9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதை கற்பிக்கப்படும் என இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட அந்த மாநில கல்வி அமைச்சர் கோவிந்த சிங் தாக்கூர், பள்ளிகளில் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கீதை கற்பிக்கப்படும் எனவும் மூன்றாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறினார். மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரத்தைப் பற்றி கற்பிக்கவும், அவர்களுக்கு தார்மீக ஊக்கத்தை அளிக்கவும் இந்தப் … Continue reading பள்ளிகளில் பகவத் கீதை: ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை அமலாக்கும் பாஜக அரசுகள்!
பகுப்பு: மத அரசியல்
முஸ்லிம் இறைச்சி விற்பனையாளரை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டு, கோயில் திருவிழாக்களில் இஸ்லாமிய வியாபாரிகள் புறக்கணிக்கப்பட்டதை அடுத்து, கர்நாடகாவில் மதவாத அரசியல் தற்போது 'ஹலால்' இறைச்சி விவகாரத்தை கையிலெடுத்துள்ளது. கர்நாடகத்தில் உகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம் இறைச்சி விற்பனையாளர்களிடம் இந்துக்கள் ஹலால் செய்யப்பட்ட உணவுகளை வாங்கக்கூடாது என இந்துத்துவ அமைப்புகள் கடந்த ஒரு வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. https://twitter.com/Hatewatchkarnat/status/1509412639268499457?s=20&t=MvPNXMGU3JJjMyfFEpGiZg இந்துத்துவ அமைப்பினரின் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தின் பகுதியாக, கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் இறைச்சி விற்பனையாளர் ஒருவரை … Continue reading முஸ்லிம் இறைச்சி விற்பனையாளரை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!
பாரதப் பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்!
கை. அறிவழகன் 1) ஐயா, புல்வாமாவில் நம்ம 44 CRPF வீரர்கள் பிற்பகல் 3.10 மணிக்கு செத்துப்போனப்ப, நீங்க ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்கலாம், 3.40 மணிக்கு உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் ஒரு சலனமும் இல்லாம தொடர்ந்து ஷூட்டிங்ல கண்ணும் கருத்துமா இருந்தீங்கன்னு ஒரு பாழாப் போன இந்திய தேச விரோதி உங்க மேலே அபாண்டமான பழி சொல்றாங்கய்யா? மாலை 5 மணி வரைக்கும் ஷூட்டிங்ல இருந்துட்டு அப்புறமா வீட்டுக்குப் போறப்பக் கூட … Continue reading பாரதப் பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்!
மனிதர்களின் அழுக்குகளால் பார்வையை இழந்துகொண்டிருக்கும் கங்கை நதி வாழ் டால்ஃபின்கள்!: உமா பாரதி ஒப்புதல்
மனிதர்கள் தங்களுடைய அழுக்குகளை மூழ்கி தொலைக்கும் கங்கை நதியில் வாழும் டால்ஃபின்கள் அந்த அழுக்குகளால் (மாசுபடுதலால்) பார்வையிழப்பை சந்தித்துக்கொண்டிருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி ஒப்புதல் அளித்துள்ளார். புதன்கிழமை இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, கங்கை நதி மாசுபடுவதால், அந்த நதி நீரில் வாழும் அறிய வகை டால்ஃபின்கள் அழிந்துவருவதாக குறிப்பிட்டார். இதுகுறித்து பின்னர் விளக்க அறிக்கை வெளியிட்ட நீர் வளத்துறை அமைச்சகம், அமைச்சர் சொன்னது உண்மை என்றாலும், அது … Continue reading மனிதர்களின் அழுக்குகளால் பார்வையை இழந்துகொண்டிருக்கும் கங்கை நதி வாழ் டால்ஃபின்கள்!: உமா பாரதி ஒப்புதல்
அரியானா சட்டமன்றத்தில் தருண் சாகர்: இங்கே நிர்வாணம் மட்டும் பிரச்சினையல்ல!
மோசமான ஆளுகை, ஆர்எஸ்எஸ்ஸின் சாதிவெறி - மதவெறி நிகழ்ச்சிநிரல் திட்டமிட்ட விதத்தில் முன்னகர்த்தப்படுவது, பிற்போக்கு ஆணாதிக்க மனோபாவம் ஆகியவற்றால், எம்எல் கத்தார் தலைமையிலான அரியானா பாஜக அரசாங்கம், ஏற்கனவே நம்பகத்தன்மை இழந்திருக்கிறது; இப்போது, இந்திய அரசின் அரசியல் சாசன அடிப்படையின் மய்ய கோட்பாடான, மதத்தை அரசியலில் இருந்து பிரித்து நிறுத்துவது என்ற மதச்சார்பின்மை கோட்பாட்டை வெளிப்படையாக மீறியுள்ளது. ஆகஸ்ட் 26 அன்று, ஜைன துறவி தருண் சாகரை சட்டமன்றத்தில் பேச அழைத்தது. தொழில்நுட்பரீதியாகச் சொல்வதென்றால், தருண் சாகர் … Continue reading அரியானா சட்டமன்றத்தில் தருண் சாகர்: இங்கே நிர்வாணம் மட்டும் பிரச்சினையல்ல!
“அவமானகரமான மௌனம்”: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரைதான் மோடியை பேச வைத்ததா?
சமர் ஒரு மதிப்புக்குரிய பன்னாட்டு ஊடக நிறுவனம், ஒரு ஜனநாயகக் குடியரசின் பிரதமரை நோக்கி மௌனத்தை உடைக்குமாறு கேட்பது அரிதானதொரு நிகழ்வாகும். அதுவும் 'அவமானகரமான மௌனம்' என்று அதனைக் குறிப்பிடுவது அரிதினும் அரிது. ஆனால் ஆகஸ்டு ஐந்தாம் தேதி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் இதைச் செய்துள்ளது. தனது தலையங்கத்தில் பாரத நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை எச்சரிக்கை செய்யும் விதமாக இப்படிக் கூறுகிறது: பசுவழிபாடு செய்பவர்களின் அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் தனது கேவலமான மௌனத்தை … Continue reading “அவமானகரமான மௌனம்”: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரைதான் மோடியை பேச வைத்ததா?
மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி இஸ்லாமியப் பெண்களை போலீஸ் முன்னிலையில் அடித்து, உதைத்த ‘பசு ரட்சகர்கள்’!
காவலர்கள் முன்னிலையில் இரண்டு இஸ்லாமியப் பெண்களை ‘பசு ரட்சகர்கள்’ என்று கூறிக்கொள்ளும் கூட்டத்தினர் அடித்து, உதைத்தனர். இந்தச் சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மந்த்சர் ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது. செய்தி ஊடகங்களின் பதிவின்படி, ‘அதிக அளவிலான’ மாட்டிறைச்சியை ரயில் விற்பனைக்குக் கொண்டு சென்ற இரண்டு இஸ்லாமியப் பெண்களை கைது செய்ய காவல்துறை ரயில் நிலையம் வந்தது. இந்தத் தகவல் அறிந்து வந்த, ஹிந்து தள் என்ற அமைப்பினர், இந்தப் பெண்களை காவல்துறையினர் முன்னிலையில் ‘கௌ மாதா கீ ஜெ’ என … Continue reading மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி இஸ்லாமியப் பெண்களை போலீஸ் முன்னிலையில் அடித்து, உதைத்த ‘பசு ரட்சகர்கள்’!
நாடுமுழுவதும் 57,000 ஆர் எஸ் எஸ் சாகாக்கள்; பாஜக ஆட்சியில் சாகாக்களின் எண்ணிக்கை கூடுகிறது
சங் பரிவாரங்களின் கொள்கைகள் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வேகமாக வளர்ந்து வருவதாக ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் ஊடகப் பிரிவு தலைவர் மன்மோகன் வைத்தியா தெரிவித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் 45, 000லிருந்து 57, 000மாக சாகாக்களின் எண்ணிக்கை உயந்துள்ளது, தங்களின் கொள்கைகள் மக்களைச் சென்றடைந்துள்ளதைக் காட்டுகிறது என்கிறார் இவர். ஆர் எஸ் எஸ்ஸின் பிராந்திய தலைவர்களின் கூட்டம் கான்பூரில் ஜுலை 11 முதல் 15 நடக்கிறது. இதையொட்டிய செய்தியாளர் சந்திப்பில் வைத்தியா பேசினார். கிராமப்புற மக்களை … Continue reading நாடுமுழுவதும் 57,000 ஆர் எஸ் எஸ் சாகாக்கள்; பாஜக ஆட்சியில் சாகாக்களின் எண்ணிக்கை கூடுகிறது
ஷாஹித் புர்ஹான் வானி: கொல்லப்படுவரெல்லாம் தீவிரவாதி அல்ல
ஜோஷ்வா ஐசக் ஆசாத் நேற்றிலிருந்து இந்திய அரசாலும், ராணுவத்தாலும், ஊடகங்களாலும் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டு வருவது புர்ஹான் வானி என்னும் 21 வயது இளைஞனின் மரணமாகும். நமக்கெல்லாம் தீவிரவாத இயக்கமாக அறியப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இளம் தளபதிகளுள் ஒருவர் இவர். நேற்று நடைபெற்ற இந்திய ராணுவத்துடனான சண்டையில் தனது இரண்டு தோழர்களுடன் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் … Continue reading ஷாஹித் புர்ஹான் வானி: கொல்லப்படுவரெல்லாம் தீவிரவாதி அல்ல
சென்னை ஐஐடியில் சுதேசி இன்டாலஜி கருத்தரங்கம்: ஷெல்டன் பொல்லாக் மீது ஏன் இந்தக் கொலைவெறி?
அ. மார்க்ஸ் அப்பட்டமான ஒரு இந்துத்துவவாதியும், ஒரு போலி அறிவுஜீவியுமாகிய ராஜிவ் மல்ஹோத்ராவின் ஏற்பாட்டில் சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறும் “சுதேசி இன்டாலஜி” கருத்தரங்கம் வெளியார் அனுமதியின்றி மூடிய கதவுகளுக்குள் ஐஐடி நிர்வாகத்தின் பூரண ஒத்துழைப்புகளுடனும் விதிமீறல்களுடனும் நடந்து கொண்டுள்ளது. உலகளவில் மதிக்கப்படும் இந்தியவியல் அறிஞரான ஷெல்டன் பொல்லாக்கைக் குறி வைத்து இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கிற செய்தி இப்போது ஊடகங்களில் பேசப்படுகிறது.. ராஜிவ் மல்ஹோத்ரா ஏற்கனவே ஷெல்டன் பொல்லாக்கை “விமர்சித்து” எழுதிய Battle for … Continue reading சென்னை ஐஐடியில் சுதேசி இன்டாலஜி கருத்தரங்கம்: ஷெல்டன் பொல்லாக் மீது ஏன் இந்தக் கொலைவெறி?
“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”
கால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள். - வரலாற்றாசிரியர் டி. என்.ஜா ஆரியரிடமிருந்து அவர்களுக்கே உரித்தான பாண்டங்கள், கருவிகள், ஆயுதங்கள் என எதுவும் இல்லை. ஆரியர்கள் தாம் தொடர்புகொள்ளும் மக்களிடம் இருந்து தமக்கு ஒத்துப்போகும் எதையும் ஏற்றுக்கொண்டார்கள். மரபணு ரீதியாகவோ, உடல் அமைப்பு ரீதியாகவோ அவர்கள் ஒரேவிதமானவர்களாய் இருக்கவில்லை. இனக்குழுவிற்குள் புதியவர்களை ஏற்றுக்கொள்வதென்பது, போர் வெற்றி மூலமோ ஆரியமாக்கப்பட்டிருந்த பிற மக்களுடன் குறிப்பிட்ட அளவு கலப்புமணம் புரிவதன் மூலம் … Continue reading “உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”
“ஸ்பிண்ட்ரெல்லா”: ஸ்மிருதி இரானியின் புதிய அமைச்சரவை குறித்து டெலிகிராப்!
“ஸ்பிண்ட்ரெல்லா” அதாவது நூல் நூற்கும் தேவதை என தலைப்பிட்டு ஸ்மிருதி இரானி ஜவுளித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து முதல் பக்க செய்தி வெளியிட்டுள்ளது டெலிகிராப். ஸ்மிருதி இரானி சர்ச்சைக்குரிய வகையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக செயல்பட்டது குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் இந்நாளிதழ், ஜேஎன்யூ மாணவர் பிரச்சினை தீவிரமடைந்தபோது ‘ஆண்டிநேஷனல்’ என தலைப்பிட்டு செய்திவெளியிட்டது. முன்னதைப் போலவே ஆதரவும் எதிர்ப்புமாக டெலிகிராப்பின் முகப்புச் செய்தி சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. டெலிகிராப் நாளிதழைப் போல ட்விட்டர்வாசிகள் ஸ்மிருதி … Continue reading “ஸ்பிண்ட்ரெல்லா”: ஸ்மிருதி இரானியின் புதிய அமைச்சரவை குறித்து டெலிகிராப்!
“அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”
மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டஸ்மிருதி இரானி, அகந்தை மற்றும் அறியாமையின் ஆபத்தான கலவை என வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கருத்து தெரிவித்துள்ளார். யேல் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் விரிவுரையாற்றியிருக்கும் ராமச்சந்திர குஹா, ஸ்மிருதி இரானி தன்னுடைய அமைச்சகத்தின் நம்பகத்தன்மையை கணிசமான அளவு சீர்குலைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். என்டிடீவி செய்தி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மூத்த பேராசிரியர்களை ஸ்மிருதி இரானி நடத்திய விதம் குறித்து நினைவுகூர்ந்த குஹா, “கூட்டமொன்றில் ஐஐடி இயக்குனர்கள் ஒருவர், … Continue reading “அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”
இந்துத்துவ பிரச்சாரத்தை முன்னெடுக்கும் அஷுதோஷ் கோவரிகரின் மொஹஞ்சதாரோ; வரலாறு என்பது இதுவல்ல!
Ajoy Ashirwad Mahaprashasta இயக்குநர் அஷுதோஷ் கோவரிகரின் நல்ல சினிமாவுக்கான தேடல், பிரம்மாண்ட அரங்க வடிவமைப்பு, மிகப் பெரிய நட்சத்திரங்கள் என்பதாக முடிந்திருக்கிறது. ஹிந்தி பட இயக்குநர்கள், திடீரென, வரவேற்புக்குரிய வகையில் வரலாற்று நிகழ்வுகள் மீது ஆர்வம் வந்திருக்கிறது. இவர்களுடைய வரலாற்றுப் பார்வையில் உள்ள கோளாறுகள், மேம்பட்ட பார்வையாளர்களுக்கு இது கசப்பை சுவைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி சளைக்காத ஹிந்து போர்வீரனாக வடிவமைக்கப்பட்டார். காவிக் கொடி ஏந்தி, இந்தியாவின் எதிரிகளான … Continue reading இந்துத்துவ பிரச்சாரத்தை முன்னெடுக்கும் அஷுதோஷ் கோவரிகரின் மொஹஞ்சதாரோ; வரலாறு என்பது இதுவல்ல!
காசு கொடுத்தால் மதக் கலவரம்: கேமராவில் சிக்கிய அரசியல்வாதிகள்
இந்தியாவிலியே மத கலவரங்கள் அதிக அளவில் நடக்கும் மாநிலம் உத்தரபிரதேசம். இந்து - முஸ்லீம் கலவரங்கள் நடப்பதற்கான சூழல் எப்போதும் இங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டில் அடித்தே கொல்லப்பட்டார் முகமது அல்கல் என்ற முதியவர். இது கலவரம் உருவாக்க வேண்டும் என்றே திட்டமிட்டே நிகழ்ந்த கொலை என்பது நிரூபணமான பின்னும். அக்லக்கின் வீட்டுக்கு அருகே போடப்பட்ட மாட்டிறைச்சியை சோதனை செய்து, அவருடைய ஃபிரிட்ஜில் இருந்து எடுத்தது இந்த இறைச்சிதான் என்று புதிய கதையைப் … Continue reading காசு கொடுத்தால் மதக் கலவரம்: கேமராவில் சிக்கிய அரசியல்வாதிகள்
“அத்தனை படுகொலைகளையும் 12 பேர் மட்டும்தான் செய்தார்களா?” குல்பர்க் சொஸைட்டி படுகொலை தீர்ப்பு குறித்து ஜாக்கியா ஜஃப்ரி
2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, குஜராத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த குல்பர்க் சொஸைட்டிக்குள் புகுந்த வன்முறை கும்பல், அந்தக் குடியிருப்பை தீயிட்டு பொசுக்கியது. காங்கிரஸ் எம்பி இஸான் ஜஃப்ரி உள்ளிட்ட 69 பேர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். கடந்த 14 ஆண்டுகளாக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில் இந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. “இந்த படுகொலைகள் திட்டமிட்டு நடத்தப்படவில்லை” என்று அறிவித்தார் நீதிபதி பி. பீ. தேசாய். இந்த … Continue reading “அத்தனை படுகொலைகளையும் 12 பேர் மட்டும்தான் செய்தார்களா?” குல்பர்க் சொஸைட்டி படுகொலை தீர்ப்பு குறித்து ஜாக்கியா ஜஃப்ரி
இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு நீதி கோரும் கையெழுத்து இயக்கம்!
தமிழகத்தில் 13லிருந்து 21 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்து இந்திய சிறுபான்மையினர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பீட்டர் துரைராஜ் இணையதள கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். “2008-ஆம் ஆண்டு தமிழக அரசு 1400 சிறைவாசிகளை விடுதலை செய்தது. அவர்களில் பெரும்பாலானோர் 7 வருடங்களுக்கு மேல் தண்டனையை அனுபவித்தவர்கள். ஆனால் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வது குறித்து பரிந்துரை ஆணையம் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. 1991-1999ஆம் ஆண்டு வரை கைதான இஸ்லாமிய சிறைவாசிகள் … Continue reading இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு நீதி கோரும் கையெழுத்து இயக்கம்!
#வெறுப்புஅரசியல்: அசாதுதீன் ஓவைசி உருவம் பதிந்த கேக்கை வெட்டி ராஜ் தாக்கரே பிறந்த நாள் கொண்டாட்டம்!
ராஜ் தாக்கரே தனது 48வது பிறந்த நாளை மும்பையில் அவரது ஆதரவாளர்களுடன் கொண்டாடினார். அப்போது அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்ஹதுல் முஸ்லீமின் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்பியுமான அசாதுதீன் ஓவைசியின் புகைப்படம் பதித்த கேக்கை வெட்டிக் கொண்டாடினார். இந்த சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜ் தாக்கரே கைது செய்யப்பட வேண்டும் என்று ஓவைசி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ வாரிஸ் பதான் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் எனது கழுத்தில் கத்திவைத்து கேட்டாலும் பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்ல மாட்டேன் என்று கூறியிருந்தார் … Continue reading #வெறுப்புஅரசியல்: அசாதுதீன் ஓவைசி உருவம் பதிந்த கேக்கை வெட்டி ராஜ் தாக்கரே பிறந்த நாள் கொண்டாட்டம்!
ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்ற முதியவரை தாக்கிய பாக். போலீஸ்; சமூக ஊடகங்களின் தலையீட்டால் கைதானார்!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் முதியவர் கோகுல் தாஸ், ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்றார் என்பதற்காக, உள்ளூர் போலீஸால் கடுமையாகத் தாக்கப்பட்டார். முதியவர் ரத்தக் காயங்களுடன் இருந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின. பல பாகிஸ்தான் பிரபலங்கள், முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோவின் மகள் பக்தவார் புட்டோ உள்பட பலர் கோகுல்தாஸுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் எழுதினார்கள். இந்நிலையில் சிந்து மாகாணத்தின் ஐஜி விரைந்து நடவடிக்கை எடுத்து, முதியவரைத் தாக்கிய குற்றத்துக்காக அந்தக் … Continue reading ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்ற முதியவரை தாக்கிய பாக். போலீஸ்; சமூக ஊடகங்களின் தலையீட்டால் கைதானார்!
“வீட்டுக்குப் போய் ஆண்மையை துதியுங்கள்; இந்து ஜனத்தொகையைப் பெருக்குங்கள்”: ஆண்மை விருத்தி லேகியம் விற்ற பிரவீன் தொகாடியா
இந்து ஆண்கள் மத்தியில் ஆண்மைக் குறைபாடு அதிகரித்து வருவது, நாட்டில் இந்துக்களின் ஜனத்தொகையை குறைத்து வருகிறது. எனவே, வீட்டிற்கு போய் உங்கள் ஆண்மையைத் துதியுங்கள் என விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசியுள்ளார். குஜராத் மாநிலம் ஜம்புசார் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் பேசிய பிரவீன் தொகாடியா, “இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது அதிகரிக்கும் முஸ்லீம்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். லவ் ஜிகாத்தும் கிறித்துவ மத மாற்றமும் இந்துக்களின் எண்ணிக்கை … Continue reading “வீட்டுக்குப் போய் ஆண்மையை துதியுங்கள்; இந்து ஜனத்தொகையைப் பெருக்குங்கள்”: ஆண்மை விருத்தி லேகியம் விற்ற பிரவீன் தொகாடியா
2017 ஆண்டு உத்தரபிரதேச தேர்தலுக்காக ‘முசாஃபர் நகர்’ போன்ற வன்முறை தாத்ரியில் திட்டமிடப்படுகிறதா?
NATASHA SINGH கதை சற்றே வேறுபட்டாலும் இரண்டுக்குமான திரைக்கதை ஒன்றே. ஆனால் கதை நிகழ்விடம் டெல்லிக்கு அருகாமையில் இருக்கும் மேற்கு உத்தர பிரதேசம். ஆண்டு முந்தையது 2013-2014, பிந்தையது 2016-2017. ஆர் எஸ் எஸ் தொடர்புடைய அமைப்புகள், தாத்ரியில் ஒரு அப்பாவி மனிதரின் வீட்டில் நுழைந்து அவரை அடித்துக் கொண்ட சம்பவத்திலிருந்து விலகவில்லை. மாநில அரசின் அறிவுறுத்தலையும் மீறி தாத்ரியில் மகாபஞ்சாயத் கூடியிருக்கிறது. மாட்டிறைச்சி உண்டார்கள் எனக்கூறி முகமது அக்லக் குடும்பம் குறித்து, வெறுப்பைத் துண்டும் பேச்சு … Continue reading 2017 ஆண்டு உத்தரபிரதேச தேர்தலுக்காக ‘முசாஃபர் நகர்’ போன்ற வன்முறை தாத்ரியில் திட்டமிடப்படுகிறதா?
மேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்
சித்தார்த் வரதராஜன் பிப்ரவரி 28, 2002 அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் குடியிருப்பு வளாகத்தில் 69 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான தீர்ப்பு, மிக மோசமான இந்த நேரத்தில் வந்திருக்கக் கூடாது. பிரதமர் நரேந்திர மோடி, அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தார். ஒரு தலைவராக மக்களின் பலமான உணர்வுகளை அவர் தூண்டுகிறார். பலர் அவர் தவறு செய்யமாட்டார் என நினைக்கிறார்கள். சிலர் அவரால் நல்லதை செய்யவே முடியாது என நம்புகிறார்கள். பிப்ரவரி 28, 2002 கொலைகள், அவர் விரும்பியதால் நிகழ்ந்தனவா? … Continue reading மேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்
“உதவி கேட்ட இஸான் ஜஃப்ரியிடம் நீங்கள் இன்னும் சாகவில்லையா என்று கேட்டார் மோடி”
குஜராத் குல்பர்க் சொஸைட்டியில் படுகொலைச் செய்யப்பட்டவர்களில் காங்கிரஸ் தலைவரும் எம்பி யாக இருந்தவருமான இஸான் ஜஃப்ரியும் ஒருவர். இவர் தான் கொல்லப்படுவதற்கு முன் தங்கள் இருப்பிடத்தைச் சூழ்ந்துகொண்ட குண்டர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றும்படி பல அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தொலைபேசியில் பேசியிருக்கிறார். அதில் அப்போது குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த இப்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியுடனும் பேசியதாக இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த ரூபா பென் தெரிவித்துள்ளார். தனது மகனை கொலை தாக்குதலுக்கு பலிகொடுத்த ரூபா பென், … Continue reading “உதவி கேட்ட இஸான் ஜஃப்ரியிடம் நீங்கள் இன்னும் சாகவில்லையா என்று கேட்டார் மோடி”
மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமிய இளைஞரை நிர்வாணமாக்கி, அடித்து துன்புறுத்தி, படங்களை பகிர்ந்துகொள்ளும் ‘பசு பாதுகாவலர்கள்’
இராஜஸ்தானில் லாரியில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமிய இளைஞரை நிர்வாணமாக்கி, அடித்து துன்புறுத்தி அதை படங்களாகப் பிடித்து இந்துத்துவ வெறியர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். மே 30-ஆம் தேதி நடந்திருக்கிறது இந்த சம்பவம். ‘கவ் ரக்ஷா தள்’ (பசு பாதுகாப்பு இயக்கம்) என்ற கும்பல், பசுவைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மனிதத்தன்மையற்ற செயல்களைச் செய்து அதையே பெருமையாக பகிர்ந்தும் வருகிறார்கள். இந்தச் சம்பவத்தின் போது, போலீஸ்காரர் ஒருவரும் அருகில் இருக்கிறார். ராஜஸ்தானில் பாஜக ஆள்கிறது. இந்தப் படங்களை … Continue reading மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமிய இளைஞரை நிர்வாணமாக்கி, அடித்து துன்புறுத்தி, படங்களை பகிர்ந்துகொள்ளும் ‘பசு பாதுகாவலர்கள்’
குஜராத் படுகொலை வழக்கில் நாளை தீர்ப்பு
குஜராத்தில் நடந்த படுகொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அகமதாபாத் உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த தகவலின் அடிப்படை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் படுகொலை வழக்கில் 2 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கலவரத்தில் ஈடுபட்டது, குற்றச் சதியில் ஈடுபட்டது, கொலை, அகமதாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் 69 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. … Continue reading குஜராத் படுகொலை வழக்கில் நாளை தீர்ப்பு
அது மாட்டிறைச்சி; ஆனால் காலாச்சார காவலர்களான தாத்ரி கொலைக்காரர்கள் குறித்து…
Lalita Panicker, Hindustan Times ‘இது ஒரு எதிர்பாராத சம்பவம்; வகுப்புவாதம் தொடர்பானதல்ல’ மத்திய கலாச்சார அமைச்சர் மகேஸ் சர்மா சொன்னார். கடந்த டிசம்பர் 2015ல் ஒரு கும்பலால் உத்திரபிரதேசம், தாத்ரியில் அடித்துக் கொள்ளப்பட்ட முகமது அக்லக்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லப் போன இடத்தில் உதிர்த்த வார்த்தைகள் இவை. அக்லக்கின் வீட்டு குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்த இறைச்சியை, நமது கலாச்சாரக் காவலர்கள் மாட்டிறைச்சி என கண்டுபிடித்து, அக்லக்கின் வீட்டில் இருந்த தையல் எந்திரத்தாலே அவருடைய தலையில் தாக்கியதால் … Continue reading அது மாட்டிறைச்சி; ஆனால் காலாச்சார காவலர்களான தாத்ரி கொலைக்காரர்கள் குறித்து…
குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட உண்மைகளை புத்தகமாக்கிய ரானா அயூப்
தெஹல்கா ஏட்டின் ஆசிரியராக இருந்தவர் ரானா அயூப்,“குஜராத் கோப்புகள் : மறைக்கப் பட்ட விவரங்கள்’’ என்று குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் முஸ்லிம் களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகளின்போது நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து ஒரு நூல் எழுதி இப்போது வெளியாகி இருக்கிறது. ரானா அயூப், அப்போது குஜராத் அரசாங்கத்தின் உள்துறை செயலாளராக இருந்த அசோக் நாராயணன் என்பவரைப் பேட்டி கண்டு, ரகசியமாக ஒலிப்பதிவுசெய்து அதனை இந்த நூலில் வெளியிட்டிருக்கிறார். அது தொடர்பான அம்சங்கள் வருமாறு: தி ஒயர் இணைய … Continue reading குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட உண்மைகளை புத்தகமாக்கிய ரானா அயூப்
இரண்டு ஆண்டுகள் மோடி ஆட்சி எப்படி இருக்கிறது? சீதாராம் யெச்சூரி நேர்காணல்
சேம நல அரசு என்பதை மெல்ல மெல்ல அழித்து அந்நிய மூலதனத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்றதாக அரசாங்கத்தினை மாற்றக் கூடிய ஏற்பாட்டினை செய்து வருகிறது மோடி அரசு. உலக நிதி மூலதனத்தை வேண்டுமென்றே தாஜா செய்யும் மத்திய அரசாங்கத்தின் இந்த நோக்கத்தின் பின்னணியில் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கமில்லை. மாறாக பாரதீய ஜனதா கட்சியின் மிக ஆபத்தான பிரித்தாளும் நிகழ்ச்சி நிரலுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறும் நோக்கமே உள்ளது என்கிறார் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் … Continue reading இரண்டு ஆண்டுகள் மோடி ஆட்சி எப்படி இருக்கிறது? சீதாராம் யெச்சூரி நேர்காணல்
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து பிரக்யா சிங் எப்படி விடுக்கப்பட்டார்?
மலேகான் குண்டுவெடிப்பு! கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடி குண்டு தாக்குதல் நடத் தப்பட்டது. அதேபோல குஜராத் மாநிலம் மடோசா என்ற இடத்தில் அதே நாளில் ஒரு குண்டு வெடித்தது. மாலேகான் சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர். குஜராத்தில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்துத்துவ அமைப்புகளுக்குத் தொடர்பு: 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் … Continue reading மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து பிரக்யா சிங் எப்படி விடுக்கப்பட்டார்?
மாணவர்களின் தாய் ஸ்மிருதி இரானிக்கு கன்னய்யா குமார் கடிதம்!
ஜேஎன்யு வளாகத்தில் பிப்ர வரி 9 அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்த உயர் மட்ட அளவிலான விசாரணைக் குழு அந்த நிகழ்வு குறித்து ஜோட னையாகப் புனையப்பட்ட வீடி யோவை ஆதாரமாகக் கொண்டு இடதுசாரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது பல்வேறுவிதமான தண்டனைகளை விதித்துள்ளது. இதனை எதிர்த்து அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே என் குழந்தைகள் போன்றவர்கள் என்று ஒருசமயம் ஸ்மிருதி இரானி … Continue reading மாணவர்களின் தாய் ஸ்மிருதி இரானிக்கு கன்னய்யா குமார் கடிதம்!
“மரக்கட்டை போல் உணர்ச்சியற்ற துணைவேந்தரை வேறு எங்கும் பார்க்க முடியாது”: 12 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஜேஎன்யூ மாணவர்கள்
“இதுபோன்று மாணவர்களின் நலனில் அக்கறையற்று மரக்கட்டைபோல் உணர்ச்சியற்று இருந்திடும் ஒரு துணைவேந்தரை நாங்கள் எங்கேயும் சந்தித்தது இல்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை நாங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ளமாட்டோம். இது சாகும்வரையிலான உண்ணாவிரதம்,’’ என்று மாணவர் சங்க பொதுச் செயலாளர் ராம நாகா கூறுகிறார். 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களில் ராம நாகாவும் ஒருவர். கன்னய்ய குமார் உட்பட ஆறு பேர் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டதாலும், மருத்துவர்கள் அவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு சிகிச்சையைத் தொடர … Continue reading “மரக்கட்டை போல் உணர்ச்சியற்ற துணைவேந்தரை வேறு எங்கும் பார்க்க முடியாது”: 12 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஜேஎன்யூ மாணவர்கள்
“போராடுங்கள்.. எனது மக்களே போராடுங்கள்”: கவிதை மொழிபெயர்ப்புக்காக வீட்டுக் காவலில் வைத்த இஸ்ரேல் அரசு
அஷ்ரப் ஷிஹாப்தீன் பலஸ்தீன எழுத்தாளரும் கவிஞருமான தாரீன் தாத்தூர் இஸ்ரேலிய அரசினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். “போராடுங்கள்.. எனது மக்களே போராடுங்கள்” என்ற அவரது அரபுக் கவிதையின் ஹீப்ரு மொழிபெயர்ப்பே இத்தண்டனைக்கான காரணி. தங்களைக் காத்துக் கொள்ளப் போராடுங்கள் என்ற கருத்திலமைந்த அந்தக் கவிதையை இஸ்ரேலிய அரசுக்கெதிரான தூண்டுதல் என்று கருதி அவர் கடந்த ஒக்டோபர் இறுதியில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு 3 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது டெல்அவிவ் புறநகர்ப் பகுதியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். “எமது மக்களைக் … Continue reading “போராடுங்கள்.. எனது மக்களே போராடுங்கள்”: கவிதை மொழிபெயர்ப்புக்காக வீட்டுக் காவலில் வைத்த இஸ்ரேல் அரசு
கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்
கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் முரண்படுகிறீர்களா என்பது உள்ளிட்ட தி எகனாமிக் டைம்ஸ் நாளேட்டின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. தமிழில் : ச.வீரமணி. 2016ல் யார் வெற்றி பெறுவார்கள்? இடதுமுன்னணி கூட்டணியா? அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியா? இது ஒரு போராட்டம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் உட்பட கடந்த சில சுற்று தேர்தல்கள் நடந்தபோது இருந்த நிலை இன்று கிடையாது. இந்த முறை, அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம். ... ஒரு … Continue reading கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்
ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு அனுமதி மறுப்பு; மரத்தடியில் உரை நிகழ்த்திய பேராசிரியர்
அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் விழாவை ஒட்டி மெட்ராஸ் ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், பேராசிரியர் ராம் புன்யாணியின் உரைக்கு ஏற்பாடு செய்திருந்தது. ‘மத தேசியவாதத்திலிருந்து அம்பேத்கரின் சிந்தனைகளை விடுவித்தல்’ என்ற பொருளில் நிகழ இருந்த இந்த உரை, ஐஐடியின் IC & SR அரங்கில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ந் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்வு ஆரம்பிக்க இருந்த கடைசி நிமிடத்தில் திடீரென அனுமதியை மறுத்திருக்கிறது ஐஐடி நிர்வாகம். காரணம் கேட்டபோது, மாணவர் அமைப்புகள் நடத்தும் … Continue reading ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு அனுமதி மறுப்பு; மரத்தடியில் உரை நிகழ்த்திய பேராசிரியர்
“முஸ்லிம் பெண்கள் செருப்பைவிட கீழான நிலையில் இருக்கிறார்கள்”:பாஜக எம்பி சாக்ஷி மகராஜ்
பாஜக எம்பியும் சாமியாருமான சாக்ஷி மகராஜ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “முஸ்லிம் பெண்கள் செருப்பைவிட கீழான நிலையில் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “முஸ்லிம் பெண்களுக்கு மசூதிகளில் நமாஸ் செய்யும் உரிமை மறுக்கப்படுகிறது. நீதிமன்றம் தலையிட்டு இந்த உரிமையைப் பெற்றுத் தர வேண்டும். இந்த நாடு அரசியலமைப்பு சட்டப்படி இயங்க வேண்டும், ஃபத்வாக்களின் படி அல்ல” என்று அவர் தெரிவித்தார். சாக்ஷி மகராஜ், சர்ச்சைகளால் பெயர் பெற்றவர், கடந்த ஆண்டும் இந்து பெண்கள் நான்கு … Continue reading “முஸ்லிம் பெண்கள் செருப்பைவிட கீழான நிலையில் இருக்கிறார்கள்”:பாஜக எம்பி சாக்ஷி மகராஜ்
சாதிக் கிறித்தவர்கள் இந்துமதத்தைக் காப்பாற்றுகிறார்கள்!
ரவிக்குமார் லயோலா கல்லூரியில் நடைபெற்ற தலித் கிறித்தவர்களின் மாநாட்டில் நேற்று (14.04.2016) கலந்துகொண்டேன். தடம் தேடி என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை மாநாட்டில் வெளியிட்டார்கள். ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் ஒவ்வொரு மறை மாவட்டத்திலும் எவ்வளவு கிறித்தவர்கள் இருக்கிறார்கள் அதில் தலித் கிறித்தவரின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கிறித்தவர்களின் எண்ணிக்கையில் தலித் கிறித்தவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பதை அந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அப்படியிருந்தும் அவர்கள் திருச்சபை நிர்வாகத்தால் பல்வேறு சாதிய பாகுபாடுகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதையும் அந்த … Continue reading சாதிக் கிறித்தவர்கள் இந்துமதத்தைக் காப்பாற்றுகிறார்கள்!
‘கேதர்நாத்தில் 5 ஆயிரம் பேர் பலியாக தேனிலவு கொண்டாட்டமே காரணமாம்’ துவாரகை சங்கராச்சாரி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு திடீர் என்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த 5 ஆயிரம் பேர் பலியாகினர். 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இச்சம்பவம் பற்றி துவாரகை சங்கராச்சாரி ஸ்வரூபானந்த சரஸ்வதி பேட்டி அளித்துள்ளார். அதில், கேதர்நாத்திற்கு பக்திக்காக அல்லாமல், தேனிலவு கொண்டாடுவதற்கும், சுற்றுலாவுக்காகவும் செல்வதுதான் அங்கு வெள்ளம் ஏற்பட்டு, 5 ஆயிரம் பேர் பலியாக காரணம் என்று சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளார். புனித தலங்களுக்கு தேனிலவு, சுற்றுலா செல்வதை … Continue reading ‘கேதர்நாத்தில் 5 ஆயிரம் பேர் பலியாக தேனிலவு கொண்டாட்டமே காரணமாம்’ துவாரகை சங்கராச்சாரி
#அவசியம் படிக்க; இந்துத்துவ பயிற்சி மையங்களாக மாறிவரும் திருப்பூர் பகுதி குழந்தைகள் காப்பகங்கள்!
இனியன் நண்பன் பிரபா திருச்சியிலிருந்து சென்னைக்குக் காலை வந்ததும் வழக்கம்போல் அறைக்குத்தான் வந்திருந்தான் இன்று. வந்தவன் கடந்த ஒரு மாதகாலமாக child protection task force உடன் இனைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் அதில் வளரும் குழந்தைகள் பற்றிய ஆய்விற்காக அமைக்கப்பட்ட குழுவோடு வேலைச் செய்த தனது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தான். அப்போது திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேலான காப்பகங்கள் "இந்து சேவா" அமைப்புகள் மற்றும் "RSS" யின் … Continue reading #அவசியம் படிக்க; இந்துத்துவ பயிற்சி மையங்களாக மாறிவரும் திருப்பூர் பகுதி குழந்தைகள் காப்பகங்கள்!
“பாரத் மாதா கி ஜெய் சொல்லாதவர்களின் தலையை ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வெட்டி வீழ்த்தியிருப்போம்”: ராம்தேவ்
யோகா குரு, பாபா ராம்தேவ், “பாரத் மாதா கி ஜெய் என சொல்லாதவர்களின் தலையை வெட்டுவோம். ஆனால் இங்கே சட்டத்தையும் அரசியலமைப்பும் நாம் மதிப்பதால் அதை செய்யவில்லை. இல்லையென்றால் இங்கே ஒருவருடைய தலையை அல்ல, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கானவர்களின் தலையை வெட்டி வீசியிருப்போம்” என ஆர் எஸ் எஸ் ஏற்பாடு செய்திருந்த சத்பாவ்னா சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது தெரிவித்திருக்கிறார். சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஹரியாணாவில் நடந்தது. ராம் தேவின் பேச்சுக்கு … Continue reading “பாரத் மாதா கி ஜெய் சொல்லாதவர்களின் தலையை ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வெட்டி வீழ்த்தியிருப்போம்”: ராம்தேவ்
”இடஒதுக்கீட்டில் படித்தவர்கள் கட்டிய பாலங்கள் விழுந்து நொறுங்கத்தான் செய்யும்”: பிரபல பங்கு வர்த்தகர் மோதிலால் ஆஸ்வாலின் கருத்து
பங்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமான மோதிலால் ஆஸ்வாலின் நிறுவனர் மோதிலால் ஆஸ்வால், கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தியது குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை எழுதியிருந்தார். நாட்டில் உள்ள பாதி பொறியாளர்கள் இடஒதுக்கீட்டில் படித்து பட்டம் பெற்றவர்கள். அப்படிப்பட்டவர்கள் கட்டிய கட்டடம் இடிந்துவிழத்தான் செய்யும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. என்று சனிக்கிழமை காலை ட்விட்டியிருந்தார். இந்த ட்விட்டுக்கும் எதிர்ப்பு வலுக்கவே, சில மணி நேரங்களில் அது ஃபார்வேர்டு செய்யப்பட்ட குறுஞ்செய்தி, எனக் கூறி அதை நீக்கிவிட்டார். https://twitter.com/MrMotilalOswal/status/716133044181053441 … Continue reading ”இடஒதுக்கீட்டில் படித்தவர்கள் கட்டிய பாலங்கள் விழுந்து நொறுங்கத்தான் செய்யும்”: பிரபல பங்கு வர்த்தகர் மோதிலால் ஆஸ்வாலின் கருத்து