம் பெற்றுத் திரும்ப தலைவர்கள் வாழ்த்து
“நமக்கு நாமே என்று சொல்லிக் கொண்டு சிலர் ஊர் ஊராக அலைந்தனர்”: அதிமுக எம்எல்ஏவின் பேச்சை நீக்கக் கேட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாகக் கூறி திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு அவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து, அவைக் காவலர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினரை குண்டு கட்டாக வெளியேற்றினர். அதோடு, அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்ட 88 திமுக உறுப்பினர்களையும் ஒரு வாரத்துக்கு இடை நீக்கம் செய்து அவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார். திமுக உறுப்பினர்களை இடை நீக்கம் செய்ய நிதித் … Continue reading “நமக்கு நாமே என்று சொல்லிக் கொண்டு சிலர் ஊர் ஊராக அலைந்தனர்”: அதிமுக எம்எல்ஏவின் பேச்சை நீக்கக் கேட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
எய்ம்ஸ் மருத்துவமனையின் மாணவர் சரவணின் மர்ம மரணம்
தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த பயிற்சி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவருடைய இறப்பு குறித்து சரியான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில், “மாணவர் சரவணன் மரணத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், சக மாணவர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பின்னாலாடை நிறுவனத்தில் பணிபுரியும் கணேசன் என்பவரின் மகனான சரவணன் … Continue reading எய்ம்ஸ் மருத்துவமனையின் மாணவர் சரவணின் மர்ம மரணம்
குஷ்புவால் முடிவது ஏன் மற்றவர்களால் முடியவில்லை?
LR Jagadheesan நடிகை குஷ்பு. வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு தொழில் வாய்ப்பு தேடி வந்தவர். அவரது ஆரம்பம் calendar girl model. அதாவது கேலண்டரின் கவர்ச்சிக் கன்னியாக புகைப்படங்களுக்கு மாடலிங் செய்வதில் ஆரம்பித்த வாழ்க்கை சினிமா நடிகையாக வளர்ந்தது. அதற்காக தமிழ்நாட்டுக்கு குடிவந்தவர் ரசிகர்கள் கோவில்கட்டிக் கும்பிட நினைக்கும் அளவுக்கு பிரபலமடைகிறார். அவரது அரசியல் பிரவேசம் திமுகவில் துவங்குகிறது. திமுகவில் சேர்ந்தது முதல் அவரை வெளியேற்ற திமுகவுக்குள் ஒரு கும்பலும், திமுகவுக்கு வெளியே ஒரு கும்பலும் முழுநேரமாக … Continue reading குஷ்புவால் முடிவது ஏன் மற்றவர்களால் முடியவில்லை?
எல்லாவற்றுக்கும் சுடச்சுட அறிக்கைவிடும் கலைஞரும் ஸ்டாலினும் சாதிய படுகொலை குறித்து ஏன் வாய்திறக்கவில்லை?
உமா மகேஸ்வரன் பன்னீர்செல்வன் ஆயிரம் காரணங்கள் அடுக்கினாலும் இதுவரை ஒரு கண்டனமும் கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் படுகொலைக் பற்றி வாய் திறக்காதது எரிச்சலாக இருக்கிறது. இன்றும் திறக்கவில்லை எனில் திமுக இன்று வாக்கு வங்கியைக் கண்டும் அஞ்சும் கட்சி என்று தாரளமாக எண்ணிக்கொள்ளலாம். பெரியாரின் படங்கள் எல்லாம் கட்சி போஸ்டர்களில் குறுகிக் கொண்டே வந்து, இன்று காணாமலேயே போய்விட்டது ஒரு குறியீடு என்று தெரியாமல்போயிற்று . கேப்டனின் கூட்டணிக்காக, ஜாக்டோ போராட்டத்திற்காக, அமிர்தலிங்கம் மனைவிக்காக, இந்திய அணி … Continue reading எல்லாவற்றுக்கும் சுடச்சுட அறிக்கைவிடும் கலைஞரும் ஸ்டாலினும் சாதிய படுகொலை குறித்து ஏன் வாய்திறக்கவில்லை?
அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி
கனகராஜ் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணியை `அதிமுகவின் பினாமி அணி’ என்று விமர்சித்திருக்கிறார். இதற்கு முன்பும் கூட திமுக, காங்கிரஸ்காரர்கள் மக்கள் நலக்கூட்டணியை அதிமுக வின் பி.டீம் என்று விமர்சித்துள்ளனர். கொள்கை அடிப்படையில் விமர்சிப்பதற்கு தார்மீக தைரியம் இல்லாதபோது அவதூறுகளைப் பொழிவதில் அதிமுக, திமுக இரண்டும் ஒரே அணிதான். இதுமட்டுமல்ல, ஊழலில் பிரித்தறிய முடியாத அளவிற்கு இரண்டும் ஒரே அணி என்பதையும் தமிழக மக்கள் புரிந்துவைத்திருக்கி றார்கள். தமிழகத்தின் ஆறுகள் ஒட்டச் சுரண்டப்படுகின்றன. 500 … Continue reading அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி
#வீடியோ: “போதை ஏறிப்போச்சு; புத்தி மாறிப்போச்சு” திமுக பொதுக்கூட்டத்தில் மானாட மயிலாட!
அண்மையில் சேலம் மாவட்ட தாரமங்கலம் அருகில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டம் ஆரம்பிக்கும் முன் கச்சேரியும் சினிமா பாடல் நடனங்களும் அரங்கேறியிருக்கின்றன. இவ்வகையான நடனங்களை அதிமுகவினர் மேடை தோறும் நடத்துவதாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் திமுகவினரின் மேடைகளில் இத்தகைய நடைமுறையே இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது. https://youtu.be/fcuHEeIPXyc video:Dyfipravin Kumar
ஜுனியர் விகடன் சாதியத்துடன் மு.க.ஸ்டாலின் படத்தை வெளியிட்டதாக கண்டனம்!
ஜுனியர் விகடன் சாதியத்துடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் படத்தை வெளியிட்டதாக கண்டனம் கிளம்பியுள்ளது. எம் எல் ஏக்களின் செயல்பாடுகள் குறித்து தொடர் வெளியாகிறது. இதில் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி குறித்து சமீபத்திய இதழில் கட்டுரை வெளியானது. மு.க. ஸ்டாலின் தானே தனக்கு சிகையலங்காரம் செய்துகொள்வது போன்று வரையப்பட்டு பிரசுரமானது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்துள்ளது. சிலர் கடுமையான சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தனர். அவர்களைத் தவிர்த்துவிட்டு Ashok Thamizhan என்பவரது முகநூல் பதிவை பகிர்கிறோம்.. “தி.மு.க பொருளாளர் … Continue reading ஜுனியர் விகடன் சாதியத்துடன் மு.க.ஸ்டாலின் படத்தை வெளியிட்டதாக கண்டனம்!
“விடயல் மீட்புப் பயணமா?” திமுக தலைவர் கருணாநிதியின் ட்விட்டர் பக்கத்தை நிர்வகிப்பவர்கள் கவனிக்கவும்!
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை நிறைவு செய்ததை ஒட்டி, திமுக தலைவர் கருணாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். “நமக்கு நாமே விடயல் மீட்பு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த தளபதிக்கு எனது வாழ்த்துகள்.” என்ற கருணாநிதியின் ட்விட்டில் ‘விடியல்’ என்பதற்குப் பதிலாக ‘விடயல்’ என எழுத்துப் பிழையுடன் வெளியாகியுள்ளது. இதை பலர் மீமீக்களாக உலவ விட்டு வருகின்றன. https://twitter.com/kalaignar89/status/698056706304008193 https://twitter.com/kalaignar89/status/698035457053954048
’பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர்!’
வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், புதன்கிழமை தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்தது சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில் பரபரப்பாகியுள்ளது. குறிப்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியது, அரசியல் வட்டாரத்திலும் சமூக ஊடகங்களிலும் பாஜக-திமுக கூட்டணி உறுதியாகிவிட்டதைக் காட்டுவதாக பேச்சு எழுந்துள்ளது. ஸ்டாலினை சந்தித்த ரவிசங்கர், வைகோவையும் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. Kannan Sundaram பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர். Thiru Yo கார்ப்பரேட் மடாதிபதி மூத்த சங்கராச்சாரி கருணாநிதியும், இளைய பீடாதிபதி ஸ்டாலினும் … Continue reading ’பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர்!’
திராவிட கட்சிகள் முதலில் தங்கள் கட்சி பொறுப்புகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறார்களா?
ஸ்டாலின் ராஜாங்கம் கடலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சாதிகளை கணக்கெடுத்து இரண்டாகப் பிரித்து ஒரு மாவட்ட பொறுப்பை வன்னியருக்கு கொடுத்து அவர்கள் கோபப்படாமல் பார்த்துவிட்டு தான்,மற்றொரு மாவட்ட பொறுப்பை தலித் ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள்.இதேபோல மற்ற மாவட்டங்களின் பொறுப்புகளை தீர்மானிக்கிற போது தலித்துகளை திருப்திப்படுத்த வேண்டுமென்று இவர்களால் யோசிக்க முடிவதில்லையே ஏன்? 60க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.இவற்றில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு வடமாவட்டங்களில் வாய்ப்பளிக்க முடிந்த இக்கட்சி, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் தலித்துகளை மாவட்ட செயலாளர் ஆக்கும் … Continue reading திராவிட கட்சிகள் முதலில் தங்கள் கட்சி பொறுப்புகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறார்களா?
உட்கட்சிப் பூசல்: அதிமுக அலுவலகத்தில் குண்டுகள் வீச்சு; திமுக அலுவலகம் முற்றுகை
மதுரையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மதுரையில்அலுவலகத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள அவரது வீட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உட்கட்சிப் பூசல் காரணமாக அமைச்சர் அலுவலகத்தில், நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிமுகவின் அலுவலகத்தில் குண்டுவீசும் அளவுக்கு உட்கட்சி பூசல் வளர்ந்திருக்க, திமுகவின் உட்கட்சி பூசல் ஓரளவுக்கு பராவயில்லை ரகம்தான்! திமுக ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்தவர் கே.என்.நேரு. தற்போது மாநிலங்களவை திமுக எம்.பி.யாக பதவி வகித்து வருபவர் … Continue reading உட்கட்சிப் பூசல்: அதிமுக அலுவலகத்தில் குண்டுகள் வீச்சு; திமுக அலுவலகம் முற்றுகை
திமுக-காங்கிரஸ் கூட்டணி: 2 G விவகாரத்தை மறந்துவிட்டதா திமுக?
உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வன் கூட்டணி என்று வரும்போது காங்கிரசை ஒதுக்கவில்லை என்று காங்கிரசுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் மு.கருணாநிதி. இனி எப்பொழுதும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று ஸ்டாலின் 2013 ஆம் ஆண்டு சொன்னதாக நினைவு. திமுக காங்கிரசுடன் தாரளமாக இணையலாம். ஆனால் 2 G விவகாரத்தில் நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்கள், ராஜா பலிகடா ஆக்கப்பட்டார், தலித் என்பதால் ராஜா பழிவாங்கப்படுகிறார், மன்மோகனுக்குத் தெரியாமல் இது நடக்குமா என்று பல வகைகளில் காங்கிரசை குற்றம் சாட்டிய பின்னர்தான் கூட்டணியில் இருந்து திமுக விலகியது. … Continue reading திமுக-காங்கிரஸ் கூட்டணி: 2 G விவகாரத்தை மறந்துவிட்டதா திமுக?
”நமக்கு நாமே-திமுக மீட்புப் பயணம்” மு. க. அழகிரி ஆதரவாளர்களின் போஸ்டர் தலைப்பு இது!
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நமக்கு நாமே சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதற்காக பல்வேறு இடங்களில் ஸ்டாலினை வரவேற்று, விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் அழகிரி ஆதரவாளர்களால், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “நமக்கு நாமே திமுக மீட்புப்பயணம்” என குறிப்பிட்டு, கருணாநிதி படத்துடன் அழகிரி படத்தையும் சேர்த்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜல்லிக்கட்டு போராட்டம் ரத்து; திமுக முடிவை பகடி செய்யும் பாமக
“ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மத்திய அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரதத்தை ஒத்தி வைப்போம்” என திமுக தலைவர் மு. கருணாநிதி அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்று உச்ச நீதி மன்றம் 7-5-2014 அன்று தீர்ப்பளித்ததோடு, கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும் உச்ச நீதி மன்றம் ரத்து செய்து விட்டது. கடந்த ஆண்டு இந்தத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து 12-1-2015 அன்று அதுபற்றி நான் அறிக்கை விடுத்தேன். … Continue reading ஜல்லிக்கட்டு போராட்டம் ரத்து; திமுக முடிவை பகடி செய்யும் பாமக
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி திமுக உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி திமுக சார்பில் டிசம்பர் 28-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது. திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை அலங்காநல்லூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் கென்னடி கண்ணன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலர்கள் மூர்த்தி, மணிமாறன், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, மாவட்ட அவைத்தலைவர் பரந்தாமன் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
“தியாக நெருப்புல உருவான கட்சி; உங்களால ஒன்னும் பண்ண முடியாது” திமுகவுக்கு வைகோ மெஸேஜ்
மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மாவட்ட செயலாளர்கள் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ... இதோ அந்த அறிக்கை... “பேரறிஞர் அண்ணா அவர்களின் இயக்கத்தில் 1964 இல் கல்லூரி மாணவனாக இணைந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை என் உயிரினும் மேலாக நெஞ்சில் ஏந்தினேன். 1993 அக்டோபர் 3 ஆம் தேதி கொலைப்பழி சுமத்தப்பட்டபோது என் தலையில் பேரிடி விழுந்தது போல் துடித்தேன். என் உள்ளம் நொறுங்கியது. தி.மு.கழகத்தின் ஐந்து தொண்டர்கள் எனக்கு ஏற்பட்ட … Continue reading “தியாக நெருப்புல உருவான கட்சி; உங்களால ஒன்னும் பண்ண முடியாது” திமுகவுக்கு வைகோ மெஸேஜ்