நரேன் ராஜகோபாலன்முட்டாளாக போகும் தமிழக வாக்காளனுக்கு, ஒன்றும் செய்ய முடியாத, கையறு நிலையில் இருக்கும் ஒரு தமிழ்நாட்டு குடிமகன் எழுதுவது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திமுக வேட்பாளரும், இளைஞரணி தலைவருமான திரு. எஸ். உதயநிதி வேட்பு மனு தாக்கலின் போது சமர்பித்த affidavit விவரங்களை நேற்று பதிந்து இருந்தேன். சிரிக்கிறதுக்கான மேட்டர் இல்லை அது, ரொம்ப சீரியசான மேட்டர். உதயநிதி சமர்ப்பித்ததில் அவருடைய வருவாய் ரூ. 1,50,17,700 (2017-18) ரூ. 4,00,090 (2018-19) ரூ. 4,89,520 (2019-20) என்று சொல்லப்பட்டு … Continue reading சினிமாவில் நடிக்க உதயநிதி ரூ. 30 ஆயிரம்தான் சம்பளம் வாங்கினாரா?
குறிச்சொல்: திராவிட அரசியல்
வைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்
இறந்தவர்களை புதைத்த இடத்தில் நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பது, பார்ப்பனர் இப்போது நமக்குச் செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும். இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது.
‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது!
யமுனா ராஜேந்திரன் அண்ணா அருகில் கலைஞருக்கு இடம் இல்லை என்கிறார்கள். அரசு ரீதியில் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். தமிழக வரலாற்றில் இலக்கியம், கருத்தியல் என்பவற்றில் நிலைத்து நிற்கும் பங்களிப்புச் செய்தவர். எளிய தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் நெடிதுநிற்கும் அரசியல் மாற்றங்களைச் சட்டமாக்கியவர். தமிழக வரலாற்றில் பெரியார், அண்ணாவிற்குப் பிறகு அந்த இடம் கலைஞருக்குத்தான். வெகுமக்கள் வந்துபோகும் மெரினா கடற்கரையில் கலைஞருக்கு இடம் இல்லை என்பது இழிவான அரசியல். அண்ணா அறிவாலயமோ பெரியாரது நினைவிடமோ … Continue reading ‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது!
தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி!
கலைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார். கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது. காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது. தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது. "பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் … Continue reading தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி!
காலமானார் முன்னாள் முதல்வரும் மூத்த திராவிட அரசியல்வாதியுமான மு. கருணாநிதி
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி இன்று மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு சமூக ஊடகங்களில் செலுத்தப்பட்டுவரும் இரங்கல் இங்கே.. எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி: காலங்காலமாகப் பெண்ணுக்கு மறுக்கப்பட்டு வந்த சொத்துரிமையை அமல்படுத்துவதற்கு, இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தில், பரம்பரைச் சொத்தில் மகள்களுக்கும் சொத்துரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆனால், அது நிறைவேறவில்லை. இந்தச் சட்டத்தில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு திருத்தம் … Continue reading காலமானார் முன்னாள் முதல்வரும் மூத்த திராவிட அரசியல்வாதியுமான மு. கருணாநிதி
முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்
அண்மையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் பேசிய தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, கருணாநிதி குறித்து சில விமர்சனங்களை வைத்தார். இது திமுக ஆதரவாளர்களிடையே விமர்சனத்துக்கு ஆளானது. ஒருசிலர் கருத்துக்களால் விமர்சனம் செய்துகொண்டிருக்க ஒருசிலர் தனிப்பட்ட தாக்குதலை வைத்தனர். தியாகுவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் எழுத்தப்பட்டன. எழுத்தாளர் நலங்கிள்ளியின் பதிவு: “கலைஞருக்குத் தோழர் தியாகு தொடுத்த அதிரடிக் கேள்விகள்! நேற்று நியூஸ் 18 … Continue reading முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்
அரசியலில் உதயநிதி; மூன்றாம் கலைஞரா? இரண்டாம் ஸ்டாலினா?
“உருவாக்கப்பட்ட அரசியல்வாதிகளின்” எல்லை என்பது ஒரு குறிப்பிட்ட அளவோடு முடிந்துவிடக்கூடியது. இப்போது நிகழ்வது அதுதான்.
திராவிடம் 2.0!
பிரகாஷ் ஜே.பி. திராவிட நாடு குறித்த விவாதத்துக்கு மிகப்பெரிய நன்றி... இதினால், இதுவரை, "திராவிடத்தால் வீழ்ந்தோம்... கழகங்களால் நன்மையில்லை.. தமிழகம் வளரவில்லை..." என்றெல்லாம் வாய் கூசாமல் பொய் பேசிவந்த கும்பல்களே, இப்போது, "தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வளர்ந்த மாநிலங்கள் தான்.. ஹிந்துத்துவா கொலோசும், பிஜேபி ஆளும் வட ஹிந்திய மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சியடையாத, பின்தங்கிய மாநிலங்கள்... அதினால் அவர்களுக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது" என்ற உண்மையை பேசவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.. அதேபோல, … Continue reading திராவிடம் 2.0!
திராவிட அரசியலை அழிப்பதா? வாக்கு அரசியலா?: தமிழகத்தில் என்ன வேண்டும் பாஜகவுக்கு….
கருணாநிதியை ஊழல்வாதி என்று நிறுவியதில் வலது சாரி அமைப்பினர் அடைந்த வெற்றி கருணாநிதியை மட்டும் பாதிக்கவில்லை. திராவிட இயக்கங்களின் மீதான பொது விமர்சனமாக மாறவும் வழி வகுத்துவிட்டது.
வாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’: தி இந்து மட்டுமே காரணமா?
தங்களுக்கு கிடைத்திருக்கும் புதிய அதிகாரத்திற்கான குலக்குறியாகக் கருதி தேவரை ஒரு அரசியல் தலைவர் என்பதை விடவும் புனிதர் என்று கட்டமைப்பது இங்கு ஊடகத்தில் ஆட்சி பெற்றிருக்கும் இவர்களுக்கு அவசியமாகிறது.
இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தமிழில் ஏதேனும் நாவல் இருக்கிறதா?
மனுஷ்யபுத்திரன் சாரு நிவேதிதா டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எழுதியிருக்கும் கட்டுரை மிக முக்கியமானது. சமூக அரசியல் இயக்கங்கள் ஏற்படுத்திய சமூக தாக்கங்கள் ஒரு பின்புலமாகக்கூட ஏன் நவீன தமிழ் இலக்கியப் போக்குகளில் குறிப்பாக நவீன இலக்கியத்தில் பிரதிபலிக்கவில்லை என்ற கேள்வியை நாம் விவாதிக்கத்தான் வேண்டும். இந்திய சுதந்திரபோராட்ட காலம் பிற இந்திய மொழிகளில் பிரதிபலிக்கப்பட்ட அளவு தமிழ் புனைகதையில் ஏன் பிரதிபலிக்கப்படவில்லை? சுதந்திரபோராட்டத்தைவிடுங்கள். திராவிட இயக்க எழுச்சி, இந்தி எதிர்ப்பு போர், சமூக நீதிக்கான போராட்டங்கள் … Continue reading இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தமிழில் ஏதேனும் நாவல் இருக்கிறதா?
வெக்கமற்ற அரசியல் ஆட்டம்!
பெங்களூரு சிறை தொட்டு திருவண்ணாமலை மூக்குப்போடு சித்தர் வரையிலும் கட்சியை தக்க வைக்கவும், ஆட்சியை கட்டுப்படுத்தவும் ஆசி அருள் கோரி அலைகிறார் டி டி வி.
#முரசொலி75: கமலின் பூணுல் போடாத கலைஞன் பிரகடனமும் பேசாமல் போன ரஜினியும்!
இது வெறும் விழாவாக சிலருக்கு தெரியலாம். ஆட்சியை பிடிக்க எத்தனிக்கும் ஒரு கட்சி பெரியார், பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, திராவிடக் கருத்தியல் ஆகியவற்றை மைய நீரோட்டத்தில் ஒலிக்க விடுவது கவனிக்கத்தக்கது. இந்துத்துவ கும்பலை இது நிச்சயமாக குழப்பமுற செய்யும்.
திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது: எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு ஸ்டாலின் விளக்கம்
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் எழுத்தாளர் மதிமாறனுக்கும் பாஜக பேச்சாளர் நாராயணனுக்கும் இடையே நடந்த 'பார்ப்பனர்' தொடர்பான வாக்குவாதத்தில் எஸ்.வி. சேகர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதில் திமுக செயல்தலைவர் மு. க.ஸ்டாலினை தொடர்பு படுத்தி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார் என சமூக ஊடகங்களில் பலரும் குரல் எழுப்பிய நிலையில், ஸ்டாலின் தனது முகநூலில் விளக்க அளித்துள்ளார். அதில், "தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சி சம்பந்தமான சர்ச்சையினையடுத்து, நடிகரும் நண்பருமான … Continue reading திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது: எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு ஸ்டாலின் விளக்கம்
நான் டெல்லிக்கு ஓடியதற்கு திமுக ஆட்சிதான் காரணம்: சாருநிவேதிதா
தமிழ்நாடே வேண்டாம் என்று தில்லிக்கு ஓடி விட்டேன். அந்த வகையில் தமிழ்நாட்டை விட்டு ஓடிய பிராமணர்களைப் போல் தான் நானும்.
கருணாநிதி வைரவிழாவில் திமுக செய்திருக்கும் பிரகடனம்!
நாடு முழுக்க ஒரு வலது சாரி அச்சம் படர்ந்துகொண்டிருக்கும் வேலையில் அவர் பெயரால் நிகழும் இந்த ஒருங்கிணைப்பு ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஒரு நகர்வு.
சுபமுகூர்த்த நாளில்தான் பேசுவோம்: அதிமுக இணைப்பு பற்றி அமைச்சர்
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் ஒரு அணியும் உருவாகின. சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளர் ஆனார். இந்நிலையில் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர். கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரின. இந்த வழக்கு தேர்தல் ஆணையத்துக்குச் … Continue reading சுபமுகூர்த்த நாளில்தான் பேசுவோம்: அதிமுக இணைப்பு பற்றி அமைச்சர்
அரசியலில் அரங்கேறும் குரங்கு கதை!
சரவணன் சந்திரன் குரங்குகளைப் பற்றிச் சொல்லும் போது ஒரு கதை சொல்வார்கள். இது உண்மையா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. காட்டுயிர் சார்ந்தவர்கள் சொன்னால் திருத்திக் கொள்கிறேன். அதே சமயம் இந்த உதாரணம் மிகச் சிறந்ததும்கூட. கூண்டிற்குள் மாம்பழமோ ஏதோ ஒரு பழமோ வைத்து குரங்குகளுக்குப் பொறி வைப்பார்கள். அந்தக் குரங்கு கூண்டின் கம்பி இடைவெளிக்குள் கையை நுழைத்து பழத்தை பற்றி விடும். ஆனால் வெளியே எடுக்க முடியாது. பழத்தைத் தூர எறிந்து விட்டு மீண்டும் கையை … Continue reading அரசியலில் அரங்கேறும் குரங்கு கதை!
”கருப்புத்துண்டு அமங்கலம்; அதை எடுத்துவிடுங்கள் என ஜெ. சொன்னார்”
அதிமுக அம்மா அணியின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் டிடிவி தினகரன் ஆளுமை மிக்கவர் எனவும் கருணாநிதி, வைகோ, ஜெயலலிதாவைக் காட்டிலும் ஜனநாயகவாதி எனவும் தெரிவித்தார். மதிமுகவிலிருந்து விலகி அதிமுக சேர்ந்தபோது கருப்புத்துண்டு அமங்கலம், அதை எடுத்துவிடுங்கள் என ஜெயலலிதா சொன்னதாக பேட்டியில் தெரிவித்தார் நாஞ்சில் சம்பத்.
அதிமுகவும் சாதியும்; அமைச்சரவை ஒதுக்கீட்டில் ஒடுக்கப்படும் தலித்துகள்!
சி. மதிவாணன் அஇஅதிமுகவின் கொள்ளையர்கள் தேவைப்படும்போது மக்கள் நலன் என்று பேசுவார்கள். மக்களுக்கு இலவசம் கொடுப்பது அல்லது சலுகை கொடுப்பதுதான் மக்கள் நலன் என்பது அவர்கள் எண்ணம். மற்றபடி அரசு என்பது கொள்ளையடிக்கக் கொடுக்கப்பட்ட லைசென்ஸ். அவ்வளவுதான். இதனைத்தான் முதல் குற்றவாளி ஜெ மீது சாட்டப்பட்ட குற்றங்களை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காட்டுகிறது. ஆனால், கண்ணுக்குத் தெரியாத மற்றொரு அம்சம் இருக்கிறது. தமிழகத்தின் சாதிகளைப் பயன்படுத்தி, அந்த சாதிகளில் உள்ள முன்னேறிய ஆட்களை தன் … Continue reading அதிமுகவும் சாதியும்; அமைச்சரவை ஒதுக்கீட்டில் ஒடுக்கப்படும் தலித்துகள்!
சர்வாதிகார ஆன்மாவும் 134 அடிமைகளும்
அருண் பகத் அ.தி.மு.க அதிகாரம் திணறிச் சிதறிக் கொண்டிருக்கிறது. குனிந்து குனிந்து திருடித் தின்ற அடிமை எம்.எல்.ஏ க்களும் , பல மா.செ க்களும் , கவுன்சிலர்களும் உச்சக்கட்ட குழப்பத்தில் இருக்கிறார்கள். கையில் தற்போது இருக்கும் கனமான பொட்டியும் ,அரசியல் எதிர்காலம் குறித்த கவலையும் ஒன்றோடொன்று கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசியலில் எளிதாக காய்களை நகர்த்திய பார்ப்பன லாபி திடீரென மாயமாகிப் போனதில்.. கொள்கைகளற்ற , அரசியலற்ற ஒரு அதிகார மமதைக் கட்சி , அரசியல் … Continue reading சர்வாதிகார ஆன்மாவும் 134 அடிமைகளும்
முதலமைச்சரை மிரட்டியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: மு. க.ஸ்டாலின்
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினா கடிதத்தில் கையெழுத்து வாங்கியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு. க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்” என்று அதிமுகவின் “அதிரடி” வரவான பொதுச் செயலாளர் திருமதி சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது அவர் ஏற்கனவே “நான் பினாமி அல்ல” என்று “சொத்துக் குவிப்பு வழக்கில்” வைத்த உதவாக்கரை வாதம் போன்று இருக்கிறது. … Continue reading முதலமைச்சரை மிரட்டியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: மு. க.ஸ்டாலின்
கொல்லைப்புறமாக முதலமைச்சராகும் சசிகலா; மு. க. ஸ்டாலின் எதிர்க்க ஏன் தயங்குகிறார்?
சரவணன் சந்திரன் இரண்டு வகை அரசியல் இருக்கிறது. சட்டத்தை முன்னிறுத்திய அரசியல். சில சமயங்களில் சட்டத்தைத் தாண்டி தார்மீகத்தை முன்னிறுத்தும் அரசியல். முன்னதில் இம்மி பிசகாமல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்பது முதன்மையானதாக இருக்கும். மு.க.ஸ்டாலின் இப்போது சட்டத்தை முன்னிறுத்திய அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அது மிக முக்கியமானதும் மதிக்கத்தக்கதும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அதே சமயம் ஜல்லிக்கட்டிற்கு நாட்டின் உச்ச நீதிமன்றம் தடைக்கல்லாக இருக்கும் சமயத்தில், அது சட்டப்படி செயல்படுகிறது … Continue reading கொல்லைப்புறமாக முதலமைச்சராகும் சசிகலா; மு. க. ஸ்டாலின் எதிர்க்க ஏன் தயங்குகிறார்?
சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமா தமிழகம்?
ஜி. கார்ல் மார்க்ஸ் சசிகலாவிடம், “ நீங்கள்தான் கட்சியை வழிநடத்த வேண்டும்” என்று தொண்டர்களும், கட்சிப் பிரதிநிதிகளும் வலியுறுத்துவதாகவும், அவர் இன்னும் ஜெயலலலிதாவின் மரணத்தில் இருந்து மீளாத துயரத்தில் இருப்பதாகவுமான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. அத்தகைய நாடகம் கடுமையாக விமர்சிக்கவும் படுகிறது. கட்சியின் ஒரு பிரிவு தொண்டர்களால் சசிகலாவின் உருவம் பெரிதுபடுத்தப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் புரிந்து கொள்ளக் கூடியதே. ‘ஜெயலலிதா’ இறந்து விட்டிருக்கிற ஒரு துயரார்ந்த சூழலில், அடுத்த தலைமைக்கான உடனடி நகர்வுகளை கட்சியின் தீவிரத் தொண்டன் … Continue reading சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமா தமிழகம்?
அம்மா என்றொரு சொல் – மெரீனா காற்றை தொட்டுரசி துயிலும் கனவு
ஹெச்.ஜி.ரசூல் பேரும் புகழும் சூழ அரியணையில் வீற்றிருந்த அரசி தான் தலை சாய்த்து ஓய்வெடுக்க ஒரு மகளின் மடி இல்லாமல் போனது. எல்லோருக்கும் அம்மாவாகிப்போன தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா தான் மட்டும் அம்மாவாக வாழமுடியாமல் ஒரு துறவி போல தன் வாழ்வை நிறைவு செய்துள்ளார். மெரீனா கடற்கரையின் காற்றில் தொட்டுரசி ஒரு கனவு சந்தனப்பேழையில் தூங்குகிறது. ஒரு விதையில் மரம் ஒளிந்திருப்பது நம் பார்வைப்புலனுக்கு தெரிவதில்லை.துப்பாக்கி குண்டுகளை முழக்கி அவரது மீளாத் துயிலை திரும்பவும் கலைக்கப்பார்க்கிறீர்கள்.தேசீயக்கொடி போர்த்திய … Continue reading அம்மா என்றொரு சொல் – மெரீனா காற்றை தொட்டுரசி துயிலும் கனவு
ஓய்வெடுங்கள் சசிகலா!
அறிவழகன் கைவல்யம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக, அவரோடு கூடவே இருந்து பணிவிடைகள் செய்து வாழ்ந்து வந்த பெண்ணாக சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கும், சடங்குகள் செய்யவும், எல்லாவிதமான உரிமைகளும் இருக்கிறது, செல்லுமிடங்களுக்கு எல்லாம் (சிறை உட்பட) இணைபிரியாது சென்று வந்தவர். ஆக, ஜெயலலிதாவின் குருதி சார் உறவுகளைவிட சசிகலாவுக்கு இந்த நேரத்தில் (நல்லடக்க காலம் வரை) அதிக உரிமைகளும், அதிகாரமும் கொடுக்கப்படலாம். நிற்க, ஜெயலலிதாவின் நல்லடக்கம் முடிவு பெறுவதோடு சசிகலாவின் பங்களிப்பு … Continue reading ஓய்வெடுங்கள் சசிகலா!
முதல்வரின் கான்வாய்…: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் அஞ்சலி!
எஸ். எஸ். சிவசங்கரன் வழக்கமாக கான்வாய் கிளம்பினால், பயணிக்கப் போகும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும். போயஸ் கார்டன், வேதா நிலையத்தில் இருந்து முதல்வர் கான்வாய் கிளம்பினால் ராதாகிருஷ்ணன் சாலை, மெரினா சாலைகள் அலர்ட் ஆகும். சாலையின் இருபுறமும் கட்சி நிர்வாகிகள் நிற்பார்கள். காவல்துறையினர் பந்தோபஸ்த்திற்கு நிற்பார்கள். கான்வாய் என்பது ஒரு தொடராக வாகனங்கள் பயணிப்பது. முக்கியப் பிரமுகர்களின் வாகன அணிவகுப்பை கான்வாய் என அழைப்பது வழக்கம். மாநில முதல்வர்களின் வாகன அணிவகுப்பில் பாதுகாப்பு வாகனங்கள், அதிகாரிகளின் வாகனங்கள் இணைந்து … Continue reading முதல்வரின் கான்வாய்…: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் அஞ்சலி!
“அண்ணா நாமம் வாழ்க என்ற இடி முழக்கத்தை இனி நாம் எங்கு கேட்கப்போகிறோம்”
ஜெயநாதன் கருணாநிதி: ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம் அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம் இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா! இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்; பல என்றால் பலவேதான்; அப்படி அல்ல என்றாலும் அல்லதான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை என்றாலும் இல்லைதான்; உண்டு என்றாலும் உண்டுதான்; எல்லாம் நமது … Continue reading “அண்ணா நாமம் வாழ்க என்ற இடி முழக்கத்தை இனி நாம் எங்கு கேட்கப்போகிறோம்”
“சமூக நீதியை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை”
அறிவழகன் கைவல்யம் திராவிட அரசியல் இயக்கத்தின் அடிநாதமான சமூக நீதியை ஒருபோதும் அவர் தவறாகப் புரிந்து கொண்டதாக எனக்கு நினைவில்லை, அ.தி.மு.க என்கிற மிகப்பெரிய அரசியல் இயக்கத்தை கட்டுக்குலையாமல் ஆளுமை செய்த அவருடைய தீவிர உழைப்பு ஒருவகையில் காவிக் கோட்பாட்டை தமிழகத்தின் சமூக அரங்குகளில் உள்நுழைய விடாமல் மறைமுகமாகவேணும் தடுத்தது. இவற்றை எல்லாம் தாண்டி, ஆண்களின் தனிப்பெரும் கோட்டையாக இருந்த அரசியல் களத்தில் ஒரு பிடரி சிலிர்க்கும் ஒரு ஆவேசப் பெண்ணாக, தான் என்கிற அசைக்க முடியாத … Continue reading “சமூக நீதியை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை”
திமுகவின் போராட்ட குணம் எங்கே போனது?
வா. மணிகண்டன் கடந்த வாரம் திமுக நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டம் கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பிசுபிசுத்துப் போனதாக உள்ளூர் நண்பர்கள் சொன்னார்கள். பிற மாவட்டங்களைப் பற்றித் தெரியவில்லை. வழக்கமாக திமுகவின் போராட்டங்கள் குறித்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வரக் கூடிய செய்திகளும் படங்களும் கூட இந்த முறை இல்லை. ஐநூறு, ஆயிரம் ரூபாய்த் தாள் குறித்தான விவகாரம்தான் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர அதே பிரச்சினைக்காக மனிதச் சங்கிலி நடத்திய திமுக … Continue reading திமுகவின் போராட்ட குணம் எங்கே போனது?
திருமங்கலம் ஃபார்முலா என்றால் என்ன? வழக்கறிஞர் கேள்வி மு. க. ஸ்டாலின் அளித்த பதில்
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவர் முறைகேடுசெய்து வெற்றிபெற்றதாகவும் எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி வேணுகோபால் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. புதனன்று (நவ. 23) 4வது முறையாக மு.க.ஸ்டாலின் நீதிமன் றத்தில் நேரில் ஆஜாராகி மனுதாரரின் வழக்கறிஞர் ராமானுஜத்தின் குறுக்கு விசாரணைக்கு பதில் … Continue reading திருமங்கலம் ஃபார்முலா என்றால் என்ன? வழக்கறிஞர் கேள்வி மு. க. ஸ்டாலின் அளித்த பதில்
”செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது!”: மூன்று தொகுதி முடிவுகள் குறித்து கருணாநிதி
இடைத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு. கருணாநிதி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... “தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பினை இழந்த போதிலும், கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில், மூன்று தொகுதிகளிலும் வாக்களித்த 2,09,257 வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இடையறாதுழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், செயல் வீரர்களுக்கும், … Continue reading ”செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது!”: மூன்று தொகுதி முடிவுகள் குறித்து கருணாநிதி
’டெல்டா காஷ்மோரா’: மு. க. ஸ்டாலின் அதிர்ச்சி அறிக்கை
‘டெல்டா காஷ்மோரா’ என்ற பெயரில் ஜுனியர் விகடன் வெளியிட்ட கட்டுரை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின். அந்த அறிக்கையில், “தமிழகத்தின் பழம்பெரும் இதழ் "ஆனந்த விகடன்". அதனை உருவாக்கிய திரு. எஸ்.எஸ். வாசன் அவர்கள் பத்திரிகைத் துறையிலும், திரைப்படத் துறையிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அத்தகைய "ஆனந்த விகடன்" குழுமத்திலிருந்து வெளிவரும் இதழ் "ஜுனியர் விகடன்". 9-11-2016 தேதிய "ஜுனியர் விகடன்"இதழில் "மிஸ்டர் கழுகார்" பகுதியில் வந்துள்ள ஒரு செய்தி; நம் … Continue reading ’டெல்டா காஷ்மோரா’: மு. க. ஸ்டாலின் அதிர்ச்சி அறிக்கை
மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்: ஸ்டாலின்
மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தை உலுக்கிய சென்னை, மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிட விபத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்த பயங்கரம் கடந்த 28.6.2014 அன்று நிகழ்ந்தது. அந்த கட்டிடத்திற்குள் சிக்கிய 88பேருக்கும் மேல் மீட்கப்பட்டாலும், அந்த பேராபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் மன உளைச்சலுக்கு இன்னும் மருந்து போட முடியவில்லை. மவுலிவாக்கத்தில் … Continue reading மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்: ஸ்டாலின்
“இதுபோன்ற சடங்குகளுக்கு ஏழைக் குழந்தைகள்தான் கிடைத்தார்களா?”
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோயில்களில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்கிறது ஜெயா டிவி இணையதளம். மேலும் இந்த செய்தியில் தமிழகம் முழுக்க முதலமைச்சர் நலனுக்கான நடைபெற்ற பிரார்த்தனைகள் பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, நேத்தாஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு முருகன் கோயிலில் … Continue reading “இதுபோன்ற சடங்குகளுக்கு ஏழைக் குழந்தைகள்தான் கிடைத்தார்களா?”
“அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கக் பயப்படுகிறார் ஜெயலலிதா”
ஜெயலலிதா ‘பூரண குணம்’ பெற வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஏடான மாலெ தீப்பொறி வெளியிட்டுள்ள பதிவு: ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் வந்து கருணாநிதி முதல் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் அவர் நலம் பெற்று பணிக்குத் திரும்ப வாழ்த்துச் சொன்னார்கள். மாபெரும் அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்திவிட்டதாக அனைவரும் தமக்குத் தாமே முதுகுத் தட்டிக் கொண்டிருந்தபோது அந்த அறிவிப்பு வந்தது. அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் தமிழ்நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்! யாருக்கும் எந்த கால … Continue reading “அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கக் பயப்படுகிறார் ஜெயலலிதா”
முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா?: கருணாநிதி
தமிழக முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா? என வினவியுள்ளார் திமுக தலைவர் மு. கருணாநிதி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு வார காலத்திற்கும் மேலாக - கடந்த 22ஆம் தேதி முதல், சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்குச் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வருவதாகவும், ஆனாலும் இன்னும் சில நாட்கள் மருத்துவ மனையிலே இருக்க வேண்டுமென்று அப்பல்லோ … Continue reading முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா?: கருணாநிதி
குஜராத்தில் துவங்கி கோயம்புத்தூர் வரை
அறிவழகன் கைவல்யம் காவிகளின் தேசப்பற்று என்பது வெறும் பம்மாத்து, காவிகளின் தேசப்பற்று சொந்த மக்களைக் குண்டு வைத்துக் கொன்று கலவரத்தை உருவாக்கி அந்த நெருப்பின் மீது நின்று குளிர்காயும் நாகரீகமற்ற பித்தலாட்டம், பதன்கோட் தாக்குதலில் நிலவிய மர்மங்கள் இன்னும் அகலாத நிலையில் இப்போது யூரி தாக்குதல். காவிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் உளறுவதைப் பார்த்தால் பன்னாட்டு அளவில் காஷ்மீர் போராட்டங்களும் அதற்கெதிரான இந்திய தேசிய வன்முறையும் சிக்கலான திசையில் போவதைத் தடுக்க சொந்த வீரர்களையே காவிகள் காவு … Continue reading குஜராத்தில் துவங்கி கோயம்புத்தூர் வரை
“உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டும்”: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி வாழ்த்து
காய்ச்சல் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் உடல் நலம் பெற்றுத் திரும்ப அதிமுகவினர் பல்வேறு வேண்டுதல்களிலும் வழிபாட்டிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு. கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு உடல் நலம் பெற்று திரும்ப வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். “முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன். முதல் அமைச்சர், ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பல்வேறு … Continue reading “உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டும்”: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி வாழ்த்து
ராம்குமார் சாவில் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டாக வேண்டும்: கருணாநிதி
ராம்குமார் மரணம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் மு. கருணாநிதி கேட்டிருக்கிறார்கள். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கைள்: சென்னை நுங்கம்பாக்கம் புகைவண்டி நிலையத்தில் பட்டப் பகலில் சுவாதி என்ற பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றவாளி ராம்குமார் என்பவரைக் காவல் துறையினர் கண்டுபிடித்துக் கைது செய்ததைப் பற்றி நான் 8-7-2016 அன்று விரிவாக தெரிவித்திருந்தேன். நெல்லையில் இருந்து சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் ராம்குமார் அழைத்து வரப்பட்ட போது விடிய விடியத் … Continue reading ராம்குமார் சாவில் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டாக வேண்டும்: கருணாநிதி