கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து, பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் கர்நாடகத்தை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிராக தினம் ஒரு பிரச்னையை அங்கு கிளப்பி வருகின்றன.அந்த வரிசையில், “ஹலால் இறைச்சி முஸ்லீம் சமூகத்தின் "பொருளாதார ஜிஹாத்தின்" ஒரு பகுதி என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி கூறியுள்ளார்.
குறிச்சொல்: பாஜக
2024 தேர்தல்: காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? பிரசாந்த் கிஷோர் யோசனை
ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம், பாஜக, திரினாமுல் காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் காங்கிரஸ் எப்படிப்பட்ட … Continue reading 2024 தேர்தல்: காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? பிரசாந்த் கிஷோர் யோசனை
இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?
எழுத்தாளர் நக்கீரன் சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடனுக்கு நான் அளித்த பேட்டியில், ஆட்சி அமைக்க போகும் கட்சி நிதிநிலைமை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை காரணம் காட்டி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒத்துப்போகும் என்ற கருத்தை தெரிவித்திருந்தேன். இப்போது அதற்கு முன்னரே 'ஆக்சிஜன்' சிக்கலில் பெரும்பாலான கட்சிகள் உடன்பட்டுவிட்டன. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சிக்கல் ஆக்சிஜன் உற்பத்தியில் இல்லை, விநியோகம் மற்றும் போக்குவரத்தில்தான் உள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் வேதாந்தா மட்டுமே. ஆக்சிஜனுக்கு ஒரே தீர்வு என்பது போன்ற … Continue reading இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?
மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். இதை மங்களூரு போலீசு உறுதி செய்துள்ளது. https://twitter.com/IndiaToday/status/1207686276167749632?s=20 போராட்டங்களை அடுத்து மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை களைக்க போலீசார் முதலில் தடியடி நடத்தியதாகவும், பின்னர் போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. கல்வீச்சு சம்பவங்களை தடுக்க துப்பாக்குச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் இருவர் பலியானதாகவும் போலீசு தரப்பு கூறுகிறது. இந்த பலிக்கு … Continue reading மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு
‘இரண்டு குஜராத்தி குண்டர்கள்’: மோடி – ஷாவை விமர்சித்தவர் பாஜகவிலிருந்து நீக்கம்!
இந்தி பேசும் மாநில மக்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக இரண்டு குஜராத்தி குண்டர்கள் ஏமாற்றி வருகிறார்கள்
இந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் சூழலுக்கு பொருத்தி,இக்கருத்தாக்கத்தை வளர்ந்த்தெடுத்த கிராம்சியின் புரட்சிகர சிந்தனைகளை இந்துத்துவ பாசிசத்தின் காலத்தில் பகுப்பாய்வு செய்வது பொருத்தமானதாக தெரிகிறது. 1 அரசியல் களத்தில் “நிலைபதிந்த போர்” … Continue reading இந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்
எக்சிட் போல் முடிவுகள் உண்மையா? உள்நோக்கமுடையதா?
கா. ஐயநாதன் இந்திய நாடாளுமன்றத்தின் 17வது மக்களவையைத் தேர்ந்தெடுக்கும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக் கிழமை முடிவடைந்த சில நிமிடங்களிலேயே “மீண்டும் மோடி ஆட்சியே அமையப் போகிறது” என்று கூறும் வாக்குக் கணிப்பு முடிவுகள் (Exit Poll Results) தொலைக் காட்சிகளில் வெளியாகியுள்ளன. முன் திட்டமிடப்பட்டுபோல் எல்லா தொலைக்காட்சிகளின் வாக்குக் கணிப்பு முடிவுகளும் மோடியின் தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசு அமையும் என்று கூறியுள்ளன. பாஜக தலைமையிலான தேச ஜனநாயகக் கூட்டணி … Continue reading எக்சிட் போல் முடிவுகள் உண்மையா? உள்நோக்கமுடையதா?
இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்
பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம். த டைம்ஸ் தமிழ்.காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ். இதில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை, அதன் போதாமை, அடையாள அரசியல், ஆர்எஸ்எஸ் -ன் தாக்கம் என பல ஆழமான செய்திகளை இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் அ. மார்க்ஸ். கேள்வி : பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இஸ்லாமிய வேட்பாளர்களாக அதிமுக, திமுக சார்பில் யாருமே … Continue reading இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்
பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்
குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு. ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் … Continue reading பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்
சோஃபியா எனும் வனயட்சி!
ஒருவன் உன்னை எதிர்த்தால் அவன் மீது தேசத்துரோகி என முத்திரை குத்து, முடித்தால் தீவிரவாதி என நிரூபி, இறுதியில் வாயில் சுடு என்பது தான் ஃபாசிஸம்.
ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் கார்த்திகேயனை பாஜகவினர் சமூக ஊடகங்களில் மிரட்டி வருவது கண்டிக்கத்தக்கது என ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “’மாதவிடாய் காலத்தில் பெண் தெய்வங்கள் கோயிலை விட்டு வெளியேறிவிடுகின்றனவா?’ – என பொருள்படும் கவிதையை நிகழ்ச்சி ஒன்றில் மேற்கோள் காட்டியதற்காக, புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன், பா.ஜ.க., இந்து முன்னணி மதவாத கும்பலால் மிக வெளிப்படையாக மிரட்டப்பட்டு வருகிறார். கார்த்திகேயன் சொன்ன வார்த்தைகளில் எவ்வித தவறும் இல்லை … Continue reading ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்
இந்தியா மட்டும்தான் தமிழர்களுக்கு துரோகம் செய்கிறதா?
இப்போது நம்முடைய முதன்மையான கோரிக்கை முழக்கமெல்லாம், தமிழக உரிமைகளை பாதுகாக்க முடியாத அதிமுக அரசே பதவிவிலகு என்பதாகதான் இருக்கவேண்டும்.
“சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இருப்பது கடினம்”: பாஜக மாநில மகளிரணி செயலாளர்
தமிழக பாஜகவின் மகளிரணி செயலாளராக இருந்தவர் ஜெமீலா. பாஜகவிலிருந்து விலகுவதாக முகநூலில் எழுதியிருக்கும் இவர், ‘பாஜகவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயணிப்பது கடினம்’ என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். “நான் கடந்த 2 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராக கட்சிப் பணி செய்து வந்தேன் . பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மாண்புமிகு மத்திய … Continue reading “சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இருப்பது கடினம்”: பாஜக மாநில மகளிரணி செயலாளர்
தூங்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்!
எதற்காக சாரணர் இயக்கத்தில் பதவி வேண்டிக் கிடக்கிறது? அடிப்படையில் இருந்து எல்லாவற்றையும் புகட்டினால்தான் அடியாழத்தில் அது பதியும். இது எல்லோருக்கும் பொருந்திப் போவதுதான்.
திருச்சி பாஜக பொதுக்கூட்டத்திற்கு 93 தொண்டர்கள்தான் வந்தார்களா?: வீடியோவைப் பாருங்கள்…
திமுகவுக்கு பதிலடி தரும்வகையில் பாஜக திருச்சியில் பொதுக்கூட்டத்தை நடத்தியது. அந்தக்கூட்டத்துக்கு ஆட்களே வரவில்லை என சமூக ஊடகங்களில் படங்கள் போட்டு பலர் எழுதினர். இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், கூட்டம் தொடங்கும் முன் போடப்பட்டிருந்த காலியான நாற்காலிகளை படம் பிடித்து சமூக ஊடகங்களில் சிலர் எழுதிவருவதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் ஆதரத்துடன் பலர் திருச்சி பொதுக்கூட்டம் பற்றிய வீடியோக்களையும் படங்களையும் பகிர்ந்துவருகின்றனர். அதில் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில் மத்திய இணை அமைச்சர் … Continue reading திருச்சி பாஜக பொதுக்கூட்டத்திற்கு 93 தொண்டர்கள்தான் வந்தார்களா?: வீடியோவைப் பாருங்கள்…
‘தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருக்கும் கர்நாடகா’: சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ் எழுதிய கட்டுரை
தனது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ், தீவிர இந்துத்துவ எதிப்பாளராக இயங்கி வந்த பத்திரிகையாளர். கௌரி லங்கேஷ், 2008-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே: சமீபத்தில் ஹூப்ளி, ஹொன்னள்ளி ஆகிய இடங்களில் வாகன திருட்டி ஈடுபட்டதாக மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் இஸ்லாமியர்களாக இருந்ததால், அடுத்த நாளே, காவல்துறை வட்டாரங்கள் அவர்களை பற்றிய செய்தியை கசியவிட்டது. அதாவது அவர்கள் மூவரும் நாட்டின் வெவ்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல்துறை சந்தேகிப்பதாக அந்த … Continue reading ‘தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருக்கும் கர்நாடகா’: சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ் எழுதிய கட்டுரை
மோடி அரசின் 3 ஆண்டு சாதனையை கொண்டாட பீஃப் பார்டி: பாஜக தலைவர் ஏற்பாடு
மத்தியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் அரிசி பீருடன் பீஃப் பார்டி கொடுக்கப்படும் என மேகாலயா மாநிலத்தின் கரோ மாவட்ட பாஜக தலைவர் பச்சு சம்பூகோங் மராக் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். https://www.facebook.com/bachumarak/posts/1347659721992713 மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதற்கு தடை கொண்டுவந்த நிலையில் மேகாலயாவின் பாஜக தலைவர் ஒருவரே மாட்டிறைச்சி விருந்துக்கு அழைப்பு விடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை மாட்டிறைச்சி தவிர்க்க முடியாத … Continue reading மோடி அரசின் 3 ஆண்டு சாதனையை கொண்டாட பீஃப் பார்டி: பாஜக தலைவர் ஏற்பாடு
பாஜகவின் வெற்றிக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகளா?!
மாதவராஜ் பாரதீய ஜனதா அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு பெற்றதற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் நிலைபாடுகள்தான் காரணம் என்னும் கருத்து இந்த நேரத்தில் முன்வைக்கப்படுகிறது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில், ‘பாஜக, காங்கிரஸ் இரண்டையும் நிராகரிப்போம்’ என்று சி.பி.எம் எடுத்த அரசியல் நிலைபாடு விமர்சிக்கப்படுகிறது. காங்கிரஸை ஆதரித்து பாஜகவை வீழ்த்துவதே இப்போதைய நோக்கம் என பரப்பப்படுகிறது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு அடிப்படையான காரணமே காங்கிரஸ் ஆட்சியின் அட்டூழிய நடவடிக்கைகளும், அநியாயமான ஊழல் குற்றச்சாட்டுகளும்தான். மக்களின் கடும் … Continue reading பாஜகவின் வெற்றிக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகளா?!
அரசு வங்கிகளைவிட தனியார் வங்கிகளுக்கு அதிக பணம் கொடுத்தது எப்படி?: விசாரணை தேவை
அரசு வங்கிகளைவிட தனியார் வங்கிகளுக்கு அதிக பணம் கொடுத்தது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக ரூ.1000, ரூ.500 தாள்களை செல்லாது என அறிவித்த மத்திய அரசின் திட்டம் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக எதிர்மறை திசையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை நிகழ்ந்தவற்றை வைத்துப் பார்க்கும் போது எந்த பயனும் ஏற்படாது என்றே தோன்றுகிறது. இந்தியாவில் ரூ.8.58 லட்சம் கோடி மதிப்புள்ள 1716.50 … Continue reading அரசு வங்கிகளைவிட தனியார் வங்கிகளுக்கு அதிக பணம் கொடுத்தது எப்படி?: விசாரணை தேவை
மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற வெளிநடப்பு செய்து உதவினார் ஜெயலலிதா: வெங்கய்யா நாயுடு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கில் பாஜக பிரமுகர்கள் பெருமளவு கலந்துகொண்டனர். ஜெயலலிதா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு ஆறுதல் கூறினார். தமிழக முதலமைச்சரான பன்னீர்செல்வத்தை கட்டித் தழுவி ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனத் தெரிவித்தார். மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஜெயலலிதாவின் உடல் அருகே நீண்ட நேரம் இருந்தார். அதிமுக பொதுச்செயலாளரின் இரங்கல் நிகழ்வில் பாஜக பிரமுகர் ஏன் … Continue reading மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற வெளிநடப்பு செய்து உதவினார் ஜெயலலிதா: வெங்கய்யா நாயுடு
போபால் படுகொலை மற்றொரு “குஜராத் மாதிரி” போலி மோதல் படுகொலை: அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன் போபால் சிறையிலிருந்து தப்ப முயன்றதாக கூறி சிமி அமைப்பைச்(அவர்கள் அவ்வமைப்பினர் தானா என்பதும் உறுதி செய்யப்படவில்லை) சேர்ந்த எட்டு விசாரணைக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வானது, குஜராத் போலி மோதலைப் போல இஸ்லாம் வெறுப்பின்பாற்பட்ட பாஜக அரசின் மற்றொரு போலி மோதல் பச்சை படுகொலை நிகழ்வுதான் என்கிற ஐயம் ஒவ்வொன்றாக நிரூபணம் ஆகி வருகிறது. இக்கொலைக்குப் பின்னாலான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசுகிற மத்தியப் பிரதேச அமைச்சர்,சிறைக்கு பத்து கிலோமீட்டர் தொலைவில் சிறைக் கைதிகளை போலீஸ் … Continue reading போபால் படுகொலை மற்றொரு “குஜராத் மாதிரி” போலி மோதல் படுகொலை: அருண் நெடுஞ்செழியன்
ராசாத்தி அம்மாள் சசிகலாவை சந்தித்ததன் பின்னணி; சவுக்கு சங்கர் சொல்கிறார்
சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க, திமுக தலைவர் மு. கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் சென்று வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து ‘சவுக்கு’ சங்கர் தனது முகநூலில் எழுதியுள்ள பதிவில் ரசாத்தி அம்மாளிடம் சசிகலா கதறி அழுததாகச் சொல்கிறார். மேலும் அந்தப் பதிவில், நேற்று இரவு ராசாத்தி அம்மாள் அப்போல்லோ மருத்துவமனையில் சசிகலாவை சந்தித்ததாக செய்திகள் வந்துள்ளன. அந்த சந்திப்பு நடந்தது உண்மையே. ,இரவு 9.40 … Continue reading ராசாத்தி அம்மாள் சசிகலாவை சந்தித்ததன் பின்னணி; சவுக்கு சங்கர் சொல்கிறார்
கழன்று விழும் இந்துமதவெறியர்களின் முகமூடிகள்
சு. இரவிக்குமார் "காவி"கள் உருவாக்கும் காவிரிச்சிக்கலின் பின்புலத்தில் இன்னுமொரு மதவெறி நிகழ்ச்சி நிரலும் உள்ளது. தற்காலத்தின் முதல்வர்களில் அவர் காங்கிரஸ் முதலமைச்சராய் இருந்த போதிலும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக உறுதியான நிலைபாடு எடுப்பதோடு, மூடநம்பிக்கைகளுக்கும், மூடப்பழக்க வழக்கங்களுக்கும் எதிராக உருப்படியான சட்டங்களையும் இயற்றியவர் சித்தராமய்யா. அதுதான் சித்தராமய்யாவைப் பதவியிலிருந்து அகற்றிவிட்டு, அங்கே பாஜக ஆட்சியை அமைப்பதன் மூலம், இத்தகைய முற்போக்கான சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவோ அல்லது இல்லாமலே ஆக்கவோ செய்ய வேண்டும் என்பதும் பாஜகவின் உள்ளக் கிடக்கைகளில் … Continue reading கழன்று விழும் இந்துமதவெறியர்களின் முகமூடிகள்
காவிரி விற்பனைக்கு; பின்னணியில் கர்நாடக, தமிழக கார்ப்பொரேட் அரசியல்வாதிகள்
திருமுருகன் காந்தி பெங்களூரில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் தினந்தோறும் கோக், பெப்சி ஆலைகளுக்கு கொடுக்கப்படுகிறது. 4000 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையம் மைசூரில் அமைக்கப்பட இருப்பதற்கு 7 டி.எம்.சி தண்ணீர் காவேரியில் இருந்து திட்டமிடப்பட்டிருக்கிறது. கர்நாடகம் தண்ணீரை தனியார் மயமாக்கிய முன்னணி மாநிலம். பெங்களூரில் தண்ணீர் தனியார் மயத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு வெகுநாட்களாகிறது, மைசூர் தனியார் தண்ணீர் திட்டம் வெகுமக்களால் எதிர்க்கப்பட்டு நிறுத்தப்பட்டு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டொரு வருடத்திற்கு முன் அமெரிக்க தண்ணீர் விநியோக நிறுவனங்களின் சொந்தக்காரர்கள், அதிகாரிகள் … Continue reading காவிரி விற்பனைக்கு; பின்னணியில் கர்நாடக, தமிழக கார்ப்பொரேட் அரசியல்வாதிகள்
ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு: விசிக கண்டனம்
உலகப் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியப் பிரிவின்மீது 'பகமையைத் தூண்டுதல், கலவரம் செய்தல், தேசத்துரோகம்' உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததாக பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் கருத்துரிமைக்கு எதிரான இந்தத் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளது. பாதிப்புக்குள்ளான காஷ்மீர் மாநிலத்தவர் … Continue reading ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு: விசிக கண்டனம்
மாயாவதியை அவதூறாகப் பேசிய தயாசங்கர் சிங் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது
அண்மையில் குஜராத் உனா நகரில் இறந்த மாட்டின் தோலை உரித்து எடுத்துச் சென்ற நான்கு தலித் இளைஞர்களை இந்துத்துவ கும்பல் கட்டிவைத்து அடித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலித்துகள் போராட்டமாக அதை முன்னெடுத்தார்கள். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, பாஜகவை தலித் விரோத கட்சி என விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடியாக மாயாவதியை விமர்சித்த உத்திரபிரதேச பாஜக துணைத் தலைவர் தயாசங்கர் சிங், கீழ்தரமான ஒப்பிடலை செய்திருந்தார். … Continue reading மாயாவதியை அவதூறாகப் பேசிய தயாசங்கர் சிங் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது
அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணி
மகாராஷ்டிர மாநிலத்தின் தலை நகரான மும்பையில் அமைந்துள்ள அம்பேத்கர் பவன் தாக்கப்பட்டதைக் கண்டித்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கான பிரம்மாண்டமான பேரணி மும்பையில் நடைபெற்றது. பேரணி இறுதியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சத்திரபதி சிவாஜி ரயில்வே நிலையத்திலிருந்து சீத்தாராம் யெச்சூரி உட்பட இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் மற்றும் தலித் அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள். மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பையில் இதயப் பகுதியாக விளங்கும் மத்திய மும்பை பகுதியில் உள்ள தாதர் என்னுமிடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பேத்கர் பவனும், பாரத் பூஷன் … Continue reading அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணி
“எங்கே போகிறது பா.ஜ.க.? முடிவில் என்ன தான் செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!”
திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, பா.ஜ.க.வினர் சிலரும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சிலரும் மற்றும் அவர்களது தொண்டரடிப்பொடி பிரசாரகர்களும், விளைவுகளைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலையின்றி, எதை நினைத்தாலும் பேசலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எல்லைக்கே சென்று செயல்பட்டு, நாட்டில் பேதத்தையும், வேறுபாட்டையும், பிளவையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட … Continue reading “எங்கே போகிறது பா.ஜ.க.? முடிவில் என்ன தான் செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!”
மகனுக்கு 11 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த பாஜக தலைவர்
ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் தலா மராந்தியின் மகன் முன்னா மராந்தி 11 வயது சிறுமியை திருமணம் செய்திருக்கிறார். முன்னா மராந்தியின் திருமணம் கடந்த 27-ம் தேதி 11 வயது நடந்துள்ளது. திருமண வரவேற்பு ஜூன் 29-ம் தேதி நடைபெற்றுள்ளது. சிறுமியின் பள்ளி சான்றிதழ் படி அவருடைய பிறந்த தேதி ஜூலை 25, 2005. சிறுமிக்கு 11-வயதே ஆகிறது என்றும் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே உறவுக்கார சிறுமியையே முன்னா திருமணம் செய்தாக இருந்தது. ஆனால் … Continue reading மகனுக்கு 11 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த பாஜக தலைவர்
“மாமா வளவா” : தியானம் செய்த திருமாவளவன் குறித்து பாஜக தென்சென்னை மாவட்ட மகளிரணித் தலைவியின் நாகரிக பதிவு
பாஜக தென்சென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் ரமாவின் அரசியல் நாகரிகம் தாழ்ந்த தரத்தில் இருக்கிறது. உதாரணமாக நீச்சல் உடையில் இருக்கும் ஒரு பெண்ணின் படத்தைப் போட்டு அதை சோனியா காந்தி என சொல்லி இவரெல்லாம் எப்படி ஒரு கட்சியின் தலைவரானார் என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார். சமீபத்திய பதிவில் “மாமா வளவா” என்று விளித்து தொல் திருமாவளவன், நோன்பிருப்பது குறித்து அவதூறான பதிவொன்றை எழுதியிருக்கிறார்.. Rama R மாமா வளவா, யாரை ஏமாற்ற இந்த நாடகம்... தொழுகையின் … Continue reading “மாமா வளவா” : தியானம் செய்த திருமாவளவன் குறித்து பாஜக தென்சென்னை மாவட்ட மகளிரணித் தலைவியின் நாகரிக பதிவு
தலித் வீட்டில் உணவு: “தமிழிசையும் ஒரு காலத்தில் பட்டியல் பிரிவு இனத்தவர் என்பதை அறிவாரா?”
பா.ஜ.க. ஆட்சியின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க கூட்டம் சேலத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பா.ஜ.க.,வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், நேற்று மாலை சேலம் காக்காயன் சுடுகாடு அருகே உள்ள கோர்ட் ரோடு காலனியில் உள்ள தன் கட்சிக்காரர் ஜீவானந்தம் என்ற வீட்டில் சாப்பிட்டார். தலித் சமூகத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என்று ஜீவானந்தம் அப்போது தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், இனி நான் … Continue reading தலித் வீட்டில் உணவு: “தமிழிசையும் ஒரு காலத்தில் பட்டியல் பிரிவு இனத்தவர் என்பதை அறிவாரா?”
அசாமில் பாஜக வெற்றி: வடகிழக்கு மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக!
அசாமில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 60 இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கிறது. வடகிழக்கு மாநிலம் ஒன்றில் பாஜக ஆட்சியமைப்பது இதுவே முதல்முறை. 15 ஆண்டு கால ஆட்சியை இழந்திருக்கிறது காங்கிரஸ். மொத்த தொகுதிகள்: 126 கட்சி வென்றவை முன்னணி மொத்தம் பாஜக 60 0 60 காங்கிரஸ் 26 0 26 All India United Democratic Front 13 0 13 அசாம் கனபரிஷத் 14 0 14 போடோலேண்ட் மக்கள் முன்னணி … Continue reading அசாமில் பாஜக வெற்றி: வடகிழக்கு மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக!
“பாஜக, அதிமுக, திமுக எனக்கு பணம் கொடுக்க முன்வந்தார்கள்”: விஜயகாந்த் ஒப்புதல்
Kumaresan Asak விஜயகாந்தை விமரிசிக்கிறவர்கள் அவருக்குக் கோர்வையாகப் பேசத்தெரியாது என்று சொல்கிறார்கள். பேசத்தெரியாத ஒருவர் இப்போது பேசியிருக்கிற பேச்சு குண்டு போட்டது போன்ற விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதும், வாக்குச் சாவடியிலேயே மற்ற கட்சிகளின் முகவர்களுக்குப் பணம் கொடுப்பதும், அணி சேர்வதற்காகத் தலைமைக்கே பணம் கொடுப்பதும் இப்படிப்பட்ட பெரிய கட்சிகளைப் பொறுத்தவரையில் புதிய விசயம் அல்ல. அந்தக் கட்சிகள் பண பேரம் நடத்தியிருக்க மாட்டார்கள் என்று சொல்வாரா நண்பர்? தேமுதிகவை இழுக்க கோடிக்கணக்கில் பணம் தர … Continue reading “பாஜக, அதிமுக, திமுக எனக்கு பணம் கொடுக்க முன்வந்தார்கள்”: விஜயகாந்த் ஒப்புதல்
”வானதி எளிமையானவர் என்பதால் அவருக்காக வாக்கு கேட்கிறேன்” வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன் பிரச்சாரம்!
கோவை, சிவானந்தா காலனியில் உள்ள தனியார் அரங்கில் 'நட்புடன் வானதி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். அப்போது அவர் (தினமணி எழுதியுள்ளபடி) “நாடு முன்னேற்றமடைய பெண்கள் துணிவுடன் செயல்பட வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் வானதி சீனிவாசன். அவரது செயல்பாடுகள் மற்றும் அனைவரிடத்திலும் எளிமையாகப் பழகும் குணம் காரணமாக எந்தக் கட்சியிலும் சாராத நான் அவருக்கு ஆதரவாக உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். மேலும், வானதி துணிச்சலாகப் போராடி … Continue reading ”வானதி எளிமையானவர் என்பதால் அவருக்காக வாக்கு கேட்கிறேன்” வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன் பிரச்சாரம்!
“வாசகர்கள் பிரமிப்பு” என்கிறது தினமலர்; “மிச்சமிருக்கிற மரியாதைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்கிறார்கள் வாசகர்கள்!
தாங்கள் நடத்தும் கருத்து கணிப்பை பிரமிப்புடன் மக்கள் பார்ப்பதாக தினமலர் முதல் பக்க செய்தி வெளியிட்டிருக்கிறது. “தமிழக வாக்காளர்களின் மனநிலையை படம் பிடித்தும் காட்டும் விதமாக, 'தினமலர்' நாளிதழும், 'நியூஸ் 7' தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள், அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முதல் முறையாக, மிக பிரம்மாண்ட அளவில் நடத்தப்பட்ட, இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் பிரமிப்பை ஏற்படுத்துவதாக, பொது மக்களும், கட்சி சாராதோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்” இந்தச் செய்தி தினமலர் இணையதளத்தில் … Continue reading “வாசகர்கள் பிரமிப்பு” என்கிறது தினமலர்; “மிச்சமிருக்கிற மரியாதைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்கிறார்கள் வாசகர்கள்!
அதிமுக, பாஜகவில் வாய்ப்புக் கேட்டுப் போனவர் விஜயதரணி: உருவபொம்மை எரித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
விளவங்கோடு தற்போதைய எம்.எல்.ஏ. விஜயதரணி தொகுதிக்கு வருவதில்லை. தொகுதி மக்களுக்கு வளர்ச்சி பணிகள்செய்வதில்லை. தொகுதி வர வேண்டுமானால் கட்டவுட்டுகள், போஸ்டர்கள் ஒட்ட வேண்டும் என்பதால் கடந்த நான்கு ஆண்டுகளாக காங்கிரஸார் கொதித்து போயுள்ளனர். ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் ஏற்பட்ட பிரச்சினையில் தமிழக மகளிரணித் தலைவர் பொறுப்பிலிருந்து விஜயதரணி நீக்கப்பட்டார். அப்போது அதிமுகவில் சேர்வதற்கும் பாஜகவில் சேர்வதற்கும் விஜயதரணி முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக விஜயதரணி வெளிப்படையாக பேசினார். இந்த சூழ்நிலையில் அகில இந்திய … Continue reading அதிமுக, பாஜகவில் வாய்ப்புக் கேட்டுப் போனவர் விஜயதரணி: உருவபொம்மை எரித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
“பிஜேபி ரெண்டு, மூணு சீட் ஜெயிக்க வாய்ப்பிருக்கே”: சுப்ரமணியன் சுவாமி
சமீபத்திய சீ ஓட்டர் கருத்து கணிப்பில் தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெல்ல வாய்ப்பில்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில் பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி பாஜக இரண்டு அல்லது மூன்று தொகுதியில் வெல்ல வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், “வித்தியாசமான ஆதரவு இருக்கே ஹிந்து மக்கள் ஆதரவு இருக்கு. ஆர். எஸ். எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணியோட ஆதாரம் இருக்கே. அதன் காரணம் ரெண்டு, மூணு சீட் … Continue reading “பிஜேபி ரெண்டு, மூணு சீட் ஜெயிக்க வாய்ப்பிருக்கே”: சுப்ரமணியன் சுவாமி
ப. சிதம்பரம் தேசத் துரோகி: முத்திரை குத்தினார் தமிழிசை
நாடு முழுவதிலும் உள்ள பாஜகவினர் தங்களுடைய சித்தாந்தத்தை எதிர்க்கும் மாணவர்கள், அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் என அனைவரையும் ‘தேசத்துரோகி’ முத்திரை குத்தி வந்தனர். இந்நிலை தமிழக அரசியல் சூழலில் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையை தேர்தல் அரசியலுக்காக கையில் எடுத்திருக்கிறார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன். செவ்வாய்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “இஷ்ரத் ஜகான் வழக்கில் பிரமான வாக்குமூலத்தை வேண்டுமென்றே இரண்டாம் முறையாக அவர் தீவிரவாதி இல்லை என்று திருத்திய ப. சிதம்பரம் ரகசியம் அம்பலமான நிலையில் … Continue reading ப. சிதம்பரம் தேசத் துரோகி: முத்திரை குத்தினார் தமிழிசை
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை இழிபடுத்தும் தமிழக பாஜக…
வே. மதிமாறன் எல்லா இந்துக்களையும் அவரவர் உருவத்தில் வரைந்திருக்கிற இந்துக்களுக்கான கட்சி, திருமாவளவனை மட்டும் எவ்வளவு இழிவாகக் காட்டுகிறது. இத்தனைக்கும் அவர், இவர்கள் துரோகிகளாக சித்தரிக்கிற முஸ்லிமும் அல்ல . மற்றவர்கள் அரசியல்வாதியாக மட்டும் விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால், திருமா தலித்தாக இருக்கிறார் என்பதற்காகதான் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறார். இது தேர்தலுக்கான விளம்பரம் மட்டுமல்ல, தலித் மக்கள் மீது காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் கொண்ட இந்து சமூகத்தின், 1000 ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட ஜாதிவெறியின் நவீன சாட்சி.
“இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் திராவிட, காங்கிரஸ், கம்யூனிச, சினிமா, சாராயம், இலவச அரசியல் கலாசாரங்கள் ஒழிக்கப்படும்”
இந்து மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டு விழா திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான நேர்காணல், வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. 567 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். முதற்கட்டமாக 127 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை தொகுதியில் சுந்தர்சுவாமி போட்டியிடுகிறார். அதிமுகவை பாஜக இப்போதுதான் விமர்சித்துப் பேசுகிறது. இது தேர்தலுக்கான … Continue reading “இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் திராவிட, காங்கிரஸ், கம்யூனிச, சினிமா, சாராயம், இலவச அரசியல் கலாசாரங்கள் ஒழிக்கப்படும்”