திருவள்ளுவருக்கு காவி உடையணிவித்து சமூக ஊடகங்களில் பாஜகவினர் பரப்பினர். இது கண்டனத்தை கிளப்பிய நிலையில், ‘திருவள்ளுவர் நாத்திகரா?’ என்கிற சர்ச்சை கிளம்பியது. பாஜகவின் எச். ராஜா, நாராயணன் போன்றோர் அவரை ஆத்திகர் எனக் கொண்டாடிய நிலையில், தமிழக அமைச்சர் மஃபா பாண்டியராஜன், ‘திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பேயில்லை என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். பாஜகவின் சில காலம் இருந்த பாண்டியராஜன், அதிமுகவில் பாஜகவின் பி டீமாக செயல்படுவதாக விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். … Continue reading திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை: ‘ஆய்வாளர்’ மாஃபா பாண்டியராஜன்
குறிச்சொல்: எச். ராஜா
தமிழ் மொழியை சனியனே என்று ஈவேரா பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளது: ஹெச்.ராஜா
பெரியார் சிலை பற்றிய ஹெச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த ஹெச். ராஜா, தனது முகநூல் நிர்வாகி தனக்கு தெரியாமலே, பெரியார் சிலை பற்றிய சர்ச்சை பதிவை பதிவிட்டு விட்டதாகவும் விளக்கம் அளித்து இருந்தார். இதனால், இந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில், பெரியார் பெயரில் ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். … Continue reading தமிழ் மொழியை சனியனே என்று ஈவேரா பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளது: ஹெச்.ராஜா
“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றால் அர்த்தம் என்னவோ?: பேராசிரியர். அருணன்
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான எச் ராஜாவின் கொலைவெறிப் பேச்சை கேட்டேன். அவர் ஒரு ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என்பது மேலும் நிச்சயமாகிறது. "ஆண்டாள் ஒரு தேவதாசி" என்று ஓர் ஆய்வாளர் கூறியதை கவிஞர் மேற்கோள் காட்டியதற்குத்தான் "அவரது தலை உருள வேண்டும்" என்று தன் சகாக்களை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். இது ஆய்வுரிமை மீது, கருத்துரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். ஆண்டாளைப் பற்றிய செய்திகளுக்கு ஆதாரம் அவரின் பாடல்கள் மற்றும் அவரைப் பற்றிய வைணவ நூல்களின் கூற்றுக்கள். அவற்றைப் … Continue reading “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றால் அர்த்தம் என்னவோ?: பேராசிரியர். அருணன்
எச். ராஜாவுக்கு எதிராக அறிக்கைவிட்டதுதான் நடிகர் விஷால் அலுவலக ரெய்டுக்குக் காரணமா?
நடிகர் விஷாலுக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்தி வருகின்றனர். அண்மையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு எதிராக அறிக்கைவிட்டதுதான் நடிகர் விஷால் அலுவலக ரெய்டுக்குக் காரணம் என்ற கருத்து சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டிருக்கிறது. https://www.facebook.com/rajasangeethan.john/posts/10214837569879767 https://www.facebook.com/dayalan.shunmuga/posts/1570779452965732 https://www.facebook.com/sonia.arunkumar/posts/1692221857475008
சட்டவிரோத தேர்தல்: எச்.ராஜா
சாரண, சாரணியர் இயக்க தலைவருக்கான தேர்தல் சட்ட விரோதமாக நடந்துள்ளதாக பாஜக தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு நடிகர் கமல்ஹாசனின் அழைப்பு
நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதம்: “வணக்கம்... இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்களாருக்கும்கூட. ஊரே கூடி ஊழல், ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்ட பின்பு, சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம். 'ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா' என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு. ஜெயகுமாரோ … Continue reading தமிழக மக்களுக்கு நடிகர் கமல்ஹாசனின் அழைப்பு
கம்யூனிஸ்ட்களுக்கு முடிவு கட்டாமல் விடமாட்டேன்: ஹெச்.ராஜா சவால்!
சட்டமன்ற தேர்தல் கூட்டணி உட்பட பல்வேறு கேள்விகளுக்கு சென்னையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்தார். கேள்வி:– தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா காலூன்ற முடியாது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான டி.ராஜா கூறியிருக்கிறாரே? பதில்:– "இந்தியாவில் நடந்த முதல் பொது தேர்தலின் போது 2–வது பெரிய கட்சியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. இப்போது ஒரு சீட் கட்சியாக மாறிய பிறகும் கம்யூனிஸ்டு தலைவரின் செருக்கு குறையவில்லை என்பதையே … Continue reading கம்யூனிஸ்ட்களுக்கு முடிவு கட்டாமல் விடமாட்டேன்: ஹெச்.ராஜா சவால்!
சோ.ராமசாமி , எஸ்.வி.சேகர், எச்.ராஜா, சீமான்!
வி. சபேசன் இன்று சீமான் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். அப்படியே இருந்திருக்கலாம். தெரியாமல் 'தமிழ்.ஒன்இண்டியா' இணையத்தில் சீமானின் பேட்டியின் இரண்டாம் பாகத்தை படித்துத் தொலைத்து விட்டேன். 'சீமானின் கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம்' என்று அதற்கு ஒரு தலைப்பு வேறு. வேள்வி என்றால் ஆடு வெட்டுவதா அல்லது நெருப்பு வளர்த்து இந்திரனைக் கூப்பிடுவதா என்பது தெரியவில்லை. அதைப் பிறகு ஒரு நாள் பார்ப்போம். அந்தப் பேட்டியிலே சீமான் சொல்கிறார் 'என்னையே எடுங்க.... இதுவரை … Continue reading சோ.ராமசாமி , எஸ்.வி.சேகர், எச்.ராஜா, சீமான்!
எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை;வெங்கய்யா நழுவல்:பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னவரின் தரம் எப்படி இருக்கும்?;கம்யூ.அதிருப்தி!
ஜவஹர்லால் நேரு பல்கலையில், தேசத்திற்கு விரோதமாக மாணவர்கள் கோஷமிட்டதாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களால் எழுப்பப்படும் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக, கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் தொடர் குரல் எழுப்பி வரும், டி.ராஜாவின் மகள் அபராஜிதா ராஜாவும் ஜவஹர்லால் பல்கலையில் தேசத்திற்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறப்பட்டது. இது குறித்து கோவையில் பேட்டியளித்த பாரதீய ஜனதாவின் எச்.ராஜா "அபராஜிதாவை சுட்டுக்கொள்ள வேண்டுமென்று கூறினார். ”கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” ரத்த தாகம் … Continue reading எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை;வெங்கய்யா நழுவல்:பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னவரின் தரம் எப்படி இருக்கும்?;கம்யூ.அதிருப்தி!
”கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” ரத்த தாகம் கொண்ட எச். ராஜாவின் பேச்சு
பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா, சனிக்கிழமை கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “டி. ராஜா உண்மையான தேசபக்தராக இருந்தால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக அவர் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும். என் மகள் அந்த ஆர்ப்பாட்டத்தில் நின்றிருந்தால் நான் அதைத்தான் செய்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். எச். ராஜாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. Arunan Kathiresan ரத்த தாகம் கொண்ட பா. ஜ. க. வின் எச் ராஜா "கம்யூனிஸ்டு டி ராஜா … Continue reading ”கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” ரத்த தாகம் கொண்ட எச். ராஜாவின் பேச்சு