தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் மேளதாள வாத்தியங்களுடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்நிலையில், டெல்லியில் இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்தப்பின்போது நீட் தேர்வு விலக்கு, மேகதாது அணை விவகாரம், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிப்பு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை … Continue reading பிரதமருக்கு வைகை நதி நாகரிகம் குறித்த நூலை வழங்கிய முதலமைச்சர்!
பகுப்பு: திராவிட அரசியல்
பெண்களுக்கு கல்வியே நிரந்த சொத்து! தாலிக்கு தங்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர்!
பெண்களுக்கு கல்வியே நிரந்த சொத்து எனவும் திருமணம் எனும் தகுதிக்கு வரும் முன் கல்வி எனும் நிரந்த சொத்து பெண்களுக்கு வேண்டும் எனவும் கூறி தாலிக்கு தங்கம் திட்டம் குறித்த சர்ச்சைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக் கிழமை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் … Continue reading பெண்களுக்கு கல்வியே நிரந்த சொத்து! தாலிக்கு தங்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர்!
திராவிடம் மொழியா? திராவிடம் இனமா? திராவிடம் நாடா?
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. முதலமைச்சராக பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் தன்னைப் பற்றிய குறிப்பில் தி திரவிடியன் ஸ்டாக் என்ற குறிப்பை சேர்த்தார். இது சர்ச்சையான நிலையில், தி திரவிடியன் ஸ்டாக் என்ற தலைப்பில் முரசொலியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கட்டுரை எழுதியிருந்தார். இதுகுறித்து தோழர் தியாகு ஆற்றியுள்ள எதிர்வினை: தோழர் சுபவீ … Continue reading திராவிடம் மொழியா? திராவிடம் இனமா? திராவிடம் நாடா?
இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?
எழுத்தாளர் நக்கீரன் சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடனுக்கு நான் அளித்த பேட்டியில், ஆட்சி அமைக்க போகும் கட்சி நிதிநிலைமை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை காரணம் காட்டி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒத்துப்போகும் என்ற கருத்தை தெரிவித்திருந்தேன். இப்போது அதற்கு முன்னரே 'ஆக்சிஜன்' சிக்கலில் பெரும்பாலான கட்சிகள் உடன்பட்டுவிட்டன. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சிக்கல் ஆக்சிஜன் உற்பத்தியில் இல்லை, விநியோகம் மற்றும் போக்குவரத்தில்தான் உள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் வேதாந்தா மட்டுமே. ஆக்சிஜனுக்கு ஒரே தீர்வு என்பது போன்ற … Continue reading இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?
சினிமாவில் நடிக்க உதயநிதி ரூ. 30 ஆயிரம்தான் சம்பளம் வாங்கினாரா?
நரேன் ராஜகோபாலன்முட்டாளாக போகும் தமிழக வாக்காளனுக்கு, ஒன்றும் செய்ய முடியாத, கையறு நிலையில் இருக்கும் ஒரு தமிழ்நாட்டு குடிமகன் எழுதுவது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திமுக வேட்பாளரும், இளைஞரணி தலைவருமான திரு. எஸ். உதயநிதி வேட்பு மனு தாக்கலின் போது சமர்பித்த affidavit விவரங்களை நேற்று பதிந்து இருந்தேன். சிரிக்கிறதுக்கான மேட்டர் இல்லை அது, ரொம்ப சீரியசான மேட்டர். உதயநிதி சமர்ப்பித்ததில் அவருடைய வருவாய் ரூ. 1,50,17,700 (2017-18) ரூ. 4,00,090 (2018-19) ரூ. 4,89,520 (2019-20) என்று சொல்லப்பட்டு … Continue reading சினிமாவில் நடிக்க உதயநிதி ரூ. 30 ஆயிரம்தான் சம்பளம் வாங்கினாரா?
வைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்
இறந்தவர்களை புதைத்த இடத்தில் நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பது, பார்ப்பனர் இப்போது நமக்குச் செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும். இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது.
‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது!
யமுனா ராஜேந்திரன் அண்ணா அருகில் கலைஞருக்கு இடம் இல்லை என்கிறார்கள். அரசு ரீதியில் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். தமிழக வரலாற்றில் இலக்கியம், கருத்தியல் என்பவற்றில் நிலைத்து நிற்கும் பங்களிப்புச் செய்தவர். எளிய தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் நெடிதுநிற்கும் அரசியல் மாற்றங்களைச் சட்டமாக்கியவர். தமிழக வரலாற்றில் பெரியார், அண்ணாவிற்குப் பிறகு அந்த இடம் கலைஞருக்குத்தான். வெகுமக்கள் வந்துபோகும் மெரினா கடற்கரையில் கலைஞருக்கு இடம் இல்லை என்பது இழிவான அரசியல். அண்ணா அறிவாலயமோ பெரியாரது நினைவிடமோ … Continue reading ‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது!
தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி!
கலைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார். கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது. காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது. தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது. "பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் … Continue reading தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி!
காலமானார் முன்னாள் முதல்வரும் மூத்த திராவிட அரசியல்வாதியுமான மு. கருணாநிதி
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி இன்று மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு சமூக ஊடகங்களில் செலுத்தப்பட்டுவரும் இரங்கல் இங்கே.. எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி: காலங்காலமாகப் பெண்ணுக்கு மறுக்கப்பட்டு வந்த சொத்துரிமையை அமல்படுத்துவதற்கு, இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தில், பரம்பரைச் சொத்தில் மகள்களுக்கும் சொத்துரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆனால், அது நிறைவேறவில்லை. இந்தச் சட்டத்தில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு திருத்தம் … Continue reading காலமானார் முன்னாள் முதல்வரும் மூத்த திராவிட அரசியல்வாதியுமான மு. கருணாநிதி
முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்
அண்மையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் பேசிய தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, கருணாநிதி குறித்து சில விமர்சனங்களை வைத்தார். இது திமுக ஆதரவாளர்களிடையே விமர்சனத்துக்கு ஆளானது. ஒருசிலர் கருத்துக்களால் விமர்சனம் செய்துகொண்டிருக்க ஒருசிலர் தனிப்பட்ட தாக்குதலை வைத்தனர். தியாகுவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் எழுத்தப்பட்டன. எழுத்தாளர் நலங்கிள்ளியின் பதிவு: “கலைஞருக்குத் தோழர் தியாகு தொடுத்த அதிரடிக் கேள்விகள்! நேற்று நியூஸ் 18 … Continue reading முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்
அரசியலில் உதயநிதி; மூன்றாம் கலைஞரா? இரண்டாம் ஸ்டாலினா?
“உருவாக்கப்பட்ட அரசியல்வாதிகளின்” எல்லை என்பது ஒரு குறிப்பிட்ட அளவோடு முடிந்துவிடக்கூடியது. இப்போது நிகழ்வது அதுதான்.
திராவிடம் 2.0!
பிரகாஷ் ஜே.பி. திராவிட நாடு குறித்த விவாதத்துக்கு மிகப்பெரிய நன்றி... இதினால், இதுவரை, "திராவிடத்தால் வீழ்ந்தோம்... கழகங்களால் நன்மையில்லை.. தமிழகம் வளரவில்லை..." என்றெல்லாம் வாய் கூசாமல் பொய் பேசிவந்த கும்பல்களே, இப்போது, "தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வளர்ந்த மாநிலங்கள் தான்.. ஹிந்துத்துவா கொலோசும், பிஜேபி ஆளும் வட ஹிந்திய மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சியடையாத, பின்தங்கிய மாநிலங்கள்... அதினால் அவர்களுக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது" என்ற உண்மையை பேசவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.. அதேபோல, … Continue reading திராவிடம் 2.0!
திராவிட அரசியலை அழிப்பதா? வாக்கு அரசியலா?: தமிழகத்தில் என்ன வேண்டும் பாஜகவுக்கு….
கருணாநிதியை ஊழல்வாதி என்று நிறுவியதில் வலது சாரி அமைப்பினர் அடைந்த வெற்றி கருணாநிதியை மட்டும் பாதிக்கவில்லை. திராவிட இயக்கங்களின் மீதான பொது விமர்சனமாக மாறவும் வழி வகுத்துவிட்டது.
வாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’: தி இந்து மட்டுமே காரணமா?
தங்களுக்கு கிடைத்திருக்கும் புதிய அதிகாரத்திற்கான குலக்குறியாகக் கருதி தேவரை ஒரு அரசியல் தலைவர் என்பதை விடவும் புனிதர் என்று கட்டமைப்பது இங்கு ஊடகத்தில் ஆட்சி பெற்றிருக்கும் இவர்களுக்கு அவசியமாகிறது.
இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தமிழில் ஏதேனும் நாவல் இருக்கிறதா?
மனுஷ்யபுத்திரன் சாரு நிவேதிதா டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எழுதியிருக்கும் கட்டுரை மிக முக்கியமானது. சமூக அரசியல் இயக்கங்கள் ஏற்படுத்திய சமூக தாக்கங்கள் ஒரு பின்புலமாகக்கூட ஏன் நவீன தமிழ் இலக்கியப் போக்குகளில் குறிப்பாக நவீன இலக்கியத்தில் பிரதிபலிக்கவில்லை என்ற கேள்வியை நாம் விவாதிக்கத்தான் வேண்டும். இந்திய சுதந்திரபோராட்ட காலம் பிற இந்திய மொழிகளில் பிரதிபலிக்கப்பட்ட அளவு தமிழ் புனைகதையில் ஏன் பிரதிபலிக்கப்படவில்லை? சுதந்திரபோராட்டத்தைவிடுங்கள். திராவிட இயக்க எழுச்சி, இந்தி எதிர்ப்பு போர், சமூக நீதிக்கான போராட்டங்கள் … Continue reading இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தமிழில் ஏதேனும் நாவல் இருக்கிறதா?
வெக்கமற்ற அரசியல் ஆட்டம்!
பெங்களூரு சிறை தொட்டு திருவண்ணாமலை மூக்குப்போடு சித்தர் வரையிலும் கட்சியை தக்க வைக்கவும், ஆட்சியை கட்டுப்படுத்தவும் ஆசி அருள் கோரி அலைகிறார் டி டி வி.
#முரசொலி75: கமலின் பூணுல் போடாத கலைஞன் பிரகடனமும் பேசாமல் போன ரஜினியும்!
இது வெறும் விழாவாக சிலருக்கு தெரியலாம். ஆட்சியை பிடிக்க எத்தனிக்கும் ஒரு கட்சி பெரியார், பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, திராவிடக் கருத்தியல் ஆகியவற்றை மைய நீரோட்டத்தில் ஒலிக்க விடுவது கவனிக்கத்தக்கது. இந்துத்துவ கும்பலை இது நிச்சயமாக குழப்பமுற செய்யும்.
திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது: எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு ஸ்டாலின் விளக்கம்
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் எழுத்தாளர் மதிமாறனுக்கும் பாஜக பேச்சாளர் நாராயணனுக்கும் இடையே நடந்த 'பார்ப்பனர்' தொடர்பான வாக்குவாதத்தில் எஸ்.வி. சேகர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதில் திமுக செயல்தலைவர் மு. க.ஸ்டாலினை தொடர்பு படுத்தி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார் என சமூக ஊடகங்களில் பலரும் குரல் எழுப்பிய நிலையில், ஸ்டாலின் தனது முகநூலில் விளக்க அளித்துள்ளார். அதில், "தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சி சம்பந்தமான சர்ச்சையினையடுத்து, நடிகரும் நண்பருமான … Continue reading திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது: எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு ஸ்டாலின் விளக்கம்
நான் டெல்லிக்கு ஓடியதற்கு திமுக ஆட்சிதான் காரணம்: சாருநிவேதிதா
தமிழ்நாடே வேண்டாம் என்று தில்லிக்கு ஓடி விட்டேன். அந்த வகையில் தமிழ்நாட்டை விட்டு ஓடிய பிராமணர்களைப் போல் தான் நானும்.
கருணாநிதி வைரவிழாவில் திமுக செய்திருக்கும் பிரகடனம்!
நாடு முழுக்க ஒரு வலது சாரி அச்சம் படர்ந்துகொண்டிருக்கும் வேலையில் அவர் பெயரால் நிகழும் இந்த ஒருங்கிணைப்பு ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஒரு நகர்வு.
‘திராவிடம்’ 200 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று!”: அ. மார்க்ஸ்
தென்மாநிலங்களின் மொழிகள் வடமாநில மொழிகளான இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் அவற்றை திராவிட மொழிகள் எனவும் மொழியியல் அடிப்படையில் நிறுவப்பட்ட உண்மை
சுபமுகூர்த்த நாளில்தான் பேசுவோம்: அதிமுக இணைப்பு பற்றி அமைச்சர்
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் ஒரு அணியும் உருவாகின. சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளர் ஆனார். இந்நிலையில் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர். கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரின. இந்த வழக்கு தேர்தல் ஆணையத்துக்குச் … Continue reading சுபமுகூர்த்த நாளில்தான் பேசுவோம்: அதிமுக இணைப்பு பற்றி அமைச்சர்
அரசியலில் அரங்கேறும் குரங்கு கதை!
சரவணன் சந்திரன் குரங்குகளைப் பற்றிச் சொல்லும் போது ஒரு கதை சொல்வார்கள். இது உண்மையா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. காட்டுயிர் சார்ந்தவர்கள் சொன்னால் திருத்திக் கொள்கிறேன். அதே சமயம் இந்த உதாரணம் மிகச் சிறந்ததும்கூட. கூண்டிற்குள் மாம்பழமோ ஏதோ ஒரு பழமோ வைத்து குரங்குகளுக்குப் பொறி வைப்பார்கள். அந்தக் குரங்கு கூண்டின் கம்பி இடைவெளிக்குள் கையை நுழைத்து பழத்தை பற்றி விடும். ஆனால் வெளியே எடுக்க முடியாது. பழத்தைத் தூர எறிந்து விட்டு மீண்டும் கையை … Continue reading அரசியலில் அரங்கேறும் குரங்கு கதை!
”கருப்புத்துண்டு அமங்கலம்; அதை எடுத்துவிடுங்கள் என ஜெ. சொன்னார்”
அதிமுக அம்மா அணியின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் டிடிவி தினகரன் ஆளுமை மிக்கவர் எனவும் கருணாநிதி, வைகோ, ஜெயலலிதாவைக் காட்டிலும் ஜனநாயகவாதி எனவும் தெரிவித்தார். மதிமுகவிலிருந்து விலகி அதிமுக சேர்ந்தபோது கருப்புத்துண்டு அமங்கலம், அதை எடுத்துவிடுங்கள் என ஜெயலலிதா சொன்னதாக பேட்டியில் தெரிவித்தார் நாஞ்சில் சம்பத்.
இளம் ஜோடிகளை தெருவில் ஓடவிட்டு அடித்த காவிகள்: பெண்கள் தினத்தில் கேரளாவில் நடந்த அவலம்…
பெண்கள் தினமான நேற்று, கொச்சியின் மிகப் பிரபலான மெரைன் ட்ரைவில், "குடைக்குக் கீழேயான காதலுக்கு முடிவு கட்டும் போராட்டம்" என்று எழுதப்பட்ட பேனர்களுடன் வலம் வந்த சிவசேனா அமைப்பை சேர்ந்தவர்கள், அங்குக் கண்ணில் பட்ட இளம் ஜோடிகளைச் சரமாரியாகத் தாக்கத் துவங்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல், கையில் பிரம்புடன் பெண்களின் பின்னால் சென்ற அந்த அமைப்பினர், அவர்களிடம் மிக மோசமான வசைகளை உதிர்த்ததுடன், அந்தப் பிரம்பினால் அவர்களை அடித்து விளாசியுள்ளனர். இதைத் தடுக்க வேண்டிய போலீசார், கைகட்டி வேடிக்கை … Continue reading இளம் ஜோடிகளை தெருவில் ஓடவிட்டு அடித்த காவிகள்: பெண்கள் தினத்தில் கேரளாவில் நடந்த அவலம்…
‘உங்கள் கட்சியையும் ஆட்சியையும் சக்கிலியர் மீதான அவதூறைச் சொல்லித்தான் காப்பாற்ற வேண்டுமா?’
சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், ‘தாழ்த்தப்பட்ட’ சமூகத்திலிருந்து வந்தவன் என்றும் பாராமல் திமுகவினர் நடந்துகொண்டதாக தெரிவித்த கருத்துகள் விவாத்தை கிளப்பியுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டமன்றம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு கூடியது. அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி வாக்குவாதத்திலும் அமளியிலும் ஈடுபட்டனர். இதனால் அவையை 1 மணிக்கு ஒத்திவைத்து கிளம்பினார் சபாநாயகர். சபாநாயகரை அங்கேயே இருக்கும்படி திமுக எம்.எல்.ஏக்கள் வற்புறுத்தினர். அவைக்காவலர்கள் அவரை அழைத்துச் செல்ல முற்பட்டனர். இந்த தள்ளு … Continue reading ‘உங்கள் கட்சியையும் ஆட்சியையும் சக்கிலியர் மீதான அவதூறைச் சொல்லித்தான் காப்பாற்ற வேண்டுமா?’
அதிமுகவும் சாதியும்; அமைச்சரவை ஒதுக்கீட்டில் ஒடுக்கப்படும் தலித்துகள்!
சி. மதிவாணன் அஇஅதிமுகவின் கொள்ளையர்கள் தேவைப்படும்போது மக்கள் நலன் என்று பேசுவார்கள். மக்களுக்கு இலவசம் கொடுப்பது அல்லது சலுகை கொடுப்பதுதான் மக்கள் நலன் என்பது அவர்கள் எண்ணம். மற்றபடி அரசு என்பது கொள்ளையடிக்கக் கொடுக்கப்பட்ட லைசென்ஸ். அவ்வளவுதான். இதனைத்தான் முதல் குற்றவாளி ஜெ மீது சாட்டப்பட்ட குற்றங்களை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காட்டுகிறது. ஆனால், கண்ணுக்குத் தெரியாத மற்றொரு அம்சம் இருக்கிறது. தமிழகத்தின் சாதிகளைப் பயன்படுத்தி, அந்த சாதிகளில் உள்ள முன்னேறிய ஆட்களை தன் … Continue reading அதிமுகவும் சாதியும்; அமைச்சரவை ஒதுக்கீட்டில் ஒடுக்கப்படும் தலித்துகள்!
சர்வாதிகார ஆன்மாவும் 134 அடிமைகளும்
அருண் பகத் அ.தி.மு.க அதிகாரம் திணறிச் சிதறிக் கொண்டிருக்கிறது. குனிந்து குனிந்து திருடித் தின்ற அடிமை எம்.எல்.ஏ க்களும் , பல மா.செ க்களும் , கவுன்சிலர்களும் உச்சக்கட்ட குழப்பத்தில் இருக்கிறார்கள். கையில் தற்போது இருக்கும் கனமான பொட்டியும் ,அரசியல் எதிர்காலம் குறித்த கவலையும் ஒன்றோடொன்று கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசியலில் எளிதாக காய்களை நகர்த்திய பார்ப்பன லாபி திடீரென மாயமாகிப் போனதில்.. கொள்கைகளற்ற , அரசியலற்ற ஒரு அதிகார மமதைக் கட்சி , அரசியல் … Continue reading சர்வாதிகார ஆன்மாவும் 134 அடிமைகளும்
முதலமைச்சரை மிரட்டியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: மு. க.ஸ்டாலின்
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினா கடிதத்தில் கையெழுத்து வாங்கியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு. க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்” என்று அதிமுகவின் “அதிரடி” வரவான பொதுச் செயலாளர் திருமதி சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது அவர் ஏற்கனவே “நான் பினாமி அல்ல” என்று “சொத்துக் குவிப்பு வழக்கில்” வைத்த உதவாக்கரை வாதம் போன்று இருக்கிறது. … Continue reading முதலமைச்சரை மிரட்டியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: மு. க.ஸ்டாலின்
சசிகலா முதல்வராவதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்களா?
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வானதால் சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. சசிகலா, தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளது குறித்து சமூக ஊடகங்களில் கருத்தாளர்கள் தெரிவித்த சில கருத்துகள்... LR Jaggu: கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஜெயலலிதா தமிழக முதல்வரானபோது தமிழக அரசியலின் தரம் தாழ்ந்துவிட்டதாக திமுகவினரும் அவர்களின் ஆதரவாளர்களும் … Continue reading சசிகலா முதல்வராவதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்களா?
கொல்லைப்புறமாக முதலமைச்சராகும் சசிகலா; மு. க. ஸ்டாலின் எதிர்க்க ஏன் தயங்குகிறார்?
சரவணன் சந்திரன் இரண்டு வகை அரசியல் இருக்கிறது. சட்டத்தை முன்னிறுத்திய அரசியல். சில சமயங்களில் சட்டத்தைத் தாண்டி தார்மீகத்தை முன்னிறுத்தும் அரசியல். முன்னதில் இம்மி பிசகாமல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்பது முதன்மையானதாக இருக்கும். மு.க.ஸ்டாலின் இப்போது சட்டத்தை முன்னிறுத்திய அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அது மிக முக்கியமானதும் மதிக்கத்தக்கதும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அதே சமயம் ஜல்லிக்கட்டிற்கு நாட்டின் உச்ச நீதிமன்றம் தடைக்கல்லாக இருக்கும் சமயத்தில், அது சட்டப்படி செயல்படுகிறது … Continue reading கொல்லைப்புறமாக முதலமைச்சராகும் சசிகலா; மு. க. ஸ்டாலின் எதிர்க்க ஏன் தயங்குகிறார்?
சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமா தமிழகம்?
ஜி. கார்ல் மார்க்ஸ் சசிகலாவிடம், “ நீங்கள்தான் கட்சியை வழிநடத்த வேண்டும்” என்று தொண்டர்களும், கட்சிப் பிரதிநிதிகளும் வலியுறுத்துவதாகவும், அவர் இன்னும் ஜெயலலலிதாவின் மரணத்தில் இருந்து மீளாத துயரத்தில் இருப்பதாகவுமான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. அத்தகைய நாடகம் கடுமையாக விமர்சிக்கவும் படுகிறது. கட்சியின் ஒரு பிரிவு தொண்டர்களால் சசிகலாவின் உருவம் பெரிதுபடுத்தப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் புரிந்து கொள்ளக் கூடியதே. ‘ஜெயலலிதா’ இறந்து விட்டிருக்கிற ஒரு துயரார்ந்த சூழலில், அடுத்த தலைமைக்கான உடனடி நகர்வுகளை கட்சியின் தீவிரத் தொண்டன் … Continue reading சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமா தமிழகம்?
ஓய்வெடுங்கள் சசிகலா!
அறிவழகன் கைவல்யம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக, அவரோடு கூடவே இருந்து பணிவிடைகள் செய்து வாழ்ந்து வந்த பெண்ணாக சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கும், சடங்குகள் செய்யவும், எல்லாவிதமான உரிமைகளும் இருக்கிறது, செல்லுமிடங்களுக்கு எல்லாம் (சிறை உட்பட) இணைபிரியாது சென்று வந்தவர். ஆக, ஜெயலலிதாவின் குருதி சார் உறவுகளைவிட சசிகலாவுக்கு இந்த நேரத்தில் (நல்லடக்க காலம் வரை) அதிக உரிமைகளும், அதிகாரமும் கொடுக்கப்படலாம். நிற்க, ஜெயலலிதாவின் நல்லடக்கம் முடிவு பெறுவதோடு சசிகலாவின் பங்களிப்பு … Continue reading ஓய்வெடுங்கள் சசிகலா!
முதல்வரின் கான்வாய்…: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் அஞ்சலி!
எஸ். எஸ். சிவசங்கரன் வழக்கமாக கான்வாய் கிளம்பினால், பயணிக்கப் போகும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும். போயஸ் கார்டன், வேதா நிலையத்தில் இருந்து முதல்வர் கான்வாய் கிளம்பினால் ராதாகிருஷ்ணன் சாலை, மெரினா சாலைகள் அலர்ட் ஆகும். சாலையின் இருபுறமும் கட்சி நிர்வாகிகள் நிற்பார்கள். காவல்துறையினர் பந்தோபஸ்த்திற்கு நிற்பார்கள். கான்வாய் என்பது ஒரு தொடராக வாகனங்கள் பயணிப்பது. முக்கியப் பிரமுகர்களின் வாகன அணிவகுப்பை கான்வாய் என அழைப்பது வழக்கம். மாநில முதல்வர்களின் வாகன அணிவகுப்பில் பாதுகாப்பு வாகனங்கள், அதிகாரிகளின் வாகனங்கள் இணைந்து … Continue reading முதல்வரின் கான்வாய்…: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் அஞ்சலி!
“அண்ணா நாமம் வாழ்க என்ற இடி முழக்கத்தை இனி நாம் எங்கு கேட்கப்போகிறோம்”
ஜெயநாதன் கருணாநிதி: ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம் அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம் இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா! இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்; பல என்றால் பலவேதான்; அப்படி அல்ல என்றாலும் அல்லதான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை என்றாலும் இல்லைதான்; உண்டு என்றாலும் உண்டுதான்; எல்லாம் நமது … Continue reading “அண்ணா நாமம் வாழ்க என்ற இடி முழக்கத்தை இனி நாம் எங்கு கேட்கப்போகிறோம்”
“சமூக நீதியை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை”
அறிவழகன் கைவல்யம் திராவிட அரசியல் இயக்கத்தின் அடிநாதமான சமூக நீதியை ஒருபோதும் அவர் தவறாகப் புரிந்து கொண்டதாக எனக்கு நினைவில்லை, அ.தி.மு.க என்கிற மிகப்பெரிய அரசியல் இயக்கத்தை கட்டுக்குலையாமல் ஆளுமை செய்த அவருடைய தீவிர உழைப்பு ஒருவகையில் காவிக் கோட்பாட்டை தமிழகத்தின் சமூக அரங்குகளில் உள்நுழைய விடாமல் மறைமுகமாகவேணும் தடுத்தது. இவற்றை எல்லாம் தாண்டி, ஆண்களின் தனிப்பெரும் கோட்டையாக இருந்த அரசியல் களத்தில் ஒரு பிடரி சிலிர்க்கும் ஒரு ஆவேசப் பெண்ணாக, தான் என்கிற அசைக்க முடியாத … Continue reading “சமூக நீதியை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை”
திமுகவின் போராட்ட குணம் எங்கே போனது?
வா. மணிகண்டன் கடந்த வாரம் திமுக நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டம் கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பிசுபிசுத்துப் போனதாக உள்ளூர் நண்பர்கள் சொன்னார்கள். பிற மாவட்டங்களைப் பற்றித் தெரியவில்லை. வழக்கமாக திமுகவின் போராட்டங்கள் குறித்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வரக் கூடிய செய்திகளும் படங்களும் கூட இந்த முறை இல்லை. ஐநூறு, ஆயிரம் ரூபாய்த் தாள் குறித்தான விவகாரம்தான் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர அதே பிரச்சினைக்காக மனிதச் சங்கிலி நடத்திய திமுக … Continue reading திமுகவின் போராட்ட குணம் எங்கே போனது?
திருமங்கலம் ஃபார்முலா என்றால் என்ன? வழக்கறிஞர் கேள்வி மு. க. ஸ்டாலின் அளித்த பதில்
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவர் முறைகேடுசெய்து வெற்றிபெற்றதாகவும் எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி வேணுகோபால் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. புதனன்று (நவ. 23) 4வது முறையாக மு.க.ஸ்டாலின் நீதிமன் றத்தில் நேரில் ஆஜாராகி மனுதாரரின் வழக்கறிஞர் ராமானுஜத்தின் குறுக்கு விசாரணைக்கு பதில் … Continue reading திருமங்கலம் ஃபார்முலா என்றால் என்ன? வழக்கறிஞர் கேள்வி மு. க. ஸ்டாலின் அளித்த பதில்
”செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது!”: மூன்று தொகுதி முடிவுகள் குறித்து கருணாநிதி
இடைத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு. கருணாநிதி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... “தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பினை இழந்த போதிலும், கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில், மூன்று தொகுதிகளிலும் வாக்களித்த 2,09,257 வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இடையறாதுழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், செயல் வீரர்களுக்கும், … Continue reading ”செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது!”: மூன்று தொகுதி முடிவுகள் குறித்து கருணாநிதி
ஆறுமுகத்துக்கு ’தீப்பொறி’ அடைமொழி தந்தவர் அண்ணாதான்: கருணாநிதி இரங்கல்
திமுகவின் முன்னணி பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மறைவுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைமைக் கழக முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரும், தி.மு.கவின் முன்னோடிகளில் ஒருவருமான மதுரை தீப்பொறி ஆறுமுகம்நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு (5-11-2016) மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். தீப்பொறி ஆறுமுகம் தனது பதினைந்தாவது வயதிலேயே தந்தை பெரியாரின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி, பெரியாரால் அப்போதே பாராட்டப்பட்டவர். அவருடைய … Continue reading ஆறுமுகத்துக்கு ’தீப்பொறி’ அடைமொழி தந்தவர் அண்ணாதான்: கருணாநிதி இரங்கல்