தீ. ஹேமமாலினி அந்தமான் நிக்கோபர் பிரதேசத்தின் வடக்கு சென்டினலீசு தீவிற்கு (Northern Sentilese Island) சென்ற ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்க இளைஞர் சென்டினல் (Sentinel) பழங்குடியினரால் கொல்லப்பட்டதாக பலரும் தற்போது விவாதித்து வருகிறார்கள்.. அந்தமான் நிக்கோபர் பகுதியில் உள்ள 572 தீவுகளில், சுமார் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.. இப்பிரதேசத்தின் தொல் பழங்குடிகளாக ஜாரவா, சென்டினல், ஷாம்பென், ஓங்கே, கிரேட் அந்தமானீஸ் போன்றோர் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். நீக்ரிட்டோ வகை பழங்குடி இனத்தைச் சேர்ந்த சென்டினல் … Continue reading அவர்களைத் தனித்து வாழவிடுங்கள்… மீதம் உள்ளவர்களாவது பிழைத்திருக்கட்டும்…!
குறிச்சொல்: சமூகம்
புயல் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்கள் சாதி வெறியர்களும் அல்ல; வழிப்பறிக் கொள்ளையர்களும் அல்ல: பாரதி தம்பி
பாரதி தம்பி கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் குறித்து இரண்டு வதந்திகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. அவற்றை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். முதலில் நிவாரணப் பொருள் ஏற்றி வரும் வாகனங்களை மக்கள் மிரட்டி பொருட்களை வழிபறி செய்கின்றனர் என்பது. இது முற்றிலும் தவறானது; முழு பொய். இந்த மக்கள் யாரும் கொள்ளைக்காரர்கள் இல்லை; திருடர்கள் இல்லை. நிவாரண வாகனங்களில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளையும், அரிசியையும், தண்ணீரையும் வைத்து அவர்கள் ஒன்றும் மாடி வீடு கட்டப் … Continue reading புயல் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்கள் சாதி வெறியர்களும் அல்ல; வழிப்பறிக் கொள்ளையர்களும் அல்ல: பாரதி தம்பி
பிரளயச் செங்கன்னூரில் கண்ணகி தேவியின் தூமை
ஸ்ரீபதி பத்மநாபா பாண்டியனைக் கொன்று தன் இடமுலை திருகி வீசி மதுரையை எரித்தாள் அவள். அதன் பின்னர் மதுரை விட்டு நீங்கி வையையாற்றின் கரை வழியே மேற்றிசை நோக்கிச் சென்று மலைநாட்டை அடைந்து அங்கு திருச்செங்குன்று என்ற மலை மீதேறி ஓர் வேங்கை மரத்தின் நிழலில் வந்து நின்றாள். அங்கு தேவர்கள் பூமாரி பொழிய ஆகாயத்தினின்றும் அழகிய விமானம் கீழே இறங்க, அவ்விமானத்தில் தெய்வ வடிவோடு கோவலன் இலங்க, கண்ணகி களிகூர்ந்து அவ்விமானத்திலேறி விண்ணுலகடைந்தாள். * செங்குன்றூருக்கு … Continue reading பிரளயச் செங்கன்னூரில் கண்ணகி தேவியின் தூமை
குழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்?: மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன் அந்தக் கேள்வியை மற்றொரு முறை அதிர்ச்சியுடன் கேட்கிறீர்கள் தினமும் இதுதான் நடக்கிறது தினமும் புத்தம் புதியதாக அதிர்ச்சி அடைகிறீர்கள் பிறகு வேறு அதிர்ச்சிகள் வந்துவிடுகின்றன குழந்தைகளின் மாமிசங்களை வேட்டையாடுபவர்கள் யார்? அவர்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டுகிறவர்கள் குழந்தைகளின் விளையாட்டு தோழர்களாய் இருப்பவர்கள் குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறவர்கள் குழந்தைகளின் தனிமையை போக்குகிறவர்கள் அந்தக் குழந்தைகளை அத்தனை கனிவாய் அணைத்துக்கொள்கிறவர்கக் அவர்கள்தான் பிறகு அந்தக் குழந்தைகளை கழிவறைக்குள் அழைத்துச் சென்று அவர்கள் ஆடைகளை சிரித்துக்கொண்டே கழற்றுகிறார்கள் குழந்தைகள் … Continue reading குழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்?: மனுஷ்ய புத்திரன்
12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை?
கவிதா சொர்ணவல்லி: குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டோம் என்றாலே, அக்குழந்தை தன்னளவில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தருணம் வரையில் அதற்கான உணவு, அனுசரணை & குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கண்டிப்பாக பெற்றோர்களாகிய நம்முடைய கடமை மட்டுமே. என் வீட்டிலிருப்பது ஆண் குழந்தை. அவன். பள்ளிக்கு வேனில் செல்கிறான். வேனில் செல்கிறான் என்ற ஒரு காரணத்தினாலேயே, அவனுக்கு unneccesary touch-கள் பற்றி மூன்று வயதிலேயே சொல்லிக்கொடுத்திருக்கிறேன். அதையும் மீறி யாராவது தொட முயன்றால், கையில் அழுத்தமாக … Continue reading 12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை?
நான் கோழையல்ல;பெரியாரின் பேத்தி: கௌசல்யா சங்கர்
நான் அறிவித்துக் கொண்ட இந்த நோக்கங்களுக்காக பொறுமையாகவும் நிதானமாகவும் என் வாழ்நாள் முழுக்கப் பங்களிப்பேன். என்னோடு இந்தப் பணியில் இணைய இளையவர்களை அதாவது என் சக நண்பர்களை உரிமையோடு அழைக்கிறேன்.
”சங்கர் நினைவேந்தல் போஸ்டரை கிழித்தெறியும் காவல்துறை; பாதுகாப்புத் தர மறுக்கிறது”: கௌசல்யா
ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி மறுக்கவில்லை, சாதி சங்கங்கள் நடத்தும் நிகழ்வுகளுக்குத் தடையில்லை, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை அரசே நடத்தித் தருகிறது; இவையெல்லாம் சமூக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கெடுக்கும் நோக்கம் கொண்டவை என்பதறிவோம். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு, அம்மா பிறந்த நாள் இவற்றுக்கெல்லாம் பாதுகாப்புக்கு நிற்பவர்தள் காவலர்கள்தானே! அவற்றுக்கெல்லாம் பாதுகாப்பளிக்க முடியும் நமக்கு மட்டும் முடியாதாம்.
பாலேசுவரம் கருணை இல்லத்திற்கான கிறிஸ்தவர்களின் போராட்டம் , குடிமைச் சமூகத்தின் தோல்வியாகும்
செங்கல்பட்டு மாவட்டம் , உத்திரமேரூர் வட்டம், பாலேசுவரம் கிராமத்தில் செயிண்ட் ஜோசப் இறக்கும் தருவாயிலிருக்கும் ஆதரவற்றோருக்கான கருணை இல்லம் ( St..Joseph Hospice for dying destitutes) இருக்கிறது. இது மருத்துவமனை அல்ல; ஒரு Hospice. இதற்கு தமிழக அரசு அரிசி, சர்க்கரை தவிர வேறு எதுவும் தருவதில்லை. கடைசி காலத்தில் கைவிடப்பட்ட முதியவர்களை அடையாளம் கண்டு மருத்துவ சிகிச்சை கொடுத்து மனித மாண்போடு இறப்பதற்கு வழிவகை செய்வது இவர்கள் பணி. காவல்துறையும், மருத்துவமனைகளும் இறக்கும் தருவாயில் … Continue reading பாலேசுவரம் கருணை இல்லத்திற்கான கிறிஸ்தவர்களின் போராட்டம் , குடிமைச் சமூகத்தின் தோல்வியாகும்
கோவையின் அடையாளம் ஈஷா மையமா? எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே!
ந.பன்னீர் செல்வம் கோவையிலிருந்து சென்னை செல்லும் சேரன் அதிவிரைவு வண்டியில் கோவையின் அடையாளமாக ஈஷா யோக மையத்தின் லிங்கம் படம் போட்டிருப்பது தவறானது என்றும், கோவை ரயில் நிலையத்தின் படம் போட நடவடிக்கை கோரியும் அண்மையில் கோவையிலிருந்து சென்னை வரை செல்லும் சேரன் அதிவிரைவு வண்டியில் கோவையின் அடையாளமாக ஈஷா நிறுவனத்தின் புகைப்படம் போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சமூக நீதிக்கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்திருந்தோம். தென்னிந்திய இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் வரும் வெள்ளிக்கிழமை தார் … Continue reading கோவையின் அடையாளம் ஈஷா மையமா? எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே!
“தலித்” எங்கிற சொல்லுக்கு அரசியல் சட்டத்தில் விளக்கம் இல்லை!
2008ஆம் ஆண்டே, பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Castes) , தலித் என்கிற சொல்லுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கிடையாது, எனவே அந்த சொல்லை அரசு ஆவணங்களில் பயன்படுத்தக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாமல் பரவுகிறது!
புதிய பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கப்படவில்லை. சாக்கடை கழிவு செல்வதற்கு வழிகளே இல்லை. ஆங்காங்கே தேங்கிக் கிடந்த சாக்கடை நீர், பெய்து வரும் பெருமழையில் நிரம்பி ஓடுகிறது. வீடுகள், கடைகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. மாநகர சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை ஆறுகள் போல மழைநீர் புரண்டு ஓடுகிறது.
சீமானின் சாதிய முகம்!
சீமான் பல்லக்கு முறை கார் வந்ததால் மாறிவிட்டதாக சொல்கிறார். அடடே என்ன ஒரு கண்டுபிடிப்பு?
பழங்குடியினரின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் போலி பழங்குடிகள்!
994 ல் தான் போலிச் சான்றிதழ்களை களையெடுக்க SC க்கு மாவட்ட விழிப்புணர்வு குழுவும், ST பழங்குடிக்கு மாநில கூர்நோக்கு குழுவும் உருவாக்கப்பட்டன. கேரளாவில் "SC & ST சாதி சான்றிதழ் நெறிப்படுத்தும் சட்டம் 1996" உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் நாட்டில் இன்றுவரை அத்தகைய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியை ஆதரித்து கையெழுத்து இயக்கம்!
இப்போது திவ்யபாரதி எதிர்கொள்கிற பிரச்சினை, அவர்மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பது தனிமனிதனின் உயிர்வாழும் உரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்; கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.
செயல்பாட்டாளர் கருப்பு கருணா குடும்பத்தை இழிவுபடுத்தும் வீடியோ பதிவு: நடவடிக்கை எடுக்க தமுஎகச வலியுறுத்தல்
திருவண்ணாமலையில் நித்தியானந்தா சீடர்களின் மலை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைளை மக்கள் ஆதரவோடு தடுத்த போராட்டத்திலும், முற்போக்குக் கருத்துகளைப பரப்புரை செய்வதிலும் முன்னணியில் நிற்பவரான கருப்பு கருணா, அவரது குடும்பத்தினர், தோழர்களை இழிவுபடுத்தித் தயாரிக்கப்பட்ட காணொளிக் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாகத் தலையிட்டு இந்தக் கோழைத்தனமான இழிசெயலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளருமான கருணா … Continue reading செயல்பாட்டாளர் கருப்பு கருணா குடும்பத்தை இழிவுபடுத்தும் வீடியோ பதிவு: நடவடிக்கை எடுக்க தமுஎகச வலியுறுத்தல்
லஞ்சம் வாங்கிய போலீஸ் கைது; பட்டாசு வெடித்த மக்கள்: காரணம் என்ன?
திருக்கோவிலூர் போலீசாரால் 4 இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்பெண்களின் உறவினர்கள் 9 பேரை விழுப்புரத்தில் ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தவர் ஆய்வாளர் தமிழ்மாறன்.
புனித பசு மீன் உண்கிறது: சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வீடியோ!
மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு, இறைச்சி உண்பது புனிதமற்ற உணவுப் பழக்கமாக தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறை உணவுக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்து மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி, பல வடமாநிலங்களில் கும்பல் கொலைகள் நிகழ்த்தப்பட்டன். மேற்கு வங்கத்தில் பார்ப்பனர்கள் மீன் உணவை தங்களுடைய உணவுப் பழக்கமாக பின்பற்றிவருகிறார்கள். மீன் உண்பது விஷ்ணு (இந்துகடவுள்)வை உண்பதுபோல என சொல்லி மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் இந்துத்துவ அமைப்புகள். இந்நிலையில் புனிதமாக கருதப்படும் … Continue reading புனித பசு மீன் உண்கிறது: சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வீடியோ!
பேரக் குழந்தைகளை வளர்க்கும் கொத்தடிமைகளா பெற்றோர்கள்?…
மலேசிய வீடியோ அது. ஆறு அல்லது ஏழு வயது பெண் குழந்தையை அறுபது வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் ஸ்கேலினால் அடி வெளுத்து எடுக்கிறார். பார்த்தவுடன் பதறிப் போகிற அளவுக்கு அப்படி ஒரு அடி. பொங்கி பீராய்ந்து உடனடியாக அந்த வயதான அம்மாவைத்திட்டி ஸ்டேடஸ் எழுதி என்னுடைய கடமையை ஆற்றினேன். இருந்தும் அந்த வீடியோ கண்ணுக்குள்ளயே நின்றுகொண்டிருந்தது. எதற்காக இவ்வளவு எமோஷன் ? நீ அடி வாங்கினதே இல்லையா ? என்று உடன்பணிபுரிபவர் கேட்டதும்தான் அதில் இருந்து … Continue reading பேரக் குழந்தைகளை வளர்க்கும் கொத்தடிமைகளா பெற்றோர்கள்?…
வேலு பிரபாகரன் ஷெர்லி திருமணம்; கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை!
திருமண வயதைத் தாண்டிய மணமக்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்வதை யாரும் தடை செய்யவும் முடியாது..!
சென்னை சில்க்ஸ் அணையா தீ; விதிமீறலில் 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள்!
இன்னமும் 500க்கு மேற்பட்ட இடிக்கபடவேண்டிய கட்டிடங்கள் இருக்கின்றன.. இடிப்பார்களா? இல்லவே இல்லை இதுவும் சென்னை சில்க்ஸ் பெரும் கரும்புகை போல கடந்து போகும்…
வாட்ஸ் அப் வதந்தி: ஜார்க்கண்டில் பொதுவெளியில் அடித்து கொல்லப்படும் மக்கள்..
குழந்தைகளை கடத்துகிறார்கள் என்கிற வாட்ஸ் அப் வதந்தியை நம்பி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6 பேர் கொல்லப்பட்டிருப்பது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீப மாதங்களாக தலித்துகள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களும் அவர்கள் வன்முறை கும்பலால் அடித்துக்கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் குழந்தைகளை கடத்த வருகிறார்கள் என்கிற வதந்தி செய்தியை நம்பி, ஒரே நாளில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவலர்கள் முன்பே ஜாம்ட்ஷெட்பூரில் மூன்று குழந்தைகளுக்கு தந்தையான முகமது நயீம் என்பவர் அடித்துகொல்லப்படும் காட்சி வீடியோ … Continue reading வாட்ஸ் அப் வதந்தி: ஜார்க்கண்டில் பொதுவெளியில் அடித்து கொல்லப்படும் மக்கள்..
“நான் இந்து அல்ல” ஒரு பழங்குடியின் முகத்தில் அறையும் பதில்!
’ஒடியன்’ லட்சுமணன் பழங்குடிகளின் பல்வேறு்கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுதும் தனது போர்முழக்கத்தை தொடங்குகிறது தமிழ்நாடு் பழங்குடி மக்கள் சங்கம். கடம்பூர் ராமசாமி அந்தப்போராட்ட நோட்டீசின் நகலை அனுப்பியிருந்தார். அதிலொரு கோரிக்கை 'பழங்குடிகளுக்கு இனச்சன்று வழங்கும்போது மத அடையாளங்களை குறிப்பிடுவதை நிறுத்து' 2006வனச்சட்டத்தை அமுல் படுத்துதல், NTCA வை திரும்பப்பெறல் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளோடு பண்பாட்டுக்கோரிக்கைகளையும் முன்னெடுப்பது உற்சாகமளிக்கிறது. இது எனக்கு 1998 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது காரமடை வனச்சரகத்தில், அடர்ந்த வனம் … Continue reading “நான் இந்து அல்ல” ஒரு பழங்குடியின் முகத்தில் அறையும் பதில்!
அசைவத்தினால் ஆன உலகு; தினசரி வாழ்வில் நம்மை சூழ்ந்திருக்கும் அசைவம் பற்றித் தெரியுமா சைவத் தீவிரவாதிகளே….
முத்துகிருஷ்ணன் 1. கண் விழித்ததும் நீங்கள் தேடும் உங்களின் பற்பசையில், கோமாதா என்று உங்களால் வணங்கப்படும் பசு மாட்டின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட கிளிசரின் கலந்திருக்கவில்லை என்று உங்களால் உறுதிப்படுத்த முடியுமா ? ஆமாம். கிளிசரின் மாட்டுக்கொழுப்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அது கோல்கேட், க்ளோஸ்-அப், பியர்ஸ் அல்லது நீங்கள் உபயோகிக்கும் எந்த ஒரு பிரான்ட் பற்பசையாக வேண்டுமானால் இருக்கலாம். அதில் பயன்படுத்தப்பட்டுள்ள கிளிசரின் சோயா அல்லது பனை போன்ற சைவ பொருட்களில் உருவாக்கப்பட்டது என்று எண்ணுகிறீர்களா ? … Continue reading அசைவத்தினால் ஆன உலகு; தினசரி வாழ்வில் நம்மை சூழ்ந்திருக்கும் அசைவம் பற்றித் தெரியுமா சைவத் தீவிரவாதிகளே….
இசையிலும் மதம் வந்துவிட்டதா? ; இந்து மதப்பாடலை பாடிய இஸ்லாமிய பெண்ணிற்கு அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பு…
கர்நாடகத்தின் ஷிவ்மோகாவில் உள்ள சாகர தாலுகாவை சேர்ந்த 22 வயது சுஹானா சையத், ஜீ டிவியின் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில், அந்த நிகழ்ச்சியை கண்டு களித்த அத்தனை ரசிகர்களையும், தன்னுடைய அற்புதமான குரலினால், ஆத்மார்த்தமான உணர்வினால் வசீகரித்தார் என்று கூறினால், அது மிகையில்லை. கன்னடப்படமான கஜாவில் வரும் "ஸ்ரீகரனே ஸ்ரீநிவாசனே " என்ற பக்தி பாடலை, சுஹானா பாடி முடித்தபோது, அந்நிகழ்ச்சியின் நடுவர்களும், பார்வையாளர்களும் ஆரவாரமான வரவேற்பை அளித்தார்கள். இஸ்லாமிய பெண் இந்து பக்தி பாடலை பாடுகிறார் … Continue reading இசையிலும் மதம் வந்துவிட்டதா? ; இந்து மதப்பாடலை பாடிய இஸ்லாமிய பெண்ணிற்கு அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பு…
கார்ப்பரேட் சாமியார்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்?
இளங்கோ கிருஷ்ணன் கார்ப்பரேட் சாமியார்கள் ஏன் தேவைப்படுகிறார்கள் என்பதற்கு சமூகரீதியான காரணிகள் என்ன என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். என்னால் தெளிவாக சொல்ல முடியவில்லை. ஆனால் சில அவதானங்களுக்கு வர முடிகிறது அதைப் பற்றி நிறைய கேள்விகள் உள்ளன.. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய, தொடர்பற்ற குழப்பமான கேள்விகள் இவை... இவற்றை தொகுக்க முயன்றுகொண்டிருக்கிறேன். இவை கறாரான சிந்தனைகள் அல்ல என்னுள் இருப்பதன் கரட்டு வடிவங்கள் என்பதால் இது குறித்து முழுமையாக ஏதும் சொல்லாமல் இருக்கிறேன். 1.தொன்னூறுகளின் பிற்பகுதியில்தான் கார்ப்பரேட் சாமியார்கள் … Continue reading கார்ப்பரேட் சாமியார்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்?
திருநங்கை தாரா காவல் நிலையம் முன் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?
கிரேஸ் பானு சென்னை எர்னாவூர் அரசு குடியிருப்பை சேர்ந்த திருநங்கை தாரா 09-11-2016 அன்று அதிகாலை 4 மணியளவில் சென்னை பாண்டிபஜார் காவல்நிலையம் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார் அப்பொழுது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் தாராவிடமிருந்து வாகனத்தையும், உடமைகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். காவல் நிலையம் சென்று ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். தாரா: சார் என் மொபைலையும் வண்டியையும் கொடுத்துவிடுங்கள். காவலர்:அ தெல்லாம் முடியாது உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ … Continue reading திருநங்கை தாரா காவல் நிலையம் முன் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?
அக்னிக்குஞ்சுகள்!
வா. மணிகண்டன் விக்னேஷ் இறந்துவிட்டான். திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ் பாண்டியன். இரண்டு நாட்களுக்கு இந்தப் பெயரைப் பேசுவார்கள். முத்துக்குமார் எரிந்து கருகிய போதும் இப்படித்தான் பேசினார்கள். செங்கொடி தீக்கு தன்னை இரையாக்கிய போதும் இதே மாதிரிதான் பேசினார்கள். இதற்கும் முன்பு எத்தனையோ பேர் எரிந்து வீணாகப் போனார்கள். மண்டல் கமிஷன் போராட்டத்திலிருந்து, தன் தலைவனை கட்சியை விட்டு நீக்குகிறார்கள் என்பது வரை எத்தனையோ காரணங்களுக்காக இளைஞர்களை தீ காவு கொண்ட மண் இது. முத்துக்குமார் ஞாபகத்தில் இருக்கிறான். … Continue reading அக்னிக்குஞ்சுகள்!
பெண்களை தற்கொலைக்குத் தள்ளும் கட்டமைப்பு வன்முறை குறித்து நாம் என்றாவது பேசியிருக்கிறோமா?: அரவிந்தன் சிவக்குமார்
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் எனும் பொருளில் கடந்த 3-ஆம் தேதியன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திறந்தவெளிக் கருத்தரங்கு நடைபெற்றது. சுவாதி படுகொலை செய்யப்பட்ட பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, பொருத்தமாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட இந்நிகழ்வு நெருங்குகையில், சென்னை வட்டாரத்தில் திடீர் மழைச்சூழல் தொற்றிக்கொண்டது. ஆனாலும் திட்டமிட்டபடி நிகழ்வு நடந்தது. இதில் மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் பேச்சு, தீர்மானிக்கப்பட்டிருந்த பொருளை மையப்படுத்தியதாக அமைந்தது. அவரின் … Continue reading பெண்களை தற்கொலைக்குத் தள்ளும் கட்டமைப்பு வன்முறை குறித்து நாம் என்றாவது பேசியிருக்கிறோமா?: அரவிந்தன் சிவக்குமார்
மக்கள் ஜனாதிபதி மன்னர் மன்னன் அவர்களுக்கு, டிராஃபிக் ராமசாமியை அடித்த வில்லாதி வில்லனின் கடிதம்!
அரவிந்தன் சிவக்குமார் பெறுனர்: மக்கள் ஜனாதிபதி. மன்னர் மன்னன் அவர்கள், c/o பொன்னூஞ்சல், பாப்பிரெட்டி பவன் தருமபுரி. மதிப்புக்குரிய மக்கள் ஜனாதிபதி மன்னர் மன்னன் அவர்களே, ஒரு முக்கிய நிகழ்வை உங்கள் பார்வைக்கு கொண்டுவர விழைகிறேன். நேற்று கொத்தவால் சாவடியாக இருந்து மறைந்து போன இடத்துக்கு பக்கத்தில் பந்தர் தெரு முனையில் வீதியில் கடைவைத்து வயிற்று பிழைப்பு நடத்தும் ஒரு தெருக்கடை வியாபாரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏன் தெரியுமா? அவர் டிராபிக் ராமசாமி என்னும் நபரை … Continue reading மக்கள் ஜனாதிபதி மன்னர் மன்னன் அவர்களுக்கு, டிராஃபிக் ராமசாமியை அடித்த வில்லாதி வில்லனின் கடிதம்!
சட்டத்துக்குப் புறம்பான ‘பஞ்சாயத்து’: தற்கொலை செய்துகொண்ட தந்தை மரணத்துக்கு நீதி கேட்கிறார் மகள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நாகப்பன் என்பவர், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். நாகப்பனை தற்கொலைக்குத் தூண்டிய இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், தொலைக்காட்சி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாகப்பனின் மகள் ராதிகா புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் மனுவில், “என்னுடைய தந்தை நாகப்பன். அவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நாகப்பன், லாரி டிரைவராக கடந்த இருபது ஆண்டுகளாக … Continue reading சட்டத்துக்குப் புறம்பான ‘பஞ்சாயத்து’: தற்கொலை செய்துகொண்ட தந்தை மரணத்துக்கு நீதி கேட்கிறார் மகள்
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பெண்ணை பலவந்தப்படுத்தி காதலிக்கும் சினிமா எடுப்பீர்?
அருண் பகத் குடும்பம் உள்ளிட்ட பண்பாட்டு அமைப்புகள் ஆண் திமிரை வளர்த்தது போலவே...காதலை ஒப்புக் கொள்ளாத பெண்ணிடம் குட்டிக்காரணம் போட்டு , குரங்கு சேட்டை பண்ணி , பலவந்தம் செய்துக் கொண்டேயிருந்தால் காதலை ஒப்புக்கொண்டு விடுவாள் என்ற கருத்தை இளைஞர்கள் மனதில் பிரம்மாண்டமாக விதைத்ததில் முக்கியப் பங்கு.. கடந்த 30 ஆண்டுகளாய் வெளிவந்த பல அரைவேக்காட்டு சினிமாக்களுக்கு இருக்கிறது. காதலை ஒப்புக்கொள்ளாத நாயகியை பலவந்தப்படுத்தி தொந்தரவு செய்துக் கொண்டே இருப்பார் ஹீரோ , சில காட்சிகள் கழித்து … Continue reading இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பெண்ணை பலவந்தப்படுத்தி காதலிக்கும் சினிமா எடுப்பீர்?
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும்!
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெறவேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் (கிரீமிலேயர்) ஆறு இலட்சம் ரூபாய்க்குள் தான் இருக்க வேண்டும் என்று … Continue reading இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும்!
யுபிஎஸ்இ தேர்வுகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இடம்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வினை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்இ) நடத்தி வருகிறது. இதற்கான தேர்வுகளில் மூன்றாம் பாலினத்தவர்களும் பங்கேற்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ஜம்ஷெத் அன்சாரி தாக்கல் செய்திருந்த பொதுநல மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
இந்திய மருத்துவத்துறையின் நிலை இதுதான்; மருத்துவமனை அனுமதி கேட்டு தோள்களில் மகனை தூக்கி சுமந்த தந்தை
ஒடிசா மாநிலத்தின் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டு 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு தன் மனைவியின் பிணத்தைத் தூக்கிச் சுமந்தார் ஒருவர். அதே ஒடிசாவில் ரயிலில் அடிப்பட்ட முதியவரின் பிணத்தைத் தூக்கிச்செல்ல வாகன வசதி செய்து தராதநிலையில், எலும்பை உடைத்து முதியவரின் பிணத்தை அள்ளிக்கொண்டு போனார்கள் ஊழியர்கள். இந்தச் சமபவங்களைப் பற்றிய பேச்சே அடங்காத நிலையில் உத்தர பிரதேசத்தில் தன் 12 வயது மகனை தோள்களில் சுமந்து வந்த தந்தை, அரசு மருத்துவமனையில் சேர்க்க சென்றுள்ளார் சுனில் குமார். … Continue reading இந்திய மருத்துவத்துறையின் நிலை இதுதான்; மருத்துவமனை அனுமதி கேட்டு தோள்களில் மகனை தூக்கி சுமந்த தந்தை
ஒடிசாவில் மீண்டும் அவலம்… ரயிலில் அடிபட்டு இறந்த பெண்ணின் எலும்புகளை உடைத்து தூக்கிச் சென்ற அவலம்!
ஒடிஷா மாநிலம் காலஹந்தியில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த மனைவியின் உடலை கணவர் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பாலாசூர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மோதி 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில் ரயில்வே ஊழியர்கள் அந்த பெண்ணின் எலும்பை உடைத்து கம்பு ஒன்றில் கட்டி எடுத்துச்சென்றனர். உடலை எடுத்துச் செல்ல … Continue reading ஒடிசாவில் மீண்டும் அவலம்… ரயிலில் அடிபட்டு இறந்த பெண்ணின் எலும்புகளை உடைத்து தூக்கிச் சென்ற அவலம்!
விஷவாயு தாக்கி பலியான 41 தொழிலாளர்கள் குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடியவில்லை: தமிழக அரசு சொல்கிறது
தீக்கதிர் விஷவாயு தாக்கி இறந்த 41 துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்ப ங்களைக் கண்டுபிடிக்க முடியாததால், அவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.‘தமிழகத்தில் கழிவுநீர் தொட்டி கள், குழாய்களுக்குள் இறங்கி அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டதுப்புரவுத் தொழிலாளர்களில், சுமார்200 பேர் விஷவாயு தாக்கி பலியாகி யுள்ளதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ‘மாற்றத்திற்கான இந்தியா’ என்ற … Continue reading விஷவாயு தாக்கி பலியான 41 தொழிலாளர்கள் குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடியவில்லை: தமிழக அரசு சொல்கிறது
பத்தி: சாதி மறுப்பு திருமணம் சாதியை ஒழிக்குமா? : ராமதாஸின் கருத்துக்கு ஒரு எதிர்வினை
ப.ஜெயசீலன் "What is the most resilient parasite? Bacteria? A virus? An intestinal worm? An idea. Resilient... highly contagious. Once an idea has taken hold of the brain it's almost impossible to eradicate. An idea that is fully formed - fully understood - that sticks; right in there somewhere." INCEPTION திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த இந்த வசனம் தமிழில் இப்படி … Continue reading பத்தி: சாதி மறுப்பு திருமணம் சாதியை ஒழிக்குமா? : ராமதாஸின் கருத்துக்கு ஒரு எதிர்வினை
வாகனம் தர மறுத்த அரசு மருத்துவமனை: இறந்த மனைவியை தோளில் சுமந்து சென்ற பழங்குடி
இந்த தேசம் தலித்துகளையும் பழங்குடிகளையும் விளிம்பு நிலை மக்களையும் துச்சமாக மதிக்கும் என்பதற்கு மீண்டுமொரு உதாரண சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசாவின் கலாஹண்டி அரசு மருத்துவமனையில் டிபி நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த அமாங் டே, சிகிச்சை பலனிக்காமல் இறந்தார். அமாங்கின் கணவர் டானா மஞ்சி, தன் மனைவியின் உடலை எடுத்துச்செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் வாகன உதவியைக் கேட்டிருக்கிறார். அவர்கள் வாகன இல்லை என்று நீண்ட அலைகழிப்புக்குப் பிறகு, தெரிவித்துள்ளனர். வாகனம் அமர்த்தி தன்னுடைய கிராமத்துக்கு எடுத்துச் செல்ல பணமில்லாத நிலையில், மனைவியின் … Continue reading வாகனம் தர மறுத்த அரசு மருத்துவமனை: இறந்த மனைவியை தோளில் சுமந்து சென்ற பழங்குடி
அனுராக் காஷ்யபும் சில செல்லா காசுகளும்
மோ. அருண் ஒரு பெரும் கொண்டாட்டத்தை, நல்ல சினிமா சார்ந்த அதிர்வை கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஸ்டுடியோ தமிழ் சூழலில் உருவாக்கியது. லெனின் விருது, அனுராக்குடன் கலந்துரையாடல் என இரண்டு நாட்களும் சேர்த்து ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்றார்கள். இரண்டாம் நாள், ராமன் ராகவ் திரைப்படத்தை பார்க்க முண்டியடித்த கூட்டத்தைப் பார்த்த பிரசாத் திரையரங்கின் கல்யாணம் கூட டோக்கன் கொடுங்கள், அல்லது நூறு ரூபாய் வாங்கி கொண்டு இருநூறு பேரை மட்டும் உள்ளே அனுமதியுங்கள் என்றார். … Continue reading அனுராக் காஷ்யபும் சில செல்லா காசுகளும்
முருகன்கள் ஒதுங்குவதும் ஜெய்ஷாக்கள் சாய்க்கப்படுவதும் மட்டுமே நிகழும்!
சதீஷ் செல்லத்துரை என்னுடைய பேட்ஜ்மேட் முருகன். ஓங்கி ஊதினா ஒரு பத்தடி தூரத்தில் விழுற மாதிரி ஒல்லியான உடம்பு. திருமங்கலம் பகுதியை சேர்ந்தவன்... ஆர்மில சேரனும்னு வெறியா ஓடுவானாம். ஆனா போதிய உணவு கிடையாது. நம்புங்க... கொண்டைக்கடலை சாப்பிடுவதற்காகவே சென்னைல ஹோட்டல்ல வேலைக்கு சேர்ந்து தன்னை காத்துக்கொண்டு ஒரு வழியா எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து கொண்டான். இந்த பென்சில் பாடிக்குள் இவ்ளோ ஸ்டெமினாவானு தோணும். ட்ரெய்னிங்ல இருக்கும்போதே க்ராஸ் கண்ட்ரி எனும் மாராத்தான் போன்ற போட்டிகளுக்கு … Continue reading முருகன்கள் ஒதுங்குவதும் ஜெய்ஷாக்கள் சாய்க்கப்படுவதும் மட்டுமே நிகழும்!