Family man 2 : இந்திய ஆளும் வர்க்கத்துக்கு சேவையாற்றும் ஒரு படைப்பு!

அருண் நெடுஞ்செழியன்FAMILY MAN சீசன் -1 பார்த்தபோது அதற்குமுன் அமேசான் பிரைமில் பார்த்த BOSCH சீரியஸ்தான் நியாபகத்திற்கு வந்தது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் போலீஸ் துறையில் கொலைகுற்ற பிரிவில் ஹாரி பாஷ்க் என்ற கதாபாத்திரமாக வருகிற போலீஸ் அதிகாரி தனது துறைசார்ந்த கொலைக் குற்ற துப்பறியும் சாகசங்களையும் தனது குடும்ப சிக்கல்களை கையாள்கிற விதத்தை மையமாக கொண்டு வந்த சீரீஸ் அது.இதுவரை இந்தியாவில் வந்துள்ள ஐந்து சீரியசையும் அடுத்தடுத்த நாட்களில் பார்த்துள்ளேன்.சலிப்பு தட்டாத வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம்.இப்படத்தை … Continue reading Family man 2 : இந்திய ஆளும் வர்க்கத்துக்கு சேவையாற்றும் ஒரு படைப்பு!

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்!

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பிற்போக்குத்தனங்களை தூக்கி சுமப்பதில் நவீன கலை வடிவமான சினிமாக்களும் விதிவிலக்கல்ல. எப்படி ஆதிகாலம் முதல் கலை இலக்கியங்கள் பெரும்பாலும் பழமைவாதத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்பட்டனவோ அதுபோல, சினிமாக்களும் பழமைவாதத்தை பரப்பும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கதாநாயகர்கள் மாற்றுகிரக வாசிகளைத் தேடி விண்கலன்களில் பயணிக்கும் அறிவியல் படங்களில்கூட சிலுவைகளைக் காட்ட ஹாலிவுட் இயக்குநர்கள் தவறுவதில்லை. அம்மன் படங்களுக்கு இணையாக பைபிளை முன்னிறுத்தியும் படங்கள் எடுக்கப்படுகின்றன. ‘சினிமா அறிவியலின்’ உச்சம் பெற்ற ஹாலிவுட்டில் மூடநம்பிக்கை, … Continue reading ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்!

அருண்மொழி: ஒரு நினைவாஞ்சலி – வெங்கடேஷ் சக்ரவர்த்தி

சில நாட்களுக்கு முன் ஒளிப்பதிவாளர், இயக்குநர், திரைக்கல்வி ஆசிரியர், குறிப்பாக மாற்று திரைப்பட கலாச்சாரத்திற்காக அயராமல் செயல்புரிந்த அருண்மொழி அவர்கள் திடீரென்று நம்மிடமிருந்து விடைப்பெற்று சென்றுவிட்டார். நாற்பது ஆண்டுகால நண்பர், என்னைவிட நான்கு வயது இளையவர் என்பதால் அந்த செய்தியை கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானவர்களில் நானும் ஒருவன். உடனே அந்த துயர்மிகு செய்தியை முகநூலில் பகிர்ந்துவிட்டு அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டேன். யாரிடம் பேசி உள்ளிருக்கும் குமுறலையும், கோபத்தையும், சோகத்தையும் பகிர்ந்துக்கொள்வது என்று … Continue reading அருண்மொழி: ஒரு நினைவாஞ்சலி – வெங்கடேஷ் சக்ரவர்த்தி

கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை கொண்டாடும் சூப்பர் டீலக்ஸ்

ஈஸ்வரி சென்னை போக்குவரத்தில் சூப்பர் டீலக்ஸ் பேருந்து வரவினால் அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் இத்தகையை பேருந்துகளினால் அவர்களின் பொருளாதாரத்தின் ஒரு பகுதி கரைந்தது. சாதாரண பேருந்து கட்டணத்தை விட 3 மடங்கு கட்டணம் அதிகம்! இதனால் அத்தி பூத்தாற்போல் வரும் சாதாரண பேருந்திற்கு மணிக்கணக்கில் காத்திருந்து ஒரு திருவிழா கூட்டத்தை போல ஏறும் ஆண்களுக்குக்கிடையே இடிப்பட்டு ஏறும் பெண்களின் நிலை சொல்லி மாளாது. அலுவலகத்திலும் வீட்டிலும் உழைப்பு சுரண்டலினால் சக்கையாய் பிழியப்பட்டு வரும் பெண்கள் … Continue reading கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை கொண்டாடும் சூப்பர் டீலக்ஸ்

இயக்குநர் தியாகராஜன் ‘காம’ ராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ !

வினி சர்பனா 'சூப்பர் டீலக்ஸ்' படம் பார்த்தேன். சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் எத்தனையோ நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் இருந்தாலும்... ஆண்மைக்குறைவு, நரம்புதளர்ச்சி, குழந்தையின்மை, பைல்ஸ், பவுத்திரம், பால்வினை உள்ளிட்ட அந்தரங்க பிரச்சனைகளுக்காக மட்டுமே சிகிச்சை அளிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, தொலைக்காட்சிகளில் 24 மணிநேரமும் குறிப்பாக மிட்நைட்டுகளில் பேசிக்கொண்டேஏஏஏ இருப்பார்கள் லாட்ஜ் லேகிய டுபாக்கூர் வைத்தியர்கள். அப்படிப்பட்ட, லாட்ஜ் லேகிய வைத்தியர் போல்தான் படம் முழுக்க பாலியல் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் … Continue reading இயக்குநர் தியாகராஜன் ‘காம’ ராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ !

பேரன்பு: வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுவது எப்படி?

கண்ணன் ராமசாமி மகள்களை பெற்ற ஆப்பாக்களுக்கு மட்டுமல்ல. மகன்களை பெற்ற அப்பாக்களுக்கும் பொறுப்பு உண்டு. அதனால் பேரன்பு திரைப்படத்தை என்னால் அமேசானில் வரும் வரை பார்க்க முடியவில்லை. சற்று தாமதமான விமர்சனம் தான் என்றாலும் இந்தப் படத்தை பற்றி தாமதமானாலும் எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றியதால் தற்போது எழுதுகிறேன். இதனை விமர்சனம் என்று சொல்வதைக் காட்டிலும், அனுபவப் பகிர்வு என்றே குறிப்பிட வேண்டும். ஒரு ஓடையைப் போல தெளிவான நீரோட்டம் போலச் செல்லும் கதை இது. … Continue reading பேரன்பு: வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுவது எப்படி?

ரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0: முட்டாள்தனத்தின் உச்சம்!

சந்திரமோகன் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 திரைப் படமாகும். எந்திரன்/ரோபோ + நம்பமுடியாத முட்டாள் தனமான கற்பனைகள் + தொழில்நுட்ப பிரமாண்டம் = 2.0 படம். லைகா கம்பெனியின் 600 கோடி ரூபாய் வியாபாரம்! "இது பறவைகளை பாதுகாக்கும் படம்; சுற்றுசூழலை வலியுறுத்தும் படம்" என்றெல்லாம் சில பதிவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயற்பாட்டாளர்களும் பாராட்டுக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர் ; இன்னும் சிலர் இப்படியான எண்ணங்களை மனதில் வைத்துக் கொண்டும் இருக்கலாம். இப் படத்துக்கு முற்போக்கு … Continue reading ரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0: முட்டாள்தனத்தின் உச்சம்!

பரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி? பகுதி – 2

பா. ஜெயசீலன் முழுக்க முழுக்க தலித் விரோத, மிக ஆபத்தானா தலித் கலை/அரசியல் விரோத கருத்துக்களை கொண்டுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் பல்வேறு மட்டங்களில் கேள்விகளற்ற ஏகோபித்த பாராட்டுதலை பெற்று வரும் நிலையில் அந்த படத்தினால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள நான் இன்னும் கொஞ்சம் புலம்ப வேண்டிய தேவையிருக்கிறது. யூதர்களை அழித்தொழித்த நாஜிக்கள் யூதர்களிடம் நீங்கள் நன்றாக படித்து ஐன்ஸ்டினை போல ஆகுங்கள் பிறகு நாங்கள் உங்களை கொல்வதை நிறுத்திவிடுகிறோம் என்று சொன்னால் நீங்கள் அந்த நாஜிக்களை … Continue reading பரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி? பகுதி – 2

“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன?” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி?

பீட்டர் துரைராஜ் "குடியிருப்புக்காரர்களின் கோபத்திற்கு இரண்டாயிரம் வருட நியாயம் உண்டு. இந்த உலகை பலமுறை அழிக்கும் கோபம் அவர்களது கறுப்பு உடலெங்கும் படிகமாகி இருக்கிறது. இன்னும் ஏன் ஒருமுறை கூட இந்த உலகை அழிக்காமல் இருக்கிறார்கள? " என்று பேராசிரியர் ந. முத்துமோகன் புதிய தரிசனங்கள் நாவல் பற்றி எழுதுவார். பரியேறும் பெருமாள் படத்தைப் பார்க்கையில் இதுதான் என் நினைவுக்கு வந்தது. இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தான் கல்லூரியில் சேர்ந்தற்கு காரணம் ஒரு காங்கிரஸ் எம்.பி … Continue reading “இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன?” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி?

பரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்!

கே. ஏ. பத்மஜா ஆணவக் கொலைகள் குறித்து செய்திகளில் பார்க்கும்போதும், படிக்கும்போதே அதன் கொடூரம் நடுங்கச் செய்யும். இதனாலே இந்த படத்தைப் பார்க்க தயங்கினேன். ஆனால், படத்தை திரையரங்கில் பார்த்தபோது 'நல்லவேளை இவ்ளோ நல்ல படத்தை நான் தவறவிடவில்லை' என்று நிம்மதி கொண்டேன். 'பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல் மேல ஒரு கோடு' - இப்படி முழுமையாக சொன்னால்தான் அம்மா சத்தியமா முழுமையாக இருக்கும். மனிதனை மிருகம் ஆக்க வேண்டும் என்றால் சாதி, இன, நிற பாகுபாடு என்ற … Continue reading பரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்!

‘மேற்குத் தொடர்ச்சிமலை’ கதாநாயகர்களை கண்டுபிடிக்க முடியாத ஒரு சினிமா: பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்  அண்ணாசாலையில் உள்ள தேவியில் 'மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தை பார்த்து விட்டு என் சகோதரருடன் பல்லாவரத்திற்கு திரும்பி வந்தேன்.வருகின்ற வழியில் தொடர்ந்து இந்தப் படத்தைப்பற்றி பேசி வந்தோம்.அதில் வரும் காட்சி அமைப்பு பற்றி, வசனம் பற்றி, கதை பற்றி,அல்லது கதை இல்லாதது பற்றி பல விஷயங்களை திரும்பத் திரும்ப பேசி வந்தோம். வீட்டிற்கு வந்தவுடன் இதில் யார் ஹீரோ என்று என் மகன் கேட்டான்.மொபைல் போனில் தேடித்தான் -அந்தோணி என்று சொன்னேன்.இதனை இப்போது எழுதுகையில் … Continue reading ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ கதாநாயகர்களை கண்டுபிடிக்க முடியாத ஒரு சினிமா: பீட்டர் துரைராஜ்

Ladies and Gentle women : தன்பாலின உறவு பற்றி தமிழில் வெளிவந்துள்ள முதல் ஆவணப்படம்

பீட்டர் துரைராஜ் "ஹோமாசெக்‌ஷூவல்களை வக்கிரமான ரேபிஸ்டுகளாகவும் கொலைக்கார்களாகவும் மட்டும் 'வேட்டையாடு விளையாடு' படம் சித்தரிக்கவில்லை; அவர்களுக்கு அமுதன், இறமாறன் என்று தூய தமிழ்ப் பெயர்கள் சூட்டி, தமிழ் ஆர்வலர்களையும் கொச்சைப்படுத்தி இருக்கிறது.ஹோமோக்களும் லெஸ்பியன்களும் குற்றம் செய்யும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள் என்ற சித்தரிப்பு உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல;அத்தகையவர்களை இழிவானவர்களாக நம் சமூகம் கருதுவதன் இன்னொரு அடையாளம் ஆகும்" என்று ஞாநி தனது 'ஓ' பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனில் எழுதினார். ஞாநி இருந்தால் பாராட்டும்படியான, லெஸ்பியன் … Continue reading Ladies and Gentle women : தன்பாலின உறவு பற்றி தமிழில் வெளிவந்துள்ள முதல் ஆவணப்படம்

“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்

ஹரி தாதா பேசும் தூய்மை பற்றிய வசனங்கள், தேசியம் பற்றிய வசனங்கள் நேரடியாக மோடியை சுட்டுபவை. நாட்டை தூய்மைப்படுத்தும், தேசியத்தை வலியுறுத்தும் அவர்களின் அரசியலுக்கு பின் உள்ள அதிகார வெறியை, சூழ்ச்சியை வெகுமக்களிடம் காலா பிரசங்கமில்லாமல் நிறுவுகிறது.

நடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை

மனுஷ்யபுத்திரன் நடிகையர் திலகம் படம் பார்த்தேன். என் இளம் வயதில் நான் கண்ட மறக்க முடியாத புகைப்படங்களில் ஒன்று நடிகை சாவித்ரி கோமா நிலையில் எலும்புக்கூடாக கிடக்கும் கோலம். அந்தப் படம் ஏற்படுத்திய அதிர்ச்சி இப்போதும்கூட மனதில் மிஞ்சியிருக்கிறது. சாவித்ரியின் கதையை காட்டுகிறது நடிகையர் திலகம். நான் வெகுநாட்களுக்குப் பிறகு கண்டு மனம் கசிந்த ஒரு திரைப்படம். இது ஒரு ஒரு நடிகையின் கதை அல்ல. வாழ்வில் எல்லாவிதத்திலும் உச்சத்திற்கு சென்று அதலபாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்த ஒரு கலைஞரின் … Continue reading நடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை

எச்சரிக்கையோடு இருப்போம்!: காலா, ரவிக்குமார் சர்ச்சை குறித்து வன்னி அரசு

சமீபத்தில் வெளியான காலா படத்தின் டீசர் குறித்து ரவிக்குமார் கூறிய கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவரான வன்னி அரசு பதிவொன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “தோழர்களே! நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. ஒடுக்கப்பட்ட தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களை அமைப்பாய்த் திரட்டுவதும் அரசியல் சக்தியாய் வளர்த்தெடுப்பதும் லேசுபட்ட காரியமல்ல. அந்த முயற்சியில் நமது ‘தமிழ்த் தேசியப் பெருந்தலைவர்’ அண்ணன் தொல்.திருமாவளவன் … Continue reading எச்சரிக்கையோடு இருப்போம்!: காலா, ரவிக்குமார் சர்ச்சை குறித்து வன்னி அரசு

’காலா படத்துக்கும் ஜெயந்திரர் மரணத்துக்கும் என்ன தொடர்பு?’

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘காலா’. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் இந்தப் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் டீஸர் திங்கள்கிழமை வெளியாகவிருந்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஜெயந்திரர் மறைவை ஒட்டி, அவரை போற்றும்விதத்தில் காலா டீஸர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா செயல்பாட்டாளர் அருண், “ஜெயேந்திர சரஸ்வதிக்கும் காலாவுக்கும் என்ன என்ன தொடர்பு? ஶ்ரீதேவிக்காக காலா டீசரை தள்ளிவைத்தாலும் ஒரு … Continue reading ’காலா படத்துக்கும் ஜெயந்திரர் மரணத்துக்கும் என்ன தொடர்பு?’

“அருவி”யே அழகியே!

ப.ஜெயசீலன் In a mature state of mind we don't see anything as black or white...we start seeing the grey shades..அருவிக்கு மனிதர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பகுக்க போதுமான அனுபவங்களை வாழ்க்கை அளித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் எல்லா மனிதர்களுமே இங்கு கெட்டவர்கள் தான் என்ற முடிவை அடைய அவளுக்கு போதுமான காரணம் இருக்கிறது . ஆனால் அழகி அருவி மனிதர்களின் நல்லவை,கெட்டவை தாண்டிய சாம்பல் நிறத்தை தேடி ஆராய்ந்து, அவர்களுக்குள் … Continue reading “அருவி”யே அழகியே!

அர்ஜுன் ரெட்டி’காரு …பைசாவுக்கு பெறாத பிற்போக்குவாதி

ப. ஜெயசீலன் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை பற்றி வந்த நேர்மறையான விமர்சனங்களினாலும், பாடல்களிலும் அதை காட்சிப்படுத்துவதிலும் இருந்த நவீன அணுகுமுறையின் காரணமாகவும் தூண்டப்பட்டு அந்த படத்தை சமீபத்தில் பார்த்தேன். நமது சமூகத்தில் நவீனத்துவம் குறித்தும், முற்போக்குத்தனம் குறித்தும் பிற்போக்குவாதிகளுக்கு ஒரு குதர்க்கமான, கோமாளித்தனமான புரிதலிருக்கிறது. பிற்போக்குவாதிகளை பொறுத்தவரை மேற்கத்திய ஆடைகளை அணிந்து ஆங்கிலம் பேசுவதே ஒருவனின் நவீனத்தை அளவிடும் கருவி. சாதியின் எல்லா அயோக்கியத்தங்களையும் கடைபிடித்துகொண்டே எனக்கு சாதியில் நம்பிக்கையில்லை என்று சொல்வதும், இந்தக்காலத்தில் யார் சாதி … Continue reading அர்ஜுன் ரெட்டி’காரு …பைசாவுக்கு பெறாத பிற்போக்குவாதி

நிழலழகி 21: சில்க் ஸ்மிதாவும் நசுக்கப்பட்ட பட்டுப்பூச்சியும்!

கே. ஏ. பத்மஜா The Dirty Picture | Milan Luthria | Hindi | 2011 அது ஓர் இரவு. நாங்கள் படுக்கைக்கு ஆயுத்தமாகிக் கொண்டு இருந்தோம். என் எட்டு வயது மகள் என்னருகில் படுத்துக்கொண்டு, "அம்மா, இந்த மாதிரி ஏன் உங்களுக்கு பெருசா இருக்கு? எனக்கும் நான் வளர வளர அது பெருசாகுமா?" என்று கேட்டாள். அவள் இப்படிக் கேட்பதும் நான் "ஆம்" என்று பதில் சொல்வதும் முதல் முறையல்ல. ஆனால், இந்த முறை … Continue reading நிழலழகி 21: சில்க் ஸ்மிதாவும் நசுக்கப்பட்ட பட்டுப்பூச்சியும்!

நிழலழகி 20: அழுக்குகளை அடித்துச் செல்லும் ‘அருவி’!

  கே. ஏ. பத்மஜா Aruvi | Arun Prabu Purushothaman | Tamil | 2017 ஓர் அருவியில் குளித்துவிட்டு வரும்போது ஏற்படும் புத்துணர்வு 'அருவி' படம் எனக்குத் தந்தது. மேலிருந்து கீழ் நோக்கி எங்கும் பாய்ந்துச் செல்லும் அருவி போல மனிதர்களுக்கு உள்ளும் வெளியும் இருக்கும் பல அழுக்குகளை அடித்துச் சென்றாள் இந்த அருவி. 'அருவி'... அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு இறுதியில் அதிதி பாலன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த … Continue reading நிழலழகி 20: அழுக்குகளை அடித்துச் செல்லும் ‘அருவி’!

அருவி: பவித்ரா உன்னை நினைத்துக்கொள்கிறேன்!

சிவராஜ் விழிமீறும் கண்ணீரையும், நாவைப் பிறழச்செய்யும் சொற்களையும் கடினப்பட்டு கட்டுப்படுத்தி, குரல்வளை கவ்வலின் எச்சிலை விழுங்கிக்கொண்டே இவ்வெழுத்துக்களை எழுதுகிறேன். இந்தத் திரைப்படம் ஏதோவொரு வகையில், மனிதர்களாலும் சூழல்களாலும் உண்டாக்கப்பட்டு மனதின் அடியாழத்தில் தங்கியிருந்த நிறைய கசப்புகளையும் வன்மங்களையும் அக்கக்காக பெயர்த்தெடுத்து, நம்மை திரும்பத்திரும்ப கூண்டிலேற்றுகிறது. நம் சுயத்தை கண்முன் நிறுத்தி நிலைகுலையச் செய்யும் கேள்விதனை விடாமல் எழுப்பி சுயசுத்தத்தை நொடிக்குநொடி யாசிக்கவைக்கிறது இதன் திரைமொழி. இவ்வளவு விரிந்த ஒரு அன்போடு இந்த உலகத்தை ஒருவன் தன்னுடைய படைப்பின் … Continue reading அருவி: பவித்ரா உன்னை நினைத்துக்கொள்கிறேன்!

நிழலழகி 19: மதிவதினியின் ஆழமான அறப்போர்!

Aramm | Gopi Nainar | Tamil | 2017 நயன்தாரா என்றால் ஆண்களுக்கு மட்டும் அல்ல; பெண்களுக்கும் ஒருவித ஈர்ப்பு உண்டு. அதுவும் 'ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்' என்று ஆடிய நயன், 'ஊரெல்லாம் உன்னை பார்த்து வியந்தாரா' என்று தன்னை செதுக்கிய விதம் சினிமாவுக்கான அர்ப்பணிப்பு. அழகையும் கவர்ச்சியையும் தாண்டி, தமிழ்த் திரையுலகம் அவரிடம் நடிப்பை வாங்காமல் இருந்தபோதும், தனக்கான இடத்தை தனித்துவத்துடன் ஏற்படுத்திய நயன்தாராவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி தனது திறமைக்கான … Continue reading நிழலழகி 19: மதிவதினியின் ஆழமான அறப்போர்!

தமிழ் சினிமா உருப்பட சில வழிகள்: ஒரு இயக்குநர் சொல்கிறார்!

தனபால் பத்மநாபன் கிருஷ்ணவேணி பஞ்சாலை' பட ரிலீஸின்போது 103 MBA மாணவர்களைக் கொண்டு ஒரு 'Massive Marketing Effort' எடுத்தேன். அந்த முயற்சியில் இந்திய தபால்துறையும் 5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மகளிர் சுய உதவிக் குழுவும் இணைய உறுதி செய்தார்கள். தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 40 கல்லூரிகளில் இருந்து வந்திருந்த 103 MBA மாணவர்களுக்கு திரைத் துறையின் செயல்பாடுகளைப் பற்றி திரைத் துறையின் முக்கிய ஆளுமைகள் வகுப்பெடுத்தார்கள். ஆனால் அது ஒரு கனவு முயற்சியாக … Continue reading தமிழ் சினிமா உருப்பட சில வழிகள்: ஒரு இயக்குநர் சொல்கிறார்!

”தமிழ் சினிமாவே தற்கொலை செய்துகொள்ளும்”: இயக்குநர் மீரா கதிரவன்

கந்துவட்டிக்காரர்களால் தமிழ் சினிமாவே தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு வரக்கூடும் என இயக்குநர் மீரா கதிரவன் தெரிவித்துள்ளார். சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார், அன்புச்செழியன் என்ற சினிமா பைனான்சியரின் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் தனது முகநூலில் எழுதியுள்ள பதிவு: "அதிகாரவர்க்கம், அரசாங்கம் ஆள்வோரின் பெரும்புள்ளிகள், சினிமா அமைப்பின் தலைவர் என சகலரும் அவர் கையில். அவரை ஒன்றும் செய்ய முடியாது. கடவுளுக்கு அவரை தண்டிப்பது மட்டும் வேலை இல்லையே."-அசோக்குமார். தமிழ் சினிமாவில் … Continue reading ”தமிழ் சினிமாவே தற்கொலை செய்துகொள்ளும்”: இயக்குநர் மீரா கதிரவன்

கோபி நயினார் போதித்த பௌத்த “அறம்”!

வினோத் மலைச்சாமி தீயணைப்பு துறை அதிகாரி : உங்க பொண்ணு என்ன ஜட்டி மா போட்டு இருக்கு மதிவதனி (கலெக்டர் ) : ஏன் ? தீயணைப்பு துறை அதிகாரி: இல்ல மேடம் quality ஆன ஜட்டினா,கம்பிய ஜட்டியில் குத்து குழந்தைய மேல துக்கிடலாம் குழந்தையின் தாய்: ஐயா ...வேண்டாம் யா...10 க்கு 3ன்னு வாங்குன ஐட்டி யா.... என்று கத்தி அழும் தாயின் கண்ணீர் நம் கண் வழியாக வழிந்து விடுகிறது. நிலத்தடி நீர் வற்றிப்போன … Continue reading கோபி நயினார் போதித்த பௌத்த “அறம்”!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலைவிட ஏ.ஆர்.முருகதாஸ் ஆபத்தானவர்!

ஏ.ஆர்.முருகதாஸ் அதிகார வர்க்கத்தின் (Bureaucracy) படுமோசமான பாசிசத் தன்மை வாய்ந்த ஏதோ ஒருபிரிவுக்கு பிரச்சாரப் படங்கள் எடுக்கிறார்.

சக நடிகையின் அவமானத்தை கைதட்டி ரசிக்காமல் இருந்திருக்கலாம்!: தன்ஷிகாவுக்கு ஆதரவாக விஷால்!

‘விழித்திரு’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை தன்ஷிகா இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கு நன்றி சொல்லவில்லை என்பதற்காக டி. ஆரால் அதே மேடையில் கடுமையாக வசைபாடப்பட்டார். டி. ஆரின் செய்கை சமூக ஊடகங்களில் கண்டனத்தை எழுப்பிய நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் … Continue reading சக நடிகையின் அவமானத்தை கைதட்டி ரசிக்காமல் இருந்திருக்கலாம்!: தன்ஷிகாவுக்கு ஆதரவாக விஷால்!

துப்பறிவாளன்: கொடூரர்களின் மரணங்களும் சோக கீதமும்!

எனக்கு ஒட்டுமொத்தமாக நிறைவு தந்த சமீபத்திய படங்களுள் ஒன்று #துப்பறிவாளன். இரண்டே முக்கால் மணி நேரத்துக்கு திரையை விட்டு கண்கள் அகலாத வகையில் கவனித்துக் கொண்டதே கச்சிதத்தைக் காட்டியது. வலித்துத் திணித்து உருவாக்கப்பட்ட பாகுபாடுகள் ஏதுமின்றி, எல்லா தரப்பு ரசிகர்களும் கடைசி காட்சி வரை இருக்கையில் நெளியாமல் பார்த்துக்கொண்டதே மிஷ்கின் திரைமொழியின் நேர்த்தியைச் சொன்னது. நல்லவர்கள் - கெட்டவர்கள் கூட்டத்தில் அதீதமானவர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு கதை சொல்லப்பட்ட இந்தப் படைப்பு, இரு தரப்பு உணர்வுகளின் உச்சங்களையும் காட்சிப்படுத்தியது. … Continue reading துப்பறிவாளன்: கொடூரர்களின் மரணங்களும் சோக கீதமும்!

நிழலழகி 17: தங்க கூண்டில் உள்ள கிளிகள் அல்ல ஆல்தியாக்கள்!

'கணவன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் அவனைச் சகித்து வாழவேண்டும், அவனைத் திருத்தவேண்டும்; அவனாக திருந்தும் வரை உன் சந்தோஷத்தையும், கனவுகளையும் கைவிட வேண்டும்' என்றெல்லாம் தியாக வாழ்க்கை வாழவேண்டிய அவசியமில்லை என்று பெண்கள் உணர்ந்துவிட்டதன் விளைவுதான் பெருகிவரும் விவாகரத்து வழக்குகள்.

நிழலழகி 16: கோமாதா என்றும் கனவு மாமியார் தானா?

பெண்களின் பிரச்சினைகளை வெறும் சிட்டிகை அளவு மட்டுமே பேசிய படம் 'மகளிர் மட்டும்'. ஆனாலும் மாமியார் - மருமகள் உறவை மேன்மையாகவும் சிறப்பாகவும் காட்டியத்திற்காய் இந்தப் படத்தை ரசிக்கலாம்.

துப்பறிவாளன்: ”ஒரு புத்தகம் வாசிக்கிற ஃபீலிங்!”

பெரியபெரிய கொலைகள்லாம் ஒரு சின்னத் தவறுதல்ல வந்து மாட்டிக்கிற விசயம் Conan Doyle-ஓட சொல்முறைன்னாலும், படத்துல அது மிக சுவாரஸ்யமா காட்டப்பட்டிருக்கு.

நிழலழகி 15: ரட்சனாவும் அனிதாவும் சில உண்மைகளும்!

அனிதா போன்று தங்கள் உயிரை பணயம் வைத்துதான் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டியது இருக்கிறது. அனிதா போன்று தங்கள் உயிரை பணயம் வைத்துதான் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டியது இருக்கிறது.

விவேகமும் ப்ளூ சட்டை அண்ணாச்சியும்

முதலாளித்துவம் சொல்வது போல் நீ உன்னை மட்டுமே நம்பு என்கின்றார். உலகிலேயே ஓரே உத்தமர் அவர். எல்லாருமே முதுகில் குத்துபவர்கள்... இந்த கருத்தை இந்த முதலாளித்துவ கருத்தை சொல்வதால் தான் அஜித் இமேஜ் மக்களிடம் செல்லுபடியாகிறது.

ப்ளூ சட்டைக்காரர் மீது ரசிகர்கள் தாக்குதல்; அஜித் ரசிக்கிறாரா?

ஜி. விஜயபத்மா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருமுறை மொட்டை அடித்தார் என்பதால், அவர் ரசிகர்கள் ஒரு லட்சம் பேர் மொட்டை அடித்தார்கள் என்று செய்தி ஒரு முறை வந்தது. அப்பொழுது நான் குமுதம் பத்திரிக்கையில் நிருபராக வேலைப் பார்த்தேன். அப்பொழுது அஜித்தை பேட்டி எடுத்தேன். அந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டு இருந்ததை தலைப்பு செய்தியில், குமுதம் அட்டைப்படத்தில் போட்டார்கள் அந்த தலைப்பு இதுதான் "ரஜினியைப் பின்பற்றுவது முட்டாள்தனம். Bullshit" என்று. இந்த பேட்டி குமுதத்தில் வெளி வந்ததும் … Continue reading ப்ளூ சட்டைக்காரர் மீது ரசிகர்கள் தாக்குதல்; அஜித் ரசிக்கிறாரா?

தரமணி: ஆல்தியாவும் ஆல்தியா நிமித்தமும்!

பல்வேறு கலைகளின் கூட்டு அம்சம்தான் 'சினிமா'. இந்த வடிவத்துக்கு என தனியாக எந்த இலக்கணமும் இல்லை என்பதுதான் சினிமாவின் தனித்துவம். இதுதான் மாஸ் மீடியமாக சினிமாவை தக்கவைத்துக் கொண்டிருக்கிருப்பதாக நம்புகிறேன்.

ஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு 

பெண் நாய்/அடிமை என்னும் பொருள்படும் ஆங்கில bitch தமிழில் தேவுடியாவாக மொழிமாற்றம் அடைகையில் தரமணி என்பதன் ஆங்கில  மொழிபெயர்ப்பு feminism என்பதாக இருக்குமோ? இருக்கலாம்? நீட்டினால் நமது கழுத்தை...

தரமணி: ஓர் ஆணின் பார்வையில் போலி பெண்ணியம்

நைட் ஷிப்ட் வேலைக்குப் போன பிறகு மனைவி, மற்ற ஆணை வீட்டுக்கு வர சொல்வார்கள் என்பது இயல்பான வாழ்முறை என்கிறீர்களா? படம் முழுவதும் பாலியல் தொடர்பை வைத்துதான் நகர்த்துகிறீர்கள். இடையில் மட்டும் ஊறுகாயைப் போல சில சமூக கருத்தைச் சொல்கிறீர்கள். வியாபார நோக்கமா?

#தரமணி: ஒரு திரைப்படம் கவிதைபோல் இருக்கலாம்; ஆனால் ஒரு கட்டுரைபோல் இருக்க வாய்ப்புண்டா?

ஆண்ட்ரியா உடம்பில் எந்த உறுப்பு அழகு? கால், இல்லையா? கால் என்றால் தொடை மேல்முழங்கால் முழங்கால்மொழி அதன் பின்புறக்குழி கண்டைக்கால் கணைக்கால் குதிங்கால் பாதம் பாதவிரல்கள் என எல்லாம் சேர்ந்துதான். மேலிருந்து கீழாக நனவுகிறேன், ஆகவே இது அழகுநயத்தல்;

“பன்றி” யார்? : பகுதி -3 

தேசிய/மாநில விருது பெற்ற இயக்குனர் ரோஹித், முத்து கிருஷ்ணனின் மரணத்தை முன்னிட்டு தலித் அமைப்புகளை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறார்...

“பன்றி” யார்? : பகுதி -2

வசந்தபாலனுக்கு மாடம் வைத்த தலித் வீட்டில் "நிலா காய்கிறது" பாடல் கேட்டால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது. ஏனென்றால் ஒரு சாதி இந்துவின் மனதில் தலித்துகளை பற்றி அவர்களே உருவாக்கி கொண்ட கற்பிதங்களும் சித்திரங்களும் தலித்துகள் குறித்து கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தெளிவான வரையறையை கொடுத்துள்ளது.