“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”

ஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள்? பதில்: கௌகாத்தி பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி, படித்தேன். முதலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்திலும், பின்பு இளைஞர் பெருமன்றத்தி்லும் பணியாற்றினேன். அப்போது இருந்த தலைவர்கள் … Continue reading “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”

BSNL நட்டத்துக்கு என்ன காரணம்? முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்

தேசியத் தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் (NFTE) பல்வேறு பொறுப்புகளில் 39 ஆண்டுகள் இருந்தவர் ஆர்.பட்டாபிராமன். 63 வயதாகும் ஓய்வுபெற்ற தொலைபேசித் தொழிலாளியான இவர் ஒரு சிந்தனையாளர்; காத்திரமான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். 'நவீன சிந்தனையின் இந்திய பன்முகங்கள்' என்ற இவரது நூல் தற்போது வெளிவந்துள்ளது. 'Ideas of O.P.Gupta' என்ற நூலின் தொகுப்பு ஆசிரியர். இந்த நேர்காணலில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-ன் நெருக்கடி பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசுகிறார். தடைம்ஸ் தமிழ்.காமிற்காக இந்த நேர்காணலை செய்தவர் பீட்டர் … Continue reading BSNL நட்டத்துக்கு என்ன காரணம்? முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்

“தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர்”: காக்கைச் சிறகினிலே ஆசிரியர் வி.முத்தையா

‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் வி.முத்தையா (வயது 67) அவர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ‘சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது’ வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் தமிழியல் ஆளுமைக்கான ‘சிலம்புச் செல்வர் மபொசி விருதுக்கு' அவரை தேர்வு செய்துள்ளன. கூட்டுறவுத் துறையில் 35 ஆண்டுகாலம் பணியாற்றியவர். தனது தொழிற்சங்க அனுபவங்களையும் பத்திரிகை அனுபவங்களையும் கூறுகிறார். நேர்காணல் செய்தவர்: பி.பீட்டர் துரைராஜ். கூட்டுறவுத் துறைக்கு எப்படி வந்தீர்கள்? கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீரமார்த்தாண்டன் புதூர் … Continue reading “தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர்”: காக்கைச் சிறகினிலே ஆசிரியர் வி.முத்தையா

‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்

ஏஐடியுசி - பால்வள ஊழியர் சங்க துணைத்தலைவரான, ஆர்.பாளையம் ஆவின் நிறுவனம் பற்றியும்,தனது தொழிற்சங்க அனுபவம் பற்றியும் இந்த நேர்காணலில் பேசுகிறார் - பீட்டர் துரைராஜ் கேள்வி : ஆவின் நிறுவனம் பற்றி சொல்லுங்களேன் ? பதில் : சென்னை நகர மக்களுக்கு மலிவாகவும்,தரமாகவும் பாலை வழங்க வேண்டும் என்ற தேவை எழுந்தது. இதற்காக 1962 ல் மாநிலஅரசு 'தமிழ்நாடு அரசு பால்பெருக்குத் துறை' ஐ உருவாக்கியது.பாலை கொள்முதல் செய்து ,வீடு வீடாக விநியோகம் செய்தார்கள்.1972 ம் … Continue reading ‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்

பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம். த டைம்ஸ் தமிழ்.காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ். இதில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை, அதன் போதாமை, அடையாள அரசியல், ஆர்எஸ்எஸ் -ன் தாக்கம் என பல ஆழமான செய்திகளை இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் அ. மார்க்ஸ். கேள்வி : பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இஸ்லாமிய வேட்பாளர்களாக அதிமுக, திமுக சார்பில் யாருமே … Continue reading இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்

கட்டட தொழிலாளர்களின் நிதியை அம்மா உணவகத்துக்கு எடுத்துக்கொள்ளப் பார்க்கிறது அரசு: கட்டட சங்க தலைவர் கே.இரவி

கட்டட தொழிலாளர் சங்கத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கே. இரவி (66). தமிழ்நாடு ஏஐடியுசியின் துணைப் பொதுச் செயலாளராகவும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் இருக்கிறார். கட்டுமான தொழிலாளர் நிலமை பற்றி தடைம்ஸ்தமிழ்.காமிற்காக பேசுகிறார். இந்த நேர்காணலை செய்தவர் பி. பீட்டர் துரைராஜ். கேள்வி : கட்டட தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளாரே? பதில்: இப்படி ஒரு கோரிக்கையை கட்டட … Continue reading கட்டட தொழிலாளர்களின் நிதியை அம்மா உணவகத்துக்கு எடுத்துக்கொள்ளப் பார்க்கிறது அரசு: கட்டட சங்க தலைவர் கே.இரவி

அம்பேத்கரது எழுத்துக்களை காலவரிசைப்படி தொகுக்க வேண்டும்: வசுமித்ர நேர்காணல்

‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற விமர்சனத்துக்கு உரிய ஒரு நூலை எழுதியிருக்கிறார் வசுமித்ர. இந்த நூல் எழுத வேண்டிய அவசியம், தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளின் நழுவல்வாதம், அம்பேத்கரை மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியம், அடையாள அரசியல் என பலவற்றைக் குறித்து இந்த நேர்காணலில் வசுமித்ர பேசுகிறார். ந.முத்துமோகன், அருணன், எஸ்.வி.ராஜதுரை, கி.வீரமணி, பெரியார்தாசன் என பலரைக் குறித்து இதில் பேசுகிறார். சிந்தன் பதிப்பகத்தில் அவரை அவரை த டைம்ஸ் தமிழ். காமிற்காக நேர்காணல் செய்தவர் பி.பீட்டர் … Continue reading அம்பேத்கரது எழுத்துக்களை காலவரிசைப்படி தொகுக்க வேண்டும்: வசுமித்ர நேர்காணல்

“இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலம்தான் இந்துத்துவாவை வெற்றி கொள்ள முடியும்”: கோம்பை எஸ். அன்வர்

இஸ்லாமியர்கள், பொதுச் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலமாகத்தான் எதிர் சக்திகளை வெற்றி கொள்ள முடியும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. உதாரணமாக பத்தொன்பது சதவிகித முஸ்லிம்கள் வாழும் உபியில், முஸ்லிம்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு அரசியல் வெற்றி காண முடியும் என்பது அண்மையில் நிரூபிக்கப் பட்டுவிட்டது. அப்படியிருக்க ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான தமிழகத்தில் யோசிக்க வேண்டும்.

”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை

social Ego, Political Ego-வின் வெளிப்பாடுதான் 3000 அடி உயர சிலை. அந்தச் சிலை அருகில் சென்றால் பட்டேலின் கால்விரலைத்தான் நாம் பார்க்க முடியும். இது மோசமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; பீகார் ,ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது: மரு.அமலோற்பநாதன்

வேப்பிலை, பூண்டில் மருத்துவ குணங்கள் உள்ளன. நவீன மருத்துவம் இதை ஏற்றுக் கொள்கிறது. அதானால்தான் இதில் ஆராய்ச்சி நடக்கிறது. ஆனால், அதற்காக இன்னமும் பழைய முறைகளையே பயன்படுத்துவோம் என்று சொல்லுவது சரியல்ல.

”காவல்துறைதான் கைதிகளின் விடுதலையை தீர்மானிக்கிறது!”: அரசியல் செயல்பாட்டாளர் தியாகு நேர்காணல்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, தன் வாழ்நாளில் 15 ஆண்டுகள் சிறையில் கழித்தவர் தியாகு. சிறைப்பட்டோரின் உரிமை, சிறைகளின் நிலைமை, அரசு எந்திரங்களின் மனோபாவம் பற்றி அரசியல் செயல்பாட்டாளர் தியாகு பேசுகிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என்ற கோரிக்கை எழுப்பப்படும் நேரத்தில் இந்த நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. த டைம்ஸ் டாட் தமிழ் காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ். கேள்வி: எந்த மாநிலத்தில் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் … Continue reading ”காவல்துறைதான் கைதிகளின் விடுதலையை தீர்மானிக்கிறது!”: அரசியல் செயல்பாட்டாளர் தியாகு நேர்காணல்

குடும்பம் என்பது பெண்களைப் போல ஆண்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பற்றது!: எழுத்தாளர் தமயந்தி

தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் சொற்ப பெண்களில் தமயந்தி தனித்துவமானவர். குடும்பம், சமூகம் போன்ற அமைப்புகள் பெண்கள் மீது செலுத்தும் வன்முறைகளை  சிறுகதைகளில் பதிவாக்கியவர். தான் எழுதிய அப்படியானதொரு சிறுகதையை படமாக்கியுள்ளார் தமயந்தி. ‘தடயம்’ என்ற பெயரில் அந்தப்படம் வெளியாக உள்ளது.  இதுகுறித்து தமயந்தியுடன் நடத்திய உரையாடல் இங்கே... நீங்கள் சிறுகதை எழுத்தாளராகவும் ஊடகவியலாளராக அறியப்பட்டவர். பின், சினிமா வசனகர்த்தாக அறிமுகமானீர்கள். இப்போது இயக்குநராக... ஆக, இயக்குநராவதுதான் இலக்காக இருந்ததா? “இது சிக்கலான கேள்விதான். நான் தென்மாவட்டத்திலிருந்து, மத … Continue reading குடும்பம் என்பது பெண்களைப் போல ஆண்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பற்றது!: எழுத்தாளர் தமயந்தி

‘தடயம்’ திரைப்படம் குறித்து இயக்குநரும் எழுத்தாளருமான தமயந்தி நேர்காணல்

‘தடயம்’ திரைப்படம் குறித்து எழுத்தாளர் தமயந்தி நேர்காணல் ஆடியோ வடிவில் https://soundcloud.com/i1qu7gv6b9fl/writer-damayanthi-interview

“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்

நந்தன் நீலகேணி பெரிய தொழில்நுட்ப வல்லுநர் அல்ல; மாறாக அவர் ஒரு மார்கெடிங் மனிதர். மன்மோகன்சிங் அரசிடம் இந்த திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை பெருமளவில் குறைக்கலாம் என்று அவரிடம் சொல்லி, UPA -2 அரசை இந்த திட்டத்தை ஏற்க வைத்தார்கள். மக்களை கண்காணிக்கலாம் என்று சொல்லி மோடி அரசிடம் சொல்லி இதனை தொடர வைத்தார்கள்.

“என் படத்தின் மீதான அச்சுறுத்தல்களை நேர்மறையாக எதிர்கொள்வேன்”: ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்பட இயக்குநர் டி. அருள் எழிலன்

தமிழகம் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கிறது. போராடும் மக்கள் மீதும் மக்கள் பணிகளுக்காக சிறு அமைப்புகள் மீதும் அரசு ஒடுக்குமுறையை ஏவிக்கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக ஊடகங்கள் மீதான தணிக்கை உத்தரவையும் அரசு பிறப்பித்துக்கொண்டிருக்கிறது. அரசின் ஒடுக்குமுறையை கண்டித்து அரங்கக்கூட்டம் நடத்தினால், அரங்கத்தின் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. இத்தகையதொரு நேரத்தில் வெளியாகியிருக்கிறது ‘பெருங்கடல் வேட்டத்து’ என்கிற ஆவணப்படம். ஒகி புயலின் போது செயலிழந்த அரசு நிர்வாகத்தினை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கும் இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் பத்திரிகையாளர் டி. அருள் எழிலன். சமூக-அரசியல் … Continue reading “என் படத்தின் மீதான அச்சுறுத்தல்களை நேர்மறையாக எதிர்கொள்வேன்”: ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்பட இயக்குநர் டி. அருள் எழிலன்

“கேரளாவில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள்கூட தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன !”: வேளாண் செயல்பாட்டாளர் க.சரவணன்

உலகில் தடைசெய்யப்பட்ட பல பூச்சிக்கொல்லி மருத்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. கேரளா அரசு கூட மோனோகுரோட்டோபாஸ் போன்ற சில பூச்சிக் கொல்லிகளைத் தடை செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு மௌனம் காப்பது ஏன்?

“வாசகர்கள் எந்த நல்ல படைப்பையும் கைவிடுவதில்லை”: இரா.முருகவேள்

தமிழகத்தின் கவனம் கொள்ளத்தக்க ஆளுமையான இரா.முருகவேள் சென்னை வந்திருந்தார். வாசக சாலை சமீபத்தில் நடத்திய காரல் மார்க்ஸ் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த அவரை த டைம்ஸ் தமிழ் டாட் காமிற்காக நேர்காணல் செய்தோம். மொழிபெயர்ப்பாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட இரா. முருகவேளை எழும்பூரில் உள்ள ஒரு விடுதியில் வைத்து நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ். கேள்வி : உங்களுக்கு ஏற்பட்ட இலக்கிய ஆர்வம் பற்றி சொல்லுங்களேன் ? பதில்: என் அப்பா ஒரு … Continue reading “வாசகர்கள் எந்த நல்ல படைப்பையும் கைவிடுவதில்லை”: இரா.முருகவேள்

பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது! முடியாது! முடியாது!: தொ. பரமசிவன் நேர்காணல்

தமிழ்நாட்டின் பண்பாட்டு மானுடவியல் துறையின் பேராசான் தொ.பரமசிவன் அவர்களுக்கு சமீபத்தில் நியுஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மகுடம் விருது வழங்கி கவுரவித்தது. அன்று தொ.ப அவர்களுடன் அவரது இல்லத்தில் இருந்து விருது வழங்கும் நிகழ்வை நேரலையில் பார்த்துக் கொண்டே நானும் எனது இணையர் ஆனந்தியும் பேசிக் கொண்டிருந்தோம். தொ.ப அன்றாடம் தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்து வருகிறார். இதன் மூலம் சமகால அரசியலில் எல்லாவற்றுக்கும் ஆழமான பார்வையைக் கொண்டிருக்கிறார். மாட்டிறைச்சி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல், நீட் தேர்வு, இயக்குனர் … Continue reading பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது! முடியாது! முடியாது!: தொ. பரமசிவன் நேர்காணல்

ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என பேசும்போது புறக்கணிக்கப்படுகிறோம்: இயக்குநர் மீரா கதிரவன் நேர்காணல்

இயக்குநர் மீரா கதிரவனின் ‘அவள் பெயர் தமிழரசி’ தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவு செய்யாத படமாக இருந்தாலும், அந்தப் படம் தனித்துவமாக இருந்தது.  அழிவின் விளிம்பில் இருக்கிற தோல் பாவை கூத்தை ஆவணப்படுத்துவதாகவும் தமிழ் நிலத்தை பதிவு செய்யும் முயற்சியும் ‘அவள் பெயர் தமிழரசி’யின் தனித்துவத்துக்குக் காரணங்கள். இயக்குநர் மீரா கதிரவனுக்கு ‘அவள் பெயர் தமிழரசி’ குறித்து பல கசப்புகள் சுவடுகளாக தேங்கியிருக்கின்றன. ஆனாலும் அந்தப் படம் அவருக்கொரு அடையாளத்தை உருவாக்கியிருப்பதையும் அவர் மறுக்கவில்லை.  தமிழ் … Continue reading ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என பேசும்போது புறக்கணிக்கப்படுகிறோம்: இயக்குநர் மீரா கதிரவன் நேர்காணல்

அனிதாவின் மரணம்; நீட் எதிர்ப்புப் போராட்டங்கள்: அரசியல் செயல்பாட்டாளர் செந்திலுடன் ஓர் உரையாடல்

அனிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீட் விலக்கு கேட்டும் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் மாணவர்கள் வீதிக்கு வந்திருக்கிறார். இதையோட்டி பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்திலுடன் டைம்ஸ் தமிழ் ஆசிரியர் மு.வி.நந்தினி உரையாடுகிறார்... https://youtu.be/WIPgEuYARUg https://youtu.be/mHzfvi6ck8o https://youtu.be/zaIfl2g1Tws https://youtu.be/iiA9JIKavs0 https://youtu.be/uIiOm20CQ9s

“குற்றப்பரம்பரை சட்டத்தின் தொடர்ச்சிதான் குண்டர்சட்டம்!”: துரத்தப்படும் மனிதர்கள் நூலாசிரியர் ம.இராதாகிருஷ்ணன்

ஒட்டர், குறவர் இன மக்களின் பல்வேறு போராட்டங்களில் தானும் ஒருவராக பங்கேற்று அம் மக்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு 'துரத்தப்படும் மனிதர்கள்' என்ற நூலை எழுதிய ம.இராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ரேகைச் சட்டம், அலைகுடி மக்கள் சங்கம், பொதுப்புத்தி, குற்றவியல் நீதிமுறைமை பற்றி யதார்த்தமாக பேசுகிறார். டைம்ஸ் தமிழுக்காக உரையாடியவர் : பீட்டர் துரைராஜ். கேள்வி: நீங்கள்  எழுதிய "துரத்தப்படும் மனிதர்கள் " நூலின் பின்னணி குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன் ? பதில்: … Continue reading “குற்றப்பரம்பரை சட்டத்தின் தொடர்ச்சிதான் குண்டர்சட்டம்!”: துரத்தப்படும் மனிதர்கள் நூலாசிரியர் ம.இராதாகிருஷ்ணன்

”கலையையும் விளையாட்டையும் ஒன்றிணைக்கும் புள்ளி வாசிப்பு” ’பல்லாங்குழி’ இனியன் பேட்டி

வாசிப்பு பழக்கம் அருகி வரும் காலமிது. பெரும்பாலான நேரத்தை நவீன பொழுதுபோக்கு சாதனங்கள் எடுத்துக்கொண்ட நிலையில் புத்தக வாசிப்பு என்பதே பலருக்கு புதிதான விஷயமாக இருக்கிறந்து. வாசிப்பின் மூலம் புதிய புதிய திறப்புகளை அறிந்துகொள்ள வேண்டிய குழந்தைகளோ மதிப்பெண்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். புத்தகங்கள் தூசி படர்ந்த நூலக அலமாறிகளில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. புத்தகங்களை தூசி தட்டி, அவற்றில் இருக்கும் உலகங்களை திறந்து பார்க்க வைக்கும் பணியை சிலர் அவ்வவ்போது செய்துகொண்டு இருக்கிறார்கள். பல்லாங்குழி அமைப்பைச் சேர்ந்த இனியன், அத்தகையதொரு … Continue reading ”கலையையும் விளையாட்டையும் ஒன்றிணைக்கும் புள்ளி வாசிப்பு” ’பல்லாங்குழி’ இனியன் பேட்டி

“திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்

சினிமா பத்திரிகையாளர், அறிவியல் புனைகதை எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதாசிரியர் என பன்முகத்துடன் எழுதி வருபவர் தமிழ்மகன். இரண்டு கவிதை நூல்கள், ஐந்து சிறுகதை தொகுதி, பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், அறிவியல் கட்டுரை தொகுப்பு, சினிமா தொடர்பான ஐந்துக்கும் மேற்பட்ட நூல்கள் என இவருடைய எழுத்துழைப்பு ஆவணமாக்கப்பட்டுள்ளது.  இதுவரை வெளியான இவருடைய நூல்களில் ஆகச்சிறந்த படைப்பாகக் கொண்டாடப்படுவது திராவிட இயக்க பின்னணியில் எழுத்தப்பட்ட ‘வெட்டுப்புலி’ நாவலே! இந்த உரையாடலின் மையப்புள்ளியாக ‘வெட்டுப்புலி’ அமைந்திருக்கிறது. தொழிற்சங்க செயல்பாட்டாளர் பீட்டர் துரைராஜ், … Continue reading “திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்

“மக்களின் மனதில் மென்மையான மோடி இருக்கிறார்; பாசிசம் அதனால்தான் வெற்றி பெறுகிறது”: ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி. அமுதன் நேர்காணல்

மனிதர் மனதில் உள்ள வன்முறை கல்வி, நாகரிகத்தால் ஆற்றுப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை உணர்வை தட்டி எழுப்பி மனிதர்களை மோதச் செய்வதில்தான் பாசிசச் சக்திகளின் வெற்றி இருக்கிறது. இப்போது அதைத்தான் செய்து வருகிறார்கள்.  இல்லையென்றால் காஷ்மீரில் இராணுவ ஜீப்பில் கட்டி வைக்கப்பட்ட இளஞைனுக்காக மக்கள் வெகுண்டு எழாமல் விவாதம் நடத்துவார்களா என்ன?

“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ”: தமிழ் ஸ்டுடியோ அருண்

“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ” என்கிறார் ‘தமிழ் ஸ்டுடியோ’ மோ. அருண். புத்தக சந்தையை ஒட்டி, தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில், “காசு வைத்துள்ள பெரிய சினிமா இயக்குநர்கள் பலரும்கூட புத்தகங்கள் வாங்காமல் கைவீசிக்கொண்டுதான் போகிறார்கள். வெறுமனே நானும் புத்தகச் சந்தைக்கு வந்தேன் என்று சொல்வாதாலேயே  நல்ல சினிமாவை எடுத்து விட முடியாது.. படிக்க வேண்டும்...சினிமா புத்தகங்கள்கூட அடுத்த இடத்தில் வையுங்கள். இலக்கியம், அரசியல் என … Continue reading “பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ”: தமிழ் ஸ்டுடியோ அருண்

“மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்” ‘யாவரும்’ ஜீவ கரிகாலன்

"மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்" என்கிறார் எழுத்தாளரும் ‘யாவரும்’ பதிப்பக பதிப்பாளர்களில் ஒருவருமான ஜீவ கரிகாலன். புத்தக சந்தையை ஒட்டி தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘யாவரும்’ பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி குறித்தும் பதிப்பகம் ஆரம்பித்த பிறகு சக எழுத்தாளர்கள் செய்த அவதூறுகள், அதை எதிர்கொண்ட விதம் குறித்தும் அவர் பேசினார். வீடியோ இணைப்பு கீழே... https://youtu.be/w3ytj8yjdCk

“புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன்”: எழுத்தாளர் பதிப்பாளர் லக்ஷ்மி சரவணகுமார்

பதிப்பகம் ஆரம்பித்தது தற்செயலானது என்கிறார் இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். ‘மொக்லி’ என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கியிருக்கும் சரவணகுமார்,  2017 சென்னை புத்தக காட்சியை ஒட்டி நான்கு புத்தகங்களை தன்னுடைய பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்திருக்கிறார். லக்ஷ்மி சரவணகுமாருடன் சென்னையில் உரையாடல் நிகழ்த்தியது தி டைம்ஸ் தமிழ்...உரையாடலின் ஒரு பகுதி வீடியோவாக கீழே தரப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளராக தான் பாதிப்பட்ட காரணத்தாலேயே பதிப்பகம் தொடங்கியதாக கூறும் சரவணகுமார், தான் பதிப்பிக்கும் புத்தகங்களின் … Continue reading “புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன்”: எழுத்தாளர் பதிப்பாளர் லக்ஷ்மி சரவணகுமார்

“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி

Translated by கவிதா சொர்ணவல்லி தமிழக அரசியலின் நெருங்க முடியா பெண்மணியாக பார்க்கப்படும், ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது. செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக இலகுவான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும். Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற இந்த நிகழ்ச்சியில், வெட்கப்படும், புன்னகைக்கும், உணர்ச்சிவசப்படும், பாட்டு பாடும், … Continue reading “அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி

“தமிழகத்தில் நகரங்களை உருவாக்கியவை பண்டைய துறைமுகங்கள்தான்”முனைவர் பா. ஜெயக்குமார் நேர்காணல்

பொதுமக்களுக்கும் ஆய்வறிஞர்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது. ஒரு முக்கிய முக்கியமான காரணம் பதிப்பகங்கள் ஆய்வறிஞர்களை ஒவ்வாமையுடன் அவர்களுடைய பணி கல்வி புலத்திலே முடியக்கூடியது என முன் தீர்மானத்துடன் அணுகுவது. இலக்கியங்கள்தான் தமிழ் நூல்கள், இலக்கியவாதிகள் எழுதுவதுதான் வரலாறு என்கிற ஒரு போக்கும் இங்கே உள்ளது. இந்த மூடத்தனத்தால் தமிழில் துறைவாரியான ஆய்வு எழுத்துகள் வந்தபோதும் அதை வெகுமக்களிடம் போகாமல் முடங்கிப் போய் உள்ளன. இலக்கியத்தை மட்டுமே பதிப்பிக்கும் பதிப்பகங்கள் முன்னணி பதிப்பகங்கள் என்கிற … Continue reading “தமிழகத்தில் நகரங்களை உருவாக்கியவை பண்டைய துறைமுகங்கள்தான்”முனைவர் பா. ஜெயக்குமார் நேர்காணல்

“சென்னை வாழ்வியலை இன்னும் நூறு புத்தகங்கள்ல சொல்லலாம்”: எழுத்தாளர் கரன் கார்க்கியுடன் உரையாடல்

சென்னை நகரம் பலருடைய கனவுகளை கிளர்த்தெழவைக்கும் நகரம். பகட்டான வாழ்வியலுக்கு மட்டுமல்ல, அது தன்னகத்தே அடுக்கான கதைகளைக் கொண்ட நகரம். எனக்குள் இன்னமும் கிளர்ச்சியை உண்டாக்கியிருக்கும் நகரம். இந்நகரத்தின் கதைகளை படிக்கும் ஆர்வம் மேலோங்கிய நேரத்தில் ‘கறுப்பர் நகரம்’ நாவலை வாசித்தேன். ஒரு படைப்பு உங்களை உலுக்க வேண்டும் என பேசுவார்களே அதுபோன்று என்னை உலுக்கிய படைப்பு ‘கறுப்பர் நகரம்’. செங்கேணியும் ஆராயியும் என்னை இன்னமும் உலுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு பயணிக்க வேண்டுமென என் … Continue reading “சென்னை வாழ்வியலை இன்னும் நூறு புத்தகங்கள்ல சொல்லலாம்”: எழுத்தாளர் கரன் கார்க்கியுடன் உரையாடல்

“நீலமும் பச்சையும் கருப்பும் சிவப்புமாக ஒன்றிணைய இதைவிடவும் உக்கிரமான காலமேது?”: ஆதவன் தீட்சண்யா

குஜராத்தில் பசு பாதுகாப்பு கும்பலால் செத்த மாட்டின் தோலை உரித்த காரணத்துக்காக தாக்கப்பட்ட தலித் இளைஞர்களுக்கு ஆதரவாக எழுந்த தலித் மக்களின் எதிர்வினை, இந்தியா முழுமைக்கு அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆயிரம் ஆண்டுகால ஒடுக்குமுறையை எதிர்த்து, வெகுண்டெழுந்து இனி செத்த மாடுகளை தோலுரிக்க மாட்டோம் என அரசு அலுவலகங்கள் முன் செத்த மாடுகளை தூக்கி எறிந்த் நடத்திய போராட்டமும் அதற்குப் பிறகு தன்னெழுச்சியாக கட்டி எழுந்த ‘உனா பேரணி’யும் பெரும் அதிர்வலைகள்தான். அந்த அதிர்வலைதான் பசு பாதுகாப்பு கும்பலுக்கு … Continue reading “நீலமும் பச்சையும் கருப்பும் சிவப்புமாக ஒன்றிணைய இதைவிடவும் உக்கிரமான காலமேது?”: ஆதவன் தீட்சண்யா

“சென்னையைப் பற்றி ஜெயகாந்தன் எழுதியவை என்னைப் பொறுத்தவரை ஆபாசம்”: எழுத்தாளர் கரன் கார்க்கி

“சென்னையைப் பற்றி ஜெயகாந்தன் எழுதியவை என்னைப் பொறுத்தவரை ஆபாசம்” என்கிறார் கறுப்பர் நகரம் நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் கரன் கார்க்கி. தி டைம்ஸ் தமிழ் இணையதளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அவர் இதைத் தெரிவித்துள்ளார். வீடியோ இணைப்பு கீழே... https://youtu.be/WbjIEyy9qkQ    

“சினிமா என்ற கலை அரசியல் கட்சிகளிடமும் பெருமுதலாளிகளிடமும்தான் இப்போது இருக்கிறது”: தமிழ் ஸ்டுடியோ அருணுடன் உரையாடல்

‘தமிழ் ஸ்டுடியோ’... தீவிர சினிமா விரும்பிகள் மத்தியில் பரிட்சையான பெயர். சினிமா என்னும் கலை அதற்குரிய வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதே தமிழ் ஸ்டுடியோ’வை திரை  இயக்கமாக உருமாற்றியதற்கான காரணமாகச் சொல்கிறார் மோ. அருண் . சினிமா ரசனையை இயக்கம் நடத்தியெல்லாம் மேம்படுத்த முடியாது என ஒரு பக்கம் விமர்சனங்கள் எதிர்கொண்டபடியே திரைக்கான ‘படச்சுருள்’ இதழ்,  இணைய இதழ், திரை நூல்கள், திரை நூல்களுக்கென பிரத்யேக பியூர் சினிமா விற்பனையகம், சினிமா திரையிடல், சினிமா கலைஞர்களுடன் கலந்துரையாடல் என … Continue reading “சினிமா என்ற கலை அரசியல் கட்சிகளிடமும் பெருமுதலாளிகளிடமும்தான் இப்போது இருக்கிறது”: தமிழ் ஸ்டுடியோ அருணுடன் உரையாடல்

“மூவலூர் இராமாமிர்தம் நூலை எழுதியதற்காக பலர் என் சாதியை அறிந்துகொள்ள விரும்பினார்கள்”: பா. ஜீவசுந்தரி நேர்காணல்

எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி, பெண்களையும் பெண்களின் பிரச்சினைகளையும் தன் எழுத்தில் ஆவணப்படுத்தி வருவதில் முன்னோடியாக இருப்பவர். மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (புலம் வெளியீடு) என்ற நூல் மிக முக்கியமான ஆவணம். சமீபத்தில் மூவலூர் இராமாமிர்தம் எழுதிய ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ (கருப்புப் பிரதிகள் வெளியீடு) என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். ‘ரசிகை பார்வை’(கயல்கவின் வெளீயீடு), தமிழில் பெண்ணின் பார்வையில் தமிழ் சினிமாவில் ஜொலித்த பெண் நட்சத்திரங்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தியிருக்கிறது. அரிதான ஆவணமாக இது வெளிப்பட்டுள்ளது. வெகுஜென பத்திரிகைகளில் பெண்கள் … Continue reading “மூவலூர் இராமாமிர்தம் நூலை எழுதியதற்காக பலர் என் சாதியை அறிந்துகொள்ள விரும்பினார்கள்”: பா. ஜீவசுந்தரி நேர்காணல்

“எழுதுவது எனக்கு இறுதியான இயக்கமாக மிஞ்சுகிறது, அதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறேன்”: மகாஸ்வேதா தேவி நேர்காணல்

“நான் உணவு உண்டதைக் காட்டிலும் அதிக புத்தகங்களைப் படித்திருக்கிறேன். நான் எழுதுவதற்கான விடயங்கள் அங்கிருந்தே வருகின்றன. எழுத்து எனக்கு செயல்பாடு” - மகாஸ்வேதா தேவி. இந்த நேர்காணல் 2011-ஆம் ஆண்டு டாக்டர் நந்தினி சவுத்ரியால் எடுக்கப்பட்டு பென்கிராஃப்ட் இண்டர்நேஷனல் இணையத்தில் வெளியானது. அதன் தமிழாக்கம் இங்கே: மகாஸ்வேதா தேவியுடனான சந்திப்பை விவரிக்க முடியாது. அவர் பொறுமை இல்லாதவர் என எனக்கு சொல்லப்பட்டிருந்ததால் நான் மிகுந்த பயத்துடனே அவரை அணுகினேன். எப்படியோ, என்னுடைய எண்ணத்தை ஒத்திவைக்கும்படியாக, ஒரு மணி நேரம்தான் … Continue reading “எழுதுவது எனக்கு இறுதியான இயக்கமாக மிஞ்சுகிறது, அதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறேன்”: மகாஸ்வேதா தேவி நேர்காணல்

வீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது! எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்

எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி, பெண்களையும் பெண்களின் பிரச்சினைகளையும் தன் எழுத்தில் ஆவணப்படுத்தி வருவதில் முன்னோடியாக இருப்பவர். மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (புலம் வெளியீடு) என்ற நூல் மிக முக்கியமான ஆவணம். சமீபத்தில் மூவலூர் இராமாமிர்தம் எழுதிய ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ (கருப்புப் பிரதிகள் வெளியீடு) என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். ‘ரசிகை பார்வை’(கயல்கவின் வெளீயீடு), தமிழில் பெண்ணின் பார்வையில் தமிழ் சினிமாவில் ஜொலித்த பெண் நட்சத்திரங்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தியிருக்கிறது. அரிதான ஆவணமாக இது வெளிப்பட்டுள்ளது. வெகுஜென பத்திரிகைகளில் பெண்கள் … Continue reading வீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது! எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்

“எளியவனை உறிஞ்சிப் பிழைக்கிற வாழ்க்கை முறைதான் நம் முன்னால் இருக்கிறது”: மூன்றாம் நதி நாவல் குறித்து வா. மணிகண்டனுடன் உரையாடல்

எழுத்தாளர் வா. மணிகண்டனின் முதல் நாவலாக வெளிவந்திருக்கிறது மூன்றாம் நதி (யாவரும் பதிப்பக வெளியீடு). மழை பொய்த்து, வேளாண்மை அழிய ஆரம்பித்த காலத்தில் விளிம்பு மக்களின் நகரத்தை நோக்கிய இடம்பெயர்வும் அதன் பிறகான வாழ்க்கைப் போராட்டமுமே கதைக்களம். கொங்கு மண்டல மக்களின் பெங்களூர் இடப் பெயர் ‘பவானி’ என்ற கதை நாயகி வழியாக அறியத்தருகிறார் நாவலாசிரியர். பவானியின் ஒரு பாதி வாழ்க்கையில் எத்தனை துயரங்கள், இந்தத் துயரங்களின் அக-புற காரணிகள் எவை என நாவல் பேசிச் செல்கிறது.  இவற்றினூடாக சூழலியல், … Continue reading “எளியவனை உறிஞ்சிப் பிழைக்கிற வாழ்க்கை முறைதான் நம் முன்னால் இருக்கிறது”: மூன்றாம் நதி நாவல் குறித்து வா. மணிகண்டனுடன் உரையாடல்

நடிப்புங்கிறது கிட்டத்தட்ட மனுசன் வாழ்க்கையை வாழ்றதுக்கான ப்ராசஸ்: தம்பிச் சோழனுடன் உரையாடல்

நடிப்பு குறித்த பிரத்யேக விடயங்களைத் தாங்கி ‘நடிப்பு’ என்கிற பெயரில் ஓர் இதழ் வருகிறதென்று நான் அறிந்திருக்கவில்லை. ஸ்ரீப்ரியாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்தைத் தாங்கி வந்திருந்த ‘நடிப்பு’ என்ற இதழின் முன் அட்டைப் படத்தை முகநூலில் பார்த்தேன். அட்டைப்படத்தின் வடிவமைப்பு என்னை ஈர்த்தது. தம்பிச் சோழன், அதைத் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த முகப்புப் படம், தனித்துத் தெரிந்தது, அது ஆவலைத் தூண்டியது. தம்பிச் சோழன் நடிப்புக்கென பிரத்யேகமாக வெளியிட்டு வரும் இதழ் என்பதையும் இது மூன்றாவது … Continue reading நடிப்புங்கிறது கிட்டத்தட்ட மனுசன் வாழ்க்கையை வாழ்றதுக்கான ப்ராசஸ்: தம்பிச் சோழனுடன் உரையாடல்

மலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கையை பின் தொடரும் ஆவணப்பட இயக்குநர், செயற்பாட்டாளர் திவ்யபாரதியுடன் உரையாடல்

சட்டங்கள் புத்தகங்களில் அடக்கப்பட்ட எழுத்துக்களாகவே இருந்துகொண்டிருக்கின்றன என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணமாக, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடைச் செய்யும் சட்டத்தைச் சொல்லலாம். 1993 ஆம் ஆண்டில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. 2000ஆம் ஆண்டைக் கடந்த போதிலும் கையால் மலம் அள்ளுவது வடமாநிலங்களில் தீவிரமாகவே தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தன்னார்வலர்கள், தனிநபர்களின் நீதிமன்ற வழக்குகள் காரணமாக ‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தத் தடை … Continue reading மலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கையை பின் தொடரும் ஆவணப்பட இயக்குநர், செயற்பாட்டாளர் திவ்யபாரதியுடன் உரையாடல்