கீழத் தஞ்சையின் சாதிய வன்கொடுமைகள் | ஒரு பண்ணையடிமையின் விடுதலை போராட்டம்

எழுத்தாளர் யுகபாரதி தோழர் என்.ராமகிருஷ்ணனின் `ஒரு பண்ணையடிமையின் விடுதலை போராட்டம்’ நூலை மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தோன்றிற்று. 1993இல் `பண்ணையடிமைத் தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி’ என்னும் தலைப்பில் வெளிவந்த அதே நூல், 2010இல் மேற்கூறிய தலைப்புடன் வந்தது. ஒன்றிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக, கீழத் தஞ்சையில் நடந்த சாதிய வன்கொடுமைகளை எழுதியும் சொல்லியும் மாளாது. இன்றுவரை கம்யூனிஸ்ட்டுக் கட்சி அங்கே உயிர்ப்புடன் இருப்பதற்குத் தோழர் சீனிவாசராவ் போன்றோரின் அர்ப்பணிப்பும் ஆவேசமும்மிக்க போராட்டங்களே காரணம். தோழர்களை … Continue reading கீழத் தஞ்சையின் சாதிய வன்கொடுமைகள் | ஒரு பண்ணையடிமையின் விடுதலை போராட்டம்

#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்!

பார்வையற்றவன் இலவசம்! இலவசம்! நான் எழுதி அமேசானில் வெளியிட்ட நூதன பிச்சைக்காரர்கள் நாடகத்தை இன்று மதியம் ஒரு மணியிலிருந்து நாளை நண்பகல் 12 59 வரை இலவசமாகப் தரவிறக்கிக் கொள்ளலாம். இதுதான் இந்த போஸ்டின் முக்கிய செய்தி. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இதனைத் தொடர்ந்து நீண்ட write-up ஒன்று இருக்கிறது. சில வரிகளை மட்டும் வாசிக்கும் அன்பர்களுக்காக போஸ்டின் மெயின் மேட்டரை மேலே குறிப்பிட்டு விட்டேன். பார்வையற்றவர்களுக்கு என்று எழுத்துக் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 200 ஆண்டுகள் … Continue reading #pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்!

நூல் அறிமுகம்: ‘சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் – தொடரும் விவாதம்’

ரங்கநாயகம்மா எழுதிய 'சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கர் போதாது,மார்கஸ் அவசியத் தேவை' என்ற நூலை கொற்றவை மொழிபெயர்ப்பு செய்தார். இந்த நூலுக்கு வந்த எதிர்வினைகள் ஏராளம். கொற்றவை இந்த நூலின் மொழிபெயர்ப்பாளர்தான் ஆனாலும் அடிப்படையில் அவர் ஒரு சமூக செயற்பாட்டாளர். எனவே அந்த நூலை மையப்படுத்தி எழுந்த விவாதங்களை தொடர்ந்து நடத்த விரும்பியிருக்கக் கூடும். எனவே ஏறக்குறைய அதன் அடுத்த பாகமாக இந்த நூலை கொற்றவை தொகுத்து, மொழிபெயர்த்துள்ளார் போலும். குறளி பதிப்பகம்தான் இந்த … Continue reading நூல் அறிமுகம்: ‘சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் – தொடரும் விவாதம்’

வட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்

நூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்பு முக்கியமானது.இவரை பல்வேறு இதழ்களுக்காக, பல்வேறு ஆளுமைகள் நேர்காணல் செய்துவந்துள்ளனர். அதன் தொகுப்புதான் இந்த நூல். விகடன் தடம், தீராநதி, தலித் முரசு, மாற்றுவெளி, சண்டே … Continue reading வட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்

நூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..? காவியா..?

பீட்டர் துரைராஜ் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க இருக்கிறது. நம் சமூகத்தில் கருத்துருவாக்கத்திலும், அணிச் சேர்க்கையிலும் சாதி ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலையில் மதுரை வழக்கறிஞர் தி.லஜபதி ராய் 'நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...?' என்ற நூலை எழுதி வெளியிட்டு இருக்கிறார். நூல் வெளியீட்டு விழாவை மதுரை, உலக தமிழ்ச்சங்க அரங்கில் நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்கள்.இறுதி நேரத்தில் அரங்க அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டது. நீதிமன்ற தலையீட்டிற்குப் பின்பு அதே இடத்தில், அதே நாளில் புத்தக வெளியீட்டு … Continue reading நூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..? காவியா..?

தீஸ்தா செதால்வாட்: அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்

பீட்டர் துரைராஜ் 'Foot Soldier of the Constitution- A Memoir' என்ற நூலை Left word Books வெளியிட்டுள்ளது. தீஸ்தா செதால்வாட் எழுதிய இந்த நூலின் தமிழாக்கத்தை 'நினைவோடை - அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்' என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ச.வீரமணி - தஞ்சை ரமேஷ் மொழிபெயர்த்து உள்ளனர். தீஸ்தா செதால்வாட்டின் கொள்ளுதாத்தா ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஜெனரல் டையரை குறுக்கு விசாரணை செய்தவர்.இவருடைய தாத்தா எம்.சி செதால்வாட் இந்திய அரசாங்கத்தின் முதல் … Continue reading தீஸ்தா செதால்வாட்: அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்

நூல் அறிமுகம்: ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’

பீட்டர் துரைராஜ் "என் ஆசான் காரல் மார்க்ஸ்" என்ற பெருமிதத்தோடு தொடங்கும் இந்த நூல் அம்பேத்கரை ஆய்வு செய்கிறது. அம்பேத்கர் எழுதிய 'புத்தரும் அவர் தம்மமும்' என்ற நூல் புத்தர் குறித்து பேசுகிறது.அது பரவலாக வாசிக்கப்பட்டும் வருகிறது. இந்து மதத்திலிருந்து விலகிய அம்பேத்கர் பகுத்தறிவுவாதியாக மாறவில்லை; கிறிஸ்தவ மதத்திற்கோ,இஸ்லாமிய மதத்திற்கோ,சீக்கிய மதத்திற்கோ மாறவில்லை. அவர் பௌத்த மதத்தை தழுவினார்.இதன் காரண,காரியங்கள் குறித்து வசுமித்ர நூல் விரிவாக,மிக விரிவாக ஆய்வு செய்கிறது. "எஸ்.வி.ராஜதுரை,வ.கீதா,அ.மார்க்ஸ், ரவிக்குமார், பிரேம்,முத்துமோகன்,அருணன் என எவரும் … Continue reading நூல் அறிமுகம்: ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’

“அடையாள அரசியலால் இடதுசாரி அரசியல் பலவீனப்படுத்தப்படுகிறது”: மார்க்சிய ஆய்வாளர் எஸ். பாலச்சந்திரன்

இந்தியாவில் சாதி இயக்கங்கள் அடையாள அரசியலை பேசுகின்றன. அவை பொருளாதார காரணிகளை புறக்கணித்து விட்டன; மார்க்சியத்தை புறக்கணித்து விட்டன. சாதி மறுப்பு போராட்டம் புறக்கணிக்கப் பட்டது.

நூல் அறிமுகம்: அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’

அ.முத்துலிங்கத்தின் வழக்கமான நடை; அதே எள்ளல், மெல்லிய நகைச்சுவை, ஆழம் என எல்லாமும் உண்டு.

நூல் அறிமுகம்: தொ. பத்தினாதனின் ‘தமிழகத்தின் ஈழ அகதிகள்’

தினகரன் செல்லையா இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகம் சென்றபோது மதுரையை ஒட்டி ஈழ அகதிகள் இருக்கும் முகாமிற்கு சென்று வந்ததிலிருந்து அவர்களின் அவல நிலை அடிக்கடி மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்பதில் பலவித சிக்கல்கள். உண்மையில் தமிழ்நாட்டில் உரிமைகளே இல்லாத கடைக்கோடி மனிதர்களாக,அடிமைகள் போல், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையைவிட கொடுமையான நிலையில் இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழ அகதிகளுக்கு ஆதரவாய் குரல் எழுப்புவோர் எவருமில்லை. … Continue reading நூல் அறிமுகம்: தொ. பத்தினாதனின் ‘தமிழகத்தின் ஈழ அகதிகள்’

இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’

குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார்.குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார்.

காணாததைக் கண்ட ஆமான்: மு.வி. நந்தினியின் சூழலியல் குறித்த கட்டுரைகள்

இந்த நூல் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்; பருந்துப் பார்வையைக் கொடுக்கும். சுற்றுச்சூழல் குறித்த தமிழ்நாட்டின் தற்போதைய முக்கிய ஆளுமைகள் இந்த நூல் முழுவதும் ஏதோ ஒரு வகையில் விரவிக் கிடக்கின்றனர்; அதேபோல பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் கோடிட்டு காட்டப்படுகின்றன.

கொக்குகளுக்காகவே வானம்: தியாக சேகரின் ஓரிகாமி மடிப்பு கலை நூல் வெளியீடு!

“சாதாரண சின்னகிராமத்தில் இருக்கும் ஒரு குழந்தை தான் மடித்துசெய்த கொக்கையோ, தும்பியையோ, யானையையோ உயிர்பொம்மையாக நினைத்து அதை எடுத்துக்கொண்டுபோய் அவளுடைய விளையாட்டுப்பொருட்களுடன் சேர்த்து வைத்துகொள்வாள் எனில் அதுதான் நான் நம்பும் புரட்சி”

நூல் அறிமுகம்: “கருத்தாயுதம் வகுப்புவாதத்தை எதிர் கொள்ள “: பாலகோபால்

பீட்டர் துரைராஜ் "மறைந்த டாக்டர் பாலகோபால் என மதிப்பிற்குரிய வழிகாட்டி. அவர் தெலுங்கில் எழுதிய 36 கட்டுரைகளை நீண்ட காலம் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த மாதவ்,  வி.பி. சிந்தன் நினைவில் தொடங்கிய சிந்தன் பதிப்பகம் மூலம் வெளியிட்டு தமிழுக்கு இந்தக் கொடையை அளித்துள்ளார்" என்று தன் முகநூலில் குறிப்படுகிறார் பேரா. அ.மார்க்ஸ். 1983 முதல் 2009 வரை தெலுங்கில் இந்துத்துவம் தொடர்பாக மனித உரிமைப் போராளி பாலகோபால் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தமிழ், தெலுங்கு … Continue reading நூல் அறிமுகம்: “கருத்தாயுதம் வகுப்புவாதத்தை எதிர் கொள்ள “: பாலகோபால்

நூல் அறிமுகம்: ‘பொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும்’

இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது அந்த 26 உலகப் படங்களையும் பார்த்து முடித்த நிறைவை உணர்வீர்கள்

புதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்: ஏ.சண்முகானந்தம்

ஏ.சண்முகானந்தம் கடந்த 1970-களில் தொடங்கி நாளது வரை தமிழ்ச் சூழலில் ரஷ்ய இலக்கியங்களின் பாதிப்பு தமிழ்ப் படைப்பாளிகளிடம் இருந்து வருகிறது. தாய், அன்னா கரீனைனா, தந்தையரும் தனயரும், கசாக்குகள், புத்துயிர்ப்பு, குற்றமும் தண்டனையும், போரும் அமைதியும், முதல் ஆசிரியர், ஜமீலா, வெண்ணிற இரவுகள் என தமிழர்களை ஈர்த்த ரஷ்ய இலக்கியங்களின் வரிசை மிக நீண்டது. அந்த வரிசையில், நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின், 'வீரம் விளைந்தது' நாவல் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. செர்மன் நாட்டு படையின் ஊடுருவல், உள்நாட்டு முதலாளிகளின் போர், … Continue reading புதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்: ஏ.சண்முகானந்தம்

” பார்த்தீனியம் ” நாவல் இலக்கிய உலகில் , தமிழ் ஈழ வரலாற்றில் நிலைபெறும் !

பீட்டர் துரைராஜ் அமுதன் அடிகள் இலக்கிய விருது மார்ச்சு மாதம் தமிழ் நதிக்கு வழங்கப்பட்டுள்ளது. வாசகசாலை இந்நாவலுக்கு திறனாய்வுக் கூட்டம் நடத்தியுள்ளது. விகடன்.காமிற்காக நியாஸ் அகமது தொகுத்த 2016 ல் கவனம் கொள்ளத் தக்க நூட்கள் பட்டியலில் இதனைப் பரிந்துரைத்திருக்கிறார் பத்திரிக்கையாளர் மாரி செல்வராஜ். இந்நாவலைப் படித்து முடித்தபிறகு நாம் ஒரு மாற்றத்தை கண்டிப்பாக உணரமுடியும் என அறுதியிட்டு கூறுகிறார் தி.க. வழக்கறிஞர் அருள்மொழி. இவ்வளவு அங்கீகாரத்திற்கும் பொருத்தமானது இந்த நாவல். கிட்டத்தட்ட 1983 முதல் 1990 … Continue reading ” பார்த்தீனியம் ” நாவல் இலக்கிய உலகில் , தமிழ் ஈழ வரலாற்றில் நிலைபெறும் !

”பகுத்தறிவு பேசும் உயிர்மை சுஜாதா என்ற பார்ப்பனர் பெயரில் விருது தரலாமா?”

உயிர்மை இதழ் வருடந்தோறும் வழங்கி வரும் ‘சுஜாதா’ பெயரிலான விருதுகளை அறிவித்துள்ளது. விருதுக்குப் பின்னால் சர்ச்சைகள் கிளம்புவதுபோல் ‘சுஜாதா விருது’ அறிவிப்பையொட்டி இலக்கியவாதிகள் சில கருத்துகளை முன்வைக்க, அது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. எழுத்தாளர் மாலதி மைத்ரி தன்னுடைய முகநூல் பதிவில்  “சுஜாத்தா பெயரில் பெரும் பார்ப்பனப் பத்திரிகை விருதுக் கொடுக்கலாம். தீவிர இலக்கிய பகுத்தறிவு பங்காளின்னு சொல்லிக்கொள்ளும் நபர் கொடுப்பதற்கு பெயர் பார்ப்பனிய காவடி அரசியல். அதைவிட சக பெண்படைப்பாளியை ஆபாசமாக திட்டி எழுதிய மனுஷ்ய புத்திரனுடன் … Continue reading ”பகுத்தறிவு பேசும் உயிர்மை சுஜாதா என்ற பார்ப்பனர் பெயரில் விருது தரலாமா?”

உலக புத்தக தினத்தில் 30% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடியில் நூல்கள்!

உலக புத்தக தினத்தை ஒட்டி 50% வரையிலான சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளன பதிப்பகங்கள். சினிமா தொடர்பான நூல்களை வெளியிடும் பேசாமொழி பதிப்பகம்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 22, 23 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களும் பியூர் சினிமா புத்தக அங்காடியில் பேசாமொழி பதிப்பக புத்தகங்கள்(மிஷ்கின், வஸந்த், சாரு நிவேதிதா, விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்) புத்தகங்கள் அனைத்தும் 50 சதவீத கழிவிலும், மற்ற பதிப்பக புத்தகங்கள் 15 சதவீத கழிவிலும் விற்பனைக்கு கிடைக்கும்.   முற்போக்கு-ஈழம் … Continue reading உலக புத்தக தினத்தில் 30% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடியில் நூல்கள்!

விளிம்புக்கு அப்பால்: புதிய படைப்பாளிகளின் சிறுகதை சிறப்பிதழ்!

‘அகநாழிகை’ பொன்வாசுதேவன் இலக்கியம் என்பது கோட்பாடுகளிலும், இஸங்களிலும் சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இலக்கியத்தைச் செய்பவர்களின் நிலை இதுதான். கண்ணுக்குத் தெரியாத பொறியில் சிக்கிக்கொண்டு விவாதங்களும், சண்டைகளும், புறங்கூறல்களும் பெருகிக்கொண்டிருக்கின்றன. எத்தனை எழுத்தாளர்கள் புதிதாக எழுத வருகிறவர்களின் படைப்புகளைப் படிக்கிறார்கள் என்பது தெரியாது. எத்தனை பத்திரிகைகள் புதிய படைப்பாளிகளின் படைப்புகளைப் படித்து அதை வெளியிடுவதில் அக்கறை காட்டுகிறார்கள் என்பது கேள்விக்குறி. ஓடுகிற குதிரையின்மீது அல்லது விரட்டி ஓட வைக்க முடியுமென்று நம்பிக்கை உள்ளவர்களின் மீதுதான் பதிப்பகங்களின் கவனமெல்லாம். புகழ், புகழ … Continue reading விளிம்புக்கு அப்பால்: புதிய படைப்பாளிகளின் சிறுகதை சிறப்பிதழ்!

#புத்தகம்2017: பொய்-வேடங்களில் மன்னன்… இப்பொழுது தலைநகர் டெல்லியில்!

மோடியின் பொய் வாக்குறுதிகளை அம்பலப்படுத்தும் 'பொய்-வேடங்களில் மன்னன் … இப்பொழுது தலைநகர் டெல்லியில் !' நூலிம் பின்னணியில் உள்ள தகவல்கள் இங்கே... ● தமிழில் வெளிவந்துள்ள “பொய்-வேடங்களில் மன்னன் … இப்பொழுது தலைநகர் டெல்லியில் (பாகம் 1) …..!” நூலின் மூலப்பிரதியின் தலைப்பு “Fekuji Have Dilli Ma” . இந்த குஜராத் பதிப்பானது , மிகச்சரியாக மைய அரசில் மோடி பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நாளான மே 26 2016 அன்று குஜராத் மாநில … Continue reading #புத்தகம்2017: பொய்-வேடங்களில் மன்னன்… இப்பொழுது தலைநகர் டெல்லியில்!

நெடுஞ்சாலை வாழ்க்கையும் நான் தீண்டிய இரும்புக் குதிரையும்!

கே.ஏ.பத்மஜா நூல்: நெடுஞ்சாலை வாழ்க்கை | நூலாசிரியர்: கா.பாலமுருகன் | வெளியீடு: விகடன் பிரசுரம் சிறுவயது முதல் பயணத்தில் ஜன்னல் வழியில் பார்க்கக்கூடிய அழகிய உலகத்தை நான் ரசித்ததே இல்லை. வாந்தி வரக்கூடும் என்பதால் வாகனத்தில் ஏறியதில் இருந்து இறங்கும் வரை தலையைக் கவிழ்த்தபடியே பயணிப்பேன். இதுவே பயணங்களை வெறுப்பதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்துவிட்டது. இந்த ஆண்டில் இருந்து அதிகம் வாசிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்த எனக்கு, பிறந்தநாள் பரிசாக கிடைத்த புத்தகம், கா.பாலமுருகன் எழுதிய … Continue reading நெடுஞ்சாலை வாழ்க்கையும் நான் தீண்டிய இரும்புக் குதிரையும்!

விவசாயிகள் தற்கொலை ஆவணப்படம், சோவியத் படம் திரையிடல், கருத்துரைகள்

காவிரி விவசாயிகள் தற்கொலைகள் குறித்து பூவுலகின் நண்பர்கள் நடத்தும் கண்டனக் கூட்டம் இறந்தாய் வாழி காவிரி - விவசாயிகள் தற்கொலை -ஆவணப்படத் தொகுப்பு திரையிடல் https://youtu.be/xx1583m_uAk நாள்-04-02-2017 சனிக்கிழமை மாலை 6.00 மணி, BEFI அரங்கம்- 17, அமீர்ஜான் சாலை, சூளைமேடுசென்னை கருத்துரை பாமயன், இயற்கை வேளாண் அறிஞர் முனைவர் விஜயபாஸ்கர், MIDS பார்த்தசாரதி, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு இதுவரை காவிரிக் கரையிலே 220க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நெல்மணிகள் பால் பிடிக்கும் பருவத்திலே … Continue reading விவசாயிகள் தற்கொலை ஆவணப்படம், சோவியத் படம் திரையிடல், கருத்துரைகள்

“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ”: தமிழ் ஸ்டுடியோ அருண்

“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ” என்கிறார் ‘தமிழ் ஸ்டுடியோ’ மோ. அருண். புத்தக சந்தையை ஒட்டி, தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில், “காசு வைத்துள்ள பெரிய சினிமா இயக்குநர்கள் பலரும்கூட புத்தகங்கள் வாங்காமல் கைவீசிக்கொண்டுதான் போகிறார்கள். வெறுமனே நானும் புத்தகச் சந்தைக்கு வந்தேன் என்று சொல்வாதாலேயே  நல்ல சினிமாவை எடுத்து விட முடியாது.. படிக்க வேண்டும்...சினிமா புத்தகங்கள்கூட அடுத்த இடத்தில் வையுங்கள். இலக்கியம், அரசியல் என … Continue reading “பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ”: தமிழ் ஸ்டுடியோ அருண்

“மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்” ‘யாவரும்’ ஜீவ கரிகாலன்

"மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்" என்கிறார் எழுத்தாளரும் ‘யாவரும்’ பதிப்பக பதிப்பாளர்களில் ஒருவருமான ஜீவ கரிகாலன். புத்தக சந்தையை ஒட்டி தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘யாவரும்’ பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி குறித்தும் பதிப்பகம் ஆரம்பித்த பிறகு சக எழுத்தாளர்கள் செய்த அவதூறுகள், அதை எதிர்கொண்ட விதம் குறித்தும் அவர் பேசினார். வீடியோ இணைப்பு கீழே... https://youtu.be/w3ytj8yjdCk

நகரத்தார் வாழ்க்கைப் பின்னம்: நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் தொடர்ந்து ஈழப் படைப்பிலக்கியங்கள் வாசித்துக் கொண்டிருந்தேன். ஈழப் போருக்கும் தமிழின அழித்தொழிப்புக்கும் பிந்திய அவலச் சுவை இலக்கியங்கள். எனினும் தமிழ்ப் படைப்பாக்கத்தின் புதிய எல்லைகளைத் தொட்டுப் பேசுபவை. மேச்சேரி, ‘களரி தொல் கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மன்றம்’ சேலத்தில் நடத்திய முழு நாள் கருத்தரங்கை முன்னோட்டு. இதுபோன்ற கருத்தரங்குகளில்தான் ஈழத் தமிழனுக்கு எதிரான முற்போக்குப் பகை முகங்களும் திரை கிழிபட்டுக் கோசம் காட்டுவதைக் காண முடிகிறது. கருத்தரங்குக்காக வாசித்ததைத் தொடர்ந்தும் சில புத்தகங்கள் … Continue reading நகரத்தார் வாழ்க்கைப் பின்னம்: நாஞ்சில் நாடன்

#புத்தகம்2017: நான் பேசிவிட்டேன் … என் ஆன்மாவை காப்பாற்றி விட்டேன்…

அருண் நெடுஞ்செழியன் "நான் பேசிவிட்டேன் ...என் ஆன்மாவை காப்பாற்றி விட்டேன் ..." கோத்தா செயல்திட்டம் மீதான விமர்சன நூலில், கார்ல் மார்க்சின் இறுதி வரிகள் இவை .. கோத்தா செயல்திட்டம் என்றால் என்ன? இது குறித்து மார்க்ஸ் பேசாமல் இருந்தால் என்ன நடந்திருக்கும்?இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் 1875 ஆம் ஆண்டில் மார்க்ஸ் எழுதிய கோத்த செயல்திட்டம் மீதான விமர்சனம் எந்தளவு பொருத்தப்பாடு உள்ளது? சுருக்கமாக பார்ப்போம் .. மார்க்சும் எங்கெல்சும் அக்காலகட்டத்தில் இருந்த ஏனையே தொழிலாளர்கள் … Continue reading #புத்தகம்2017: நான் பேசிவிட்டேன் … என் ஆன்மாவை காப்பாற்றி விட்டேன்…

#புத்தகம்2017: கதைச் சொல்லிகளின் கதை!

இனியன் ஒரு தலைமுறை சமூக மாற்றம் அல்லது வளர்ச்சி நிகழுகிற பொழுது அதற்கு நேர் எதிரான முந்தைய தலைமுறையினரின் இழப்புகள் மற்றும் மனோநிலைப் போன்றவற்றை எப்படி அவதானித்திட இயலும். அதிலும் குறிப்பாகத் தொழில்நுட்ப வளர்ச்சி முதல் பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள் வரை நிகழத் துவங்கிய 80களின் காலக்கட்டத்திலிருந்த முந்தைய தலைமுறையினரின் வாழ்வியல் முறைகள், அதன் அழகு, சிக்கல்கள், மனிதர்களின் பண்புகள், அப்போதிருந்த ஏற்றத்தாழ்வுகள், சாதிய நிலைகள், வன்மங்கள், பழிவாங்கல் என அனைத்தையும் பேசியிருக்கிற நாவல் புத்தகம்தான் அப்பணசாமியின் … Continue reading #புத்தகம்2017: கதைச் சொல்லிகளின் கதை!

#புத்தகம்2017: பொய் – வேடங்களில் மன்னன்…இப்பொழுது தலைநகர் டெல்லியில்

பிரதமர் மோடியின் பல்வேறு காலகட்ட நிலைப்பாடுகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கும் ’BLUFF - MASTER ...NOW IN DELHI' எனும் ஆங்கில புத்தகம் கடந்த வாரம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதே புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. எழும்பூர் இக்சா அரங்கில் கடந்த 4ஆம் தேதி நடந்த நிகழ்வில், ஆங்கிலப் புத்தகத்தை பேராசிரியர் அ.மார்க்ஸ் வெளியிட, சென்னை பல்கலைக்கழக அரசியலறிவியல் துறை பேராசிரியர் இராமு மணிவண்ணன் பெற்றுக்கொண்டார். தமிழாக்கமான ‘பொய் - வேடங்களில் மன்னன்...இப்பொழுது தலைநகர் டெல்லியில்’ எனத் … Continue reading #புத்தகம்2017: பொய் – வேடங்களில் மன்னன்…இப்பொழுது தலைநகர் டெல்லியில்

“புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன்”: எழுத்தாளர் பதிப்பாளர் லக்ஷ்மி சரவணகுமார்

பதிப்பகம் ஆரம்பித்தது தற்செயலானது என்கிறார் இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். ‘மொக்லி’ என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கியிருக்கும் சரவணகுமார்,  2017 சென்னை புத்தக காட்சியை ஒட்டி நான்கு புத்தகங்களை தன்னுடைய பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்திருக்கிறார். லக்ஷ்மி சரவணகுமாருடன் சென்னையில் உரையாடல் நிகழ்த்தியது தி டைம்ஸ் தமிழ்...உரையாடலின் ஒரு பகுதி வீடியோவாக கீழே தரப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளராக தான் பாதிப்பட்ட காரணத்தாலேயே பதிப்பகம் தொடங்கியதாக கூறும் சரவணகுமார், தான் பதிப்பிக்கும் புத்தகங்களின் … Continue reading “புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன்”: எழுத்தாளர் பதிப்பாளர் லக்ஷ்மி சரவணகுமார்

#புத்தகம்2017: அப்புவும் ஆச்சியும் எழுத்தில் இருக்கிறார்கள்

அகரமுதல்வன் ஒரு மனிதனின் வாழ்க்கை கண்விழிக்கும் நேரத்தில் அவனோடு வேட்கை ஒட்டிவிடுகிறது. அவன் தன்னையல்லாத எல்லோரையும் நேசிக்கும் ஒரு மகத்துவத்தை அடைந்து விடுகிறான். அலைக்கழிப்பும் வறுமையும் கனவுகளும் கலக்கங்களும் செருப்பில்லாத அவனின் காலடித்தடங்களை சுவடு எடுத்தபடியே பின்தொடர்கிறது. வாழ்வு ஒரு வேட்டை நாய். நம் வாழ்தல் அதற்கொரு இரை. அதிலிருந்து தப்பியவர் யாருமிலர். எக்கச்சக்கமான குருவிகள் வயலுக்குள் இருந்து ஒரேநேரத்தில் சிறகு விரித்து மேலெழும் காட்சியைப் போல கார்த்திக் புகழேந்தியின் ஊருக்கு செல்லும் வழியெங்கும் சம்பவங்களின் அனுபவங்கள் … Continue reading #புத்தகம்2017: அப்புவும் ஆச்சியும் எழுத்தில் இருக்கிறார்கள்

#புத்தகம்2017: சயாம் ரயில் பாதையின் ரத்த சாட்சியங்கள்!

எங்கள் எம்டி Ramesh Rmr இல்லையேல் இந்த நூல் சாத்தியமாகி இருக்காது. 2013ம் ஆண்டு கோடையில் ஒருநாள் கைபேசியில் அழைத்தார். அப்போது அவர் தெற்காசிய சுற்றுப் பயணத்தில் இருந்தார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சயாம் - பர்மா இடையில் ரயில் பாதை அமைக்க ஜப்பான் முற்பட்டதும், அதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ்த் தொழிலாளர்கள் மரணமடைந்ததையும் குறித்து ஒரு தொடரை எழுதும்படி சொன்னார். இதை ஏற்று அதற்கான ஆராய்ச்சியில் இறங்கியபோது பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. … Continue reading #புத்தகம்2017: சயாம் ரயில் பாதையின் ரத்த சாட்சியங்கள்!

கவிஞர் குமரகுருபரனின் ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’ கவிதைத் தொகுப்பு இரண்டாம் பதிப்பு வெளியீடு!

கிருபா முனுசாமி "ஞானம் நுரைக்கும் போத்தல்" கவிதை தொகுப்பின் முதல் பதிப்பு 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. வெளிவந்த மூன்று மாதங்களிலேயே அத்தொகுப்பின் அனைத்து பிரதிகளும் தீர்ந்துவிட்டமையால் கவிஞர் மாமா குமரகுருபரன் அவர்கள் டிஸ்கவரி புக் பேலஸின் "படி வெளியீடு" வாயிலாக கொண்டுவர விரும்பி திரு.வேடியப்பன் அவர்களை அழைத்து இது தொடர்பாக பேசிவந்ததை அடுத்து "ஞானம் நுரைக்கும் போத்தல்" கவிதை தொகுப்பின் இரண்டாம் பதிப்பு 04.01.2017 அன்று வெளியிடப்பட்டது. எங்கள் குடும்பத்தின் வழக்கமான எந்தவொரு நிகழ்வைப் … Continue reading கவிஞர் குமரகுருபரனின் ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’ கவிதைத் தொகுப்பு இரண்டாம் பதிப்பு வெளியீடு!

#புத்தகம்2017: பா. ஜீவசுந்தரியின் ‘குரலற்றவர்களின் குரல்கள்’!

பா. ஜீவசுந்தரி அதிகார வர்க்கம் தமது செயல்பாடுகள், அலட்சியங்களை நியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதனால் சமூகத்தின் ஒரு பிரிவு பாதிக்கப்படும் போது பாதிப்பற்ற சமூகம் அமைதியையே விரும்புகிறது. ஆனால் அதே பிரிவு பாதிப்புக்குள்ளாகும்போது அமைதியைக் குலைத்துக் கொந்தளிக்கிறது. பெண்கள் எப்போதும் இரண்டாம் படிநிலையில் நிறுத்தப்படும் நிலை பல கேள்விகளை எழுப்பக்கூடியதாக இருக்கிறது. பாலினப் பாகுபாடு குறித்தும் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பும் நிலை சமூகத்தில் நிலவுவது மன ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதன் வெளிப்பாடுகளே பெரும்பான்மையான என்னுடைய … Continue reading #புத்தகம்2017: பா. ஜீவசுந்தரியின் ‘குரலற்றவர்களின் குரல்கள்’!

புத்தகங்களுடன் புத்தாண்டுக்கு வரவேற்பு: இன்று நடைபெறவிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே!

எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் புத்தக விற்பனை நிலையங்களும் புத்தாண்டு கொண்ட்டாட்டத்தை கொண்டாட இருக்கின்றன. எங்கே, என்ன நிகழ்வுகள் நடக்கின்றன...இதோ ஒரு தொகுப்பு... மக்கள் கலைஞர் கே.ஏ.குணசேகரன் நினைவு நூல் தொகுப்பு வெளியிடுகிறது 'புலம்'. இந்நிகழ்வு மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இடம்: கவிக்கோ மன்றம் நாள்: 31.12.2016 மாலை 5 மணி வரவேற்பு: வீ. ரேவதிகுணசேகரன் தலைமை: எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் முன்னிலை: கே.ஏ.கருணாநிதி நூல் வெளியிடுதல்: தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி. நூல் பெறுதல்: பேரா.அ.மார்க்ஸ், பேரா.அரங்க … Continue reading புத்தகங்களுடன் புத்தாண்டுக்கு வரவேற்பு: இன்று நடைபெறவிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே!

#புத்தகம்2017: செல்லாக் காசின் அரசியல்

எந்த ஒரு முதலாளித்துவ அரசும்,தனது வர்க்கச் சார்பு நடவடிக்கையை பட்டவர்த்தனமாக அறிவித்துக்கொண்டு செயல்படுத்துவதில்லை. அது, முதலாளித்துவ வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாகவும், அதற்கு சேவை செய்வதை நாட்டின் நலன் கருதிய சேவையாகவுமே காட்டும். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பகைவர்களைக் கட்டமைத்து தனது சமூக மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள முயலும். எனவே கறுப்பு பண மீட்பு, கள்ளப் பண ஒழிப்பு, தீவிரவாத பணத்தை கட்டுப்படுத்துவது போன்ற விவகாரங்களை அம்பலப்படுத்துவது எவ்வளவு அவசியமோ, அதன் விளைவுகளை கண்டிப்பது எவ்வளவு அவசியமோ, அது … Continue reading #புத்தகம்2017: செல்லாக் காசின் அரசியல்

இரா ஜவகரின் ‘மகளிர் தினம்: உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டு விழா

பத்திரிக்கையாளர் இரா ஜவகரின் 'மகளிர் தினம்: உண்மை வரலாறு' நூல் வெளியீட்டு விழா இன்று  (17.12.2016) மாலை 6 மணி அளவில் உமாபதி அரங்கம்(பழைய ஆனந்த் திரையரங்கம்) இண்ணா சாலையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் சுகந்தி, பேரா.மங்கை, எழுத்தாளர் ஜீவசுந்தரி, பேரா. க.கல்பனா, ஆராய்ச்சி மாணவர் தீபா, ஜான்சி உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

வீழ்ந்தவர்களில் பிழைத்தவன் கதையே அஜ்வா!: சரவணன் சந்திரன்

ஒரு விளையாட்டு வீரனை, அவன் காயமற்று இருக்கிற காலத்தில் களத்திற்கு அனுப்பாமல் இருக்கிற நிலை துயரமானது. அந்தத் துயரத்தைப் பல முறை அனுபவித்திருக்கிறேன். எனவே வாய்ப்புக் கிடைக்கிற போது முழுமையாக ஆடிப் பார்க்க நினைக்கிறேன். இப்போது நல்ல உடல் தகுதியோடு இருப்பதாகவும் கருதுகிறேன். எனக்கு ஏற்கனவே பழக்கமான களம்தான் இது. இங்கிருந்துதான் என்னுடைய தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தேன். இடையில் கொஞ்ச வருடங்கள் பிழைப்புத் தேடி வேறு வேறு நிலங்களில் சுற்றினேன். அது அனுபவங்களைக் கொட்டிக் கொடுத்தது. அந்த … Continue reading வீழ்ந்தவர்களில் பிழைத்தவன் கதையே அஜ்வா!: சரவணன் சந்திரன்

#புத்தகம்2017: ஏர் மகாராசனின் ‘மொழியில் நிமிரும் வரலாறு’!

ஆசைத்தம்பி பச்சை கிளி போல பறக்கிறோம் தாலி பறி கொடுத்தேன் கூரை பறி கொடுத்தேன் கணவனைப் பறிகொடுத்துத் தனிவழி நின்றலஞ்சோம் அழுகையொலி நிற்கவில்லை யார் மனசும் சுகமாயில்லை என ச. முருகபூபதியின் கவிதையோடு ஆரம்பித்து பொறுமைக்கு அர்த்தப்படுத்தப்பட்ட பெண்ணும் நிலமும் பருந்துகளால் சூறையாடப் படும் பொழுது தாய்க் கோழியின் தவிப்பாக மகராசனின் மனநிலையை இந்நூல் பேசுகிறது என்று கவிதை பட்டறை பதிப்பகம் எழுதியதை பார்க்கும் பொது மனசுக்குள் சோகம் இழையோடுகிறது. அடுத்து " அழுதுகிட்டு இருந்தாலும் உழுதுக்கிட்டு இருக்கனும்டா … Continue reading #புத்தகம்2017: ஏர் மகாராசனின் ‘மொழியில் நிமிரும் வரலாறு’!