ப.ஜெயசீலன் "revenge is the purest human emotion" தலித் சினிமாக்களில் தவிர்க்கமுடியாத ஒரு கூறாக "counter narrative" இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். தங்களை பற்றிய உண்மைக்கு புறம்பான பொது சித்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் அல்லது மறுக்கும் அல்லது சிதைக்கும் முனைப்பை தலித்திய கலை, இலக்கிய, சினிமாவில் நீங்கள் காணலாம். தலித்துகள் பற்றிய மிக விஸ்தாரமான, நுணுக்கமான, தேர்ந்த கதையாடல்கள் பார்ப்பனிய சனாதனத்தை உள்வாங்கி பார்பனியர்களால், சாதி ஹிந்துக்களால் ஏன் தலித்துகளாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த கதையாடல்கள் எல்லாமும் … Continue reading தலை துண்டிக்கப்பட்ட கடவுள்களின் புதல்வன் “கர்ணன்” | பகுதி – 2
குறிச்சொல்: ப. ஜெயசீலன்
வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 1
ப. ஜெயசீலன் நரேன் ராஜகோபாலன்(கருப்பு குதிரை என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்) என்று ஒரு முக நூல் பதிவர் சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது வெறித்தனமான முரட்டுத்தனமான பிஜேபி எதிர்ப்பாளராக, திமுக ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். he is really a character. ஒரு நாள் திடீரென்று நான் ஏன்தான் இவ்வளவு விஷயம் தெரிந்த அறிவாளியாக இருக்கிறேன் என்று எனக்கு சலிப்பாயிருக்கிறது. இப்பொழுது பாருங்கள் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். அதன் மூலம் இந்தியா ஒரு மிக பெரிய … Continue reading வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 1
சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி – 4
ப. ஜெயசீலன் முதல் மூன்று பகுதிகளை படிக்க பகுதி 1 பகுதி 2 பகுதி 3 < div> சமூக விலங்கான மனிதர்கள் அடிப்படையில் கூடி, இசைந்து வாழக்கூடியவர்கள். கூடியிருத்தல்,கூடுதல் எப்பொழுதுமே மகிழ்ச்சி தரக்கூடியது. ஆதி மனிதர்கள் கூடிஇருக்கையில் பயமற்று,ஆபத்துகளை சந்திக்கும் வல்லமையோடும், தேவையான உணவை கண்டடையும் வாய்ப்புகளோடும் இருந்தார்கள்.எனவே by instinct அவர்கள் கூடியிருப்பதை விரும்பினார்கள். அதனால் தான் இன்றும் நாம் மதத்தின் பெயரால், அரசியலின் பெயரால், சடங்கின் பெயரால், கலையின் பெயரால்,விளையாட்டின் பெயரால் என … Continue reading சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி – 4
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா – பகுதி 6
ப. ஜெயசீலன் ஏழு சாமுராயின் இறுதி பகுதி என்பது கிராமத்திற்கு வரும் சாமுராய்கள் தங்களின் மீது அச்சத்தோடும், சந்தேகத்தோடும் இருக்கும் கிராமத்தினரின் நன்மதிப்பை பெற்று, கிராமத்தினருக்கு போர் பயிற்ச்சியளித்து இறுதி காட்சியில் எப்படி வடிவேலுவை போல பிளான் பண்ணி கொள்ளைக்காரர்களை கொன்று வெல்கிறார்கள் என்பதை அகிரா நின்று நிதானமாக பின் உட்கார்ந்து பின் ஒருகளித்து படுத்து பின் மல்லாக்க படுத்து நிதானமாக கதை சொல்கிறார். மூன்றரை மணிநேரம் கிட்ட ஓடும் இந்த படத்தில் அகிரா இந்த பகுதிக்கு … Continue reading ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா – பகுதி 6
மைய நீரோட்டத்தின் இரு கரைகள்: அண்ணன் திருமாவும் ராக்கெட் ராஜாவும்
அண்ணன் திருமாவளவனுக்கு : பகுதி - 1 ப. ஜெயசீலன் சமகால அரசியல் தலைவர்களில் அரசியல் தலைமைத்துவம்(political leadership) பெற்றவர் யாரென்று கேட்டால் திருமாவளவன் என்று எளிதாக சொல்லிவிடலாம். சீமான்,அன்புமணி, ஸ்டாலின், கமல் போன்ற அனைவரும் நிர்வாகம்(administration) மற்றும் மேலாண்மை(management)(ரோடு போடுவோம், பாலம் கட்டுவோம், மாடு மேய்க்க வைப்போம், இலவச மருத்துவம் தருவோம்) குறித்து மட்டுமே திரும்ப திரும்ப தங்களது பார்வையாக(vision) முன்வைக்கிறார்கள். இன்னும் சொன்னால் கமல் ஒரு பேட்டியில் நமக்கு இன்றைய காலத்திற்க்கு தேவை அரசியல்வாதிகள் அல்ல … Continue reading மைய நீரோட்டத்தின் இரு கரைகள்: அண்ணன் திருமாவும் ராக்கெட் ராஜாவும்
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பாகம்- 2
நமது ஊரில் பார்ப்பனிய ஹிந்து மதத்திற்கு எதிராக கலகம் செய்த புத்தம் ஜப்பானில் பார்ப்பனிய ஹிந்து மதம் செய்த வேலையை செய்தது.
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா!
அகிரா குரோசோவாவின் seven samurai உள்ளடக்க அரசியல் சார்ந்து எந்த வகையில் கமலின் தேவர்மகனுக்கு இணையான ஒரு அய்யோக்கியத்தமான, சில்லறை தனமான படம் என்று விமர்சிக்கும் நோக்கிலும் இந்த கட்டுரை.
“காலா…எங்களுக்கு அது கலகக்குரல்!”
ரஞ்சித் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவர்மீது விமர்சனங்கள் செய்வது எந்த தவறும் இல்லை. ஆனால் அவரது நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதும், உள்நோக்கம் கற்பிப்பதும், ஏதோ தலித் அரசியலை பேசி காசாக்க வந்தவர் என்னும் ரீதியில் உதாசீனப்படுத்துவதும் சில்லறைத்தனம் அன்றி வேறொன்றும் இல்லை.
மனம்பிறழ்ந்த தமிழக காவல் துறை: ப. ஜெயசீலன்
அதிகாரிகள் பொறுக்கித்தனம் செய்வதை policing என்று ஏன் புரிந்துகொண்டிருக்கிறார்கள்? அவிழ்த்துவிடப்பட்ட வேட்டைநாய்களின் குணநலன்களை அவர்கள் கொண்டிருப்பதன் காரணம் என்ன? ஒரு அமைப்பாக நமது காவல்துறை ஏன் மனப்பிறழ்வு நோயிற்கு ஆட்பட்டிருக்கிறது?
பிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்
ஆசிபாவிற்கு நீதி வேண்டும் என்று கேட்கும் ப்ரொபைல் போட்டோவை வைத்து கொண்டு இன்னொரு பெண்ணை தேவுடியா என்று திட்டும் இவர்களை எப்படி புரிந்துகொள்வது?
பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? பகுதி-3
ஒருவர் வதந்திகளை பரப்புவராக/நம்புவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களை போன்றே இயல்புள்ளர்கள் என்று நம்ப/கருத தோன்றும்.
பாரிசாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? பகுதி-2
தகவல் தொழில்நுட்பம் நினைத்து பார்க்கமுடியாத வளர்ச்சியை அடைந்திருக்கும் இந்த காலத்தில் நல்லவையோ, கெட்டவையோ, உண்மையோ, பொய்யோ தகவல் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் பரவுகிறது. இது சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும், பரப்புவர்களுக்கும் முன்னெப்போதும் இல்லாத வலிமையை அளித்திருக்கிறது.
பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்?
தங்களது புரிதலுக்கு அப்பாற்பட்ட, தங்களது அறிவிற்கு அப்பாற்பட்ட, தங்களது நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தரவையோ, ஆதாரத்தையோ, சம்பவத்தையோ எதிர்கொள்ளும் போது அவர்களது மனம் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து ஒரு படிவத்தை உருவாக்கிக்கொள்கிறது. அதாவது மலைபாம்பு சந்திரனை விழுங்கிவிடுகிறது.
திருப்பூரில் தாக்கப்படும் ஆப்பிரிக்கர்கள்: காட்டுமிராண்டிகளின் தடித்தனம்
கனடிய பிரதமர் அங்கு தமிழர்களோடு பொங்கல் கொண்டுவதை பாராட்டிக்கொண்டே நம் ஊரில் இருக்கும் வேற்று நாட்டினத்தவர் மீது வன்மத்தோடும் துவேசத்தோடும் நடந்து கொள்ளும் இந்த சில்லறை பசங்களை என்ன செய்யலாம்? இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களையே சாதியின் பொருட்டு வந்தேறி என்று ஒதுக்கும் சில்லறை பசங்கள் இருக்கும் ஊரில் நாம் பன்முகத்தன்மையை எப்படி உயர்த்தி பிடிப்பது?
ஸ்டீபன் ஹாக்கிங்:தமிழர்களின் கண்ணீரில் மிதக்கும் “கால” கொடுமை
ப. ஜெயசீலன் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணமடைந்த பொழுது தமிழ் முகநூல் பரப்பில் ஒரு பெரும் சோகம் கவிழ்ந்ததை நினைவு கூறுகிறேன். தரமான ஒரு கூறு ஆப்பிள்களை சல்லிசான விலைக்கு பசி பிணியில் வாடும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தினமும் விற்று பிழைத்து வாழ்ந்த ஆயா இறந்தால் அந்த குழந்தைகள் எப்படி வருந்துமோ அப்படி வருந்தினார்கள் ஆப்பிள் பொருட்களை எதற்கு வாங்குக்குகிறோம் அல்லது ஏன் வாங்க விரும்புகிறோம் என்றே தெரியாமல் வாங்கியும்/ஏங்கியும் வந்த நம் ஊர் குழந்தைகள். அய்யயோ இனிமே ஆப்பிள் கம்பனியின் நிலைமை என்னாகுமோ … Continue reading ஸ்டீபன் ஹாக்கிங்:தமிழர்களின் கண்ணீரில் மிதக்கும் “கால” கொடுமை
குரங்கணி தீ விபத்து பலி…அஜாக்கிரதையின் விலை!
பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பிரக்ஞையற்ற நம் சமூகத்தாலும், பாதுகாப்பு நடைமுறைகள்/விதிமுறைகள் குறித்து ஒரு புரிதலை விதைக்காத, பாதுகாப்பு விதிகளை வகுத்து/நடைமுறைப்படுத்தாத அரசாங்கத்தாலுமே நிகழ்ந்துள்ளது.
“அருவி”யே அழகியே!
ப.ஜெயசீலன் In a mature state of mind we don't see anything as black or white...we start seeing the grey shades..அருவிக்கு மனிதர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பகுக்க போதுமான அனுபவங்களை வாழ்க்கை அளித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் எல்லா மனிதர்களுமே இங்கு கெட்டவர்கள் தான் என்ற முடிவை அடைய அவளுக்கு போதுமான காரணம் இருக்கிறது . ஆனால் அழகி அருவி மனிதர்களின் நல்லவை,கெட்டவை தாண்டிய சாம்பல் நிறத்தை தேடி ஆராய்ந்து, அவர்களுக்குள் … Continue reading “அருவி”யே அழகியே!
சில சாதிகளின் கேளிக்கை விளையாட்டு தமிழர் கலாச்சாரம் ஆகுமா?
சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி- 2 ப. ஜெயசீலன் கலாச்சாரம் என்றால் என்ன? by definition ஒரு மக்கள் திரளின் அறிவார்ந்த கூட்டு பங்களிப்பில், முயற்சியில் உருவாக்கப்பட்ட/ செழுமையாக்கப்பட்ட கலை மற்றும் இன்ன பிற வாழ்வியல் விழுமியங்களையும் நடைமுறைகளையும் கலாச்சாரம்/ பண்பாடு என கொள்ளலாம். ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்படும் நம்பிக்கை சார்ந்த அடையாளங்களை/சடங்குகளை/பழக்கவழக்கங்களை சம்பிரதாயம்/ மரபு(tradition) என்று கொள்ளலாம். சம்பிரதாயம்/மரபென்பது நம்மை கடந்த காலத்தோடு தொடர்ப்பு கொள்ள செய்கிறது. … Continue reading சில சாதிகளின் கேளிக்கை விளையாட்டு தமிழர் கலாச்சாரம் ஆகுமா?
தமிழர் எல்லோருக்குமான பிணமாய் மாறும் முன் அவள் பறைச்சியாய் இருந்தாள்
அனிதா தமிழர் எல்லோருக்குமான பிணமாக மாறுவதற்கு முன்பு ரத்தமும் சதையுமான பறைச்சியாய் இருந்தாள் தண்ணீர்,கழிப்பிட வசதியற்ற அவள் வீடு பறத்தெருவிலிருந்தது. ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போட்டவர்கள் அவளது தெருவிலிருந்து அவளது படிப்பை கெடுக்கவில்லை பொட்டச்சிக்கு எதுக்கு படிப்பு என்று பறையன் அப்பா சொல்லவில்லை படிச்சு கிழிச்சது போதும் என்று பறையன் அண்ணன்கள் சொல்லவில்லை அடக்கமா ஒடுக்கமா இருன்னு பறைச்சி பாட்டி சொல்லவில்லை படிப்புதான் நமக்கு எல்லாமே என்று எல்லா பறையர்களும் தமது பிள்ளைகளுக்கு சொல்வதைத்தான் அனிதாவின் வீட்டிலும் … Continue reading தமிழர் எல்லோருக்குமான பிணமாய் மாறும் முன் அவள் பறைச்சியாய் இருந்தாள்
பத்தி: சாதி மறுப்பு திருமணம் சாதியை ஒழிக்குமா? : ராமதாஸின் கருத்துக்கு ஒரு எதிர்வினை
ப.ஜெயசீலன் "What is the most resilient parasite? Bacteria? A virus? An intestinal worm? An idea. Resilient... highly contagious. Once an idea has taken hold of the brain it's almost impossible to eradicate. An idea that is fully formed - fully understood - that sticks; right in there somewhere." INCEPTION திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த இந்த வசனம் தமிழில் இப்படி … Continue reading பத்தி: சாதி மறுப்பு திருமணம் சாதியை ஒழிக்குமா? : ராமதாஸின் கருத்துக்கு ஒரு எதிர்வினை