“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்

சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா குமார் அளித்த பதில்... ஏதேனும் ஒற்றை அமைப்புக்கு நீங்கள் ஏன் ஆதரவு தரக்கூடாது … Continue reading “ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்

கர்நாடகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார்?

கர்நாடகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார்? பிரதமர் மோடியின் பிரச்சாரம் பாஜகவுக்கு கைக்கொடுக்குமா? சித்தராமையா ஆட்சியை தக்க வைத்துக்கொள்வாரா? https://youtu.be/Sfluw_7ALCg

அனிதாவின் மரணம்; நீட் எதிர்ப்புப் போராட்டங்கள்: அரசியல் செயல்பாட்டாளர் செந்திலுடன் ஓர் உரையாடல்

அனிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீட் விலக்கு கேட்டும் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் மாணவர்கள் வீதிக்கு வந்திருக்கிறார். இதையோட்டி பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்திலுடன் டைம்ஸ் தமிழ் ஆசிரியர் மு.வி.நந்தினி உரையாடுகிறார்... https://youtu.be/WIPgEuYARUg https://youtu.be/mHzfvi6ck8o https://youtu.be/zaIfl2g1Tws https://youtu.be/iiA9JIKavs0 https://youtu.be/uIiOm20CQ9s

நீட் தேர்வுக்கு எதிராக போராட உச்சநீதிமன்றம் தடை: இந்த அரசு யாருக்கானது?

நீட் போராட்டத்திற்கு தடை என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த அமைப்பிற்கு எதிராக போராடக் கூடாது என்ற மேலாதிக்கத்தின் வெளிப்பாடாகும்..

மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு. கிருஷ்ணசாமி தன் மகளுக்கு மருத்துவ சீட்டை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடன் கேட்டு பெற்றதாக, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவு வைரலானது.  இதுகுறித்து கிருஷ்ணசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, ‘அந்தப் பொம்பளையை நான் பார்த்ததே இல்லை’ என பேசினார். இந்நிலையில் மரு. கிருஷ்ணசாமி சட்டசபையில் என்ன பேசினார், தன் மகளுக்கு மருத்துவ சீட் பெற்ற விடயத்தை சட்டசபையில் சொன்ன அதிமுக எம்.எல்.ஏ. யார் என வெளிபடுத்தியுள்ளார் வீடியோ பதிவர் … Continue reading மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

கார்ல் மார்க்ஸ் 200: எஸ். ராமகிருஷ்ணன் உரை

திருப்பூர் மாவட் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், காரல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியது. இதில், காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். https://youtu.be/mhqRn7HKpZs எஸ். ரா. வின் உரை குறித்து கவிஞர் இரா. தெ. முத்து தெரிவித்துள்ள கருத்துகள்.. “எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் காரல் மார்க்ஸ் குறித்து திருப்பூர் தமுஎகச கூட்டத்தில் பேசிய சுருதி டிவி காணொளி கண்டேன். சகோதரி சந்திரபிரபா ராமகிருஷ்ணன் அனுப்பி இருந்தார். 120 நிமிடம் ஓடும் காணொளி. எந்த … Continue reading கார்ல் மார்க்ஸ் 200: எஸ். ராமகிருஷ்ணன் உரை

நான் ஒரு போதும் மோடியின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை: எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ்

“நான் ஒரு போதும் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை; அந்த நேரத்தில் பிரதமராக முன்னிறுத்தப்பட்டவர்களில் மோடி சிறந்தவராக தெரிந்தார்” என பேசியுள்ளார் எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ். ஆகுதி பதிப்பகம் எழுத்தாளர் ஜோ. டி. குரூஸுடன் கலந்துரையாடல் நிகழ்வொன்றை டிஸ்கவரி புக் பேலஸில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் பேசிய ஜோ. டி. குரூஸ், கடந்த மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்ததன் காரணத்தை விளக்கினார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியுடன் ஒரே மேடையில் … Continue reading நான் ஒரு போதும் மோடியின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை: எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ்

#வீடியோ: யானைகளின் பாதையை ஆக்கிரமித்த ஜக்கி; விரட்டியடிக்கும் அடியாட்கள்!

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் வலசை பாதையை ஆக்கிரமித்து ஜக்கிவாசுதேவின் ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது என தொடர்ந்து ஆதாரங்கள் வெளிவந்தபடியே உள்ளன. அதைப் பற்றிய எவ்வித அக்கறையும் கொள்ளாமல் ஜக்கியின் ஆதியோகி சிலை திறப்புக்கு வரவிருக்கிறார் பிரதமர் மோடி. மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் சூழலியலாளர் ராமமூர்த்தி தன்னுடைய முகநூலில் வெளியிட்டிருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜக்கி ஆக்கிரமித்திருக்கும் கட்டடப் பகுதிகளை கடந்துசெல்கிறது ஒரு யானைக்கூட்டம். எட்டுக்கும் அதிகமான யானைகள் அந்தக் கூட்டத்தில் உள்ளன. … Continue reading #வீடியோ: யானைகளின் பாதையை ஆக்கிரமித்த ஜக்கி; விரட்டியடிக்கும் அடியாட்கள்!

“தமிழ் இலக்கிய சமூகம் என்னை திட்டமிட்டே நிராகரிக்கிறது”: எழுத்தாளர் சல்மா

தமிழ்ச் இலக்கிய சமூகம் தன்னை திட்டமிட்டே நிராகரிப்பதாக தெரிவிக்கிறார் எழுத்தாளர் சல்மா. சல்மாவின் இரண்டாவது நாவலான மனாமியங்கள், 2016-ஆம் ஆண்டு வெளியானது. அதையொட்டி தி டைம்ஸ் தமிழ் டாட் காம் அவருடன் நேர்காணல் நடத்தியது. அப்போது உலக அளவில் தன்னுடைய எழுத்துகளுக்கு அங்கீகாரங்கள் கிடைத்துவரும் நிலையில், தமிழ் இலக்கிய சமூகம் தன்னை திட்டமிட்டே நிராகரிக்கிறது என்றார். முதல் நாவலான இரண்டாம் ஜாமங்களின் கதை வெளியான போது, பலவித அச்சுறுத்தல்களை சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னுடைய அரசியல் வாழ்க்கை, உலக … Continue reading “தமிழ் இலக்கிய சமூகம் என்னை திட்டமிட்டே நிராகரிக்கிறது”: எழுத்தாளர் சல்மா

“மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்” ‘யாவரும்’ ஜீவ கரிகாலன்

"மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்" என்கிறார் எழுத்தாளரும் ‘யாவரும்’ பதிப்பக பதிப்பாளர்களில் ஒருவருமான ஜீவ கரிகாலன். புத்தக சந்தையை ஒட்டி தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘யாவரும்’ பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி குறித்தும் பதிப்பகம் ஆரம்பித்த பிறகு சக எழுத்தாளர்கள் செய்த அவதூறுகள், அதை எதிர்கொண்ட விதம் குறித்தும் அவர் பேசினார். வீடியோ இணைப்பு கீழே... https://youtu.be/w3ytj8yjdCk

“புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன்”: எழுத்தாளர் பதிப்பாளர் லக்ஷ்மி சரவணகுமார்

பதிப்பகம் ஆரம்பித்தது தற்செயலானது என்கிறார் இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். ‘மொக்லி’ என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கியிருக்கும் சரவணகுமார்,  2017 சென்னை புத்தக காட்சியை ஒட்டி நான்கு புத்தகங்களை தன்னுடைய பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்திருக்கிறார். லக்ஷ்மி சரவணகுமாருடன் சென்னையில் உரையாடல் நிகழ்த்தியது தி டைம்ஸ் தமிழ்...உரையாடலின் ஒரு பகுதி வீடியோவாக கீழே தரப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளராக தான் பாதிப்பட்ட காரணத்தாலேயே பதிப்பகம் தொடங்கியதாக கூறும் சரவணகுமார், தான் பதிப்பிக்கும் புத்தகங்களின் … Continue reading “புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன்”: எழுத்தாளர் பதிப்பாளர் லக்ஷ்மி சரவணகுமார்

விவசாயிகளின் துயரத்தை புரிந்துகொள்ள, தீர்வு காண உதவும் ஓர் விவாதம்!

‘விவசாயிகள் துயரத்துக்கு யார் காரணம்?’ என்ற தலைப்பில் நியூஸ் 18 தமிழ்நாடு ‘காலத்தின் குரல்’ நிகழ்ச்சியில் திங்கள்கிழமை விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள், உடனடியாக அரசு செய்ய வேண்டியது என்ன? என பல முக்கியமான பொருள்களில் விவாதம் நீண்டது. இந்த விவாதத்தில் கே.கனகராஜ் (மார்க்சிஸ்ட்), பி.ஆர்.பாண்டியன் (விவசாயிகள் சங்கம்), ஜெ.ஜெயரஞ்சன் (பொருளாதார வல்லுநர்), எம்.ஜி.தேவசகாயம் (ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு)), கோலப்பன் ( பத்திரிகையாளர்) ஆகியோர் பங்கேற்றனர்.  நெறியாள்கை செய்தார் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் மு.குணசேகரன். … Continue reading விவசாயிகளின் துயரத்தை புரிந்துகொள்ள, தீர்வு காண உதவும் ஓர் விவாதம்!

வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்கள் கம்பு ஒடிய அடித்து விரட்டிய போலீஸ்

வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்களை காவலர் ஒருவர் கம்பு ஒடிய அடித்து விரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளை ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த மாநிலம் என்பது தெரியவில்லை. https://youtu.be/yPgIY9sOUTE பணம் மாற்ற வந்த எளியவர்களை காரணமே இல்லாமல் தாக்கும் அதிகாரத்தை காவலருக்கு யார் கொடுத்தது எனவும் இதுதான் மோடி அரசு சாமானியர்களுக்கு தரும் பரிசா எனவும் சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. https://www.facebook.com/shahjahanr/videos/1238863916136379/Continue reading வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்கள் கம்பு ஒடிய அடித்து விரட்டிய போலீஸ்

“எங்களை கொல்வதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?”: ‘கக்கூஸ்’ என்றொரு ஆவணப்படம்!

மதுரையைச் சேர்ந்த சமூக-அரசியல் செயற்பாட்டாளரான திவ்யபாரதி, மலக்குழியில் இறந்தி உயிர்விட்ட தொழிலாளிகள் குறித்து  ‘கக்கூஸ்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.  மக்களிடம் நிதி பெறப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் படமாக்கப்பட்டது இந்த ஆவணப்படம். “நானும் ஒளிப்பதிவாளர்களாக குமார், கோபால் என மூவருமாக மட்டுமே தமிழகம் முழுக்க சுற்றி இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறோம். நண்பர்கள், தோழர்கள், முகநூல் மூலமாக நிதி திரட்டினோம். நிறைய கடன் வாங்கியிருக்கிறேன். என்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போகும்போது குறைந்த பட்சம் … Continue reading “எங்களை கொல்வதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?”: ‘கக்கூஸ்’ என்றொரு ஆவணப்படம்!

வணக்கம் மிஸ் தமிழச்சி: ஜெயலலிதா குறித்த அவதூறு பதிவுக்கு ஃபேஸ்புக் பிரபலத்தின் வீடியோ!

இணையம் மூலம் பிரபலமானவரான ஃபிரான்சில் வசிக்கும் தமிழச்சி, தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து பதிவொன்றை எழுதியிருந்தார். இந்தப் பதிவு வைரலான நிலையில், பலரும் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகளை எழுதிவருகின்றனர். இந்நிலையில் தமிழச்சியின் பதிவுக்கு ‘வணக்கம் மிஸ் தமிழச்சி’ என வீடியோ பதிவொன்றை இட்டிருக்கிறார் ஃபேஸ்புக் பிரபலமான ஸ்வாரா வைத்தி.. வீடியோ இணைப்பில் https://www.facebook.com/swaravaithee/videos/10202110641964791/

நூல் அறிமுகம்: ’பசி’

சோவியத்தின் லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு ‘பசி’ நாவல் (வெளியீடு: பாரதி புத்தகாலயம்). இந்நூல் குறித்து அறிமுகம் தருகிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன். “போரில் உயிரை விடுவது மட்டு மில்லை வீரம்; தேசத்துக்காக மனசாட்சியோடு நடந்து கொள்வதும், அதிகார துஷ்பிரயோகத்தை … Continue reading நூல் அறிமுகம்: ’பசி’

வீடியோ: இந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை; மதக் கலவரமாக மாற்ற முனையும் இந்துத்துவ அமைப்புகள்!

கோவை இந்து முன்னணி அமைப்பின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தமது பணிகளை முடிந்து வியாழக்கிழமை நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோவை சுப்பிரமணியம் பாளையம், சர்க்கரை விநாயகர் கோயில் அருகே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர், வழிமறித்து ஆயுதங்களால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சசிகுமாரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த இந்து முன்னணியினர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை கண்ணாடிகள் உடைந்தன. … Continue reading வீடியோ: இந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை; மதக் கலவரமாக மாற்ற முனையும் இந்துத்துவ அமைப்புகள்!

சென்னை தினம்: மயிலாப்பூர், பெசண்ட்நகர் தெரியும் நாயடிச்சான் பறச்சேரி தெரியுமா?

மயிலாப்பூர், பெசண்ட்நகர் தெரியும் நாயடிச்சான் பறச்சேரி தெரியுமா? கறுப்பர் நகரம் நாவலாசிரியர் கரன் கார்க்கி அறியப்படாத சென்னையைப் பற்றி பேசுகிறார்... https://youtu.be/vvoDTZEPDAk

#வீடியோ: கொண்டாடப்பட்ட சினிமாக்களின் மறுபக்கத்தை வெளிச்சமிடும் ’சினிமா திரை விலகும்போது’ – நூல் அறிமுகம்

சினிமா திரை விலகும்போது புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த சினிமா கட்டுரைகளின் தொகுப்பு. இந்நூல் குறித்து அறிமுகம் செய்கிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன். கீழைக்காற்று வெளியீட்டகத்தில் இந்நூலை வாங்கலாம். இந்நூலில் இடம் பெற்றுள்ள சில தலைப்புகள்... ‘மகாநதி‘: மகாநதி அல்ல கானல்நீர் வீடு: ஒரு நடுத்தர வர்க்க கனவு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை: கூடி வாழ்வதில் லாபமில்லை, பிரிந்து போவதில் நட்டமில்லை! காதல் கோட்டை, காதல் தேசம் : கவலைப்படு சகோதரா! காதலுக்கு மரியாதை : காதலுக்கு அவமரியாதை … Continue reading #வீடியோ: கொண்டாடப்பட்ட சினிமாக்களின் மறுபக்கத்தை வெளிச்சமிடும் ’சினிமா திரை விலகும்போது’ – நூல் அறிமுகம்

வீடியோ: யுவ புரஸ்கார் விருது பெற்ற லக்ஷ்மி சரவணகுமாரின் கானகன் நாவல்-நூல் அறிமுகம்

மலைகளில் வாழும் பழங்குடியினர் பற்றியும், வனத்தோடு இணைந்த அவர்களின் வாழ்க்கை முறை, வேட்டை அறம், இறை நம்பிக்கை பற்றியும், கீழ் தேசத்து முதலாளிகள் மற்றும் வியாபாரிகளின் பேராசையினால் மலையக மக்களின் கைகளில் இருந்து நழுவும் இயற்கை செல்வங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது லக்ஷ்மி சரவணகுமாரின் “கானகன்” நாவல். இந்நாவல் இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது பெற்றது. நாவலை மலைச்சொல் பதிப்பகம் மக்கள் பதிப்பாக வெளியிட்டுள்ளது. நூல் அறிமுகம் செய்கிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன். https://youtu.be/I1jN5mchiR0

சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் பேசியது என்ன?; முழுவீடியோ…

நான் துன்புறுத்தப்பட்டேன்; அவர் என்னை அறைந்தார்: ஜெயலலிதா குறித்து சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு முழு வீடியோ... https://youtu.be/yJ59EdA2w00

#வீடியோ: நூல் அறிமுகம் ‘மலத்தில் தோய்ந்த மானுடம்’

இந்தியாவின் நிரந்தர இரண்டாம் குடிமகனாக ஆக்கப்பட்டவர்களை பற்றிய கட்டுரைகள்தான் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன. கயர்லாஞ்சியில் ஒரு தலித் குடும்பம் பட்ட துயரம், உத்தப்புரத்தில் மொத்த தலித் குடும்பங்களின் மன குமுறல்கள், நீதி மறுக்கப்படும் குஜ்ஜர் சமூகம், நாடு முழுவதும் மலம் அள்ளும் கோடிக்கணக்காண தலித்துகள், திண்ணியத்தில் வாயில் மலம் திணிக்கப்பட்டவர்கள் என நாம் அறிவது பெரும் விருட்சத்தின் மேற்பரப்பில் உள்ள மரப்பட்டையைப் போன்றதே. நூல்: மலத்தில் தோய்ந்த மானுடம் ஆசிரியர் : அ. முத்துக்கிருஷ்ணன் நூல் … Continue reading #வீடியோ: நூல் அறிமுகம் ‘மலத்தில் தோய்ந்த மானுடம்’

இந்திய அளவில் கபாலி வசூல் சாதனை; ஆனால் கவிஞர் வைரமுத்து கபாலி தோல்வி என்கிறார்!

ரஜினிகாந்த் நடித்து கடந்த 22ம் தேதி காபலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. 2016ம் ஆண்டில் இதுவரை எந்த படமும் நிகழ்த்திராத சாதனயை இப்படம் நிகழ்த்தியுள்ளது. கடந்த மாதம் இந்தி நடிகர் சல்மான்கானின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் இந்தியாவில் முதல் நாள் செய்த வசூலே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்தியாவில், சுல்தான் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 36.54 கோடி வசூல் செய்திருந்தது. கபாலி முதல் நாளில் மட்டும் ரூ. 48 கோடி வசூல் செய்ததாக … Continue reading இந்திய அளவில் கபாலி வசூல் சாதனை; ஆனால் கவிஞர் வைரமுத்து கபாலி தோல்வி என்கிறார்!

கிருபா முனுசாமியிடம் மன்னிப்புக் கேட்டார் பியூஸ் மானுஷ்

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டபோது வழக்கறிஞர் கிருபா முனுசாமி சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.  கிருபா முனுசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசாமல், பியூஸ் கண்மூடித்தனமாக ஆதரித்த சிலர் கிருபாவை மிகவும் கீழ்த்தரமாக தாக்கி முகநூலில் எழுதினர். இதையும் படியுங்கள்: “தீய்ஞ்சு போன மூஞ்சி” : சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் குறித்த விமர்சனத்துக்கு நிறவெறியுடன் எதிர்வினை இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘அக்னிப் பரிட்சை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பியூஸ் மானுஷிடம் கிருபாவின் குற்றச்சாட்டு குறித்து கேட்டார் நெறியாளர் … Continue reading கிருபா முனுசாமியிடம் மன்னிப்புக் கேட்டார் பியூஸ் மானுஷ்

#வீடியோ: பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் ‘காம்ரேட்’ அறிமுகம்

பெற்ற பிள்ளையை வளர்க்க ஒரு தாய் படும் துன்பத்தையும், மகளை மணம் செய்து கொடுக்க ஒரு தந்தை படும் துன்பத்தையும் உலகின் மாபெரும் துன்பங்களாகவும், தியாகங்களாகவும் பதிவு செய்கின்றன இலக்கியங்கள். ஆனால் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க பல வகையான துன்பங்களையும் கடந்த மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா? அப்படிப் பார்க்காதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது ‘காம்ரேட்’ எனும் நூல். பகத்சிங்சின் நண்பரான யஷ்பால் அவர்கள் எழுதியிருக்கும் இவ்வரலாற்றுப் புதினத்தில் தன்னலத்தைத் துர எறிந்துவிட்டு … Continue reading #வீடியோ: பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் ‘காம்ரேட்’ அறிமுகம்

#வீடியோ: நூல் அறிமுகம் ‘பிம்பச் சிறை’

எம் ஜி ஆர் என்ற ,பிம்பச் சிறைக்குள் தமிழக மக்கள் இப்பொழுதும் இருப்பது ஏன் என்று அக்கு வேர் ஆணி வேராய் அலசும் நூல் ‘பிம்பச் சிறை’ (பிரக்ஞை வெளியீடு). நூல் அறிமுகம் செய்கிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன். https://youtu.be/ubT8mqVIizc

ஸ்வாதிக்கும் ராம்குமாருக்கும் நீதி வேண்டும்: வைரலாகும் வீடியோ

நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் படுகொலை செய்யப்பட்ட பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கு சரியான திசையில் செல்லவில்லை என சந்தேகங்கள் கிளம்பிவருகின்றன. இந்த சந்தேகங்களைத் தொகுத்து ஒரு வீடியோ பதிவாக்கி, அதை ராம்குமாரின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன். ராம்குமாரின் முகநூல் பாஸ்வேர்டை வழக்கறிஞர் மூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கும் அவர், நீதிமன்றமும் ஊடகமும் உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சிக்காத நிலையில் தங்களுடைய சந்தேகங்களை மக்கள் முன் வைத்துள்ளதாக தெரிவிக்கின்றார். பதிவு வீடியோவும் கீழே... Ram Kumar … Continue reading ஸ்வாதிக்கும் ராம்குமாருக்கும் நீதி வேண்டும்: வைரலாகும் வீடியோ

#விடியோ: “பிராமண சமூகம் போல, கவுண்டர் சமூகமும் மிருதுவான சமூகம். வேற சாதியா இருந்தா ரொம்ப கொடூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்”: சாருநிவேதிதா

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ தீர்ப்பு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம் நடத்தியது. எழுத்தாளர் சாரு நிவேதிதா, பேராசிரியர் அருணன், நடிகர் எஸ். வி. சேகர், விமர்சகம் பெருமாள் மணி ஆகியோர் கலந்துகொண்டனர். கார்த்திகை செல்வன் நெறியாள்கை செய்தார். பாலியல் சுதந்திரம், கருத்துரிமை குறித்து தீராது எழுதிக்கொண்டிருக்கும் சாரு நிவேதிதா, சொன்ன கருத்துகள் அடிப்படைவாதிகளின் கருத்துக்கு நிகரானவை. “ஒரு சமூகத்தையே பாஸ்டர்டுனு சொல்றாரு. பெண்களை இவ்வளவு கொச்சை படுத்தி எழுதின நூல் தமிழ்ல வேற எதுவும் இல்லை. ஆப்பிரிக்க … Continue reading #விடியோ: “பிராமண சமூகம் போல, கவுண்டர் சமூகமும் மிருதுவான சமூகம். வேற சாதியா இருந்தா ரொம்ப கொடூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்”: சாருநிவேதிதா

விடியோ: சிவப்புச் சந்தை நூல் அறிமுகம்

"மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது சிவப்புச் சந்தை (The Red Market)" அடையாளம் பதிப்பக வெளியீடு. நூல் அறிமுகம்: கார்த்திக் கோபாலகிருஷ்ணன் https://youtu.be/N159nhZZaqM

வீடியோ: ’ராமனின் பெயரால்’ ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம்

ஆனந்த் பட்வர்த்தன் இயக்கிய பாபர் மசூதி இடிப்பு குறித்த ஆவணப்படம் யூட்யூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தி, மலையாளம் என இரு மொழிகளில் வெளியிட்டப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இங்கே... https://youtu.be/5ocl9k8u0uA https://youtu.be/OO-VaJBHiik

பைபாஸ்: ராஜீவ் கொலையில் தமிழினத்தை வஞ்சித்த தடயவியலின் கதை

தளவாய் சுந்தரம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அடிப்படை ஆதாரமாக முன்வைக்கப்பட்ட தடயவியல் ஆதாரங்கள் மீது பல சந்தேகங்களை முன்வைக்கிறது இந்தப் படம். மிக முக்கியமானது என வலியுறுத்திச் சொல்லப்படும் மூன்று சந்தேகங்கள்: 1) போஸ்ட்மார்ட்டம் அறிக்கைபடி போட்டோகிராபர் ஹரிபாபு முகமும் மார்பு பகுதியும் கடுமையாக பாதிப்புள்ளாகியிருக்கிறது. ஆனால், இதன் அருகே இருந்த கேமரா பாதிக்கப்படவில்லை, எப்படி? 2) போட்டோகிராபர் ஹரிபாபு என்று ஒப்படைக்கப்பட்ட உடலுக்கு 30 வயது என்று போஸ்ட்மார்ட்டம் அறிக்கை சொல்கிறது. ஆனால், ஹரிபாபு வயது … Continue reading பைபாஸ்: ராஜீவ் கொலையில் தமிழினத்தை வஞ்சித்த தடயவியலின் கதை

பெங்களூரு விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட இளையராஜா!

பெங்களூருவுக்கு கோயிலுக்குச் சென்ற இளையராஜா, விமான நிலைய சோதனையின்போது பிரசாதம் எடுத்துச் சென்றதற்காக காக்க வைக்கப்பட்டதாகவும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விசாரணை என்ற பெயரில் அவமதிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது நியூஸ் 18 தமிழ்நாடு. காணோலி கீழே... https://www.facebook.com/News18Tamil/videos/907670466008085/

“புத்தக விழாவை அவமானப் படுத்துகிறோம்”: சாரு நிவேதிதா

சென்னை புத்தக விழா தொடங்கியுள்ளது. எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வாசகர்களும் பரபரப்பாகியுள்ள நிலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, புத்தக விழாவால் எந்த பிரயோசனமும் இல்லை என்கிறார். வீடியோ பேட்டி ஒன்றில், “புத்தக திருவிழா என்ற பெயரில் இப்போது இருக்கிற நடைமுறையில் எனக்கு நம்பிக்கையில்லை. புத்தக திருவிழாவில் இருக்கும் கடைகளில் ஜோசியம், சமையல் புக், பல்ப் ஃபிக்‌ஷன், காமிக்ஸ் புத்தகங்கள்தான் அதிகமாக விற்கப்படுகின்றன. வெறும் 10% கடைகளில்தான் இலக்கிய புத்தகங்கள் கிடைக்கின்றன. மற்ற மாநிலங்களில் எல்லாம் 95% கடைகளில் இலக்கியம்தான் … Continue reading “புத்தக விழாவை அவமானப் படுத்துகிறோம்”: சாரு நிவேதிதா

“அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதல்முறையாகக் கலந்துகொண்டார். நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் பல முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில், ஊடகங்கள் குறித்தும் சில உண்மைகளைப் பேசியிருக்கிறார்.  நேர்கண்டவர் செந்தில். ஏன் இந்தக் கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற கேள்விக்கு, “ஜெயலலிதாவை பார்க்க வந்து மாண்டுபோனவர்கள் பற்றி திரும்ப திரும்ப ஒளிபரப்பாமல் திருமாவளவன் தூங்கியதை திரும்ப திரும்ப காட்டினீர்கள். இதெல்லாம் எங்கள் அணியை சிதைக்கும் முயற்சிதான்” … Continue reading “அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி

வீடியோ: வட்டாட்சியர் தலையில் பணத்தை கொட்டிய‌ வேட்பாளர் கே. பாலு மீது வழக்கு!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் பா.ம.க சார்பில் களம் காணும் பாலு, வாக்காளர்களுக்கு அதிமுகவும், திமுகவும் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் 20-க்கும் மேற்பட்ட பெண்களுடன் தேர்தல் அலுவலரை சந்தித்த பாலு, பணியில் இருந்த வட்டாட்சியர் ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கையில் வைத்திருந்த பணத்தை அவர் தலையில் கொட்டியும், முகத்திற்கு எதிரே எரிந்தும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அந்தப் பணம், அதிமுக, திமுக சார்பில் … Continue reading வீடியோ: வட்டாட்சியர் தலையில் பணத்தை கொட்டிய‌ வேட்பாளர் கே. பாலு மீது வழக்கு!

#வீடியோ: ஆவடி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்த அதிமுக வேட்பாளர் மஃபா பாண்டியராஜன்…

ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மஃபா பாண்டியராஜன் மீது பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருடைய படம் போட்ட கவர்களில் 500 ரூபாய் நோட்டுக்களை வைத்து அதிமுகவினர் புதன்கிழமை இரவு பணப்பட்டுவாடா செய்ததாக வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. https://youtu.be/IUw1Z7Q44xc

“தமிழ்நாட்டுல மொத்தம் எத்தனை தொகுதிகள்..தெரியாது”: ஆர்ஜே பாலாஜியின் வீடியோ வெளிப்படுத்தும் அரசியலற்ற இளைஞர்கள்!

Shahjahan R தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள், அதில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்று சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி பார்த்தேன். தமிழில் தொகுதி என்றால் என்னவென்று தெரியாது. எத்தனை தொகுதிகள் என்று தெரியாது. மெஜாரிட்டி என்றால் என்னவென்று தெரியாது மெஜாரிட்டிக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்றும் தெரியாது. பிரதமர் எந்தக் கட்சி என்று தெரியாது. குடியரசுத் தலைவர் மோடியா பிரணாப்பா தெரியாது. என்னதான் பேஸ்புக்கில் மொக்கை போட்டுக் கொண்டிருந்தாலும் படித்த இளைஞர்களிடம் பொது … Continue reading “தமிழ்நாட்டுல மொத்தம் எத்தனை தொகுதிகள்..தெரியாது”: ஆர்ஜே பாலாஜியின் வீடியோ வெளிப்படுத்தும் அரசியலற்ற இளைஞர்கள்!

வேட்பாளர் அறிமுகம்: ’மக்களின் எம்எல்ஏ’ க. பீம்ராவ்!

மதுரைவாயல் தொகுதி எம் எல் ஏவாக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க. பீம்ராவ். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் மதுரவாயல் தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றியதோடு, முடங்கிக் கிடந்த பல்வேறு மக்கள் நல பணிகள் குறிப்பாக தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றுதல்,கழிவு நீர் அகற்றுதல் மற்றும் போரூர் ஏரியை பாதுகாத்தது உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றியவர் க. பீம்ராவ். பட்டா இல்லாதோருக்கு பட்டா வாங்கி அளித்ததும் தொகுதி மக்களிடையே இவருக்கு … Continue reading வேட்பாளர் அறிமுகம்: ’மக்களின் எம்எல்ஏ’ க. பீம்ராவ்!

“என் அப்பாவைக் கொன்றது பாகிஸ்தான் அல்ல. அப்பாவைக் கொன்றது போர்” கார்கில் போரில் தந்தையை இழந்த மகளின் செய்தி!

அ. மார்க்ஸ் இவர் குர்மெஹர் கவுர். 19 வயது. கார்கில் யுத்தத்தின்போது கொல்லப்பட்ட கேப்டன் மன்தீப் சிங்கின் மகள். அப்போது அவளுக்கு வயது 2. வளர்ந்தபோதுதான் தெரிந்து கொண்டாள் தன் தந்தை பாகிஸ்தானியர்களால் கொல்லப்பட்டார் என்பதை. அப்போது மனதில் வேர் விட்டது முஸ்லிம் வெறுப்பு. முஸ்லிம்கள் எல்லோரும் பாகிஸ்தானியர்கள். தன் தந்தையைக் கொன்றவர்கள். இந்தியர்களைக் கொல்பவர்கள். அவர்கள் நம் எதிரிகள். அவர்களால் நமக்கு ஆபத்து. அவர்களைச் சும்மா விடக் கூடாது. குர்மெஹருக்கு 6 வயதாகும்போது பர்தா அணிந்து … Continue reading “என் அப்பாவைக் கொன்றது பாகிஸ்தான் அல்ல. அப்பாவைக் கொன்றது போர்” கார்கில் போரில் தந்தையை இழந்த மகளின் செய்தி!