முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும்: சபரிமாலா கையெழுத்து இயக்கம்

முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும் என செயல்பாட்டாளர் சபரிமாலா கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார். https://youtu.be/YxjRpODr-0U

பள்ளிக்கூடங்களை பூட்டி பாடப்புத்தகங்களை விற்றுப்பிழைப்பு நடத்துவதுதான் அதிமுக அரசின் சாதனையா?

மயிலாடுதுறையில் பழைய இரும்புக் கடையில் இலவச பள்ளிப் பாடப் புத்தகங்களை விற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மயிலாடுதுறையில், முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புக் கடையில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான இலவச பள்ளிப் பாடப் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக புகார் எழுந்தது. இதனையடுத்து கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தபோது 2019 - 20ஆம் ஆண்டுக்கான சுமார் 5 ஆயிரம் பாடப் புத்தகங்கள் இருந்தது தெரியவந்தது. … Continue reading பள்ளிக்கூடங்களை பூட்டி பாடப்புத்தகங்களை விற்றுப்பிழைப்பு நடத்துவதுதான் அதிமுக அரசின் சாதனையா?

”12 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு: நீட் என்னும் அநீதி”

மருத்துவக் கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் ஒருவர் கூட மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் இல்லை என்பதும் மருத்துவப் படிப்பு சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கானது என்பதை உறுதி செய்யும் விஷயங்களாகும்.

நீட் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு டாக்டர் ஷாலினியின் அறிவுரை!

டாக்டர். ஷாலினி இவ்வளவு பதட்டமான சூழ்நிலையிலும் நீட் தேர்விற்கு தயாராகும் மாணவ செல்வமே... தேர்வில் ஜெயித்து வெற்றிபெற உனக்கான மனநிலை செம்மையுறும் யுத்திகள் இதோ: 1) தேர்விற்கு முன் இரவு குறந்த பட்சம் ஐந்தாறு மணி நேரமாவது நன்றாக தூங்கவும். குறிப்பாக விடியற்காலை தூக்கம் அவசியம், அது தான் உங்கள் மூளையை ரீசார்ஜ் செய்யும். பிடிக்கிறதோ இல்லையோ, வயிறை நிரப்பிக்கொள்ளுங்கள். No fuel, no fire! 2) தேர்வு நாற்காலியில் போய் அமரும் வரை எத்தனையோ பதட்டங்கள் இருக்கும். … Continue reading நீட் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு டாக்டர் ஷாலினியின் அறிவுரை!

”முதல்வரய்யா… நான் தீவிரவாதி அல்ல. நான் ஒரு மாணவன்’’

பாரதிதம்பி ''முதல்வரய்யா... நான் தீவிரவாதி அல்ல. நான் ஒரு மாணவன்’’ என்று எழுதி வைத்துவிட்டு தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் உ.பி. மாநிலம் கான்பூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் 11-ம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவர். இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அந்த மாணவர் ஒரு முஸ்லிம். இதனால், பள்ளியின் ஆசிரியர்களும் முதல்வரும் மீண்டும் மீண்டும் அவரை ‘டெர்ரரிஸ்ட்’ என வகுப்பறையில் அழைத்தனர். ஒவ்வொரு நாளும் அந்த மாணவரின் ஸ்கூல் பேக் … Continue reading ”முதல்வரய்யா… நான் தீவிரவாதி அல்ல. நான் ஒரு மாணவன்’’

டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ? ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை!

சின்னப்பன். எம். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வருடத்தில் ஓர் இரவு, டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ என்று அப்பா கேட்டார். என்னிடம் பதிலே இல்லை. பேச ஆரம்பித்த நாளிலிருந்து யாராவது பெரிய புள்ளையாகி என்ன படிக்கப்போற என்று கேட்டால், டாக்டர் என்று சொல்லி சொல்லியே பழக்கப்பட்டவன். ஒரு விதத்தில் எனக்கு அந்த பதிலை என்றோ ஒரு நாள் சொல்லிக்கொடுத்தவர் அப்பாவாகத்தான் இருக்கமுடியும். அவரே வந்து அது முடியாவிட்டால் என்ன செய்வாய் என்று கேட்டதும், அதற்கு என்னிடம் எந்த … Continue reading டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ? ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை!

தனியார் பள்ளிகளில் கட்டாயமாக்கப்படும் மதிய உணவு!

எல்லா வசதிகளும் இருந்தும், குழந்தை கை எட்டும் தூரத்தில் இருக்கும்போது கூட இப்படி குறுநகரங்களில் கூட மதிய உணவை பள்ளியே வழங்கி, அதற்கு என ஒரு கட்டணம் வசூலித்து பணம் சம்பாதிக்க பெற்றோராகிய நாமே ஒத்துழைப்பது எங்கோ ஆரோக்கியம், வசதி என்ற பெயரில் தேய்ந்துக்கொண்டு இருக்கிறது.

ஜேஎன்யுவில் பீரங்கி: இந்திய பல்கலைக் கழகங்கள் மீது மோடி அரசாங்கம் போர் தொடுக்கிறது!

கார்கில் தினத்தை நினைவுகூரும் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜேஎன்யு துணை வேந்தர், ஜேஎன்யுவுக்கு தற்போது பயன்பாட்டில் இல்லாத ராணுவ பீரங்கிகள் வாங்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரண்டு தேஜமு அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மாணவர் மத்தியில் ராணுவத்தின் மீதான பற்றை வளர்த்தெடுக்க அது போன்ற ஒரு பீரங்கி தேவை என்று அவர் சொன்னார். அதே நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர், ஜேஎன்யுவை கைப்பற்றியதற்காக தற்போதைய அரசாங்கத்தை பாராட்டியதுடன் அடுத்து … Continue reading ஜேஎன்யுவில் பீரங்கி: இந்திய பல்கலைக் கழகங்கள் மீது மோடி அரசாங்கம் போர் தொடுக்கிறது!

ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு: குலக்கல்விக்கொரு முன்னொட்டம்!

படிப்பதற்கு அமைதியான சூழல் கூட கிடைக்காத ஒடுக்கப்பட்ட(அனைத்து சாதியிலும்) குழந்தைகள் தங்கள் படிப்பை ஐந்தாம் வகுப்புடன் அல்லது எட்டாம் வகுப்புடன் நிறுத்தும் அவலங்கள் நடக்கலாம். நடக்கும்.

செங்கோட்டையன், உதயசந்திரன் கூட்டணியின் அதிரடி அறிவிப்புகள்!

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை தொடர்பான மானியக் கோரிக்கையின்போது பல புதிய அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். ரூ.25 கோடி செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்களும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ரூ.5 கோடி செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும் • அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ரூ.3.கோடி செலவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் • _தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ரூ.6 கோடி செலவில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் • தனித்தன்மை வாய்ந்த எட்டு சிறப்பு … Continue reading செங்கோட்டையன், உதயசந்திரன் கூட்டணியின் அதிரடி அறிவிப்புகள்!

சிறு – குறுநகரங்களில் இளிக்கும் பள்ளிகள்!

கே. ஏ. பத்மஜா கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவின் பெருநகரங்கள் எல்லாம் உலக நாடுகளின் கல்வி முறையை இறக்குமதி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. சிறு, குறு நகரங்களோ பெருநகரங்களைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டிருப்பதுதான் இன்றைய கல்விச் சந்தையின் நிலை. இந்தக் கல்வி வியாபாரத்தில் அதிக விலை கொடுத்து தங்கள் பிள்ளைகளை தாங்களே விற்கும் அவல நிலையை கெளரவம் என நினைக்கிறார்கள் பெற்றோர்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை கல்விக் கூடங்கள் கிடையாது. அங்கு புத்தகக் கல்வியுடன், … Continue reading சிறு – குறுநகரங்களில் இளிக்கும் பள்ளிகள்!

ப்ளஸ் டூ ரேங்க் முறை ரத்து: ப்ராய்லர் கல்விப் பண்ணை வியாபாரிகளுக்கு அதிர்ச்சி!

சந்திரமோகன் தமிழகத்தில் இன்று முடிவு வெளியாகியுள்ள ப்ளஸ் டூ / +2 பரீட்சையில், நடப்பு 2016- 17 ஆண்டில் தேர்வு எழுதிய 9 இலட்சம் பேரில் 91.2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மொத்தம் 1813 ஆகும். அவற்றில் 292 பள்ளிகள் அரசுப் பள்ளிகள் ஆகும். தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.77 % ஆகவும், மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி 90.06 % ஆகவும், பொதுவாக அரசுப் பள்ளிகள் 86.87 % ஆகவும், … Continue reading ப்ளஸ் டூ ரேங்க் முறை ரத்து: ப்ராய்லர் கல்விப் பண்ணை வியாபாரிகளுக்கு அதிர்ச்சி!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள்!

பூவண்ணன் கணபதி அரசின் அடிப்படை கடமை என்ன என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத புத்திசாலி கூட்டம் உருவாகி இருப்பது வேதனை தான். படிக்கின்ற அனைவரும் நூத்துக்கு நூறு வாங்க வேண்டும் என்பதா அரசின் வேலை. படிக்கின்ற அனைத்து மாணவ மாணவிகளும் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமான ஒன்றா? பள்ளிகளில் சேர்ந்த மாணவ மாணவிகள் அனைவரும் பள்ளி படிப்பை நிறுத்தாமல் 12 ஆண்டுகள் படிக்கும் நிலையை உருவாக்க வேண்டியது அரசின் கடமை . … Continue reading அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள்!

குழந்தைகளின் கல்வி உரிமையில் ஏனிந்த தாக்குதல்?

அ. குமரேசன் போராடிப் போராடிக் கிடைத்தது கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம். அதை எப்படியாவது நீர்த்துப்போகச் செய்தென தவமிருக்கிறது மத்திய பாஜக அரசு. நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் இனி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி முறை செயல்படுத்தப்படும், 8ம் வகுப்பு வரையில் தேர்ச்சி என்பது விலக்கப்படும் என்ற மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவித்திருப்பதற்கு வேறு என்ன காரணம்? 5ம் வகுப்புக்கு மேல் ஆண்டுத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே … Continue reading குழந்தைகளின் கல்வி உரிமையில் ஏனிந்த தாக்குதல்?

தேசிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது!

திராவிடர் கழகம் நடத்திய புதிய கல்விக் கொள்கை கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.க. தலைவர் கி.வீரமணி, “மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை சமூகநீதிக்கு எதிரானது. பழைய குலக்கல்வித் திட்டத்தின் புதிய வடிவம் - இதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சியே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும் - அனைத்துக் கட்சியினரும் ஆதரிப்பார்கள். இல்லையெனில், மக்கள் மன்றத்தில் தீர்மானிக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும் அவர், “புதிதாக துவக்கப்பட்டுள்ள … Continue reading தேசிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது!

புதிய கல்விக்கொள்கை: கார்ப்பரேட்- வர்ணாசிரம கள்ளக்காதலுக்கு பிறந்த பிள்ளை

வில்லவன் ராமதாஸ் ஊரில் பெரும்பான்மையோர் நோயுற்றிருக்கையில் அந்த ஊருக்கு ஒரு போலி மருத்துவர் வந்தால் என்ன நடக்கும் என யோசித்திருக்கிறீர்களா? அது நோயைக்காட்டிலும் ஆபத்தானது என்கிறீர்களா… சற்றேறக்குறைய அதே நிலையில்தான் இப்போது கல்விச்சூழல் இருக்கிறது. சமீப காலங்களில் பல பெற்றோர்களுடனும் மாணவர்களுடனும் உரையாட நேர்கிறது. அப்போதெல்லாம் எழும் அச்சம் நமது கல்விசூழல் குறித்தாகவே இருக்கும். ஆனால் அதைவிடவும் பெரிய பயம் பாஜக அரசு புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்ட போது எழுந்தது. கல்வித்துறை மேம்பாடு பற்றி … Continue reading புதிய கல்விக்கொள்கை: கார்ப்பரேட்- வர்ணாசிரம கள்ளக்காதலுக்கு பிறந்த பிள்ளை

“புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை”: கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் திங்கள் கிழமை (8-8-2016) அன்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள், அமைப்புகள் பங்கேற்கின்றன. திமுக தலைவர் கருணாநிதி இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு புதிய … Continue reading “புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை”: கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம்

சிஎஸ்ஐ – லுத்தரன் கல்வி நிறுவனங்களின் பொறுப்பின்மை

அன்பு செல்வம் தேசிய புதிய கல்விக் கொள்கை வரைவு - 2016 ஐ மத்திய அரசு வெளியிட்டு கல்வியாளர்களிடமும், கல்வி நிறுவனங்களிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் கருத்துக்களை கேட்டு வெகுநாளாகி விட்டன. கிராமப்புற குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கிற மிக‌ ஆபத்தான வழிவகைகளும், நவீன குலக்கல்வி திட்டத்தையும் கொண்டிருக்கிற, கலாச்சார, பன்முகத் தன்மை, மொழி, இனம் மற்றும் வரலாற்று உரிமையை மறுக்கிற‌ இந்த அறிக்கையின் மீது இப்போது விவாதம் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை, தாய்த் … Continue reading சிஎஸ்ஐ – லுத்தரன் கல்வி நிறுவனங்களின் பொறுப்பின்மை

‘மருத்துவ மாணவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை’: போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டில் தகவல்

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் கணேசனின் மகனான சரவணன் கடுமையான முயற்சிக்கு பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்புக்காக சேர்ந்தார். கல்லூரியில் சேர்ந்த 10 நாட்களிலேயே சரவணன், அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் விஷ ஊசி போடப்பட்டதற்கான அடையாளம் இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‌சரவணன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்பது அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில், சரவணன் தற்கொலை செய்ததற்கான தடயங்கள் எதுவும் அவரது … Continue reading ‘மருத்துவ மாணவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை’: போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டில் தகவல்

லெனின் மரணம்:அரசு – பாரத ஸ்டேட் வங்கி – ரிலையன்ஸ் சேர்ந்து நடத்திய படுகொலை!

பொறியியல் மாணவர் லெனின் மரணம் தொடர்பாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி செயலாளர் த.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் கதிரேசன் என்பவரது மகன் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான லெனின், பாரத ஸ்டேட் வங்கியின் கடன் வசூல் அடியாளாக நியமிக்கப்பட்ட ரிலைன்ஸ் நிறுவனத்தால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவன் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமெனில் அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும், 100% கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு என்று கல்லூரிகள் உத்திரவாதம் கொடுக்கும் போது … Continue reading லெனின் மரணம்:அரசு – பாரத ஸ்டேட் வங்கி – ரிலையன்ஸ் சேர்ந்து நடத்திய படுகொலை!

“15 நாட்களுக்குள் ரூ. 2, 48, 623 கடனை கட்ட வேண்டும்”: தலித் மாணவரின் உயிரைப் பறித்த ரிலையன்ஸ் கடிதம் 

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த மாணவர் லெனின், பாரத் ஸ்டேட் வங்கியில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கடனாக பெற்று, சிவில் பாடப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர். பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி, மாணவர்களுக்கு வழங்கி உள்ள கல்விக் கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீத மதிப்பிலான விலைக்கு விற்பனை செய்து உள்ளது. இதனால் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு கடனை கட்டுமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கடிதம் அனுப்பி வருகிறது. இப்படி அனுப்பப்பட்ட … Continue reading “15 நாட்களுக்குள் ரூ. 2, 48, 623 கடனை கட்ட வேண்டும்”: தலித் மாணவரின் உயிரைப் பறித்த ரிலையன்ஸ் கடிதம் 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நெருக்கடியால் பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த மாணவர் லெனின், பாரத் ஸ்டேட் வங்கியில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கடனாக பெற்று, சிவில் பாடப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி, மாணவர்களுக்கு வழங்கி உள்ள கல்விக் கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீத மதிப்பிலான விலைக்கு விற்பனை செய்து உள்ளது. இதனால் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு கடனை கட்டுமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கடிதம் அனுப்பி வருகிறது. அதோடு மட்டுமின்றி, … Continue reading ரிலையன்ஸ் நிறுவனத்தின் நெருக்கடியால் பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை

எய்ம்ஸ் மருத்துவமனையின் மாணவர் சரவணின் மர்ம மரணம்

தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த பயிற்சி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவருடைய இறப்பு குறித்து  சரியான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில், “மாணவர் சரவணன் மரணத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், சக மாணவர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பின்னாலாடை நிறுவனத்தில் பணிபுரியும் கணேசன் என்பவரின் மகனான சரவணன் … Continue reading எய்ம்ஸ் மருத்துவமனையின் மாணவர் சரவணின் மர்ம மரணம்

ஆசிரியரைப் பின்தொடரும் தீண்டாமை; மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாத தலைமை ஆசிரியர்

தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ரோஜா என்ற ஆசிரியை, கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். நியூஸ் 7 செய்திப்படி,  ஆசிரியை ரோஜாவின் சாதியை காரணம் காட்டி, அவரது வகுப்பிற்கு மாணவர்களை … Continue reading ஆசிரியரைப் பின்தொடரும் தீண்டாமை; மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாத தலைமை ஆசிரியர்

போராடித்தான் பெற்றோம்; தாரிகா பானு பள்ளிக்குப் போகிறார்!

கிரேஸ் பானு எனக்கு வெகு நாள் ஆசை கனவு என்றே கூறலாம். ஆம் திருநர்களின் கல்வி பாதியிலேயே முடிந்து விடுகிறது அப்படி முடியக் கூடாது ஒரு திருநங்கையோ அல்லது திருநம்பியோ தன் சுய அடையாளத்தோடு பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதுதான். அது நடக்க பல ஆண்டுகள் ஆகுமோ என்பதை தகர்த்தெரிந்துவிட்டார் தாரிகா பானு. இவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை படித்தார். பின்பு பாலின மாற்றம் செய்ய வேண்டும் என … Continue reading போராடித்தான் பெற்றோம்; தாரிகா பானு பள்ளிக்குப் போகிறார்!

வன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1?

வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ் ஆர் எம் அதிபர் பாரிவேந்தர் பச்சமுத்துவுக்கும் ஏற்பட்ட பிணக்கை அறிக்கைவிட்டு அடுத்த ட்விஸ்ட் கொடுத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். ராமதாஸின் அறிக்கை இப்படிச் சொன்னது: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருக்கு நெருக்கமானவரும், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் அதிபருமான மதன் தலைமறைவாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும், அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் இடையிலான பிரச்சினை என்ற நிலையைத் தாண்டி, நூற்றுக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் சிக்கலாக மாறியிருக்கிறது. … Continue reading வன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1?

வேலை கொடுப்பதாக 1,300 பொறியியல் பட்டதாரிகளை மோசடி செய்த எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம்

  எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1,300 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக ஒன்றரை வருடம் இழுத்தடித்து மோசடி செய்திருக்கிறது. 2014-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பை முடித்த இந்த மாணவர்களை பல கட்ட தேர்வுகளில் சோதனை செய்த பிறகு வேலை வழங்கும் கடிதத்தை (offer letter)-ஐ கொடுத்தது, எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம். ஆனால், வேலையில் சேர்வதற்கான தேதியை பல முறை ஒத்திப் போட்டு, 18 மாதங்களுக்குப் பிறகு இன்னும் ஒரு தகுதித் தேர்வு … Continue reading வேலை கொடுப்பதாக 1,300 பொறியியல் பட்டதாரிகளை மோசடி செய்த எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம்

கேம்பஸ் இண்டர்வியூ ஏமாற்று: எல்& டி நிறுவனத்தைக் கண்டித்து மாணவர்கள் முகமூடி அணிந்து போராட்டம்!

சி. மகேந்திரன் எல் அண்ட் டி தகவல் தொழிற்நுட்ப நிறுவனத்தின் பணி ஒப்பந்த அத்து மீறலை எதிர்த்து சென்னை சோழிங்கநல்லூரில் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரிகளின் போராட்டம். பொறியியல் கல்லூரிகளில் placement என்பதற்காக ஒரு கட்டணம் பெறுகிறார்கள். ஆனால் அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் பணி வாங்கித் தருவதில்லை. இதில் பெருங்கொள்ளை நடைபெறுகிறது. இதுமட்டுமல்லாது அண்மையில் எல் அண்ட டி நிறுவனத்தில், தேர்வு செய்த மாணவர்களை பணியில் அமர்த்தாமல் பல ஆண்டுகள் தொடர்ந்து அவர்களை வேலையற்றவர்களாக ஆக்கியுள்ளார்கள். வேறு வேலைக்கும் … Continue reading கேம்பஸ் இண்டர்வியூ ஏமாற்று: எல்& டி நிறுவனத்தைக் கண்டித்து மாணவர்கள் முகமூடி அணிந்து போராட்டம்!

“மாணவர்களை சேர்க்காவிட்டால் சம்பளம் கிடையாது” ஆசிரியர்களை மிரட்டி அமைச்சர் கே.சி.கருப்பண்ணனின் இன்ஜினியரிங் கல்லூரியில் சர்குலர்

தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணனுக்குச் சொந்தமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஹை டெக் இன்ஜினியரிங் கல்லூரி, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ளது. இந்தக் கல்லூரியில் முதல்வர், கல்லூரியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில், “ஒரு வருடத்தில் மூன்று மாணவர்களை கட்டாயம் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ள நிலையில், இதுவரை ஒரு மாணவரைக்கூட யாரும் சேர்க்கவில்லை. எனவே, போதிய நடவடிக்கைகள் எடுத்து மாணவர்கள் சேர்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். அப்படியில்லையெனில் மே மாதத்துக்கான சம்பளம் வழங்கப்பட … Continue reading “மாணவர்களை சேர்க்காவிட்டால் சம்பளம் கிடையாது” ஆசிரியர்களை மிரட்டி அமைச்சர் கே.சி.கருப்பண்ணனின் இன்ஜினியரிங் கல்லூரியில் சர்குலர்

கல்வி பெற்ற முன்னாள் குழந்தை தொழிலாளியால் என்ன செய்ய முடியும்?

ஒடியன் ஜடையாம்பாளையம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமம் கனகராஜ். 8 வயதுகூட நிரம்பாத சிறுவன் தந்தை மாற்றுத்திறனாளி தாய் விவசாயிக்கூலி தாயின் வருமானம் குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கவில்லை மூன்றாம் வகுப்பில் இருந்தே பள்ளியில் பாதி நேரம்தான் இருப்பான் மதியஉணவுக்குப்பிறகு ஏதாவது ஒரு வேலைக்கு சென்றுவிடுவான் . தந்தையின் உடல் நிலை மோசமானதை ஒட்டி தனது 11 ஆம் வயதில் படிப்பை முற்றாகக் கைவிட்டுவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான் கம்பனி அவனுக்கு பிடித்துவிடுகிறது காசும் … Continue reading கல்வி பெற்ற முன்னாள் குழந்தை தொழிலாளியால் என்ன செய்ய முடியும்?

மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வு: குழப்பத்தை போக்க ராமதாஸ் வலியுறுத்தல்

  “மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) ஓராண்டுக்கு ஒத்திவைத்து அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியாயின. ஆனால், அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா கூறியிருக்கிறார். பொது நுழைவுத் தேர்வு குறித்த மாணவர்களின் கவலையை போக்குவதற்கு பதிலாக அவர்களை மத்திய அரசு  மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்துவது சரியல்ல” என பாமக நிறுவனர் … Continue reading மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வு: குழப்பத்தை போக்க ராமதாஸ் வலியுறுத்தல்

படிப்பிலும் வென்ற டாஸ்மாக் போராட்டத்தில் சிறையில் இருக்கும் மாணவர்!

மதுவிலக்கு போராட்டத்தில் பங்கு பெற்று இரு முறை சிறைசென்ற மாரிமுத்து 12ம் வகுப்பில் 971மதிப்பெண்களை பெற்றுள்ளார். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியதற்காக தற்போது சிறையில் உள்ளார். இவரது தாய் சித்தாள் வேலை செய்கிறார். படிக்கும் போதே சிறு சிறு வேலைகளுக்கு சென்று தனகு கல்விச் செலவையும் சுமந்துள்ள மாரிமுத்து எல்லா போராட்டத்திலும் முன்னணியாக நிற்பவர். மதுரவாயில் அரசு பள்ளியில் +2 படிக்கும் மாணவர் மாரிமுத்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியில் சேர்ந்து மாணவர் பிரச்சினைகளுக்காக … Continue reading படிப்பிலும் வென்ற டாஸ்மாக் போராட்டத்தில் சிறையில் இருக்கும் மாணவர்!

”நான் பிரதமராகணும்”: பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் எதிர்கால திட்டம்!

வழக்கமாக மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிகள் , “டாக்டர் ஆகணும்” “இன் ஜினியர் ஆகணும்”, “சார்டட் அக்கவுண்டட் ஆகணும்” “கலெக்டர் ஆகணும்” என்றுதான் சொல்லவார்கள். பிளஸ் டூ தேர்வில் மாற்றுமொழி பிரிவில் முதலிடம் பிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த மாணவி சத்ரியா. இவருடைய மதிப்பெண்கள் 1195. சென்னை குட்ஷெப்பர்டு பள்ளி மாணவி சத்ரியா பத்தாம் வகுப்பு வரை தமிழ்க் கல்வியில் படித்துவிட்டு, பின்னர் பிரெஞ்சு மொழியை முதல்பாடமாக எடுத்துப் படித்தவர். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பிரதமர் ஆவதுதான் என்னுடைய … Continue reading ”நான் பிரதமராகணும்”: பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் எதிர்கால திட்டம்!

தேர்தல் பணப்பட்டுவாடா சர்ச்சையில் சிக்கிய ஊத்தங்கரை பள்ளி மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் முதலிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். 1200க்கு 1195 மதிப்பெண் பெற்ற ஜஸ்வந்த், ஆர்த்தி ஆகியோர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தப் பள்ளியில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த 3 கோடியே 30 லட்சம் ரூபாய் பறக்குபடையினரால் பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சிக்கு வந்தால் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும்: கருணாநிதி

திமுக ஆட்சிக்கு வந்தால் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகம் பொதுத் தேர்தல் முடிந்து, ஆட்சிப் பொறுப்பினை ஏற்குமானால், 7-3-2007 முதல் தமிழகத்தில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்து நடைமுறையில் இருந்து வரும் சட்டத்தின் அடிப்படையில், 21-12-2010 அன்று இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையினைத் திரும்பப் பெறவோ அல்லது திருத்தி அமைக்கவோ தேவையான ஏற்பாடுகளை போர்க்கால அவசரத்தில் மேற்கொண்டு, தமிழகத்திலே … Continue reading திமுக ஆட்சிக்கு வந்தால் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும்: கருணாநிதி

”அங்கு போகாதே! அது அவர்களின் இடம்!” பாண்டிச்சேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவப் பகிர்வு

அருணா ஸ்ரீ இது தில்லி பெண்ணைப் பற்றியோ கேரளப் பெண்ணைப் பற்றியோ அல்ல. பொதுவெளியில் களையெடுக்க வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சனை. அதிலும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் கவனிக்க வேண்டிய விசயம். இன்று எங்கு பார்த்தாலும் தலித் மக்களின் வாழ்வு சார்ந்த பிரச்சனைகளையும் சவால்களையும் முன்னெடுத்து வலைத்தளங்களில் வாதிடுகிறோம். உயிர்களின் மதிப்பு கூட ஜாதி அடிப்படையில் தான் மதிப்பிடப்படுகிறது. எங்கும் தலைவிரித்தாடும் இந்த பேயானது , கல்வி மையங்களிலும் ஆடும் ஆட்டம் ஆரம்பக் கட்டத்திலே தடுக்க வேண்டிய … Continue reading ”அங்கு போகாதே! அது அவர்களின் இடம்!” பாண்டிச்சேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவப் பகிர்வு

மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக பல மாநிலங்கள் நீதிமன்றத்தில் மனு; தமிழக அரசு செய்யவில்லை

அகில இந்திய அளவில் மருத்துவ பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக கர்நாடகா, உத்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ஆந்திர மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றன. இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்கிழமை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழக அரசு மனுதாக்கல் செய்யவில்லை.

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு ஏன் கூடாது? காரணங்கள் இதோ..!

மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நடந்து வரும் வழக்கில், பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசின் அனுமதி பெற்று விட்டதாக மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் அவ்வாறு நடத்துவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு பொது நுழைவு தேர்விற்கு எதிராக தனது நிலையை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொது நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களின் … Continue reading மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு ஏன் கூடாது? காரணங்கள் இதோ..!

தனியார் பொறியியல் கல்லூரிகளில் தொடரும் மரணங்கள்: பாரத் பொறியியல் கல்லூரியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை சேலையூர் அருகே உள்ள பாரத் பொறியியல் கல்லூரியில் தமிழகம் மற்றும் வட மாநில மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். 21-ம் தேதி  நடைபெற்ற பிராக்டிகல் தேர்வின் போது, அட்டானு டெபமாத்(21) என்ற வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவரை பேராசிரியர் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கல்லூரிக்கு அருகே தங்கியிருந்த மாணவர் அடானு, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவில் இன்ஜினியரிங்கள் மாணவரான அடானுவின் மரணத்துக்கு பேராசிரியர், மாணவரை அவமானப்படுத்தியதே காரணம் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். … Continue reading தனியார் பொறியியல் கல்லூரிகளில் தொடரும் மரணங்கள்: பாரத் பொறியியல் கல்லூரியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

சர்ச்சைக்குரிய புத்தகங்களை திரும்பப் பெற்றது புதுச்சேரி அரசு!

துச்சேரி அரசின் கல்வித்துறை, ரீடிங் கார்னர் என்ற பள்ளி நிகழ்விற்கு சுமார் 100 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு சில புத்தகங்களை பரிந்துரைத்திருந்தது. இதில் பாலியல் பேசும் சில சிறுகதைத் தொகுப்புகளும் இடம் பெற்றிருந்தன. 12 வயது மாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களா இவை என புதுவை சீ.நா. கோபி, தி டைம்ஸ் தமிழில் பிரத்யேகக் கட்டுரை எழுதியிருந்தார். சமூக ஊடகங்கள் வழியாக பரவலாக சென்றடைந்த இந்தக் கட்டுரை மூலம், பலர் புதுச்சேரி அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பல்வேறு … Continue reading சர்ச்சைக்குரிய புத்தகங்களை திரும்பப் பெற்றது புதுச்சேரி அரசு!