தலித் பிரிவைச் சேர்ந்தவர்தான் ரோஹித் வெமுலா: மாவட்ட நிர்வாகம் அறிக்கை

ஹைதராபாத் பல்கலைக் கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா(26) கடந்த ஜனவரி 17-ஆம் தேதி, பல்கலைக் கழகம் கொடுத்த தொடர் நெருக்கடி காரணமாக பல்கலைக் கழக விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.  தலித் மாணவர் என்பதாலேயே ரோஹித் வெமுலா பல நெருக்கடிகளைச் சந்தித்ததும் அதை எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தியதும் அதற்காக பல்கலைக் கழக விடுதியிலிருந்து இன்னும் சில தலித் மாணவர்களுடன் வெளியேற்றப்பட்டதும் நிகழ்ந்தவை. ரோஹித் வெமுலா இறப்புக்குப் பின், அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பது குறித்து … Continue reading தலித் பிரிவைச் சேர்ந்தவர்தான் ரோஹித் வெமுலா: மாவட்ட நிர்வாகம் அறிக்கை

மாணவர்களின் தாய் ஸ்மிருதி இரானிக்கு கன்னய்யா குமார் கடிதம்!

ஜேஎன்யு வளாகத்தில் பிப்ர வரி 9 அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்த உயர் மட்ட அளவிலான விசாரணைக் குழு அந்த நிகழ்வு குறித்து ஜோட னையாகப் புனையப்பட்ட வீடி யோவை ஆதாரமாகக் கொண்டு இடதுசாரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது பல்வேறுவிதமான தண்டனைகளை விதித்துள்ளது. இதனை எதிர்த்து அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே என் குழந்தைகள் போன்றவர்கள் என்று ஒருசமயம் ஸ்மிருதி இரானி … Continue reading மாணவர்களின் தாய் ஸ்மிருதி இரானிக்கு கன்னய்யா குமார் கடிதம்!

ஜிசாவின் தாய்க்கு ஆறுதல் சொன்ன ரோஹித் வெமூலாவின் தாய்…

அண்மையில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிசாவின் தாய் ராஜேஸ்வரியை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார் ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா.

ஜேஎன்யூவில் ஏழாவது நாளாக மாணவர்கள் உண்ணாவிரதம்: ’வீதிக்கு வா தோழா’ தமிழகத்திலிருந்து எழும் ஆதரவு பாடல்!

ஜவஹர்லால் நேரு பல்கலையில் ஏழுநாட்களாக, பல்கலை நிர்வாகத்தின் எதேச்சதிகாரத்தைக் கண்டித்து 14 மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இவர்களை ஆதரித்து வழக்கறிஞர் திவ்யா பாரதி, பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அதன் இணைப்பு கீழே... http://www.youtube.com/watch?v=EiuGyykTXaE  

கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் முரண்படுகிறீர்களா என்பது உள்ளிட்ட தி எகனாமிக் டைம்ஸ் நாளேட்டின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. தமிழில் : ச.வீரமணி. 2016ல் யார் வெற்றி பெறுவார்கள்? இடதுமுன்னணி கூட்டணியா? அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியா? இது ஒரு போராட்டம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் உட்பட கடந்த சில சுற்று தேர்தல்கள் நடந்தபோது இருந்த நிலை இன்று கிடையாது. இந்த முறை, அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம். ... ஒரு … Continue reading கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

“தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்”!

ப்ரேமா ரேவதி மிக சுத்தமான உயர்தரமான சில சாலைகள் சில பகுதிகள் சென்னை மாநகரத்தில் உண்டு. அதில் முக்கியமான ஒன்று சேத்துப்பட்டில் இருக்கும் ஹாரிங்டன் சாலை. பல முறை துப்புரவு செய்யப்பட்டு பல பன்னாட்டு உணவு விடுதிகள் மிளிரும் இச்சாலையை பலமுறை கடந்திருக்கிறேன். இன்று அதிகாலை அதைக் கடக்கும்போது திடீரென “தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்” என்ற பாடல் மிக உரக்க ஒலித்தபோது இது ஹாரிங்டன் சாலைதானா என … Continue reading “தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்”!

‘தேச துரோகி’கள் நிறைந்த ஜேஎன்யூ, எச்என்யூவை சிறந்த பல்கலைக்கழகங்களாக அறிவித்தார் ஸ்மிருதி இரானி!

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகமும் நாட்டின் சிறந்த பல்கலைக் கழகங்களாக விளங்குகின்றன என்று அரசாங்கத்தின் ஆய்வறிக்கைகளே ஒப்புக் கொண்டிருக்கின்றன.தேசியவாதம் மற்றும் பேச்சுரிமை தொடர்பான விவாதங்களில் மத்திய அரசின் படுமோசமான நடவடிக்கைகளின் மூலம் மாணவர் சமுதாயத்தின் மத்தியில் கோபாவேசத்தை எழுப்பியுள்ள இந்த இரு பல்கலைக் கழகங்களும் தான் நாட்டின் முதன்மையான பல்கலைக் கழகங்களில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்புகளுக்கான வசதிகளைச் செய்து தருவதிலும் சரி, அவர்கள் படித்து முடிந்தபின் … Continue reading ‘தேச துரோகி’கள் நிறைந்த ஜேஎன்யூ, எச்என்யூவை சிறந்த பல்கலைக்கழகங்களாக அறிவித்தார் ஸ்மிருதி இரானி!

இது சிரியாவா? பாகிஸ்தானா? ஹைதராபாத் பல்கலையில் நடப்பது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட்

கல்பனா கண்ணபிரான் ரோஹித் வெமுலாவின் தற்கொலையிலிருந்து எவ்விதமான படிப்பினையையும் கற்க மறுக்கும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் அங்கே மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள கோபாவேசத்தை வெளிஉலகிற்குத் தெரியாமல் மூடிமறைத்துவிட்டால் போதும் என்கிற ரீதியில் தன் நிர்வாக எந்திரத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. பல்கலைக் கழகத்தில் நடைபெற் றுள்ள நிகழ்வுகள் மிகவும் வலியை ஏற்படுத்து கின்றன. திடீரென்று எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் துணை வேந்தர் வளாகத்திற்குள் நுழைந்ததானது, பெரும்பாலான மாணவர்களின் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் பெரும்திரளாகக் கூடி தங்கள் … Continue reading இது சிரியாவா? பாகிஸ்தானா? ஹைதராபாத் பல்கலையில் நடப்பது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட்

சந்திரசேகர் ராவ்காரு மாணவர்களை பட்டினி போட்டு ஒடுக்குவதுதான் நல்ல அரசாங்கத்தின் லட்சணமா?

  ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு: அன்பார்ந்த சந்திரசேகர் ராவ்காரு, தங்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள இன்று (புதன்) முழுவதும் முயற்சி செய்தேன். பல செய்திகள் அனுப்பப்பட்டும், உங்கள் ஊழியர்கள் அவற்றைப் பெற்ற போதிலும் பதிலேதும் இல்லை. உங்களைத் தொடர்புகொள்ள … Continue reading சந்திரசேகர் ராவ்காரு மாணவர்களை பட்டினி போட்டு ஒடுக்குவதுதான் நல்ல அரசாங்கத்தின் லட்சணமா?

ரிசர்வ் படை, அதிரடிப் படை கட்டுப்பாட்டில் கல்விக் கூடம்: ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் என்ன நடக்கிறது?

அ. மார்க்ஸ் ரோகித் வெமுலா தற்கொலைக்குத் தள்ளப்பட்ட பின் ஜனவரி 24 முதல் "காணாமற் போன" துணை வேந்தர் அப்பா ராவ் போடிலி சென்ற செவ்வாய் அன்று (மார்ச் 22) பல்கலைக் கழக வளாகத்திற்குத் திரும்பியபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. அப்பா ராவ் ஒரு துணை வேந்தருக்கு இருக்க வேண்டிய நேர்மை, அறக் கடப்பாடு ஏதுமற்ற ஒரு எடுபிடி. ரோகித் வெமுலாவின் "தற்கொலைக்கு" ஸ்மிருதி இரானி தொடர்ந்து அனுப்பிய கடிதங்கள் காரணமாக இருந்ததை அறிவோம். இப்படியான கடிதங்கள் … Continue reading ரிசர்வ் படை, அதிரடிப் படை கட்டுப்பாட்டில் கல்விக் கூடம்: ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் என்ன நடக்கிறது?

#ரோஹித் வெமுலா: பட்டினியால் தவிக்கும் மாணவர்களுக்காக உணவு சமைத்த மாணவரை அடித்த போலீஸ்; உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார் மாணவர்

ரோஹித் வெமுலாவின் மரணத்துக் காரணமான ஹைதராபாத் பல்கலை துணை வேந்தர் அப்பா ராவ், இரண்டு மாத விடுப்புக்குப் பிறகு பணிக்குத் திரும்புவதாக அறிவித்தார். இதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டில் ஈடுபட்டவர்களை மிக கடுமையான முறையில் ஒடுக்கி, பல மாணவர்கள் கைது செய்தது போலீஸ். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பல்கலை நிர்வாகம், விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தியது, மின்சாரத்தை நிறுத்தியது. கடந்த இரண்டு உணவு, தண்ணீர் இன்றி மாணவர்கள் தவிப்பதாக அங்கிருந்து … Continue reading #ரோஹித் வெமுலா: பட்டினியால் தவிக்கும் மாணவர்களுக்காக உணவு சமைத்த மாணவரை அடித்த போலீஸ்; உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார் மாணவர்

#ரோஹித்வெமுலா: பல்கலைக்கு திரும்பிய துணைவேந்தர்; போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்த போலீஸ்

ஹைதராபாத் பல்கலைக் கழக ஆய்வாளர் ரோஹித் வெமுலா கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டார். ரோஹித் உள்பட தலித் மாணவர்கள் ஐவரை பல்கலைக் கழகம் மாணவர் விடுதியில் இருந்து வெளியேற்றியது. பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி தொடர்ந்து கடிதங்கள் எழுதியதன் காரணமாக, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பல்கலை வேந்தருக்கு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நான்குக்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதினார். இதன் பின்னணியில் பாஜக எம்பி தத்தாத்ரேயா இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. பல்கலை துணை … Continue reading #ரோஹித்வெமுலா: பல்கலைக்கு திரும்பிய துணைவேந்தர்; போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்த போலீஸ்

#அவசியம்படியுங்கள்: கண்ணையாவை கொண்டாடுங்கள் ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!

வில்லவன் இராமதாஸ் கண்ணையா குமாரின் உரை பாமரத்தனமானதாக இருப்பதாகவும் அதனை உணராமல் பலரும் பரவசத்தோடு பதிவதாகவும் சில (இடதுசாரிகள்)  பதிவுகளை காண நேர்ந்தது. மேலும் இப்படி உருவான முன்னாள் மாணவர் தலைவர்கள் கடைசியில் இந்த அமைப்போடு சமரசம் செய்துகொண்டதாகவும் சில தரவுகள் பகிரப்பட்டிருக்கின்றன (அசாம் கன பரிசத் கட்சி ஒரு மாணவ தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி). இவற்றை முரட்டுத்தனமான மறுப்பது சரியாக இருக்காது. முதலில் பாமரத்தனம் என்பது ஆட்களைப் பொறுத்து மாறுபடும். இந்தியாவின் சிறந்த மார்க்சியவாதியை தெரிவுசெய்து … Continue reading #அவசியம்படியுங்கள்: கண்ணையாவை கொண்டாடுங்கள் ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!

#வீடியோ: ஜேஎன்யூவில் கன்னய்யா குமார் பேசியதன் தமிழ் டப்பிங்!

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நாடாளுமன்றத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யூ மாணவர்கள் விவகாரம் குறித்து பேசியதை தமிழக பாஜக தமிழில் டப் செய்து வெளியிட்டது. இப்போது இரானிக்கும் மோடிக்கும் பதிலடி கொடுக்கும்வகையில் பேசிய, கன்னய்யா குமாரின் பேச்சை தமிழில் டப் செய்திருக்கிறது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. வீடியோ இணைப்பு கீழே... http://www.youtube.com/watch?v=SjDIS29Mquc

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் உரையாற்றினார். அதன் தமிழாக்கம் இங்கே... ஆங்கில மூலம்: இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நின்ற உலக மக்கள் அனைவருக்கும் நான் நன்றிசொல்ல விரும்புகிறேன். ஊடகங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும், அரசியலுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஜேஎன்யூவைக் காப்பாற்றவும், ரோஹித் வேமுலாவுக்கு நீதி கேட்டும் போராடும் அனைவருக்கும் நான் செவ்வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக அவர்களின் போலீஸ், அவர்களின் ஊடகங்கள் வாயிலாக எது சரி, எது தவறு … Continue reading விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

ஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்!

என் அன்பிலா தேசபக்தர்களே! என் இந்தியத் தாயின் வீர நெஞ்சங்களே (வீர மகன்களே என கூற இயலாது. ஏனெனில் இந்தியத் தாய்களையும் மகள்களையும் கொடுமைப்படுத்திக்கொண்டே பாரத் மாதா கி ஜே என கோஷம் போடும் உங்களை பாரத மாதா கூட மகன்களாக ஏற்க மாட்டாள்). ஜே.என்.யூ.காரனான நான் உங்கள் தேசபக்தியின் வெளிப்பாடு கண்டு திக்கு முக்காடி நிற்கிறேன். இதே தீரமிக்க பக்தியினை பதான்கோட் தாக்குதலிலும் காட்டியிருந்தால் நான் இன்னமும் மகிழ்ந்திருப்பேன். பொன்னாடை-புடவை-சூட்-மாம்பழம்-நேரில் தெரிவிக்கப்பட்ட பிறந்த நாள்வாழ்த்து- திடீர் … Continue reading ஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்!

கையில் சூளாயுதத்துடன் இந்துத்துவ வெறியர்கள்: நாடாளுமன்றத்தில் துர்க்கையை பற்றி அவதூறாக பேசியதாக சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரிக்கு மதவெறியர்கள் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.ரோஹித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் மீதான அடக்குமுறை குறித்து மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அவருடைய உரை, மதவெறியர்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதாக அமைந்தது. அதற்குப் பதிலளித்து ஸ்மிருதி இரானி பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். அவை அனைத்தும் ஆதாரமற்ற பொய் என்பது அம்பலமாகிவிட்டது. இந்த நிலையில், சீத்தாராம் யெச்சூரியின் ஆற்றல் மிக்க உரையால் ஆத்திரமடைந்துள்ள இந்துத்துவா மதவெறியர்கள் … Continue reading கையில் சூளாயுதத்துடன் இந்துத்துவ வெறியர்கள்: நாடாளுமன்றத்தில் துர்க்கையை பற்றி அவதூறாக பேசியதாக சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல்!

ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜவஹர் லால்நேரு பல்லைக் கழகம் மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றில் நடை பெற்றுவரும் நிகழ்வுகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து குறுகிய கால விவாதம் வியாழன் அன்று நடை பெற்றது. அதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசினார். அதன் தமிழாக்கத்தை தீக்கதிர் வெளியிட்டிருக்கிறது. உரையின் முக்கியத்துவம் கருதி அதை இங்கே நன்றியுடன் மறுபதிப்பு செய்கிறோம். தமிழாக்கம்: ச. வீரமணி “நான் இந்தப் பிரச்சனைகள் மீது மிகவும் பொறுக்கமுடியாத மன வேதனை, மனக் கவலை … Continue reading ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி

பதிலில் திருப்தியில்லை;தலையை வெட்டிக் கொள்வீர்களா ஸ்மிருதி? : அதிரவைத்த மாயாவதி

ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அப்பட்டமாக பொய்களை அள்ளி வீசியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஸ்மிருதி இரானி தனது பொய்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் காரசாரமான விவாதத்தை வெள்ளியன்றும் மேற்கொண்டனர். மாநிலங்களவையில் வெள்ளியன்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மாயாவதி இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. மாயாவதி, “இந்த விசாரணைக் கமிஷனில் … Continue reading பதிலில் திருப்தியில்லை;தலையை வெட்டிக் கொள்வீர்களா ஸ்மிருதி? : அதிரவைத்த மாயாவதி

ரோஹித் வெமுலாவை சோதிக்க மருத்துவர்களை அனுமதிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன ஸ்மிருதி இரானி: வீடியோ ஆதாரம் இங்கே…

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, புதன்கிழமை மாநிலங்களவையில் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத்தின் மீது பேசிய போது, ரோஹித் தற்கொலை செய்துகொண்டு இறந்த பிறகு, அவரைப் பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என சோதிக்கஅடுத்த நாள் காலை 6.30 மணி வரை அனுமதிக்கப்படவில்லை என்று பேசியிருந்தார். ஆனால், ரோஹித் ஹைதராபாத் பல்கலை மாணவர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் தெலுங்கானா காவலர்களும் … Continue reading ரோஹித் வெமுலாவை சோதிக்க மருத்துவர்களை அனுமதிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன ஸ்மிருதி இரானி: வீடியோ ஆதாரம் இங்கே…

“ஆண்டி நேஷனல்”: ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சை பகடி செய்யும் தி டெலிகிராப்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி வருகிறது. புதன்கிழமை ரோஹித் வெமுலாவின் தற்கொலையை ஒட்டி நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் கடுமையான வாக்குவாதம் எழுந்தது. மாயாவதி பேசும்போது, “தலித் மாணவர் ஒருவர் பல்கலை தற்கொலை செய்து கொள்வது இது முதல்முறை அல்ல; குறிப்பாக அம்பேத்கரின் கொள்கைகளை முன்னெடுக்கும் ரோஹித் வெமூலா போன்ற மாணவர்களை ஆர். எஸ். எஸ். போன்ற அமைப்புகள் விரும்புவதில்லை. அவர்களை அழிக்க நினைக்கின்றன. தலித் மாணவர்கள் தொடர்ந்து … Continue reading “ஆண்டி நேஷனல்”: ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சை பகடி செய்யும் தி டெலிகிராப்!

“ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமூலா தற்கொலை விஷயத்திலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது, மேலும் ஐந்து மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட விஷயத்திலும் தமிழக பெரும்பான்மை மாணவ சமூகம் போராடவில்லை. இடதுசாரி மாணவ அமைப்புகள், இஸ்லாமிய மாணவ அமைப்புகள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றன. ஈழப் பிரச்சினைக்காக லயோலா கல்லூரி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராடினர். ஆனால் மாணவர் சமூகத்தின் கருத்து சுதந்திரத்துக்கும் … Continue reading “ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

தொடங்குகிறது பட்ஜெட் கூட்டுத்தொடர்: அல்வாவை கிளறி முடித்த அருண்ஜெட்லி!

செவ்வாயன்று தொடங்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் ரோஹித் வெமுலா தற்கொலை, ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்யகுமார் கைது உள்ளிட்ட பிரச்சனைகள் மற்றும் பதான்கோட் தீவிரவாதிகள் தாக்குதல் ஆகிய பிரச்சனைகள் பெரும் கொந்தளிப்பை உருவாக்கும் என சொல்கிறது தீக்கதிர் நாளிதழ்.  செவ்வாயன்று துவங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி மார்ச் 16 வரை நீடிக்கிறது. இரண்டாவது பகுதி ஏப்ரல் 25லிருந்து தொடங்கி மே13 வரை நடைபெறுகிறது. நடைபெறவுள்ள முதல் பட் ஜெட் கூட்டத்தொடரில் … Continue reading தொடங்குகிறது பட்ஜெட் கூட்டுத்தொடர்: அல்வாவை கிளறி முடித்த அருண்ஜெட்லி!

நாங்கள் தாக்கம் செலுத்துகிறோம்!: சாதி ஆணவ கொலை செய்வோம் என மிரட்டிய சாதியவாதிகளை கைது செய்யக்கோரி வலுக்கிறது கோரிக்கை

கொங்கு பகுதியின் சாதிய குழுக்களின் வன்மத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் இந்த ஒலிப்பதிவு வாட்ஸ் அப்பில் அதிகமாக பகிரப்பட்டாலும் இணையத்தில் முதன் முதலாக பதிவேற்றியது தி டைம்ஸ் தமிழ் டாட் காம். http://www.youtube.com/watch?v=p8Cxc20_Vug இதன் விளைவாக கொலை மிரட்டல் விடுத்த சாதியவாதிகளை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் இயக்கங்கள் கோரிக்கை வைத்திருக்கின்றன. செவ்வாய்கிழமை திராவிடர் விடுதலைக் கழகம் சாதி ஆணவ கொலை செய்வோம் என மிரட்டிய நபர்களை கைசெய்ய வலியுறுத்தி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறது. இதுகுறித்து வைரம் தி.வி.க தன்னுடைய முகநூலில், … Continue reading நாங்கள் தாக்கம் செலுத்துகிறோம்!: சாதி ஆணவ கொலை செய்வோம் என மிரட்டிய சாதியவாதிகளை கைது செய்யக்கோரி வலுக்கிறது கோரிக்கை

“முஸ்லிம் இறந்தால் உலகின் பல நாடுகள் குரல் எழுப்பும்; அதுவே ஒரு பிராமின் இறந்தால் யார் குரல் கொடுக்கிறார்?” ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

ஹைதரபாத் பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமூலாவின்  மரணம் சாதிய பிரச்சினையல்ல, அது ஒரு குற்றப் பிரச்சினை என கருத்து சொல்லியிருக்கிறார் சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். மேலும் அவர், இந்தப் பிரச்சினையை அரசியாக்கப் பார்க்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். தி க்விண்ட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் சமீபத்தில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற ரவிசங்கர். “ரோஹித் வெமுலா மரணத்தை சாதியை வைத்து அரசியலாக்கப் பார்க்கிறார்கள். இதுவே இறந்தவர் முஸ்லிம் ஆக இருந்தால் உலகின் பல … Continue reading “முஸ்லிம் இறந்தால் உலகின் பல நாடுகள் குரல் எழுப்பும்; அதுவே ஒரு பிராமின் இறந்தால் யார் குரல் கொடுக்கிறார்?” ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

கல்வி நிலையங்களில் ஒடுக்குமுறையால் மரணித்தவர்களிடமிருந்து ரோஹித் வெமுலாவின் மரணம் எந்தவகையில் வேறுபாடுகிறது?

வெமுலா ரோஹித்தின் தற்கொலை தேசிய அளவில் செய்தியாகியிருக்கிறது. தேசத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் புரையோடிப்போயிருக்கிற ஜாதியின் கோர முகம் மீண்டும் வெளித்தெரிந்திருக்கிறது. ஊடகங்கள் அந்த மாணவனை 'தலித் ஸ்காலர்' என்று அடையாளப்படுத்துகின்றன. அவன் தூக்கை நெருங்குவதற்கு முன்னால், எழுதி வைத்தக் கடிதத்தில் ''வெறுமையாக உணர்கிறேன்; அதுதான் மிகவும் கொடுமையாக இருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறான். அதில் அவ்வளவு உண்மை இருக்கிறது. இந்த சமூகம் ஒரு தலித்துக்கு எப்போதும் கையளிப்பது இந்த வெறுமையைத்தான். ஆனால் இது ஏன் ஒரு ஆராய்ச்சி மாணவனை … Continue reading கல்வி நிலையங்களில் ஒடுக்குமுறையால் மரணித்தவர்களிடமிருந்து ரோஹித் வெமுலாவின் மரணம் எந்தவகையில் வேறுபாடுகிறது?

”நவீன அமைப்புகளில் சாதி எவ்வளவு ஆழமாக பரப்பியிருக்கிறது என்பதன் நினைவூட்டல் வெமுலாவின் மரணம்”

பிப்ரவரி 1, 2016 நடந்த பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் முதல் நினைவுச் சொற்பொழிவில் அரசியல் அறிவியல் அறிஞர் யோகேந்திர யாதவ் ‘சமூக நீதி அரசியல் குறித்த மீள்சிந்தனை’ என்கிற தலைப்பில் நிகழ்த்திய உரையின் மொழிபெயர்ப்பு இது. தமிழாக்கம்: பூ.கொ. சரவணன் எனக்கும் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களுக்கும் இடையே இருந்த உறவு தனித்துவமானது. அவர் மார்க்சியராகவும் , நான் லோஹியாவாதியாகவும் இருவேறுபட்ட அணுகுமுறையில் இயங்கினோம். இன்றைக்கு இரண்டுக்கும் இந்தத் தாராளமயமாக்கப்பட்ட சூழலில் பெரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கா விட்டாலும் அப்பொழுது அவை தனித்த … Continue reading ”நவீன அமைப்புகளில் சாதி எவ்வளவு ஆழமாக பரப்பியிருக்கிறது என்பதன் நினைவூட்டல் வெமுலாவின் மரணம்”

ரோஹித் மரணத்திற்கு காரணமான அமைச்சர் தத்தாத்ரேயாவுடன் கோவை வந்த மோடி: திரும்பி போக சொல்லி போராட்டம்…

கோவையில் மத்திய அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவக்க விழா , பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி இன்று மதியம் கோவை வந்தார் கட்டிட திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், மற்றும் ஐதராபாத் பல்கலை மாணவன் ரோஹித் மரணத்திற்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்படும் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் கலந்து கொண்டனர். இதனிடையே கோவையில் பிரதமர் மோடிக்கு கறுப்பு … Continue reading ரோஹித் மரணத்திற்கு காரணமான அமைச்சர் தத்தாத்ரேயாவுடன் கோவை வந்த மோடி: திரும்பி போக சொல்லி போராட்டம்…

பாரபட்சத்தினால் இழந்த நம்பிக்கை: ரோஹித் வெமுலாவிற்கு அஞ்சலி செலுத்திய கார்ல் சாகனின் மனைவி!

நட்சத்திரங்களுக்கு போக விரும்பிய காலத்தில், கார்ல் சாகனை போல ஒரு அறிவியல் எழுத்தாளராக விரும்பினேன் என்று  ரோஹித் வெமுலா எழுதிய கடிதம் யாராலும் மறந்திருக்க முடியாது.  ரோஹித்தின் இறுதியும், முதலுமான அந்த கடிதத்தை கார்ல் சாகனின் மனைவியும், கார்ல் சாகனின் எழுத்துக்களில், ஆராய்ச்சிகளில் துணை நின்றவருமான ஆன் துருயனுக்கு (Ann Druyan),  Mediaone TV-யின் ராஜீவ் ராமச்சந்திரன் அனுப்பி வைத்துருக்கிறார். அதற்கு ஆன் துருயன் அனுப்பியுள்ள பதிலை தமிழில் மொழி பெயர்த்து கீழே வழங்கி இருக்கிறோம். அன்புள்ள … Continue reading பாரபட்சத்தினால் இழந்த நம்பிக்கை: ரோஹித் வெமுலாவிற்கு அஞ்சலி செலுத்திய கார்ல் சாகனின் மனைவி!

ரோஹித் வெமுலா முற்றுப்பெறாத ஓவியம்: பிறப்பு முதல் மரணம் வரை ரோஹித் வாழ்க்கையை விட்டு துரத்தப்பட்டதன் ஆவணம்

சுதிப்டோ மோண்டல் தமிழில்: கவின் மலர் குண்டூரில், 1971 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ரோஹித் வெமுலா பிறப்பதற்கு 18 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்க்கையின் பின்னணிக்கதை தொடங்குகிறது. அந்த ஆண்டுதான் ரோஹித்தின் வளர்ப்புப் ‘பாட்டி’ அஞ்சனி தேவியின் சில செயல்களால், அந்த அறிஞன் பின்னாளில் தன் தற்கொலைக் குறிப்பில் ”மரணத்தையொத்த விபத்து என் பிறப்பு’ என்று எழுதும்படி நேர்ந்தது. ”அது ஒரு மதிய உணவு நேரம். நல்ல வெயில். பிரஷாந்த் நகரில் உள்ள எங்கள் வீட்டிற்கு வெளியே … Continue reading ரோஹித் வெமுலா முற்றுப்பெறாத ஓவியம்: பிறப்பு முதல் மரணம் வரை ரோஹித் வாழ்க்கையை விட்டு துரத்தப்பட்டதன் ஆவணம்

”சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்ட்ரமாக மாற்ற வேண்டும் என்பதே இந்தக் கொலைகளுக்குப் பின்னணி”

சீத்தாராம் யெச்சூரி அகில இந்திய பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) Venpura Saravanan “நான் இங்கே ஓர் அரசியல்வாதியாக வரவில்லை. ஒரு மாணவர் சங்கத்தின் முன்னணி ஊழியன் என்ற முறையிலேயே பேசிக் கொண்டிருக்கிறேன்.. நான் தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கத்தின் தலைவனாக இருந்திருக்கிறேன். அந்த அடிப்படையிலேயே உங்கள்முன் நின்று கொண்டிருக்கிறேன். மிகவும் துரதிர்ஷ்டவசமான முறையில் தற்கொலை செய்து கொள்வதற்குத் தள்ளப்பட்ட ரோஹித் வெமுலாவின் மரணத்தால் எனக்கு ஏற்பட்ட ஆழ்ந்த துயரம், … Continue reading ”சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்ட்ரமாக மாற்ற வேண்டும் என்பதே இந்தக் கொலைகளுக்குப் பின்னணி”