அலோபதி மருந்து முட்டாள்தனமானது என கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் கூறிய அவதூறான கருத்துக்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் பேசிய மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. "அவர்கள் சத்தம் போடுகிறார்கள். அவர்கள் #ThugRamdev, #MahathugRamdev, #GiraftarRamdev டிரெண்டிங் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்” எனப் பேசிய அவர், சமூக ஊடகங்களில் #ArrestRamdev என டிரெண்ட் செய்யப்படுவது குறித்து “அவங்க அப்பனால்கூட என்னை கைது செய்யமுடியாது” என சவாலாகக் கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டேராடூனைச் … Continue reading ”அவங்க அப்பனாலகூட என்னை கைது செய்ய முடியாது”: ராம் தேவ் சவால்!
பகுப்பு: செய்திகள்
பழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI!
முதுமலை யானை முகாமுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணிகளை அகற்றச் சொன்னார். இது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். சிறுவன் காவல்நிலையத்தில் அமைச்சரின் செயல் குறித்து புகார் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் சிறுவன் குடும்பத்தினரை அழைத்து நேரில் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், சுயமரியாதை குறித்து அறியாத அமைச்சருக்கு பெரியாரின் சுயமரியாதை நூல்களை அனுப்பியுள்ளதாக கூறியுள்ளது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். https://twitter.com/DyfiNadu/status/1225678606291963905?s=20
மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். இதை மங்களூரு போலீசு உறுதி செய்துள்ளது. https://twitter.com/IndiaToday/status/1207686276167749632?s=20 போராட்டங்களை அடுத்து மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை களைக்க போலீசார் முதலில் தடியடி நடத்தியதாகவும், பின்னர் போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. கல்வீச்சு சம்பவங்களை தடுக்க துப்பாக்குச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் இருவர் பலியானதாகவும் போலீசு தரப்பு கூறுகிறது. இந்த பலிக்கு … Continue reading மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு
அயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டு பெண்கள் மீது தேச துரோக வழக்கு!
முசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்டுக்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.
இஸ்ரோவின் உள்ளே என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது?
திடீரென லட்சக்கணக்கான மக்கள் மனத்தில் இஸ்ரோ மேல் அன்பு பொங்கி வழிகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளைச் சந்தித்து முதுகில் தட்டிக்கொடுக்கும் மோதியைப் பார்த்து மக்கள் நெகிழ்ந்துபோகிறார்கள் உணர்ச்சிகளைக் கிளறச்செய்து அதன் மூலம் லாபமடையும் நோக்கில் ஆளும் கட்சி செய்யும் நாடகீயங்களைப் பார்க்கும் போது இது ஒரு well planned meeting என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. நாலாப்புறமும் கேமராக்கள் தமது பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்தன. ஹிட்லரின் அமைச்சராக இருந்த கோயபல்ஸ் ஒரு சந்தேகத்தை, ஒரு பொய்யை அது உண்மையாகும்வரை … Continue reading இஸ்ரோவின் உள்ளே என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது?
தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குரல் கொடுக்க வேண்டும்: அமர்ஜித் கௌர்
ஏஐடியுசியின் பொதுச் செயலாளர் அமர்ஜித் கௌர் 12.8.2019 அன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மும்பையில், ஏஐடியுசியின் நூற்றாண்டு விழா வருகிற அக்டோபர் 31 ம் நாள் தொடங்குகிறது.இதே நாளில் 1919 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் மூத்த தொழிற்சங்கமான ஏஐடியுசி தனது நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் ஓராண்டு காலத்திற்கு 2020 அக்டோபர் வரை கொண்டாடுகிறது. பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கைகளினால் ஐந்து கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக சிஐஐ, பிக்கி போன்ற வேலைஅளிப்போர் … Continue reading தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குரல் கொடுக்க வேண்டும்: அமர்ஜித் கௌர்
இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: மெகபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா
வீட்டுச்சிறையில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரான மெகபூபா முஃப்தி, “இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இன்று” என இந்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார். மெகபூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயக முறையில் ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இன்று வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய முரண் ஆக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களின் குரல் ஒடுக்கப்பட்டிருப்பதை இந்த உலகமும் மக்களும் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். https://twitter.com/MehboobaMufti/status/1158308940695797760?s=20 மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை தேர்ந்தெடுத்த ஜம்மு காஷ்மீரில் … Continue reading இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: மெகபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா
பா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்
இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும்; கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும்! அண்மையில் இயக்குநர் பா. ரஞ்சித், சோழ மன்னர் ராஜன்ராஜன் குறித்து முன்வைத்த கருத்தொன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல, என்னதான் மிகச்சிறந்த ஆட்சியைத் தந்திருந்தாலும் ஒரு அரசர் அல்லது ஒரு ஆட்சிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கும். நன்மையை பேசுவதுபோல, அந்த ஆட்சியால் ஏற்பட்ட தீமைகளையும் சேர்த்தே பேசுவதே கருத்துரிமை. கருத்துரிமைக்கும் அவதுறுக்கும் பாரதூரமான வேறுபாடு உள்ளது. இயக்குநர் பா. … Continue reading பா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்
நவீன அரங்கியலை உள்வாங்கிய நவீன அரசியல்வாதி ராகுல்!
அ. ராமசாமி அரங்க அமைப்புக் கலையை அறிந்தவர்கள் இந்த மேடை அமைப்பை முன்முற்ற அரங்கம் (Front Project Stage ) என்று சொல்வார்கள். அழகிப் போட்டிகள், ஆடை கள், அலங்காரப் பொருட்களின் அறிமுகம் போன்றவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்குப் பயன்படும் தன்மை இந்த அரங்க அமைப்புக்கு உண்டு. இயல்பான உரையாடல் வழியாகப் பார்வையாளர்களோடு நெருங்கிவிட விரும்பும் இந்த அமைப்பைப் பிரேசிலின் நவீன அரசியல் நாடகக்காரன் அகஸ்டோ போவெல் 1980 களின் தொடக்கத்தில் முன்வைத்தான். அவனைத் தமிழ் நாடகக்காரர்கள் கண்ணுக்குப் … Continue reading நவீன அரங்கியலை உள்வாங்கிய நவீன அரசியல்வாதி ராகுல்!
மாதம் ரூ.3000 ஓய்வூதியம் என்ற அறிவிப்பு ஒரு மோசடி : ஏஐடியுசி
அமைப்புச் சாரா தொழிலாளிக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் தரப்போவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரிய விளம்பரம் செய்யப்பட்ட து. பத்திரிக்கைகள் பாராட்டின. ஆனால் இதனால் தொழிலாளர்களுக்கு எந்தப் பலனும் இல்லையென்று ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மோடி அறிவித்து உள்ள திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களே சேர முடியும். இது ஒரு விருப்பபூர்வமான(optional) திட்டம்தான்; அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தாது. ஒவ்வொரு … Continue reading மாதம் ரூ.3000 ஓய்வூதியம் என்ற அறிவிப்பு ஒரு மோசடி : ஏஐடியுசி
ஐசிஐசிஐ வங்கியை தேசியமயமாக்கு: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்
இந்தியாவின் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியை தேசியமாக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாகியாக இருந்த சந்தா கொச்சார் விதிமுறைகளை மீறி தன் கணவர் பணிபுரிந்த வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் கொடுத்து 5000 கோடி ரூபாய்களுக்கு நட்டம் ஏற்படுத்தி உள்ளார். எனவே அவர் வங்கியின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகளை எதிர் கொண்டு உள்ளார். … Continue reading ஐசிஐசிஐ வங்கியை தேசியமயமாக்கு: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்
மோடி ஆட்சி மாணவர்களைப் பார்த்து ஏன் அஞ்சுகிறது?
மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தேசத் துரோக குற்றச்சாட்டுகள் திருப்பித் தாக்கின; ஜேஎன்யு மாணவர் செயல்பாட்டாளர்கள் குரல்கள், ஜேஎன்யு வளாகம் தாண்டியும் எதிரொலித்து, நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும் துணிவும் தந்தது.
சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது பெற்றார் பத்திரிகையாளர் மு. குணசேகரன்
இந்திய ஊடகவியலாளர்களின் மதிப்புமிக்க விருதாக கருதப்படும், ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ தமிழக பத்திரிகையாளர் மு.குணசேகரனுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பத்திரிகையாளர்களின் நேர்மையான, மிகச்சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில் வழங்கப்பட்டு வரும் இந்த விருதை பத்திரிகையாளர் மு. குணசேகரன் பெற்றுள்ளார். 2007-ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய ஒக்கி புயல் பாதிப்பு குறித்த தொடர்ச்சியான பதிவுக்காகவும், மக்களின் குரலை ஒலிக்க வைத்தமைக்காவும் இந்த விருது … Continue reading சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது பெற்றார் பத்திரிகையாளர் மு. குணசேகரன்
#நிகழ்வுகள்: அம்ஷன்குமாரின் ‘மனுசங்கடா’ படம் சிறப்பு திரையிடல்
உலகத் திரைப்பட விழாவில் விருதுகள் பெற்ற #மனுசங்கடா தமிழ் திரைப்படம் திரையிடல் மற்றும் இயக்குனர் #அம்ஷன்குமார் மற்றும் குழுவினருடன் உரையாடல். நன்கொடை: ரூபாய் 100/ நுழைவுச்சீட்டு கிடைக்குமிடங்கள்: பரிசல் புத்தக நிலையம் - திருவல்லிக்கேணி 044-48579646, பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை 044-24332924, நியூ புக்லேண்ட் - தி .நகர் 044-28158171, டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர் 9566236967, கூகை திரைப்பட இயக்கம் - வளசரவாக்கம் 9710505502, பனுவல் புக் ஸ்டோர் - திருவான்மியூர் 044-43100442. தொடர்புக்கு :9382853646,9445124576,7338823667,8939114423
அரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்!
சந்திரமோகன் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மலையடிவார கிராமமான சிட்லிங்கி ஊராட்சியைச் சார்ந்தவர் அண்ணாமலை. மலையாளி பழங்குடி இனத்தைச் சார்ந்த இவரின் மகளான செளமியா (வயது 16) பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் +1 ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தார். தீபாவளி விடுமுறைக்காக விடுதி மூடப்பட்டதால், நவம்பர் 5 ந் தேதியன்று ஊருக்கு திரும்பியுள்ளார். பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளர்கள் என்பதால் வேலைக்கு சென்றுவிட்டனர். காலை 11.30 மணியளவில், இயற்கை உபாதையாக ஓடை பக்கம் தனியாக சென்ற … Continue reading அரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்!
பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்
குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு. ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் … Continue reading பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்
”திருமுருகன் காந்தி இடதுசாரி இல்லை என்பதால்தான் நீங்கள் ஆதரிக்கவில்லையா?”
திருமுருகன் மீது UAPA சட்டம் பாய்ந்தது என்பது பெரிய அநியாயம். தமிழ் வெளியில் அதை தட்டி கேட்க இந்தியத்தின் முகத்திரை கிழிக்க செய்தியாக கூட பகிர மாட்டேன் என்று சொல்வது நேர்மை கிடையாது.
தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி!
கலைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார். கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது. காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது. தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது. "பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் … Continue reading தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி!
இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவ பயிற்சி தருவதாக விளம்பரம்: ஹீலர் பாஸ்கர் கைது!
இயற்கை முறையில் பிரசவம் பார்க்க இலவச பயிற்சி என விளம்பரம் கொடுத்த ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இலவச பயிற்சி எனக் கூறிக்கொண்டு ரூ. 5000 வசூலித்ததாகவும் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்த கிருத்திகா என்ற பெண் இறந்தார். இந்நிலையில் வீட்டிலேயே எளிய முறையில் சுகபிரசவம் செய்ய பயிற்சி என விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர் மீது சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி புகார் அளித்திருந்தார். மேலும் மனிதி என்ற அமைப்பும் புகார் … Continue reading இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவ பயிற்சி தருவதாக விளம்பரம்: ஹீலர் பாஸ்கர் கைது!
“எட்டுவழிச்சாலை மரணத்தின் மீது நீள்வதை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்?”
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கு நிலம் தர மறுப்பு தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சேகர் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் எழுதப்பட்டுள்ள கருத்துக்கள்: தொழிற்சங்க செயல்பாட்டாளர் மாதவராஜ் சேலம் - சென்னை எட்டுவழிச்சாலைக்கு தன் நிலம் பறிபோவதைத் தாங்க முடியாமல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சேகர் தற்கொலை … Continue reading “எட்டுவழிச்சாலை மரணத்தின் மீது நீள்வதை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்?”
ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் கார்த்திகேயனை பாஜகவினர் சமூக ஊடகங்களில் மிரட்டி வருவது கண்டிக்கத்தக்கது என ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “’மாதவிடாய் காலத்தில் பெண் தெய்வங்கள் கோயிலை விட்டு வெளியேறிவிடுகின்றனவா?’ – என பொருள்படும் கவிதையை நிகழ்ச்சி ஒன்றில் மேற்கோள் காட்டியதற்காக, புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன், பா.ஜ.க., இந்து முன்னணி மதவாத கும்பலால் மிக வெளிப்படையாக மிரட்டப்பட்டு வருகிறார். கார்த்திகேயன் சொன்ன வார்த்தைகளில் எவ்வித தவறும் இல்லை … Continue reading ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்
“விடுதலை அறிவிப்புக்கு நன்றி; பாகுபாடு இன்றி விடுதலை செய்க!”: அ.மார்க்ஸ்
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நீண்ட காலசிறைவாசிகளை விடுதலை செய்வது என்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முடிவை சென்னையில், சனியன்று நடந்த தேசிய மனித உரிமைகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பாக நடந்த கலந்துரையாடல் பாராட்டியது. அதேவேளையில் விடுதலையில் பாகுபாடு காட்டக்கூடாது; நிபந்தனைகள் போடக்கூடாது; பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்ட து. "கடந்த காலங்களில் விடுதலைக்கு தகுதியானவர்கள் அனைவரும் ஒரே நாளில், குறிப்பிட்ட விழா நாளன்று … Continue reading “விடுதலை அறிவிப்புக்கு நன்றி; பாகுபாடு இன்றி விடுதலை செய்க!”: அ.மார்க்ஸ்
பத்தாயிரம் கோடி ரூபாய் விரைவு சாலையும் கதவுகள் இல்லாத சிறை கழிவறைகளும்: தோழர் சந்திரமோகன்
800 சிறைவாசிகளுக்கு சமைத்துப் போட, இரண்டு சமையல்காரர்கள் மட்டுமே உள்ளனர். தினசரி 30 சிறைவாசிகள் சமையலறையில் சம்பளம் வாங்காமல் பணியாற்றி வருகின்றனர்.
கேரளா மாதிரி கல்விக் கடன் திட்டத்தை தமிழகத்திலும் அமலாக்க வேண்டும்: மாணவர் பெருமன்றம் கோரிக்கை
கேரளா மாதிரி கல்விக் கடன் திட்டத்தை தமிழகத்திலும் அமலாக்க வேண்டும் என மாணவர் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் மாநில செயலாளர் எஸ். தினேஷ் விடுத்துள்ள அறிக்கையில், “கல்வியை அரசே வழங்க வேண்டும். ஆனால் இன்றைய சூழலில் அரசும் தனியாரும் சேர்ந்தே கல்வியில் பங்காற்றுகின்றனர். தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க ஏழை எளிய மாணவர்களுக்கு வங்கிகள் கல்வி கடன் வழங்கி வருகின்றன. கல்வி கடன் பெறுவதில் பொறியியல் மாணவர்கள் தான் அதிகம். வேலைவாய்ப்புகளை அதிகளவில் … Continue reading கேரளா மாதிரி கல்விக் கடன் திட்டத்தை தமிழகத்திலும் அமலாக்க வேண்டும்: மாணவர் பெருமன்றம் கோரிக்கை
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 3
இந்த சாமுராய்களின் கோமாளித்தனங்களை பார்த்துவிட்டு இப்படி மரணத்திற்காக அலையும், மரணத்தை, மனித உயிரை இவ்வளவு எளிமையாக எடுத்து கொள்ளும் இன்னொரு இனக்குழுவை உலகில் தான் வேறெங்கிலும் கேள்விப்பட்டதோ, பார்த்ததோ இல்லை என்று பதிவு செய்திருக்கிறார்.
மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுக்க போலீசின் அச்சுறுத்தலே காரணம்.
தென் மாவட்டங்களில் மக்கள் அதிகார தோழர்களை, ஏறத்தாழ அனைவரையும் மோசடியாக ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜோடித்து எழுதி வைத்துக்கொண்டு வீடுவீடாக வேட்டடையாடி வருகிறது. ஆறு தோழர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம். இரண்டு தோழர்கள் மீது 52 க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது. 19 வயதுடைய இரண்டு மாணவர்கள் மீது என்.எஸ்.ஏ. சரவணன் என்ற கூலித்தொழிலாளி வலிப்பு நோயால் அவதி பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சையின்றி சித்ரவதையை அனுபவத்து வருகிறார். அவரை ஈவு இரக்கமின்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துள்ளார்கள்.
தூத்துக்குடியில் தொடரும் போலீசின் சித்திரவதை: மக்கள் அதிகாரம் குற்றச்சாட்டு
உயர்நீதிமன்ற உத்தரவை காலில் மிதித்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டப் போலீசு போராட்டக்காரர்களை சித்திரவதை செய்வதாக மக்கள் அதிகாரம் அமைப்பு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்... “கடந்த மாதம் இறுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை பகுதி ஒருங்கிணைப்பாளரும் நெல்லை மாவட்ட நீதிமன்ர வழக்கறிஞருமான தங்கபாண்டியன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசு மக்களின் வீடுகளுக்கு இரவில் சென்று தேடுதல் வேட்டை செய்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார்.சம்மன் அனுப்பியே விசாரிக்க வேண்டும் … Continue reading தூத்துக்குடியில் தொடரும் போலீசின் சித்திரவதை: மக்கள் அதிகாரம் குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை பணி நீக்கம் செய்யப்படட்டு செல்லத்துரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கிற்காக மக்கள் உரிமை பாதுகாப்பு … Continue reading ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது
போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்
தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என ஒரு பெரிய பட்டியலை கையில் வைத்துக் கொண்டு காவல் துறை இரவு நேரங்களில் வீடு வீடாகப் புகுந்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது, கேவலமாக ஏசுவது போன்ற செயல்கள் செய்தும் வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் ஏற்கனவே கைதானவர்கள் மீது இருபது வழக்குகள்வரை பதிவு செய்யப்பட்டு, கடந்த இருதினங்களில் மேலும் 25 வழக்குகள் அவர்கள் மீதே போடப்பட்டுள்ளன. சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுள்ளதின் நோக்கம் கடுமையான அச்சத்தை போராடுபவர்கள் … Continue reading போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்
தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது!
தூத்துக்குடியில் ஸ்டெட்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனது ஊர் ஆரியப்பட்டி. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள முண்டுவேலன்பட்டியில் தோழர் கோட்டை என்பவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். தற்போது பள்ளியில் படித்திக் கொண்டிருக்கும் அவரது 15 வயது மகனை கைது செய்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் … Continue reading தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது!
பேரறிவாளனின் தாய் அற்புதமம்மாளின் கடிதம்!
பேரறிவாளனின் தாய் அற்புதமம்மாள் தமிழக முதலமைச்சருக்கு கடிதம்: வணக்கம். ஜுன் 11 ஆம் தேதியோடு எனது புதல்வன் பேரறிவாளனை அரசு சிறையிலடைத்து 27 (இருபத்தேழாண்டுகள்) முடியப் போகிறது! அவரோடுள்ள ஏனைய அறுவரும் அவ்வாறே!! எங்கள் வாழ்நாளுக்குள் எம் ஒரே புதல்வன் பேரறிவாளன் விடுதலையாகி வருவாரா எனும் அச்சம் மிகுகிறது ! ஏன் கொலைக் குற்றம் சுமத்தினார்கள். ஏன் தண்டித்தார்கள். ஏன் 27 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள் என்று புரியவில்லை? ஒப்புதல் வாக்குமூலம் எழுதிய CBI அதிகாரி … Continue reading பேரறிவாளனின் தாய் அற்புதமம்மாளின் கடிதம்!
கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டோர் பேசத் தடை : சுற்றறிக்கையை திரும்பப் பெற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்
கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டோர் பேச அழைக்கக்கூடாதென தமிழ்நாடு அரசின் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதை திரும்பப் பெற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில், பல்கலைக்கழகம் ,கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டவர்கள்களை பேச அழைக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும். கல்வி நிலையங்கள் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் தளங்கள். விடுதலைப் போராட்ட காலத்திலும் ,பின்னரும் இராஜாஜி, … Continue reading கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டோர் பேசத் தடை : சுற்றறிக்கையை திரும்பப் பெற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்
பாஜக கோட்டையான உ.பி.யில் வெற்றிகண்ட முதல் முஸ்லிம் பெண் எம்.பி.!
சமீபத்தில் நடந்த நான்கு மக்களவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. பாஜக இழந்த இரண்டு தொகுதிகளிலில் முக்கியமானது உத்தரபிரதேச மாநிலத்தின் கைரானா தொகுதி. பாஜகவை வெற்றி கொண்டவர், ஒரு முஸ்லிம் பெண். முஸ்லிம்கள் கணிசமாக வாழும் உ.பி.யில் 2014 மக்களவை, 2017 சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. இந்நிலையில் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் சார்பில் கைரானா தொகுதியில் போட்டியிட்ட தபஸும் ஹசன் வெற்றி கண்டுள்ளது, மிகுந்த … Continue reading பாஜக கோட்டையான உ.பி.யில் வெற்றிகண்ட முதல் முஸ்லிம் பெண் எம்.பி.!
கவுரி லங்கேஷ் கொலை: குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலைவழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி) குற்றம் சாட்டப்பட்டுள்ள நவீன்குமாருக்கு எதிராக 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நவீன் மீது கொலை, குற்றவியல் சதித்திட்டம் மற்றும் ஆதாரங்களை அழிக்க முற்பட்டது உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்றொரு கன்னட எழுத்தாளர் பகவானை கொல்ல சதித்திட்டம் தீட்டிய வழக்கில் தொடர்புடைய பிரவீனுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அதற்கு உடந்தையாக இருந்த அமோல்கால், அமித் தேகிவேக்கர் மற்றும் … Continue reading கவுரி லங்கேஷ் கொலை: குற்றப்பத்திரிக்கை தாக்கல்
மகளிரணி அணி பெண்களுக்கு ரஜினி அளித்த மனுஸ்மிருதி; இதுதான் ஆன்மீக அரசியலா?
கட்சி தொடங்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்ற பிரதிநிதிகளை சந்தித்துவருகிறார். பெண் பிரதிநிதிகளை சமீபத்தில் சந்தித்த ரஜினி, அவர்களுக்கு மனுஸ்மிருதியை பரிசளித்தார். பெண்களை பாகுபாட்டுடன் சித்தரிக்கும் மனுஸ்மிருதியை பரிசளிப்பதுதான் ஆன்மீக அரசியலா என விமர்சனங்கள் எழுந்துள்ளன. Prabaharan Alagarsamy பெண்கள் பாவயோனியில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்கிற மனுதர்ம சாஸ்த்திரத்தை, தன் கட்சியின் மகளிரணியினருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார் ரஜினி.இதுதான் ஆன்மீக அரசியல்.. சிஸ்டம் கெட்டுப்போய்விட்டதாக சொல்கிற ரஜினி, அதை சரி செய்வதற்கு வைத்திருக்கும் கையேடு … Continue reading மகளிரணி அணி பெண்களுக்கு ரஜினி அளித்த மனுஸ்மிருதி; இதுதான் ஆன்மீக அரசியலா?
”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெறாதநிலையில் அதிக இடங்களைப் பெற்ற எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த நாளே நடைபெற்றது. கர்நாடக விதான் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் பேசிய எடியூரப்பா, பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக இதை கொண்டாடினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பாஜக, ஆர்.எஸ். எஸ்ஸை கடுமையாக சாடினார் ராகுல் காந்தி. … Continue reading ”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி
எம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder!
நரேந்திர மோடி - அமித் ஷா கூட்டணியின் சாணக்ய தனத்தை மெச்சிய பெரும்பாலான ஊடகங்கள், பெரும்பான்மை இல்லாதபோதும் பாஜக கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் என நம்பினர். அவர்களுடைய ராஜதந்திரங்களுக்கு உதாரணமாக சமீபத்திய திரிபுரா வெற்றியை சொல்லலாம். வாக்கு வங்கியே இல்லாத பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விலைக்கு வாங்கி, இடது முன்னணி அரசை ஆட்சியிலிருந்து அகற்றியது. எனவே, இந்தக் கூட்டணி நினைத்தால் ‘எப்படியாவது’ ஆட்சியைப் பிடித்து விடலாம் என பலர் ‘நம்பிக்கை’ தெரிவித்தனர். ஆனால், தேர்தல் அரசியலில் காங்கிரஸ் சில … Continue reading எம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder!
வாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா!
பெரும்பான்மை இல்லாதபோதும் பலத்த சர்ச்சைக்குகளுக்கு இடையே, கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். காங்கிரஸ், மஜத தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோரியபோதும் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா. பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அமைச்சராக இருந்தவர் வஜுபாய் வாலா. மேலும், வாலாவின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியும் பாஜகவுக்கு சாதகமாக நடந்துகொள்வதற்கான காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் ஆளுநரின் அழைப்பை எதிர்த்து காங். - மஜத … Continue reading வாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா!
“நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்”: காங்.எம்.எல்.ஏவை விலைபேசிய ஜனார்த்தன ரெட்டி!
கர்நாடக தேர்தல் முடிந்து, பெரும்பான்மையில்லாதா நிலையில் அவசர அவசரமாக முதல்வர் பதவியேற்றார் பாஜக தலைவர் எடியூரப்பா. காங்கிரஸ், மஜத தேர்தல் பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோரிய போதும் ஆளுநர் வாலா, பாஜவுக்கு வாய்ப்பளித்தார். இது உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. எப்படியாவது எம்.எல்.ஏக்களை சேர்த்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் பாஜக உள்ளது. கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய ரெட்டி சகோதரர்களும் அவர்களின் கூட்டாளியான பாஜக பிரமுகர் ஸ்ரீராமுலுவும் எம்.எல்.ஏக்களை … Continue reading “நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்”: காங்.எம்.எல்.ஏவை விலைபேசிய ஜனார்த்தன ரெட்டி!
16 எம்.எல்.ஏக்களை நீக்கியதற்காக உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் போபையா!
கர்நாடக முதல்வராக பதவியேற்றிருக்கு எடியூரப்பா தனது பெரும்பான்மையை நாளை 4 மணிக்கு சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதன் அடிப்படையில் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போயையாவை நியமித்தார். யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் மூத்த சட்டமன்ற உறுப்பினரையே தேர்ந்தெடுப்பது வழக்கம். எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆர்.வி. தேஷ்பாண்டே இருக்கும்போது மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்வான போபையாவை தேர்ந்தெடுத்தது மீண்டும் சர்ச்சையானது. காங்கிரஸ் கட்சி இந்த தேர்வை எதிர்த்து … Continue reading 16 எம்.எல்.ஏக்களை நீக்கியதற்காக உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் போபையா!