தலித் மருத்துவ அதிகாரி மீது தாக்குதல்: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பு இருப்பதாக புகார்

கொரோனா பணியின்போது, தலித் மருத்துவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதோடு, சாதியை சொல்லி இழிபடுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் மீது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்குற்றம்சாட்டியுள்ளது. இதில் அமைச்சரின் தலையீடு இருப்பதாகவும் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் புகார் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கொரோனா பணி தொடர்பாக, தலித் மருத்துவ அதிகாரிகள் சொல்வதை, தலித் அல்லாத கீழ் மட்ட மருத்துவ அதிகாரிகள் ஏற்காத போக்கும், தலித் அதிகாரிகளை சாதியை குறிப்பிட்டு இழிவாக திட்டும் … Continue reading தலித் மருத்துவ அதிகாரி மீது தாக்குதல்: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பு இருப்பதாக புகார்

ரயில்வே கேட்டரிங் பணிக்கு அகர்வால் சாதியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டுமாம்!

அ. குமரேசன் ரயில்வே ஃபுட் பிளாசா மேனேஜர் ட்ரெய்ன் கேட்டரிங் மேனேஜர் பேஸ் கிச்சன் மேனேஜர் ஸ்டோர் மேனேஜர் -ஆகிய பணிகளுக்கு, பிளஸ் டூ படித்த, நாட்டில் எங்கே வேண்டுமானாலும் போய் வேலை செய்யத் தயாராக இருக்கிறவர்களிடமிருந்து விண்ணப்பங்கள வரவேற்கப்படுவதாக ஒரு விளம்பரம் ஆறு நாட்களுக்கு முன் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வந்திருக்கிறது. முக்கியமான தகுதி, விண்ணப்பதாரர்கள் அகர்வால் வைஷ் சாதியைச் சேர்ந்தவர்களாக இருகக வேண்டும். தனியார்மயமாக்கப்பட்டு வரும் ரயில்வேயில் உணவு விநியோக காண்டிராக்ட் எடுத்துள்ள பிரந்தாவன் … Continue reading ரயில்வே கேட்டரிங் பணிக்கு அகர்வால் சாதியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டுமாம்!

சீமானின் சாதிய முகம்!

சீமான் பல்லக்கு முறை கார் வந்ததால் மாறிவிட்டதாக சொல்கிறார். அடடே என்ன ஒரு கண்டுபிடிப்பு?

பாமக தொண்டருக்கு 9-ஆம் வகுப்பு மாணவி ஐயிட்டமாகத் தெரிகிறார்: பெண்களின் பாதுகாப்புக்கு யாரால் அச்சுறுத்தல் திரு. ராமதாஸ்?

அண்மையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலித் மாணவர்கள் மீது சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமையை கடைப்பிடிப்பதாக இரண்டு ஆசிரியர்கள் மீது பள்ளி மாணவர்கள் புகார் அளித்தனர். அவர்கள் இருவரையும் பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய கல்வி துறை அதிகாரிகளிடம் ஒடுக்குமுறைக்கு ஆளான மாணவர்கள் பேசினர். வன்னியர் சாதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ஆசிரியர் தலித் மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒதுக்குவதாகவும் … Continue reading பாமக தொண்டருக்கு 9-ஆம் வகுப்பு மாணவி ஐயிட்டமாகத் தெரிகிறார்: பெண்களின் பாதுகாப்புக்கு யாரால் அச்சுறுத்தல் திரு. ராமதாஸ்?

8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி

  பெண்களின் பாதுகாப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அனைத்துக் கட்சியினருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், “பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும், சில ஆலோசனைகளையும் உள்ளடக்கிய உங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி. பெண்கள் மீதான வன்முறை பல வகைப்பட்டது. பெண் என்பதால் வரும் பாலியல் தாக்குதல்; தொழிலாளி, விவசாயி, அலுவலக ஊழியர் … Continue reading 8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் கடிதம்

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி குரல் கொடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப் பட்டது. இந்தக் கடிதத்தில் ராமதாஸ் எழுதியுள்ளவை:   வணக்கம்! தமிழ்நாட்டின் இன்றைய பெரும் பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கும் இளம் பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த உங்களின் கவனத்தை ஈர்க்கவும், பெண்கள் பாதுகாப்புக்காகவும், பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் குரல் கொடுக்குமாறு உங்களை … Continue reading தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் கடிதம்

“குடிசை கொளுத்தியே வெளியேறு”: டெல்லியில் அன்புமணியின் உருவ பொம்மையை எரித்து மாணவர்கள் போராட்டம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்கச் சென்ற அன்புமணிக்கு எதிராக பாப்சா  மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தலித் மக்களுக்கு எதிராக அன்புமணி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர். “குடிசை கொளுத்தியே வெளியேறு” “சாதிவெறிக்கு சிவப்பு கம்பளமா?” போன்ற கோஷங்களை முன்வைத்து போராட்டம் செய்தனர். … Continue reading “குடிசை கொளுத்தியே வெளியேறு”: டெல்லியில் அன்புமணியின் உருவ பொம்மையை எரித்து மாணவர்கள் போராட்டம்

“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா?”: உமர் காலித்

“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்திய சாதிய கட்சியைச் சேர்ந்த அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேன்யூவில் பேசுவதா?” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜேஎன்யூ  மாணவர் சங்கத்தைச் சேர்ந்த உமர் காலித். ஓபிசி ஃபாரம் ஏற்பாடு செய்திருந்த சமூக நீதி குறித்த கருத்தரங்கில் பேச அன்புமணி ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உமர் காலித் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மபுரி எம்பியான பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் சமூக நீதி குறித்து … Continue reading “தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா?”: உமர் காலித்

”200 முஸ்லீம் பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செஞ்சிக்கிட்டாங்க”: தலித்துகள் மீது ராமதாஸ் புதிய குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் ராமதாஸ், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தலித்துகள், பிரபல தலித் தலைவரின் தூண்டுதலின் பேரில் இஸ்லாமிய பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் 200 முஸ்லீம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக அந்த ஊர் இமாம் இதைத் தங்களிடம் தெரிவித்தாக கூறியுள்ளார். இந்தப் பேட்டியில் ராமதாஸ் கூறியுள்ள சில கருத்துகள்: அஞ்சாவது படிச்சவன் செல்போன் பயன்படுத்தறான். செல்போன் மூலம் சமூக வலைத்தளங்களில் பெண்களை காதல் வலையில் … Continue reading ”200 முஸ்லீம் பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செஞ்சிக்கிட்டாங்க”: தலித்துகள் மீது ராமதாஸ் புதிய குற்றச்சாட்டு

ஜாதிப் படிநிலையில் உங்களுக்கு மேலே இருக்கிற ஆண்டைகளைப் பாருங்கள் நீங்கள் எவ்வளவு அடிமைகள் என்று புரியும்!

யாழன் ஆதி தனிமனித காதல் பிறழ்வுகளை சமூகப் பிரச்சனையாக மாற்றுவதும், சமூகரீதியான கொலைகளை மிக எளிதாகக் கடந்துவிடுவதும் இதுவேதான் இளைஞர்களின் வேலை என்று அவர்களை மிக மோசமாக இழித்தும் பழித்தும் பேசுவதும் அதையே தன் அரசியல் எதிர்காலமாக நினைப்பதும் எப்படி சரியானத் தலைமையாகும்? தொலைக்காட்சி நேர்காணலில் பார்வையாளருக்கு ஒரு நன்மை இருக்கிறது, கருத்துக்கள் உண்மையானவை என்னும் பட்சத்தில் சொல்பவரின் முகம் அதற்கு சான்றாகிவிடும், தான் கூறுவது பொய்யும் புரட்டும் எனும்போது அது அதைக் காட்டிவிடும். நவீனா கொலைக்குறித்துப் … Continue reading ஜாதிப் படிநிலையில் உங்களுக்கு மேலே இருக்கிற ஆண்டைகளைப் பாருங்கள் நீங்கள் எவ்வளவு அடிமைகள் என்று புரியும்!

“சிறுமியை நாசமாக்கிய தலித்திய, திராவிட, ஊடகக்கூட்டு”: சமூக வலைத்தளங்களில் பரவும் சாதி அரசியல்

விழுப்புரத்தைச் சேர்ந்த நவீனா என்ற பெண்ணை செந்தில் என்பவர் தீயிட்டு கொளுத்தி, தன்னையும் கொளுத்திக்கொண்டார். செந்தில் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். நவீனா, தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தார். சில மாதங்களுக்கு முன் செந்தில்(தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்), வேறு சாதி பெண்ணை காதலித்த காரணத்தால் அவர்களுடைய வீட்டினர் தண்டவாளத்தில் வீசி, கால் கைகளை துண்டித்தனர் என்று புகார் அளித்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் ஊடகங்களில் விவாதங்களும் நடந்தன. இந்த சம்பவம் நடக்கவில்லை என்றும் செந்தில் … Continue reading “சிறுமியை நாசமாக்கிய தலித்திய, திராவிட, ஊடகக்கூட்டு”: சமூக வலைத்தளங்களில் பரவும் சாதி அரசியல்

தமிழ் திரையுலகின் ஸ்டான்லி கூப்ரிக் கரு.பழனியப்பன்…நமக்கு புரியாத விஷயங்களை புரிந்து வைத்துள்ள மாமேதை..

ப .ஜெயசீலன் 2000 A space odyssey என்ற திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகியும் இன்றும் அதன் இறுதி காட்சியில் இயக்குனர் சொல்ல வந்த உட்பொருள் குறித்து பெரும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு படத்தை இயக்கிய ஸ்டான்லி கூட தன்னிடம் கேள்வி எழுப்பியவரை பார்த்து நான் சொல்வது உங்களுக்கு புரியாது என்று சொன்னதில்லை. தமிழ் திரையுலகின் ஸ்டான்லி கூப்ரிக் கரு.பழனியப்பன் அவர்கள் சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினி கரு. பழனியப்பன் தாடி … Continue reading தமிழ் திரையுலகின் ஸ்டான்லி கூப்ரிக் கரு.பழனியப்பன்…நமக்கு புரியாத விஷயங்களை புரிந்து வைத்துள்ள மாமேதை..

ஒரு செய்தியின் அடிப்படையிலான விவாதத்திற்காக குணசேகரன் ஏன் மன்னிப்புக்கோர வேண்டும்?: மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன் விழுப்புரம் செந்தில் என்பவர் நவீனா என்ற பெண்ணை ஒருதலையாய் காதலித்து அந்தப்பெண் மறுத்தன் விளைவாக நாட்களுக்கு முன்பு தன்னைத்தானே கொளுத்திக்கொண்டு நவீனாவிற்கும் தீக்காயங்களை நான்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்படுத்தினார் . செந்தில் அன்றே இறந்துவிட்டார். இது குறித்து கடந்த ஞாயிறு அன்றே நானும் பத்ரியும் புதிய தலைமுறையில் விவாதித்தோம். 70 சதத் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நவீனாவும் இன்று மரணமடைந்தார். சென்ற ஆண்டே இந்த விவகாரம் வேறொரு கோணத்தில் பிரச்சினையாக மாறியது. அப்போது … Continue reading ஒரு செய்தியின் அடிப்படையிலான விவாதத்திற்காக குணசேகரன் ஏன் மன்னிப்புக்கோர வேண்டும்?: மனுஷ்யபுத்திரன்

விழுப்புரம் நவீனா மரணம்: ஏன் இந்த இறுக்கமான மவுனம்?

அ. மார்க்ஸ் விழுப்புரம் செந்திலின் நெருப்பு ஆலிங்கனத்தின் விளைவாக 70 சதத் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நவீனாவுக்கு நேர்ந்த கதி அடுத்த சில நிமிட ங்களில் எனக்கு வந்தது. நான் அப்போது NCHRO கருத்தரங்கில் இருந்தேன். பத்திரிகையாளர்களிடமிருந்து அந்தச் செய்தி கிடைத்தது. நவீனாவின் மாமா ஏழுமலையிடம் பேசி தகவலை உறுதி செய்து கொண்டேன். அவர் ஒருகாலத்தில் தமிழ்த் தேசிய இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர். நான் மிகவும் வேதனைப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளில் ஒன்று இது. அந்தப் பெண், … Continue reading விழுப்புரம் நவீனா மரணம்: ஏன் இந்த இறுக்கமான மவுனம்?

“ரோடில் போகும் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது”: மஞ்சுளா ரமேஷ்

நடிகர் ஒய். ஜி. மகேந்திரன், ஸ்வாதி பிராமணப் பெண் என்பதால்தான் அவருக்காக யாரும் குரல்கொடுக்கவில்லை என சொன்ன நிலையில், மற்றொரு பிரபலம், பத்திரிகையாளர் மஞ்சுளா ரமேஷ், தனது முகநூலில் இப்படித் தெரிவித்திருக்கிறார். Manjula Ramesh ரோடில் சிரித்துப் பேசிக்கொண்டு போகும் இளம் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது, பயமாக இருக்கிறது...இப்படி பயப்படும் நிலைக்குத் தமிழ்நாடு மாறிவிட்டதே...நாம் எங்கே போகிறோம்? மஞ்சுளா ரமேஷின் பதிவுக்கு எழுத்தாளர் தமயந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இயங்கும் பல … Continue reading “ரோடில் போகும் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது”: மஞ்சுளா ரமேஷ்

துரை குணாவின் ஊரார் வரைந்த ஓவியம் ஒரு வாக்குமூலம் போன்ற குறுநாவல்: தர்மினி

தர்மினி 'கலகத்தை முதலில் தன் குடும்பத்திலிருந்தும் தன் உறவு முறைகளிடமிருந்தும் சொந்தச் சாதிக்குள்ளிருந்தும் தான் தொடங்கவேண்டும். எனக்கு அப்படித்தான் தொடக்கம்...’ என எழுதும் துரை. குணா நேற்று அதிகாலை காரணமெதுவும் சொல்லாமல் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நூலை வெளியிட்டதனால் தன் சொந்த ஊருக்குள்ளேயே விலக்கப்பட்டுத் துரத்தப்பட்டதை அதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் படும் துயரையும் எதிர்கொள்ளும் வழக்குகள் தடைகளைத் தொடர்ச்சியாகத் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு வருவதை காண்கிறோம்.கடந்த ஏப்ரல் 5ம் … Continue reading துரை குணாவின் ஊரார் வரைந்த ஓவியம் ஒரு வாக்குமூலம் போன்ற குறுநாவல்: தர்மினி

தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாராகிறது ‘சய்ரத்’!

மராத்தியில் வெளியாகி வசூலைக் குவித்த சாதி ஆணவக் கொலை தொடர்பான படமான ‘சய்ரத்’ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது. நாக்ராஜ் மஞ்சுளே இயக்கிய இந்தப் படம் ரூ. 100 கோடியை ஈட்டியுள்ளது. இந்தப் படத்தின் மொழியாக்க உரிமையை வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். நடிகர்கள் தேர்வு விரைவில் தொடங்க இருப்பதாகவும் ஆகஸ்டு மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் துரை குணாவை தரையில் அமர்த்தி விசாரணை; ஒரே ஒரு புத்தகம் எழுதியதற்காக தொடர்ந்து வன்கொடுமை செய்யும் போலீசார்…

Evidence Kathir   இந்த படத்தை பார்த்ததும் கண் கலங்கி நிற்கிறேன். எழுத்தாளர் துரை குணா காவல் நிலையத்தில் தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் காட்சியை பாருங்கள். பூபதி கார்த்திகேயனும் துரை குணாவும் தன்னை கத்தியால் குத்தினார்கள் என்று புகார் கொடுத்ததாக சொல்லபடுகிற சிவானந்தம், தனக்கு துரை குணா யார் என்று கூட தெரியாது. போலிஸ் வெற்று வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி அவர்களாகவே புகார் எழுதி இருக்கின்றனர் என்கிறார். அது மட்டும் அல்ல சிவானந்தம் மீது … Continue reading எழுத்தாளர் துரை குணாவை தரையில் அமர்த்தி விசாரணை; ஒரே ஒரு புத்தகம் எழுதியதற்காக தொடர்ந்து வன்கொடுமை செய்யும் போலீசார்…

ஜுன் 28: கோகுல்ராஜ் மரணத்துக்கு நீதி தரும் நாளாக இருக்குமா?

வன்னியர் சாதி பெண்ணை காதலித்து, மணந்தார் என்பதற்காக அலைக்கழிக்கப்பட்ட அந்த இளைஞர் தருமபுரி ரயில் தண்டவாளத்தில் உடல் துண்டாகிக் கிடந்தார். அவர் இளவரசன். தற்கொலை வழக்காக சொல்லப்பட்டு கொலை வழக்காக விசாரணை நடந்து வரும் நிலையில் இளவரசனின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனையும் நீதியும் எந்த திசையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. இந்நிலையில் திருச்செங்கோடில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த கோகுல்ராஜின் கொலை நடந்தேறியது. இதுவும் தண்டவாளத்தில் நடந்த கொலைதான். இந்த முறை கவுண்டர் சாதி அவரைக் கொன்றதில் பெருமைத் … Continue reading ஜுன் 28: கோகுல்ராஜ் மரணத்துக்கு நீதி தரும் நாளாக இருக்குமா?

கோயில் திருவிழாவில் வன்னியர்கள் கரகம் எடுக்க நாயுடுக்கள் எதிர்ப்பு; காரணம் ‘சாதி’!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி என்ற சிவனடியார் தமிழில் பாட முயன்றதற்காக தீட்சிதரால் அடித்து வீசப்பட்டார். பல ஆண்டுப் போராட்டங்களுக்கு பின் நீதிமன்றம் சென்று, திருச்சிற்றம்பல மேடையேறி தமிழில் பாட அரசாணையும் கிடைத்து அவர் பாடியபோது, 5000 ஏக்கர் கோயிலை கழுவி தீட்டு கழித்தனர். அந்த ஆறுமுகசாமி வன்னியர். அவருக்காக ஆலய பிரவேசத்திற்கான போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானவர்களில் மூவர் விசிக வினர்.  இந்த நிலையில்,  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள குமாரபாளையம் கோயில் விழாவில் கரகம் … Continue reading கோயில் திருவிழாவில் வன்னியர்கள் கரகம் எடுக்க நாயுடுக்கள் எதிர்ப்பு; காரணம் ‘சாதி’!

“தமிழ்நாட்டுக்கு கவுண்டர் நாடு என்று பெயர் வைக்கவேண்டும்”: யுவராஜின் சகா யோசனை

மதம், அபினை போல போதையானது என மார்க்ஸ் சொன்னது, சாதிக்கும் பொருத்தமாகப் பொருந்திப் போகிறது. சாதி என்னும் போதையில் ஆழ்ந்து கிடக்கும் சிலர், தாங்கள் உளறுவதெல்லாம் வரலாறு என்று பரப்பி வருகிறார்கள். ஆண்ட சாதி பெருமிதங்களுக்கு நடுவே சாதி போதையில் ஆழ்ந்த ஒருவர், தமிழ்நாட்டை கவுண்டர் நாடு ஆக்க வேண்டும் என்கிறார். அவருடைய பதிவைக் கீழே தந்திருக்கிறோம். Dheeran Saravanan Gurusamy Gounder என்ற பெயரில் முகநூல் உள்ள பதிவு இது: “உலகை ஆண்ட ஒர் இனம் இன்று நாடாள … Continue reading “தமிழ்நாட்டுக்கு கவுண்டர் நாடு என்று பெயர் வைக்கவேண்டும்”: யுவராஜின் சகா யோசனை

மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

மாதவராஜ் தமிழக தேர்தல் முடிவுகள், நம்பிக்கைகளை தொலை தூரத்தில் காட்டுவதாகவே இருக்கின்றன. ஆளும் கட்சியான அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இணைந்து போராட்டங்கள் நடத்தும் உறுதியோடு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சில மாதங்களில் எதிர்வந்த தேர்தலையொட்டி, இந்த கூட்டு இயக்கமானது ஊழல் மலிந்த, அரசியல் நேர்மையற்ற, சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, மக்கள் விரோத திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியாக … Continue reading மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

புனித திரு உரு’ பிம்பங்கள்!

அ. மார்க்ஸ் நமது அரசியல் தலைவர்கள் பற்றிய 'திரு உரு'பிம்பங்களைக் கட்டமைப்பது, அப்பழுக்கற்ற iconic images உருவாக்குவது முதலியன ஆபத்தானது என அருள் எழிலன் கூறியுள்ளது முக்கியமான ஒன்று. காமராசர் பற்றிக் கிட்டத் தட்ட ஒரு குட்டிக் கடவுள் என்கிற அளவு பிம்ப உருவாக்கம் நடதுள்ளதை அவர் குறிப்பாகக் கூறியுள்ளார் காமராசர் குறைகளே இல்லாதவர் என்பதல்ல. ஆனால் காமராசர், கக்கன் முதலானோருக்கு இத்தகைய பிம்பம் உருவானது எப்படி என்பது பற்றியும் நாம் ஆராய வெண்டும். இன்றைய தலைவர்களுடன் … Continue reading புனித திரு உரு’ பிம்பங்கள்!

பெரிய மாயத்தேவர் பாரதிராஜா பெயர் சர்ச்சையும் அறிவுத்துறை பெரும்பான்மைவாதமும்

ஸ்டாலின் ராஜாங்கம் 1)தேர்தல்பணிகள் தொடங்கிய நேரத்தில் கட்சி கூட்டமொன்றில் திமுக பொன்முடி, சாதி பற்றி பேசினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பொன்முடியின் சொந்த குடும்பத்தில் நடந்திருக்கும் கலப்புமணங்களை வரிசைப்படுத்திக் காட்டி அவரை சாதிரீதியாக யோசிக்கக் கூடாது என்று எழுதப்பட்டது. 2)இப்போது முகநூல்பக்கத்தில் தன்பெயரை மட்டுமே போட வாய்ப்பிருந்தும் சாதிப்பட்டத்தோடு கூடிய 'மாற்றமுடியாத'தன் அப்பாவின் பெயரோடு தன் பெயரை குறிப்பிட்டிருக்கிறார் பாரதிராஜா.(பெரிய மாயத்தேவர் பாரதிராஜா)இந்நிலையில் சினிமாத்துறையைச் சேர்ந்த சிவா என்பவர் இதை விமர்சித்து பதிவிட்டிருக்கிறார். வாசிக்க: “ஓட்டு போடும் … Continue reading பெரிய மாயத்தேவர் பாரதிராஜா பெயர் சர்ச்சையும் அறிவுத்துறை பெரும்பான்மைவாதமும்

“நாடார் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” சாதி பத்திரிகை மகாஜனம் கேட்கிறது!

நாடார் சாதி பத்திரிகையான மகாஜனம் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் நாடார் சாதியைச் சேர்ந்த பல கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் படத்தை முகப்பில் போட்டு, அவர்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டிருக்கிறது. இது சமூக ஊடகங்களில் சாதியை முன்னிறுத்தி வாக்கு கேட்பது தேர்தல் விதிமீறல் ஆகாதா  என விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Thanthugi Blogspot மஹாஜடங்களால் மஹாஜடங்களுக்காக மஹாஜடங்களையே தேர்ந்தெடுக்க வேணுமாம். அதாவது மஹாஜடங்களின் ஓட்டு மற்ற ஜடங்களுக்கு கிடையாதாம். Muthazhagan Ma ஒரே சட்டமன்ற தொகுதியிலருந்து எப்படி சுப. உதயகுமாரனையும் … Continue reading “நாடார் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” சாதி பத்திரிகை மகாஜனம் கேட்கிறது!

“விரல்ல மை வைச்சிக்கிற உரிமை மட்டும்தான் எங்களுக்கு”: நத்தம் மேடு தலித்துகளின் ஓட்டுரிமையை பறிக்கும் சாதி!

தருமபுரி மாவட்டம் நத்தம் மேடு கிராமத்தில் 421 தலித் வாக்காளர்கள் வசிக்கிறார்கள். ஊரே தேர்தல் திருவிழாவில் இணைந்திருக்கிற, இந்த மக்களுக்கு இந்த முறையும் தங்களால் வாக்களிக்க முடியுமா? என்கிற கேள்விதான் முன்னால் நிற்கிறது. தருமபுரியிலிருந்து 35 கிமீ தூரத்தில் இருக்கும் நத்தம் மேடு கிராமத்தில் தலித்துகளுடன் ‘சாதிக்காரர்’கள் பெரும்பான்மையினராக வசிக்கிறார்கள். பண பலம், ஆள் பலம் காரணமாக இவர்களின் அடிப்படை உரிமையான ஓட்டளிக்கு உரிமை ஒவ்வொரு முறையும் பறிக்கப்படுகிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. “தேர்தல் … Continue reading “விரல்ல மை வைச்சிக்கிற உரிமை மட்டும்தான் எங்களுக்கு”: நத்தம் மேடு தலித்துகளின் ஓட்டுரிமையை பறிக்கும் சாதி!

ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டார் கௌசல்யா: எவிடென்ஸ் கதிர் தகவல்

எவிடென்ஸ் கதிர்  சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலை முயற்சி. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பு என்று செய்திகள் போட்டு கொண்டு இருக்கின்றனர். ஆபத்து இல்லை.சரியாகிவிட்டது. ஆயினும் முழுவதுமான பரிசோதனைக்கு கோவை மருத்துவமனைக்கு கவுசல்யா அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக சங்கர் எரிக்கப்பட்ட இடு காட்டிற்கு சென்று புலம்பி அழுது இருக்கிறார். அதிகமான மனவேதனை காரணமாக இந்த முடிவினை எடுத்து இருக்கிறார் கவுசல்யா. இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த வழக்கு குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு … Continue reading ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டார் கௌசல்யா: எவிடென்ஸ் கதிர் தகவல்

நாயூடு கு.பிச்சாண்டி, கே. என். நேரு ரெட்டி, கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் ரெட்டி…திமுகவின் ’சாதி அரசியல்’ ஆதாரங்கள்!

Subramanian Ravikumar நம் நாயூடு கு.பிச்சாண்டியாம்... திமுக தலைவர்கள் சாதிகளைப் பதவியூட்டி வளர்க்கிற லட்சணம் இதுதான்.... அந்தா 50 ஆண்டுகளில் பக்கத்துல பெரியார் அடிபட்டு விழுந்து கிடக்கிற காட்சி தெரிகிறது... ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற அண்ணாவின் கரகரத்த குரல் காற்றில் சிக்கிச் சின்னாபின்னமாகிறது... பிரதாபன் ஜெயராமன் சாதிப்பெயரை ஒழித்த சரித்திரஆட்சியில் சாதனை பாரீர்... Jeyachandra Hashmi சமத்துவம்டா... சமூக நீதிடா... திமுக டா !!!

கையில் தாலியுடன் திருமாவளவன்: அதிமுக பிரச்சாரப் படம் வெளிப்படுத்தும் சாதி அரசியல்!

மினியன்கள் பாணியில் தமிழகத்தின் ‘சனியன்’களை வரைந்துள்ளதாக ஸ்ரீராம் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தமிழக அரசியல் தலைவர்களின் படங்களை வெளியிட்டுள்ளார். அதில் கருணாநிதி, வைகோ, விஜயகாந்த், ஸ்டாலின், திருமாவளவன், மோடி, பிரேமலதா போன்றோர் இடம்பெற்றுள்ளனர். அதிமுக நபர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்துக்காக இந்தப் படங்களை வரையச் சொன்னதாக சொல்லியிருக்கிறார் ஸ்ரீராம் . பிரச்சாரத்துக்காக வரையப்பட்டுள்ள இந்தப் படங்களில், திருமாவளவனை மிகக் கீழ்தரமான சாதியத்துடன் வரைந்துள்ளார். கையில் தாலியுடன் இருக்கிறார் திருமாவளவன். இதுகுறித்து ஒருவர் பின்னூட்டமிட்டு கேட்டபோது, திருமாவளவன் குறித்து தாம் … Continue reading கையில் தாலியுடன் திருமாவளவன்: அதிமுக பிரச்சாரப் படம் வெளிப்படுத்தும் சாதி அரசியல்!

இப்போதும் திராவிட கூறுகளுடன் தான் திமுக இருக்கிறதா?

அ. குமரேசன் திராவிடக் கட்சிகள் என்ற பதத்தைப் பயன்படுத்தி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பது பற்றி நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். குறிப்பாக, தமிழக வரலாற்றில் திமுக-வின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஏன் மறுக்க வேண்டும், அவற்றை அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்குச் செல்லலாமே என்று அந்த நண்பர்கள் முகநூலிலும் தொலைபேசியிலும் நேரிலும் என்னோடு விவாதிக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் என்ற பதத்தைப் பொதுவாகப் பயன்படுத்துவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. திராவிடம் என்பது விரிவான, முற்போக்கான … Continue reading இப்போதும் திராவிட கூறுகளுடன் தான் திமுக இருக்கிறதா?

இது வைகோ சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டும் தானா?

ஸ்டாலின் ராஜாங்கம் நடுநிலை காட்டுவதற்காக சாதிபிம்பங்களை இடத்திற்கொன்றாக ஆராதிக்கும் வைகோவின் செயல்கள் யாரும் அறியாததல்ல. ஆனால் இப்பிரச்சினை வைகோ தேர்தல் போட்டியிலிருந்து விலகியது பற்றியதாகவும் திமுக மீதான அவரின் குற்றச்சாட்டு பற்றியதாகவும் மட்டுமே முடித்துகொள்ளப்படுகிறது. உண்மையில் இது மட்டும் தான் பிரச்சினையா? 1) கோவில்பட்டி திமுக வேட்பாளர் தேவர் * நாயக்கர் எதிர்மறை மூலம் தன் தேவர் சாதியின் எண்ணிக்கை பெரும்பான்மையை காட்டி பேசியது கடந்த 3 நாட்களாக செய்தி பக்கங்களில் உலா வந்தது.இப்போக்கு தேர்தல் சம்பந்தப்பட்ட … Continue reading இது வைகோ சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டும் தானா?

திமுக சாதி கலவரத்தைத் தூண்ட திட்டமிடுகிறது: தேர்தல் போட்டியில்லை என வைகோ பரபரப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் என் உயிரான கண்மணிகளுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும், அக்கட்சிகளின் தோழர்களுக்கும், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும், அக்கட்சியின் தொண்டர்களுக்கும், தமிழக வாக்காளப் பெருமக்கள், பொதுமக்கள், ஊடகங்களின் செய்தியாளர்கள், தொலைக்காட்சிகளின் ஒளிப்பதிவாளர்களுக்கும், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் வேட்பாளராகப் … Continue reading திமுக சாதி கலவரத்தைத் தூண்ட திட்டமிடுகிறது: தேர்தல் போட்டியில்லை என வைகோ பரபரப்பு

“நான் தேவர் சமூகத்தை சேர்ந்தவன்; வைகோ நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்; வெற்றி எனக்குத்தான்” திமுக வேட்பாளரின் தேர்தல் வியூகம்!

சாதி ஓட்டுகளை கணக்கில் கொண்டே வேட்பாளர்களை நிறுத்துவதாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் மேல் குற்றச்சாட்டு இருந்துவருகிறது. இதற்கு உதாரணமாக வேட்பாளர் பட்டியலே உள்ள நிலையில், கோவில்பட்டி திமுக வேட்பாளர் அ. சுப்பிரமணியன் சாதி ஓட்டு தனக்கு வெற்றியைப் பெற்றுத்தரும் என்று பேட்டியளித்துள்ளார். “நான் தேவர் சமூகத்தை சேர்ந்தவன். 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தேவர் சமூகத்தை சேர்ந்தவருக்கு டிக்கெட் வழங்கி இருக்கிறார்கள். அதே நேரத்தில் வைகோவும், அ.தி.மு.க. வேட்பாளர் ராமானுஜம் கணேசும் நாயுடு சமூகத்தை … Continue reading “நான் தேவர் சமூகத்தை சேர்ந்தவன்; வைகோ நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்; வெற்றி எனக்குத்தான்” திமுக வேட்பாளரின் தேர்தல் வியூகம்!

தேவர் சமாதிக்குச் சென்று சேர்த்த புகழை வைகோ இப்படியா இழப்பது?

ஸ்டாலின் ராஜாங்கம் நல்ல பேர் வாங்க வேண்டுமென்பதற்காக அதீத நடுநிலை, தன்னை முன்னிறுத்தல், இவற்றுக்கான மிகை உணர்ச்சி போன்றவற்றால் வைகோவுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டிருப்பதே அனுபவம்.ஆனால் சூழ்நிலைகளுக்கேற்ப பார்த்து பார்த்து திட்டமிடுபவர்களை காட்டிலும் வைகோவின் கவன ஈர்ப்பு அரசியல் அவர் அறிந்தோ அறியாமலோ சில வேளைகளில் நேர்மறை அம்சங்களை நோக்கியும் நகர்த்திவிடுகிறது போலும். இத்தேர்தலில் கருணாநிதி மீது சாதிய வசை,மறுநாளே அதற்கு நேரெதிர் முனையில் நின்று மன்னிப்பு, பிரச்சார கூட்டத்தில்(மதுரை) முத்துராமலிங்கத்தேவர், காமராசர், இம்மானுவேல் சார்ந்த நடுநிலை … Continue reading தேவர் சமாதிக்குச் சென்று சேர்த்த புகழை வைகோ இப்படியா இழப்பது?

“பறைச்சிக்கு பதவி என்றால் இனிக்கும்; அதுக்கு பணம் கேட்டால் கசக்குதோ?” சாதிய இழிவால் விலகிய திமுக வேட்பாளர்!

சோழவந்தான் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் ஸ்ரீப்ரியா தேன்மொழி போட்டியிட விரும்பவில்லை என்று விலகிக் கொண்டார். அவருக்குப் பதிலாக ஆதனூர் பவானி அவர்களை வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது. டாக்டர் ஸ்ரீப்ரியா விலகலுக்கு மாவட்ட செயலாளரின் சாதிய பேச்சே காரணம் என மதுரை ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் தெரிவிக்கின்றன. ஸ்டாலின் தி திமுக சார்பில் சோழவந்தான் தனித்தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி அவர்களை திமுக மாவட்ட செயலாளரும் தேவர் சாதிவெறியருமான பெ. மூர்த்தி இழிவுபடுத்தி பேசியதால் … Continue reading “பறைச்சிக்கு பதவி என்றால் இனிக்கும்; அதுக்கு பணம் கேட்டால் கசக்குதோ?” சாதிய இழிவால் விலகிய திமுக வேட்பாளர்!

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களையும் உதவியவர்களையும் விடாமல் துரத்தும் சாதிவெறி கூலிப்படை;

சங்கர் படுகொலையின் சுவடுகளே இன்னும் வடுக்களாக இருக்கும்போது, சாதி வெறி கும்பல், சாதி மறுப்பவர்களை, சாதியத்தை உடைப்பவர்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. அதன் சமீபத்திய உதாரணம்., சாதி மறுப்புத் திருமணம் செய்த சந்தியா, சிவராமனை துரத்துகிறது சாதிவெறி கொலைகார கும்பல். இவர்களுக்கு உதவிய மக்கள் மன்றத்தைச் சேர்ந்த  தஞ்சை தமிழன் என்பவரை தாக்கியுள்ளனர். “அந்த புள்ளைக்கும், பையனுக்கும் நீங்கதாண்டா பாதுகாப்பு குடுத்து வச்சிருக்கீங்க..ஒங்களைய போட்டுட்டுதான் அந்த புள்ளையும், பையனையும் போடனும்” என்று கூறியபடியே பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், … Continue reading சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களையும் உதவியவர்களையும் விடாமல் துரத்தும் சாதிவெறி கூலிப்படை;

ஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது!

விடுதலை ராஜேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு 2.5 லட்ச ரூபாய் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை 2013 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு அமுல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் பெயர் ''அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்'' என்பதாகும். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 500 தம்பதியினருக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.ஆனால் இதுவரை இந்த நிதி உதவியை பயன்படுத்திக் கொண்டவர்கள் வெறும் 19 பேர் மட்டும்தான். தமிழகத்தின் … Continue reading ஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது!

“சாதி வாரியான இட ஒதுக்கீடு காரணமாகவே இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது”: புதிய தலைமுறை பாரிவேந்தர்

கை. அறிவழகன் "சாதி வாரியான இட ஒதுக்கீடு காரணமாகவே இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது" என்று "அக்னிப் பரீட்சை" நிகழ்ச்சியில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார் பாரி வேந்தர், கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகைச் செல்வனுக்கு ஒரு ஊடகவியலராக நன்றாகவே தெரியும் அவர் சமூக நீதிக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று, ஆனாலும், தான் வேலை பார்க்கிற ஒரு தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் பேசுகிற அபத்தமான சமூக நீதிக்கு எதிரான கருத்துக்களை எதிர்த்துப் பெரிய அளவில் அவரால் கேள்வி … Continue reading “சாதி வாரியான இட ஒதுக்கீடு காரணமாகவே இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது”: புதிய தலைமுறை பாரிவேந்தர்

தேர்தல் ஆணைய வாட்ஸ்அப் குரூப்பில் சாதி

ஸ்ரீதர் கண்ணன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் ஆணையத்தால் ஒரு வாட்ஸப் குழுமம் செயல்படுகிறது. அதில் திரு. கார்த்திமோகன் என்ற கிராம நிர்வாக அலுவலர் சமூக அமைதியைக் குலைத்து சாதீய பகைமையைத் தூண்டும் வண்ணமும் செயல்படுகிறார். அவர் தனது அலுவல்ரீதியான WhatsApp குழுக்களின் மூலம் 9677455954 என்ற எண்ணின் மூலம் சாதீய அடிப்படைவாதக் கருத்துக்களை பரப்பி வருகிறார். தேர்தல் ஆணையம் மூலம் செயல்படும் இக்குழுவில் இது போன்ற கருத்துக்களை எப்படி அக்குழுமம் அனுமதிக்கிறது. இப்படி … Continue reading தேர்தல் ஆணைய வாட்ஸ்அப் குரூப்பில் சாதி

”தே…பசங்களா! க…பசங்களா!” என ராமதாஸுக்கு கருப்புக்கொடி காட்டியவர்களை அடிக்கப் பாய்ந்த இரா. அருள், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர்!

2013-ஆம் ஆண்டு ராமதாஸுக்கு கருப்புக் கொடி காட்டி, அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த 10 எண்ணிக்கைக்குள் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி ”தே...பசங்களா! க...பசங்களா!” எனக் கூறி நீண்ட கட்டையை எடுத்து அடிக்கப் பாய்கிறார் இரா. அருள். இவர் பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர். தற்போது பாமக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.  ஆட்சி, அதிகாரத்தில் இல்லாத பொழுதே, காவல்துறையினரை மிரட்டி கட்டுப்படுத்தி தங்கள் கட்சித் தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை … Continue reading ”தே…பசங்களா! க…பசங்களா!” என ராமதாஸுக்கு கருப்புக்கொடி காட்டியவர்களை அடிக்கப் பாய்ந்த இரா. அருள், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர்!