முசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்டுக்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.
குறிச்சொல்: செய்திகள்
பா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்
இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும்; கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும்! அண்மையில் இயக்குநர் பா. ரஞ்சித், சோழ மன்னர் ராஜன்ராஜன் குறித்து முன்வைத்த கருத்தொன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல, என்னதான் மிகச்சிறந்த ஆட்சியைத் தந்திருந்தாலும் ஒரு அரசர் அல்லது ஒரு ஆட்சிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கும். நன்மையை பேசுவதுபோல, அந்த ஆட்சியால் ஏற்பட்ட தீமைகளையும் சேர்த்தே பேசுவதே கருத்துரிமை. கருத்துரிமைக்கும் அவதுறுக்கும் பாரதூரமான வேறுபாடு உள்ளது. இயக்குநர் பா. … Continue reading பா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்
மாதம் ரூ.3000 ஓய்வூதியம் என்ற அறிவிப்பு ஒரு மோசடி : ஏஐடியுசி
அமைப்புச் சாரா தொழிலாளிக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் தரப்போவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரிய விளம்பரம் செய்யப்பட்ட து. பத்திரிக்கைகள் பாராட்டின. ஆனால் இதனால் தொழிலாளர்களுக்கு எந்தப் பலனும் இல்லையென்று ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மோடி அறிவித்து உள்ள திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களே சேர முடியும். இது ஒரு விருப்பபூர்வமான(optional) திட்டம்தான்; அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தாது. ஒவ்வொரு … Continue reading மாதம் ரூ.3000 ஓய்வூதியம் என்ற அறிவிப்பு ஒரு மோசடி : ஏஐடியுசி
ஐசிஐசிஐ வங்கியை தேசியமயமாக்கு: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்
இந்தியாவின் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியை தேசியமாக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாகியாக இருந்த சந்தா கொச்சார் விதிமுறைகளை மீறி தன் கணவர் பணிபுரிந்த வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் கொடுத்து 5000 கோடி ரூபாய்களுக்கு நட்டம் ஏற்படுத்தி உள்ளார். எனவே அவர் வங்கியின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகளை எதிர் கொண்டு உள்ளார். … Continue reading ஐசிஐசிஐ வங்கியை தேசியமயமாக்கு: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்
அரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்!
சந்திரமோகன் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மலையடிவார கிராமமான சிட்லிங்கி ஊராட்சியைச் சார்ந்தவர் அண்ணாமலை. மலையாளி பழங்குடி இனத்தைச் சார்ந்த இவரின் மகளான செளமியா (வயது 16) பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் +1 ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தார். தீபாவளி விடுமுறைக்காக விடுதி மூடப்பட்டதால், நவம்பர் 5 ந் தேதியன்று ஊருக்கு திரும்பியுள்ளார். பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளர்கள் என்பதால் வேலைக்கு சென்றுவிட்டனர். காலை 11.30 மணியளவில், இயற்கை உபாதையாக ஓடை பக்கம் தனியாக சென்ற … Continue reading அரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்!
பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்
குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு. ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் … Continue reading பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்
தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி!
கலைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார். கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது. காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது. தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது. "பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் … Continue reading தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி!
“எட்டுவழிச்சாலை மரணத்தின் மீது நீள்வதை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்?”
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கு நிலம் தர மறுப்பு தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சேகர் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் எழுதப்பட்டுள்ள கருத்துக்கள்: தொழிற்சங்க செயல்பாட்டாளர் மாதவராஜ் சேலம் - சென்னை எட்டுவழிச்சாலைக்கு தன் நிலம் பறிபோவதைத் தாங்க முடியாமல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சேகர் தற்கொலை … Continue reading “எட்டுவழிச்சாலை மரணத்தின் மீது நீள்வதை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்?”
“விடுதலை அறிவிப்புக்கு நன்றி; பாகுபாடு இன்றி விடுதலை செய்க!”: அ.மார்க்ஸ்
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நீண்ட காலசிறைவாசிகளை விடுதலை செய்வது என்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முடிவை சென்னையில், சனியன்று நடந்த தேசிய மனித உரிமைகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பாக நடந்த கலந்துரையாடல் பாராட்டியது. அதேவேளையில் விடுதலையில் பாகுபாடு காட்டக்கூடாது; நிபந்தனைகள் போடக்கூடாது; பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்ட து. "கடந்த காலங்களில் விடுதலைக்கு தகுதியானவர்கள் அனைவரும் ஒரே நாளில், குறிப்பிட்ட விழா நாளன்று … Continue reading “விடுதலை அறிவிப்புக்கு நன்றி; பாகுபாடு இன்றி விடுதலை செய்க!”: அ.மார்க்ஸ்
மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுக்க போலீசின் அச்சுறுத்தலே காரணம்.
தென் மாவட்டங்களில் மக்கள் அதிகார தோழர்களை, ஏறத்தாழ அனைவரையும் மோசடியாக ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜோடித்து எழுதி வைத்துக்கொண்டு வீடுவீடாக வேட்டடையாடி வருகிறது. ஆறு தோழர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம். இரண்டு தோழர்கள் மீது 52 க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது. 19 வயதுடைய இரண்டு மாணவர்கள் மீது என்.எஸ்.ஏ. சரவணன் என்ற கூலித்தொழிலாளி வலிப்பு நோயால் அவதி பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சையின்றி சித்ரவதையை அனுபவத்து வருகிறார். அவரை ஈவு இரக்கமின்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துள்ளார்கள்.
தூத்துக்குடியில் தொடரும் போலீசின் சித்திரவதை: மக்கள் அதிகாரம் குற்றச்சாட்டு
உயர்நீதிமன்ற உத்தரவை காலில் மிதித்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டப் போலீசு போராட்டக்காரர்களை சித்திரவதை செய்வதாக மக்கள் அதிகாரம் அமைப்பு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்... “கடந்த மாதம் இறுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை பகுதி ஒருங்கிணைப்பாளரும் நெல்லை மாவட்ட நீதிமன்ர வழக்கறிஞருமான தங்கபாண்டியன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசு மக்களின் வீடுகளுக்கு இரவில் சென்று தேடுதல் வேட்டை செய்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார்.சம்மன் அனுப்பியே விசாரிக்க வேண்டும் … Continue reading தூத்துக்குடியில் தொடரும் போலீசின் சித்திரவதை: மக்கள் அதிகாரம் குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை பணி நீக்கம் செய்யப்படட்டு செல்லத்துரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கிற்காக மக்கள் உரிமை பாதுகாப்பு … Continue reading ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது
போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்
தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என ஒரு பெரிய பட்டியலை கையில் வைத்துக் கொண்டு காவல் துறை இரவு நேரங்களில் வீடு வீடாகப் புகுந்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது, கேவலமாக ஏசுவது போன்ற செயல்கள் செய்தும் வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் ஏற்கனவே கைதானவர்கள் மீது இருபது வழக்குகள்வரை பதிவு செய்யப்பட்டு, கடந்த இருதினங்களில் மேலும் 25 வழக்குகள் அவர்கள் மீதே போடப்பட்டுள்ளன. சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுள்ளதின் நோக்கம் கடுமையான அச்சத்தை போராடுபவர்கள் … Continue reading போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்
தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது!
தூத்துக்குடியில் ஸ்டெட்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனது ஊர் ஆரியப்பட்டி. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள முண்டுவேலன்பட்டியில் தோழர் கோட்டை என்பவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். தற்போது பள்ளியில் படித்திக் கொண்டிருக்கும் அவரது 15 வயது மகனை கைது செய்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் … Continue reading தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது!
கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டோர் பேசத் தடை : சுற்றறிக்கையை திரும்பப் பெற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்
கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டோர் பேச அழைக்கக்கூடாதென தமிழ்நாடு அரசின் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதை திரும்பப் பெற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில், பல்கலைக்கழகம் ,கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டவர்கள்களை பேச அழைக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும். கல்வி நிலையங்கள் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் தளங்கள். விடுதலைப் போராட்ட காலத்திலும் ,பின்னரும் இராஜாஜி, … Continue reading கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டோர் பேசத் தடை : சுற்றறிக்கையை திரும்பப் பெற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்
பாஜக கோட்டையான உ.பி.யில் வெற்றிகண்ட முதல் முஸ்லிம் பெண் எம்.பி.!
சமீபத்தில் நடந்த நான்கு மக்களவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. பாஜக இழந்த இரண்டு தொகுதிகளிலில் முக்கியமானது உத்தரபிரதேச மாநிலத்தின் கைரானா தொகுதி. பாஜகவை வெற்றி கொண்டவர், ஒரு முஸ்லிம் பெண். முஸ்லிம்கள் கணிசமாக வாழும் உ.பி.யில் 2014 மக்களவை, 2017 சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. இந்நிலையில் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் சார்பில் கைரானா தொகுதியில் போட்டியிட்ட தபஸும் ஹசன் வெற்றி கண்டுள்ளது, மிகுந்த … Continue reading பாஜக கோட்டையான உ.பி.யில் வெற்றிகண்ட முதல் முஸ்லிம் பெண் எம்.பி.!
”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெறாதநிலையில் அதிக இடங்களைப் பெற்ற எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த நாளே நடைபெற்றது. கர்நாடக விதான் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் பேசிய எடியூரப்பா, பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக இதை கொண்டாடினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பாஜக, ஆர்.எஸ். எஸ்ஸை கடுமையாக சாடினார் ராகுல் காந்தி. … Continue reading ”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி
எம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder!
நரேந்திர மோடி - அமித் ஷா கூட்டணியின் சாணக்ய தனத்தை மெச்சிய பெரும்பாலான ஊடகங்கள், பெரும்பான்மை இல்லாதபோதும் பாஜக கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் என நம்பினர். அவர்களுடைய ராஜதந்திரங்களுக்கு உதாரணமாக சமீபத்திய திரிபுரா வெற்றியை சொல்லலாம். வாக்கு வங்கியே இல்லாத பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விலைக்கு வாங்கி, இடது முன்னணி அரசை ஆட்சியிலிருந்து அகற்றியது. எனவே, இந்தக் கூட்டணி நினைத்தால் ‘எப்படியாவது’ ஆட்சியைப் பிடித்து விடலாம் என பலர் ‘நம்பிக்கை’ தெரிவித்தனர். ஆனால், தேர்தல் அரசியலில் காங்கிரஸ் சில … Continue reading எம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder!
“நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்”: காங்.எம்.எல்.ஏவை விலைபேசிய ஜனார்த்தன ரெட்டி!
கர்நாடக தேர்தல் முடிந்து, பெரும்பான்மையில்லாதா நிலையில் அவசர அவசரமாக முதல்வர் பதவியேற்றார் பாஜக தலைவர் எடியூரப்பா. காங்கிரஸ், மஜத தேர்தல் பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோரிய போதும் ஆளுநர் வாலா, பாஜவுக்கு வாய்ப்பளித்தார். இது உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. எப்படியாவது எம்.எல்.ஏக்களை சேர்த்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் பாஜக உள்ளது. கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய ரெட்டி சகோதரர்களும் அவர்களின் கூட்டாளியான பாஜக பிரமுகர் ஸ்ரீராமுலுவும் எம்.எல்.ஏக்களை … Continue reading “நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்”: காங்.எம்.எல்.ஏவை விலைபேசிய ஜனார்த்தன ரெட்டி!
இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்
கர்நாடக ஆளுநா் வஜுபாய் வாலாவின் செயல்பாட்டுக்கு எதிா்ப்பு தொிவித்துள்ள கேரளா முதல்வா் பினராயி விஜயன் இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்று கருத்து தொிவித்துள்ளாா். https://twitter.com/vijayanpinarayi/status/996796702387470337 தனது ட்விட்டா் பக்கத்தில், “இன்று கா்நாடகாவின் துயரமான நாள். இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். கர்நாடகம் மற்றும் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு சோகமான நாள். கர்நாடகா கவர்னர் பிஜேபிக்கு அழைப்பு விடுக்கும் முடிவை நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் ஆளுநர் என்ற பதவியின் மாண்பை … Continue reading இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்
அரசியலைப்பு மீதான கர்நாடகத்தின் தாக்குதல் ஆரம்பம்: பிரகாஷ் ராஜ்
அரசியலைப்பு மீதான கர்நாடகத்தின் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது என நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ், நடந்துமுடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டார். தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 இடங்களைப் பிடித்த பாஜக ஆட்சியமைத்துள்ளது. பெரும்பான்மை பெற இன்னும் 7 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பாஜகவுக்கு தேவை. காங்கிரஸ், ம.ஜ.தா தேர்தலுக்கு பின்பு கூட்டணி அமைத்திருக்கின்றன. போதிய எம்.எல்.ஏக்கள் இல்லாத பாஜக இந்தக் கட்சிகளின் எம்.எல்.ஏக்களை … Continue reading அரசியலைப்பு மீதான கர்நாடகத்தின் தாக்குதல் ஆரம்பம்: பிரகாஷ் ராஜ்
“மோடி ஒரு ஹிட்லர்; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை நிரூபிக்கிறார்”: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
நீதிமன்றம், ஆளுநர் மாளிகையில் நேரடியாக அதிகாரத்தை செலுத்துவதன் மூலம் மோடி தன்னை ஒரு ஹிட்லர் என நிரூபித்துக்கொண்டிருக்கிறார் என கர்நாடக முன்னாள் சுகாதார துறை அமைச்சர் ரமேஷ் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். பெரும்பான்மையை பெறாத நிலையில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை அரசமைக்க அழைத்தார் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா. காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனத தளம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து தங்களுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாகவும் ஆட்சியமைக்க அழைக்கும்படியும் ஆளுநரிடம் கடிதம் அளித்திருந்தது. ஆனால், எடியூரப்பாவுக்கு … Continue reading “மோடி ஒரு ஹிட்லர்; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை நிரூபிக்கிறார்”: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
மிரட்டும் தொனியிலான பேச்சை பிரதமர் நிறுத்த வேண்டும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம்
‘காங்கிரஸ் தலைவர்களே, கவனமாகக் கேளுங்கள்...உங்கள் எல்லையை மீறினால், நினைவில் வையுங்கள்...இது மோடி, அதற்கான விலையை நீங்கள் கொடுத்தாக வேண்டும்’
“எஸ்.வி. சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலை; என் வேலையல்ல!”: பொன். ராதா.
போலீஸாரால் தேடப்படும் பாஜக பிரமுகர் எஸ்.வி. சேகரை சந்தித்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்தை பகிர்ந்திருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட நான்கு … Continue reading “எஸ்.வி. சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலை; என் வேலையல்ல!”: பொன். ராதா.
வெளிமாநிலங்களில் நீட் எழுத செல்லும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவி; பட்டியல் இங்கே…
நீட்
4 மாதமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசு நிறுவனம்!
சென்னை, நந்தம்பாக்கத்தில் இந்தியன், டிரக்ஸ் & பார்மசூட்டிக்கல்ஸ் என்ற புகழ்பெற்ற மருந்து நிறுவனம் இருக்கிறது. இது மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 32 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள்; அத்தனை பேரும் தினக்கூலி தொழிலாளர்கள். ( இது தவிர ஒப்பந்தக்காரர் மூலம் பணி அமர்த்தப்பட்ட தொழிலாளர்களும் உண்டு ) இந்த 32 பேருக்கும் கடந்த நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.போனஸ் சட்டப்படி கடந்த மூன்று வருடங்களாக போனஸ் வழங்கப்படவில்லை. குறைந்த விலையில் மக்களுக்கு … Continue reading 4 மாதமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசு நிறுவனம்!
”புரோகித் நியமித்திருக்கும் சாஸ்திரி”: அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தராக தம்ம சூர்ய நாராயண சாஸ்திரியை, தமிழக ஆளுநர் நியமித்துள்ளார். ஆர்.எஸ். எஸ். அமைப்போடு தொடர்புடையவரை துணைவேந்தராக நியமிப்பதா என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. திமுக செயல் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு இந்துத்வாவின் சீடரான, திரு. தம்மா சூர்ய நாராயண சாஸ்திரியை துணைவேந்தராக நியமித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு ஆளுநர் பன்வரிலால் புரோகித் அவர்கள், தமிழக ஆளுநராக பொறுப்பேற்றபோது, … Continue reading ”புரோகித் நியமித்திருக்கும் சாஸ்திரி”: அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
பிளவுகளை முறியடித்து ஒற்றுமை காப்போம்: சிபிஐ புத்தாண்டு வாழ்த்து
அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2017 ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெறும் போது, துயரங்களையும், படிப்பினைகளையும் தந்துவிட்டு சென்றுள்ளது. மாநிலத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் கடந்த ஓராண்டு காலத்தில் மாநில ஆட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த நிலையில் உள்ளது. மாநில உரிமைகள், நலன்கள் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றது. மாநிலத்தின் ஆளுநர் மாநில சுயாட்சி கொள்கைக்கு … Continue reading பிளவுகளை முறியடித்து ஒற்றுமை காப்போம்: சிபிஐ புத்தாண்டு வாழ்த்து
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது. ஐந்து சுற்று எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தினகரன் 24,550 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார். மதுசூதனன் 10687 வாக்குகளும் மருதுகணேஷ் 5519 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் கலைகோட்டுதயம் 962 வாக்குகளும் பாஜகவின் கரு. நாகராஜன் 318 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஆளுநர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை: வலுக்கும் எதிர்ப்பு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித், கோவை ஆட்சியருடன் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் ஆட்சிப் பணிகளில் தலையிடுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ஆளுநர் ஆலோசனை நடத்திய விருந்தினர் மாளிகைக்கு எதிரே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கவின் கலை கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலைக்கு நீதிகேட்டு போராட்டம்
சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் கடந்த மாதம் தற்கொலை செய்துக் கொண்டார். கல்லூரியின் துறைத்தலைவர் ரவி்க்குமார் மற்றும் சிவராஜ் ஆகியோரின் சாதிய, மதவெறிக்கொண்டு கொடுத்த சித்ரவதை காரணமாகவே தான் தற்கொலை செய்வதாக அவர் கடிதம் மூலமாகவும் வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரகாஷின் மரணத்துக்கு நீதி கேட்டு கவின் கலைக் கல்லூரியின் முன்னாள், இன்னாள் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 15-ஆம் தேதி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
காவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது: பியூசிஎல் அறிக்கை
பத்திரிக்கைச் செய்தி தமிழகம் இதுவரைக் கண்டிராத அளவிற்கு சிவில் மற்றும் உரிமை மறுப்பு மாநிலமாக மாறி உள்ளது. ஜல்லிக்கட்டுப் போரட்டத்திற்குப் பின் அரசின் திட்டங்களுக்கு, செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்தவிதப் பொதுநிகழ்வுகளுக்கும் காவல் துறை அனுமதி அளிப்பதில்லை. அரசை பொது வெளிகளில் விமர்சிக்கும் பலர் பொருத்தமில்லா சட்டங்களின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். இங்கு ஜனநாயக வெளிகள் சுருக்கப்பட்டு வருகிறது. இன்று அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஜனநாயக பூர்வமான செயல் பாடுகள் இல்லை என்பது … Continue reading காவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது: பியூசிஎல் அறிக்கை
கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா?
கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேலிச்சித்திரங்களை வரையும் ஓவியர் 'கார்டூனிஸ்ட்' பாலாவைத் தமிழகக் காவல்துறை திடீரென கைது செய்துள்ளது. அவர் தனது கேலிச்சித்திரங்களின் மூலம் ஆபாசத்தை பரப்பினார் என வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். அண்மையில் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் விமர்சித்து அவர் தீட்டிய கேலிச்சித்திரம் இலட்சக்கணக்கான மக்களின் கவனத்தை … Continue reading கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா?
பத்திரிகையாளர் சங்க பொதுச்செயலாளர் மோகன் மரணம்
சென்னை பத்திரிகையாளர் சங்கம்(எம்யுஜே) பொது செயலாளர் மோகன்(வயது 54). இவர் சென்னை திருவல்லிக்கேணியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கல்யாணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். மோகன் சென்னை தினகரன் பத்திரிகையில் மூத்த நிருபராக பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் !
இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக நிலமைகள் மோசமாகிக் கொண்டு இருக்கின்றன; பொதுமக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து இடதுசாரி கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன . வகுப்புவாத அடிப்படையில் மக்களை அணி திரட்டுவது கூர்மையாக நடக்கிறது ; பாராளுமன்ற ஜனநாயக நிறுவனங்களின் மதிப்பு குறைக்கப்படுகிறது ; ஜனநாயக உரிமைகள் மீதும் , குடிமை உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. எதேச்சதிகார முறையில், திடீரென்று பணமதிப்பு நீக்கத்தை பிரதம மந்திரி அறிவித்து ஓர் ஆண்டு ஆகிறது.இடதுசாரி கட்சிகள் எதிர் … Continue reading பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் !
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்
ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான திருமுருகன்காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் தகல்களும், நெல்லை பணகுடி காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து போராட்டம் நடத்திய நெல்லை பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்திருப்பது, கட்டுப்பாடற்ற தமிழக அரசின் கையாலாகாத நிர்வாக முறையையே காட்டுகிறது. இதை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. சனநாயக … Continue reading பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்
விசிக மாநில சுயாட்சி மாநாடு: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு வலிந்து திணித்துள்ள 'நீட்' என்னும் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மாணவி குழுமூர் அனிதாவுக்கும்; மதவெறியர்களின் வெறுப்பு அரசியலை எதிர்த்துக் களமாடியதால் படுகொலையான ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் அவர்களுக்கும்; சாதிய- மதவாத கும்பலின் வெறியாட்டத்தால் அண்மையில் படுகொலையான தோழர்கள் சிவகங்கை-வேம்பத்தூர் முருகன், மதுரை-வடபழஞ்சி முத்தமிழன், .விரகனூர் … Continue reading விசிக மாநில சுயாட்சி மாநாடு: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ.பன்னீர் செல்வம் அணி இணைந்ததை அடுத்து, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார். அவர்களில் எம்.எல்.ஏ … Continue reading டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’
கௌரி லங்கேஷ் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: பினராயி விஜயன்
மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், 'கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
12 ஆயிரம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 1,310 மருத்துவ இடங்களா?இதுதான் நீட் தரும் சமூக நீதியா?…
*தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை 83 ஆயிரத்து 859 *நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 570 *தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் 3 ஆயிரத்து 534. ************************** *தமிழகத்தில் மாநிலப்பாடத் திட்டதின் கீழ் 12-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்து 838. *சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12 ஆயிரத்து 575. … Continue reading 12 ஆயிரம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 1,310 மருத்துவ இடங்களா?இதுதான் நீட் தரும் சமூக நீதியா?…