பெண்களுக்கு கல்வியே நிரந்த சொத்து எனவும் திருமணம் எனும் தகுதிக்கு வரும் முன் கல்வி எனும் நிரந்த சொத்து பெண்களுக்கு வேண்டும் எனவும் கூறி தாலிக்கு தங்கம் திட்டம் குறித்த சர்ச்சைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக் கிழமை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் … Continue reading பெண்களுக்கு கல்வியே நிரந்த சொத்து! தாலிக்கு தங்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர்!
குறிச்சொல்: சமூக நீதி
ஓய்வெடுங்கள் கிருஷ்ணன்!
த.நீதிராஜன் சமூக அநீதிகளுக்கு எதிரான அறப்போரை, சுமார் 70 ஆண்டுகளாக நடத்திக்கொண்டிருந்த பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நவம்பர் 10 காலையில் தனது நேரடியான போராட்டத்திலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார். அவர் 1990இல் அதிகாரபூர்வமாக பணி ஓய்வு பெற்றிருந்தாலும் சளையாத தனது உழைப்பின் மூலம் சக்கரமாக சுழன்றுகொண்டிருந்தார். தலித் அல்லாத சமூகத்தில் பிறக்க நேரிட்ட அவர், டாக்டர் அம்பேத்கரின் சமூக நீதிப் பார்வையை மிக இளம்பருவத்திலேயே ஏற்றுகொண்டார். 1956இல் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்த அவர், முதலில் ஆந்திரப்பிரதேசத்திலும் பிறகு மத்திய அரசிலும் … Continue reading ஓய்வெடுங்கள் கிருஷ்ணன்!
முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்
அண்மையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் பேசிய தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, கருணாநிதி குறித்து சில விமர்சனங்களை வைத்தார். இது திமுக ஆதரவாளர்களிடையே விமர்சனத்துக்கு ஆளானது. ஒருசிலர் கருத்துக்களால் விமர்சனம் செய்துகொண்டிருக்க ஒருசிலர் தனிப்பட்ட தாக்குதலை வைத்தனர். தியாகுவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் எழுத்தப்பட்டன. எழுத்தாளர் நலங்கிள்ளியின் பதிவு: “கலைஞருக்குத் தோழர் தியாகு தொடுத்த அதிரடிக் கேள்விகள்! நேற்று நியூஸ் 18 … Continue reading முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்
”12 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு: நீட் என்னும் அநீதி”
மருத்துவக் கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் ஒருவர் கூட மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் இல்லை என்பதும் மருத்துவப் படிப்பு சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கானது என்பதை உறுதி செய்யும் விஷயங்களாகும்.
யார் நீ ரஜினி?
சூழ்ச்சிகள், மோசடிகள், அப்பட்டமான அத்துமீறல்கள், அச்சுறுத்தல்கள் என பல வழிகளிலும் மக்களை அடிமைப்படுத்த மேலிருந்து முயற்சிக்கிறது இந்துத்துவா சக்தி.
தமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக ?!…
ஜி. கார்ல் மார்க்ஸ் திமுக மீதான சாதிப் பாகுபாடு குறித்த விமர்சனங்கள் ஒன்றும் தமிழக அரசியலில் புதிதல்ல. அண்ணாவின் காலத்தில் அது முதலியார் கட்சி என்று விமர்சிக்கப்பட்டது. காஞ்சிபுரம் தேர்தலில், அண்ணாவின் சாதியப் பின்னொட்டுடன் தேர்தல் பிரச்சார போஸ்டர்கள் அடிக்கப்பட்டபோது, “எங்கிருந்து புதிதாக முளைத்தது இந்த முதலியார் என்னும் வால்...” என்று பெரியார் விமர்சித்ததெல்லாம் ஆவணமாக இருக்கிறதுதான். திகவில் இருந்து பிரிந்து வெகுஜன தேர்தல் கட்சியாக திமுக வெளியேறிய போதே அதன் சமரசங்கள் தொடங்குகின்றன. இது திகவுக்கும் … Continue reading தமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக ?!…
சென்னையில் சமூக நீதி திரைப்பட விழா: 15 படங்கள் திரையிடல்
சென்னை சமூக நீதி திரைப்பட விழாவை முன்னெடுக்கிறார் சமூக செயல்பாட்டாளரும் ஆவணப்பட இயக்குநருமான ஆர். பி. அமுதன். மாக்ஸ் முல்லர் பவன் மற்றும் மறுப்பக்கம் அமைப்பு இணைந்து நடத்தும் இந்தத் திரைப்பட விழாவில் 15 படங்கள் திரையிடப்படுகின்றன. நாளை தொடங்கி மூன்று நாட்கள் விழா நடக்கவிருக்கிறது. திரையிடலுடன் இசை, நடனம், கவிதை வாசிப்பு, ஒளிப்பட கண்காட்சி, விவாதம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றன என்கிறார் ஆர்.பி. அமுதன். “என்னுடைய செயல்பாட்டுக்கு ஆவணப்படங்களை ஒரு ஊடகமாகப் பயன்படுத்துகிறேன். சமூக … Continue reading சென்னையில் சமூக நீதி திரைப்பட விழா: 15 படங்கள் திரையிடல்
நீட் : யாருக்கெல்லாம் இழப்பு?
போலி இருப்பிடச் சான்றிதழ்களின் மூலம் நூற்றுக்கணக்கான வேற்று மாநில மாணவர்கள் குறுக்குவழியில் திருட்டுத்தனமாக இடம்பிடிக்க முயல்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கே இழப்பு!
இந்த ஆண்டு முதல் உயர் சாதியினருக்கு மருத்துவ கல்வியில் 50.5 % இடஒதுக்கீடு; மத்திய அரசு முடிவு
இந்திய அளவில் மருத்துவ கல்வி வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் இடங்களை குறைத்து, உயர் சாதியினருக்கு அதாவது பொது பிரிவினருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார செயலர் சி.கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், 49.5% இடஒதுக்கீடு பெரும் பிரிவினருக்கு தனியாகவும் 50.5 % இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கும் தனியாகவும் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவ செயலர் தெரிவித்துள்ளார். மேலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் … Continue reading இந்த ஆண்டு முதல் உயர் சாதியினருக்கு மருத்துவ கல்வியில் 50.5 % இடஒதுக்கீடு; மத்திய அரசு முடிவு
நாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்: ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா தனிநபர்களுக்கிடையிலான பிரச்னையே சாதிய வன்கொடுமைகளுக்கு காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில் அவை பார்ப்பனீயம் பரப்பியுள்ள மனிதவிரோதக் கருத்தியலின் தூண்டுதலினாலேயே நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில் சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் பகுதியாக ஹரியானா இருந்து வந்திருக்கிறது. செத்தமாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக துலீனாவில் (15.10.2002) ஐந்து தலித்துகளை கல்லால் அடித்துக் கொன்றது, கோஹானா (31.8.2005) மற்றும் சல்வான் ( 1.3.2007) கிராமங்களில் தலித்துகளின் வீடுகளை எரித்தழித்தது- என்று ஊடகங்கள் வழியே தெரியவந்த வன்கொடுமைகள் ஒன்றிரண்டுதான். … Continue reading நாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்: ஆதவன் தீட்சண்யா
புதிய கல்விக் கொள்கை ஆலோசனைக் குழு கூட்டத்தில் தமிழக அமைச்சர் பங்கேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
புதிய கல்விக் கொள்கையால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து 64-வது மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்று ஆணித்தரமான வாதங்களை முன் வைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய கல்விக் கொள்கையைப் புகுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் உள்ள மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இக்கொள்கையை உருவாக்க ஒரு கல்வியாளர் தலைமையில் குழுவை மத்திய மனித … Continue reading புதிய கல்விக் கொள்கை ஆலோசனைக் குழு கூட்டத்தில் தமிழக அமைச்சர் பங்கேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும்!
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெறவேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் (கிரீமிலேயர்) ஆறு இலட்சம் ரூபாய்க்குள் தான் இருக்க வேண்டும் என்று … Continue reading இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும்!
“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா?”: உமர் காலித்
“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்திய சாதிய கட்சியைச் சேர்ந்த அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேன்யூவில் பேசுவதா?” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜேஎன்யூ மாணவர் சங்கத்தைச் சேர்ந்த உமர் காலித். ஓபிசி ஃபாரம் ஏற்பாடு செய்திருந்த சமூக நீதி குறித்த கருத்தரங்கில் பேச அன்புமணி ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உமர் காலித் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மபுரி எம்பியான பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் சமூக நீதி குறித்து … Continue reading “தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா?”: உமர் காலித்
வன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1?
வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ் ஆர் எம் அதிபர் பாரிவேந்தர் பச்சமுத்துவுக்கும் ஏற்பட்ட பிணக்கை அறிக்கைவிட்டு அடுத்த ட்விஸ்ட் கொடுத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். ராமதாஸின் அறிக்கை இப்படிச் சொன்னது: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருக்கு நெருக்கமானவரும், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் அதிபருமான மதன் தலைமறைவாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும், அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் இடையிலான பிரச்சினை என்ற நிலையைத் தாண்டி, நூற்றுக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் சிக்கலாக மாறியிருக்கிறது. … Continue reading வன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1?
“துப்புரவு பணியாளர்கள் லிஃப்டை பயன்படுத்தினால் சம்பள பிடித்தம் செய்யப்படும்”: இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை
இந்திய பார் கவுன்சில் கட்டத்தில் உள்ள லிஃப்டை யார் பயன்படுத்த வேண்டும், யார் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து பார் கவுன்சில் தலைவர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில், பணியாளருக்கும் கீழே உள்ள துணை செயலாளர்கள் போன்றோர், 50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்றவர்கள் லிஃப்டைப் பயன்படுத்தினால் அவர்களுடைய அந்த நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். அதுபோல, துப்புரவாளர்கள், வெளி ஏஜென்ஸிகள் மூலம் பணியாற்ற வருபவர்கள் 50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், … Continue reading “துப்புரவு பணியாளர்கள் லிஃப்டை பயன்படுத்தினால் சம்பள பிடித்தம் செய்யப்படும்”: இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை
திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!
விஷ்வா விஸ்வநாத் கடந்த ரெண்டு நாளாக வைகோவை எண்ணி எண்ணி குமுறி குமுறி நிலத்தில் புரண்டு புரண்டு சின்னப்புள்ளங்க மாதிரி அழுது கதறி கதறி சிலர் எழுதிட்டு இருப்பதை பார்க்கும்போது அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன. 1. வைகோ திமுகவில் பொறுப்பு வகித்து கொண்டே அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்குத்து வேலை செய்யவில்லை. அவர் தனக்கென்று ஒரு தனிக்கட்சி வைத்துள்ளார். தேர்தல் காலத்தில் ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கிறார். இதில் என்ன தவறு ? 2. அவர் … Continue reading திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!
தமிழகத்தில் சமூக நீதி எங்கே இருக்கிறது?
“தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கலாச்சாரம் மற்றும் திராவிட அரசியல் பற்றி பேசுகிற அரசியல் கட்சிகளே இருந்திருக்கின்றன. உண்மையில் சொல்லப் போனால், கடந்த 50 ஆண்டுகளில் ஈ.வே.ரா. பெரியார் முன்வைத்த ஒட்டுமொத்த சமூக சீர்திருத்த பிரச்சனையை இக்கட்சிகள் ஆழக் குழி தோண்டி புதைத்துவிட்டன” என தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத். தமிழக வாக்காளர்களிடன் வீடியோ மூலம் பேசியுள்ள அவர், http://www.youtube.com/watch?v=fMFg-FcLp2k “சமூக சீர்திருத்தம் இங்கு செயல்படுத்தப்படவில்லை என்பதுடன் மட்டுமின்றி, அதற்குப் … Continue reading தமிழகத்தில் சமூக நீதி எங்கே இருக்கிறது?
“கலைஞரின் மோடி துதி… மக்களே உஷார்”: பேராசிரியர் அருணன்
கலைஞரின் மோடி துதி, நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை என பேராசிரியர் அருணன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய முகநூலில், “மோடியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார் கலைஞர்: “அவர் நிர்வாகத்திறமை மிக்கவர், எதையும் துணிச்சலோடு செய்யக்கூடியவர், எனது பழைய நண்பர்”! தமிழகத்தின் மதச்சிறுபான்மையோர் இவரின் இந்தப் பேச்சை கவனத்தில் கொள்ள வேண்டும். தப்பித்தவறி திமுக வெற்றிபெற்றால் அதன்ஆட்சி மோடிக்கு காவடி தூக்குகிற ஆட்சியாகத்தான் இருக்கும். குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை “அது வேறொரு மாநில விவகாரம்“ என்று சொன்ன … Continue reading “கலைஞரின் மோடி துதி… மக்களே உஷார்”: பேராசிரியர் அருணன்
இப்போதும் திராவிட கூறுகளுடன் தான் திமுக இருக்கிறதா?
அ. குமரேசன் திராவிடக் கட்சிகள் என்ற பதத்தைப் பயன்படுத்தி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பது பற்றி நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். குறிப்பாக, தமிழக வரலாற்றில் திமுக-வின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஏன் மறுக்க வேண்டும், அவற்றை அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்குச் செல்லலாமே என்று அந்த நண்பர்கள் முகநூலிலும் தொலைபேசியிலும் நேரிலும் என்னோடு விவாதிக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் என்ற பதத்தைப் பொதுவாகப் பயன்படுத்துவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. திராவிடம் என்பது விரிவான, முற்போக்கான … Continue reading இப்போதும் திராவிட கூறுகளுடன் தான் திமுக இருக்கிறதா?
சத்யராஜ் அரசியலுக்கு வரவேண்டும்; ஏன்?
செந்தில்குமார் தமிழ் சினிமா பேச தொடங்கிய காலத்திலேயே அது சமூக நீதியை வலியுறுத்தும் முற்போக்கு கருத்துக்களையும் சேர்த்தே பேச தொடங்கியது . அந்த காலகட்டத்தில் சமூக நீதியை பேசுவது சினிமாவில் பேசுவது மிக சிரமமான ஒன்று . காரணம் யாரெல்லாம் சமூக நீதிக்கு எதிராக இருந்தார்களோ அவர்கள் கையில்தான் சினிமாவும் இருந்தது . பிறகு அவ்வப்போது பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் சமூக நீதி பற்றிய கருத்துக்கள் சினிமாவில் இடம் பெற்றாலும் கூட அது சமூக … Continue reading சத்யராஜ் அரசியலுக்கு வரவேண்டும்; ஏன்?
மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு ஏன் கூடாது? காரணங்கள் இதோ..!
மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நடந்து வரும் வழக்கில், பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசின் அனுமதி பெற்று விட்டதாக மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் அவ்வாறு நடத்துவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு பொது நுழைவு தேர்விற்கு எதிராக தனது நிலையை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொது நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களின் … Continue reading மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு ஏன் கூடாது? காரணங்கள் இதோ..!
“பறைச்சிக்கு பதவி என்றால் இனிக்கும்; அதுக்கு பணம் கேட்டால் கசக்குதோ?” சாதிய இழிவால் விலகிய திமுக வேட்பாளர்!
சோழவந்தான் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் ஸ்ரீப்ரியா தேன்மொழி போட்டியிட விரும்பவில்லை என்று விலகிக் கொண்டார். அவருக்குப் பதிலாக ஆதனூர் பவானி அவர்களை வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது. டாக்டர் ஸ்ரீப்ரியா விலகலுக்கு மாவட்ட செயலாளரின் சாதிய பேச்சே காரணம் என மதுரை ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் தெரிவிக்கின்றன. ஸ்டாலின் தி திமுக சார்பில் சோழவந்தான் தனித்தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி அவர்களை திமுக மாவட்ட செயலாளரும் தேவர் சாதிவெறியருமான பெ. மூர்த்தி இழிவுபடுத்தி பேசியதால் … Continue reading “பறைச்சிக்கு பதவி என்றால் இனிக்கும்; அதுக்கு பணம் கேட்டால் கசக்குதோ?” சாதிய இழிவால் விலகிய திமுக வேட்பாளர்!
தலித்துகளுக்கு ஓட்டலில் உணவில்லை என்று தீண்டாமையை கடைப்பிடித்த உரிமையாளர் கைது!
ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையத்தில் தலித் மக்களை உணவகத்திற்குள் உள்ளே நுழைய அனுமதிக்காத அம்மன் ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உணவகத்திற்குள் தலித் மக்களை அனுமதித்தால் மற்ற சமூகத்தினர் வரமாட்டார்கள் என இந்த உணவகத்தின் உரிமையாளர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. தி டைம்ஸ் தமிழும் வெளியிட்டது. http://www.youtube.com/watch?v=iNyzsuRwyvQ இந்நிலையில் இந்த தீண்டாமைக்கு எதிராக சமூகநீதிக் கட்சியினர் காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தின் படி புகார் அளித்தனர். அதன் பேரில் உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சமூகநீதிக் கட்சி தலித்துகளை … Continue reading தலித்துகளுக்கு ஓட்டலில் உணவில்லை என்று தீண்டாமையை கடைப்பிடித்த உரிமையாளர் கைது!
பெரியாரிஸ்ட்டாக வாழும் க. பொன்முடி குறித்த செய்திக்கு சில விளக்கங்களும் சில கேள்விகளும்!
திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி “ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. திருமணம் செய்யும் போது சாதி பார்க்க வேண்டும், வாக்களிக்க சாதி பார்த்தால் அப்புறம் வருஷம் முழுதும் கஷ்டம்தான்” என விழுப்புரம் திமுக கூட்டத்தில் பேசியதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அதை ஒட்டியும் நாளிதழில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டும் தி டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டது. க. பொன்முடியின் சம்பந்தியும் ஆய்வாளருமான சுபகுணராஜன், இந்தச் … Continue reading பெரியாரிஸ்ட்டாக வாழும் க. பொன்முடி குறித்த செய்திக்கு சில விளக்கங்களும் சில கேள்விகளும்!
ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சிறப்பு நேர்காணலை வெளியிட்டுள்ளது ‘தீக்கதிர்’(20-03-2016) நாளிதழ். அதனுடைய மறுபிரசுரம்... சந்திப்பு : மதுக்கூர் ராமலிங்கம், சி. ஸ்ரீராமுலு மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்றிருந்தன. அதற்கும், தற்போது அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கும் அடிப்படை வேறுபாடு என்ன? மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்திற்கு இந்தக் கூட்டணி எந்த வகையில் ஒத்திசைவாக உள்ளது? திமுக,அதிமுக ஆகிய இரு … Continue reading ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்
நீதிபதியின் சாதி மனசாட்சி..!
வன்னி அரசு. சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் கவுசல்யாவை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது சாதிவெறி கும்பல். காதல் மணம் புரிந்த எட்டு மாதங்கள் முழுக்க கொலை மிரட்டல்கள், லட்சங்களில் பணம் தருகிறோம் என்று அவன் காதலுக்கு விலை சொல்லப்பட்ட போதும், இரண்டு முறை கொலை முயற்சி நடந்தபோதும் எந்த விதத்திலும் தன் காதலை விட்டுத்தராமல், உறுதியோடு நின்று, இந்த முறை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டான் எங்கள் வீரன் சங்கர். எல்லாவற்றையும் விட தான் … Continue reading நீதிபதியின் சாதி மனசாட்சி..!
எல்லாவற்றுக்கும் சுடச்சுட அறிக்கைவிடும் கலைஞரும் ஸ்டாலினும் சாதிய படுகொலை குறித்து ஏன் வாய்திறக்கவில்லை?
உமா மகேஸ்வரன் பன்னீர்செல்வன் ஆயிரம் காரணங்கள் அடுக்கினாலும் இதுவரை ஒரு கண்டனமும் கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் படுகொலைக் பற்றி வாய் திறக்காதது எரிச்சலாக இருக்கிறது. இன்றும் திறக்கவில்லை எனில் திமுக இன்று வாக்கு வங்கியைக் கண்டும் அஞ்சும் கட்சி என்று தாரளமாக எண்ணிக்கொள்ளலாம். பெரியாரின் படங்கள் எல்லாம் கட்சி போஸ்டர்களில் குறுகிக் கொண்டே வந்து, இன்று காணாமலேயே போய்விட்டது ஒரு குறியீடு என்று தெரியாமல்போயிற்று . கேப்டனின் கூட்டணிக்காக, ஜாக்டோ போராட்டத்திற்காக, அமிர்தலிங்கம் மனைவிக்காக, இந்திய அணி … Continue reading எல்லாவற்றுக்கும் சுடச்சுட அறிக்கைவிடும் கலைஞரும் ஸ்டாலினும் சாதிய படுகொலை குறித்து ஏன் வாய்திறக்கவில்லை?
சாதி வெறியர்கள் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த வரலாறு!
திருமுருகன் காந்தி இச்சமயத்தில் இதை தெரிந்து கொள்வதும் அவசியம்... தமிழகத்தின் அரசியல் - சாதிவெறி குறித்து பேசிய பொழுது மூத்த தமிழ்த்தேசிய தோழர். அரங்க குணசேகரன்அவர்கள் சொன்னதில் ஒரு பகுதியை இங்கே பகிர்கிறேன் “வட தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வந்த சாதிய ஒடுக்குமுறை, உழைப்புச் சுரண்டல், கந்துவட்டிகள், தீரா வறுமை என நிகழ்ந்து வந்த கொடுமைகளைக்கு எதிராக 70, 80களில் வீருகொண்டு எழுந்த இளைஞர்கள் புரட்சிகரமான நடவெடிக்கைகளில் இறங்கி இவற்றினை எதிர்த்துப் போராடினார்கள். இந்த வரிசையில் உருவான … Continue reading சாதி வெறியர்கள் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த வரலாறு!
அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி
கனகராஜ் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணியை `அதிமுகவின் பினாமி அணி’ என்று விமர்சித்திருக்கிறார். இதற்கு முன்பும் கூட திமுக, காங்கிரஸ்காரர்கள் மக்கள் நலக்கூட்டணியை அதிமுக வின் பி.டீம் என்று விமர்சித்துள்ளனர். கொள்கை அடிப்படையில் விமர்சிப்பதற்கு தார்மீக தைரியம் இல்லாதபோது அவதூறுகளைப் பொழிவதில் அதிமுக, திமுக இரண்டும் ஒரே அணிதான். இதுமட்டுமல்ல, ஊழலில் பிரித்தறிய முடியாத அளவிற்கு இரண்டும் ஒரே அணி என்பதையும் தமிழக மக்கள் புரிந்துவைத்திருக்கி றார்கள். தமிழகத்தின் ஆறுகள் ஒட்டச் சுரண்டப்படுகின்றன. 500 … Continue reading அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி
தலித் ஒடுக்குமுறை: திமுகவின் சமூக நீதிப் பாதையில் ’முள்வேலி’ ஏன் வந்தது?
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், தரகம்பட்டியில் பொது சாலையில் தலித் மக்கள் நடமாட தடை விதித்து, அந்தப் பகுதியில் திமுகவைச் சேர்ந்தவர்கள் முள்வேலி அமைத்துள்ளதாக படங்களுடன் செய்தி பகிர்ந்திருக்கிறார் பூவை லெனின். அவருடைய பதிவில் லெனின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தரகம்பட்டி வடக்கு தெருகாலனியில் பொது சாலையில் தலித் மக்கள் நடமாட தடை. பொதுப்பாதையில் முள்வேலி போட்டு தடுப்பு. தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் தயாளன் மற்றும் அவர் தம்பி ராகுல்காந்தி சாதி வெறியாடட்டம். தட்டி கேட்ட சகோதரர் … Continue reading தலித் ஒடுக்குமுறை: திமுகவின் சமூக நீதிப் பாதையில் ’முள்வேலி’ ஏன் வந்தது?
’பைத்தியக்காரத்தனம்’! : குப்பத்தில் நடனமாடிய, கர்நாடக இசைப் பாடகர் எம்.எஸ்.கிருஷ்ணாவுக்கு வந்த வாழ்த்து!
கர்நாடக இசைப்பாடகர் டி. எம். கிருஷ்ணா, கர்நாடக இசை ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமே சொந்தமாகக்கூடாது என் வலியுறுத்தி வருபவர். மார்கழி இசைக் கச்சேரி காலத்தில் சபாக்களில் இனி பாடப் போவதில்லை, பங்கேற்பதில்லை என அறிவித்தவர். கர்நாடக இசையை எல்லோருக்குமானதாக கொண்டு சேர்க்கும் வகையில் சென்னையை அடுத்த ஊரூர் ஆல்காட் குப்பத்தில் ஒரு மாத காலம் இசை விழாவை முன்னின்று நடத்தினார். ஆல்காட் குப்பத்தில் உள்ள தெருக்களில் அந்தப் பகுதி குழந்தைகள், இளைஞர்களை உள்ளடக்கி கர்நாடக இசைப் … Continue reading ’பைத்தியக்காரத்தனம்’! : குப்பத்தில் நடனமாடிய, கர்நாடக இசைப் பாடகர் எம்.எஸ்.கிருஷ்ணாவுக்கு வந்த வாழ்த்து!
திமுகவும் அதிமுகவும் இணைந்த கைகள்; எப்படி?
தமிழகத்தில் கடந்த இருபது வருடங்களாக ஒரு பொது விதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில், திமுக ஆட்சியில் இருக்கும்பொழுதும் நிறைவுறும் தருவாயிலும் திமுகவை விமர்சிக்க வேண்டும், அதிமுக ஆட்சியில் இருக்கும்பொழுதும் நிறைவுறும் தருவாயிலும் அதிமுகவை விமர்சிக்க வேண்டும். இந்த கோட்பாட்டின் அடிப்படையில்தான் ஆட்சி மாற்றம் நிகழும். ஆனால், பொது மக்களிடமும் அரசியல் விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரிடமும் பொது உடன்பாடோ பொது ஆதரவோ இல்லையெனினும் முதல் முறையாக திமுகவும் அதிமுகவும் ஒன்றாக விமர்சிக்கப்படும் சூழல் 2016 தேர்தல் … Continue reading திமுகவும் அதிமுகவும் இணைந்த கைகள்; எப்படி?
“ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி
மகிழ்நன் பா.ம தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கண்ணையா குமார் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அவர், காவி பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்த்தவராக இருந்திருக்கிறார். அவர் ஆற்றிய ஒரு உரையின் தமிழாக்கம் இது: “எங்களுக்கு தேசபக்திக்கான சான்றிதழ் ஆர்.எஸ்.எஸிடமிருந்து வேண்டாம். 80 விழுக்காட்டிற்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகள் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களை பொறுத்தவரை தேசபக்தியாகும் எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது … Continue reading “ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி
“வயிற்றுவலி வந்தா ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் தலித்துக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?”
தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 5000 தலித்துகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் மரணம் அடைவதாக தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூகநீதிப் பிரிவில் பணியாற்றும் மாநில கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேஸ்தாஸ் தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், கவலையளிப்பதாகவும் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் … Continue reading “வயிற்றுவலி வந்தா ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் தலித்துக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?”
”நவீன அமைப்புகளில் சாதி எவ்வளவு ஆழமாக பரப்பியிருக்கிறது என்பதன் நினைவூட்டல் வெமுலாவின் மரணம்”
பிப்ரவரி 1, 2016 நடந்த பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் முதல் நினைவுச் சொற்பொழிவில் அரசியல் அறிவியல் அறிஞர் யோகேந்திர யாதவ் ‘சமூக நீதி அரசியல் குறித்த மீள்சிந்தனை’ என்கிற தலைப்பில் நிகழ்த்திய உரையின் மொழிபெயர்ப்பு இது. தமிழாக்கம்: பூ.கொ. சரவணன் எனக்கும் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களுக்கும் இடையே இருந்த உறவு தனித்துவமானது. அவர் மார்க்சியராகவும் , நான் லோஹியாவாதியாகவும் இருவேறுபட்ட அணுகுமுறையில் இயங்கினோம். இன்றைக்கு இரண்டுக்கும் இந்தத் தாராளமயமாக்கப்பட்ட சூழலில் பெரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கா விட்டாலும் அப்பொழுது அவை தனித்த … Continue reading ”நவீன அமைப்புகளில் சாதி எவ்வளவு ஆழமாக பரப்பியிருக்கிறது என்பதன் நினைவூட்டல் வெமுலாவின் மரணம்”
கட்டணம் மட்டும்தான் கல்வி துறையில் உள்ள பிரச்சினையா? பள்ளிகள் சாதியை வளர்க்கும் கூடங்களாக மாறுவதையும் கவனத்தில் கொள்வோம்!
அன்புள்ள தோழர் நியாஸ் அவர்களுக்கு! தங்களின் சமீபத்திய விகடன் கட்டுரை “மக்களே... எல்.கே.ஜி., என்ஜினீயரிங் எது காஸ்ட்லி? - இதுவும் நடக்கும் தமிழகத்தில்!” படித்தேன். உண்மைகளை பேசும் ஒரு சில ஊடகவியலாளர்களில், அதுவும் குறிப்பாக கல்வி குறித்து யாரும் பேசத் தயங்கும் பகுதிகளை கூட எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் எழுதுபவர்களில், நான் பார்த்து வியந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதுவும் 2014 ஆம் ஆண்டு தர்மபுரியில் தொடர்ச்சியாக மூன்று பள்ளிக்கூட மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை எவ்வித … Continue reading கட்டணம் மட்டும்தான் கல்வி துறையில் உள்ள பிரச்சினையா? பள்ளிகள் சாதியை வளர்க்கும் கூடங்களாக மாறுவதையும் கவனத்தில் கொள்வோம்!
திராவிட கட்சிகள் முதலில் தங்கள் கட்சி பொறுப்புகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறார்களா?
ஸ்டாலின் ராஜாங்கம் கடலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சாதிகளை கணக்கெடுத்து இரண்டாகப் பிரித்து ஒரு மாவட்ட பொறுப்பை வன்னியருக்கு கொடுத்து அவர்கள் கோபப்படாமல் பார்த்துவிட்டு தான்,மற்றொரு மாவட்ட பொறுப்பை தலித் ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள்.இதேபோல மற்ற மாவட்டங்களின் பொறுப்புகளை தீர்மானிக்கிற போது தலித்துகளை திருப்திப்படுத்த வேண்டுமென்று இவர்களால் யோசிக்க முடிவதில்லையே ஏன்? 60க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.இவற்றில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு வடமாவட்டங்களில் வாய்ப்பளிக்க முடிந்த இக்கட்சி, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் தலித்துகளை மாவட்ட செயலாளர் ஆக்கும் … Continue reading திராவிட கட்சிகள் முதலில் தங்கள் கட்சி பொறுப்புகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறார்களா?
அம்பேத்கரை மறுக்கும் கருணாநிதி; பெரியாரை மறுக்கும் ஜெயலலிதா: திராவிட அரசியல் எதை நோக்கிப் போகிறது?
சமூக நீதி பாதையில் அரசியல் செய்வதாக சொல்லிக் கொள்ளும் ‘திராவிடக் கட்சி’ களான திமுக, அதிமுக கட்சிகளின் வளர்ச்சி சமூக நீதி முன்னோடி தலைவர்களான அம்பேத்கரையும் பெரியாரையும் மறுப்பதில் வந்து நிற்கிறது. மறைமுகமாக இதன் மூலம் இவர்கள் சொல்லும் செய்தி என்ன? தலித்துகளை புறக்கணிக்கும் திமுக: எல்லா சாதிகளும் ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்று சமத்துவபுரம் அமைத்த கருணாநிதியின் அரசியல், தலித்துகளை புறக்கணிப்பதில் வந்து நிற்கிறது. தருமபுரி இளவரசன் படுகொலையில் ஆகட்டும், கோகுல்ராஜ் கொலையில் ஆகட்டும் … Continue reading அம்பேத்கரை மறுக்கும் கருணாநிதி; பெரியாரை மறுக்கும் ஜெயலலிதா: திராவிட அரசியல் எதை நோக்கிப் போகிறது?
சமூக நீதியை நிலைநாட்டுங்கள்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
“ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை தகர்த்துவிட்டது; இத்தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்து அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் சமூக நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மேலும் கூறியிருப்பது: ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று 2006 இல் தி.மு.க. அரசு கொண்டுவந்த சட்டத்தை … Continue reading சமூக நீதியை நிலைநாட்டுங்கள்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை