தமிழில் வட்டார வழக்குச் சொல்லகராதியினை முதலில் உருவாக்கியவர், தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லி, மக்கள்மொழியின் வழிகாட்டி, கடித இலக்கியத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர், நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்தவர் நாவலாசிரியர் கி.ரா என்றழைக்கப்படும் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப்பெருமாள் ராமானுஜன் நேற்றிரவு (17.05.2021) புதுச்சேரியில் காலமானார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகேயுள்ள இடைசெவல் என்ற சிற்றூரில் பிறந்தவர் கி.ராஜநாராயணன். அடிப்படையில் இவர் ஒரு விவசாயி. முப்பத்தைந்து வயசுக்குப் பிறகு எழுத ஆரம்பித்து தமிழ் இலக்கியத்தில் உன்னதமான இடத்தைப் பிடித்தவர். தமிழ் இலக்கியவெளியை ஆக்கிரமித்திருந்த … Continue reading கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா : தமுஎகச புகழஞ்சலி
பகுப்பு: இரங்கல்
நித்தியானந்தா கும்பலின் மிரட்டலுக்கு அஞ்சாதவர் கருப்பு கருணா!
சமூக ஊடகங்களில் பாசிச மதவெறி சக்திகள் மற்றும் சாதி வெறி சக்திகளின் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர். போலி சாமியார் நித்தியானந்தா கும்பலின் மிரட்டலையும் அஞ்சாமல் எதிர் கொண்டவர்.
அஞ்சலி: இயக்குநர் அருண்மொழி
இயக்குநர் அருண்மொழி கடந்த சனிக்கிழமை (9-9-2019) அன்று காலமானார். தமிழ்க் குறும்பட வரலாற்றில் தனித்துவம் மிக்கது அருண்மொழியின் பங்களிப்பு. பண்ணையார்கள், அரவாணிகள், கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய இவரது பதிவுகள் மிக முக்கியமானதாகும். அருண்மொழி, சிறந்த தமிழ்த்திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் தவிர்க்க முடியாதவர். இன்றும் திரைப்படத்திற்கு இலக்கணமாகச் சொல்லப்படும் ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' (1979) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 1986இல் 'காணிநிலம்' எனும் முழுநீளத் திரைப்படத்தை இயக்கினார். இப்படம், இலண்டன், ஜெர்மனி திரைப்பட விழாக்களில் பங்கேற்றன. … Continue reading அஞ்சலி: இயக்குநர் அருண்மொழி
ஓய்வெடுங்கள் கிருஷ்ணன்!
த.நீதிராஜன் சமூக அநீதிகளுக்கு எதிரான அறப்போரை, சுமார் 70 ஆண்டுகளாக நடத்திக்கொண்டிருந்த பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நவம்பர் 10 காலையில் தனது நேரடியான போராட்டத்திலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார். அவர் 1990இல் அதிகாரபூர்வமாக பணி ஓய்வு பெற்றிருந்தாலும் சளையாத தனது உழைப்பின் மூலம் சக்கரமாக சுழன்றுகொண்டிருந்தார். தலித் அல்லாத சமூகத்தில் பிறக்க நேரிட்ட அவர், டாக்டர் அம்பேத்கரின் சமூக நீதிப் பார்வையை மிக இளம்பருவத்திலேயே ஏற்றுகொண்டார். 1956இல் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்த அவர், முதலில் ஆந்திரப்பிரதேசத்திலும் பிறகு மத்திய அரசிலும் … Continue reading ஓய்வெடுங்கள் கிருஷ்ணன்!
பிரபஞ்சகவி என்னும் மனிதாபிமானி: பேரா. அ. ராமசாமி
பேரா. அ. ராமசாமி எட்டாண்டுக் காலம் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்த நான் பிரபஞ்சனின் கதை வெளிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அங்குலம் மாறாமல் தெருக்களையும், வண்ணங்கள் மாறாமல் கட்டடங்களையும், வாசம் மாறாமல் சூழலையும் எழுதுவதன் மூலம் தனது கதைகளின் பாத்திரங்களை புதுச்சேரிக்காரர்களாகக் காட்டியிருக்கிறார். புதுச்சேரிப் பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் கௌரவ விரிவுரையாளராக இரண்டு பருவங்கள் பணியாற்றினார். வாரத்திற்கு இரண்டு நாள் வருவார். வருபவர் மாணவிகளோடும் மாணவர்களோடும் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருப்பார். மொழிபெயர்ப்பில் தமிழில் கிடைத்த … Continue reading பிரபஞ்சகவி என்னும் மனிதாபிமானி: பேரா. அ. ராமசாமி
“நெஞ்சில் உறுத்திய முள்ளை கிளைந்தெடுத்துவிட்டு விடைகொடுத்தார் ம. இலெ. தங்கப்பா”
என் நெஞ்சில் உறுத்திய அந்த ஒரு முள்ளையும் கிளைந்தெடுத்துவிட்டு, இப்பூமிக்கு விடைகொடுத்தபடி போய்க்கொண்டிருக்கிறார், ம. இலெ. தங்கப்பா.
அஞ்சலி: ரஜிந்தர் சச்சார்
நரேன் ராஜகோபாலன் ரஜிந்தர் சச்சார் (1923 - ஏப்ரல் 20, 2018) கடந்த இரண்டு நாட்களாய் கவனம் பிற வேலைகளில் திரும்பியதால், இந்த முக்கியமான அஞ்சலிக் கட்டுரை தாமதமாகி விட்டது. இந்திய இஸ்லாமியர்களுக்கான ஆளுமைகள் என்றாலே அது மதிப்பிற்குரிய மவுலானா அபுல் கலாம் ஆசாத்தும், தமிழகத்தில் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் ஐயாவும் தான். இவர்களை தாண்டி இஸ்லாமியர்கள் பெரும்பாலும் தங்களுக்கான ஆளுமைகளாக பார்ப்பது எல்லோருமே முஸ்லீம்கள் தான். ஆனால் உண்மையிலேயே அவர்கள் கொண்டாட வேண்டியதும், தங்களுடைய வீடுகளில் … Continue reading அஞ்சலி: ரஜிந்தர் சச்சார்
வரலாறும் ஆகிப்போனார் அர்ஷியா!
ஸ்ரீரசா நண்பன் அர்ஷியாவின் உள்ளும் புறமுமாக நிறைந்த நண்பன், தோழன், அன்பன் என்று ஒருவர் உண்டென்றால், அவர் மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளி பேருந்து நிலையம் எதிரில் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ள சிவா அவர்கள்தான். மதங்களைக் கடந்த மனித அன்பின் உச்சம் அவர்களது நட்பு. அர்ஷியாவை பலநேரம் அந்தப்பகுதியில் சிவாவின் கடையில்தான் சந்திப்போம். அருகிலுள்ள தேநீர்க்கடையில்,(இந்தக் கடை நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரியினுடையது) அந்த ரோட்டரத்தில் அமர்ந்து பேச்சுக்கள் நீளும். சிவா அதிர்ந்து பேசமாட்டார். செல்போன் … Continue reading வரலாறும் ஆகிப்போனார் அர்ஷியா!
எழுத்தாளர் அர்ஷியாவுக்கு இரங்கல்!
மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் அர்ஷியா மாரடைப்பால் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 58 . பத்திரிகையாளராக பணியாற்றிய அர்ஷியா எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பல நூல்களை இயற்றியுள்ளார். எழுத்தாளர் அர்ஷியாவுக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பேராசிரியர் அ. ராமசாமி: ஒருவருடத்திற்கு முன்பாக இருக்கலாம். இதயத்தின் இயக்கம் சரியில்லை என்பதைக் காட்டும் அறிகுறிகள் இவை என்பதை உணர்ந்தே அந்தக் குறிப்பை முகநூலில் எழுதியிருந்தார். இடதுகைப்பக்கம் வலியிருப்பதாகவும், முதுகு வலியும் தெரிகிறது என்று சொல்லியிருந்தார். அவரது … Continue reading எழுத்தாளர் அர்ஷியாவுக்கு இரங்கல்!
அஞ்சலி: ம.நடராசன்
புதிய பார்வை இதழின் ஆசிரியரும் வி.கே. சசிகலாவின் கணவருமான ம. நடராசன் காலமானார். இதுகுறித்து வெளியான சில அஞ்சலி பதிவுகள்... ஊடகவியலாளர் செந்தில்குமார் பின்னால் இருந்து கொண்டே இயக்கியதால் அரசியலில் முன்னுக்கு வராமல் போனவர் மதிப்பிற்குரிய ம.நடராசன் அவர்கள். ஜெயலலிதாவின் அத்தனை அரசியல் தந்திரங்களுக்கும் பின்னால் இருந்த மந்திர சக்தி இவர். நம் அரசியல் தந்திரங்களின் சூத்திரதாரி இவர்தான் என்று மக்களுக்கு தெரிந்து விட்டால் தன்னுடைய அரசியல் வளர்ச்சி பாதிக்கப் படும் என்பதால் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர். கற்றுக்கொண்டதே … Continue reading அஞ்சலி: ம.நடராசன்
இரங்கல்: ஸ்டீஃபன் ஆக்கிங்!
அறிவுத் தேடலுக்கு உடல் தேவையில்லை, மூளைதானே தேவை, அந்த மூளை சிறப்பாக வேலை செய்கிறது என்பதைத் தவிர எனக்கு வேறென்ன வேண்டும் எனச் சொன்னார் ஆக்கிங்.
மேலாண்மை பொன்னுசாமி மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: சிறுகதை எழுத்தாளரும், சிறந்த சமூக சிந்தனையாளருமான ‘மேலாண்மை’ பொன்னுசாமி காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். விருதுநகர் மாவட்டம் மேலமறைநாடு என்ற கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் 1951 ஆம் ஆண்டில் பிறந்த ‘மேலாண்மை’ பொன்னுசாமி தனது சொந்த கிராமத்தில் சிறு மளிகை வியாபாரம் செய்து வந்தார். சமூக மாற்றம் குறித்து சிந்தித்தவர். மார்க்சிய கொள்கையால் … Continue reading மேலாண்மை பொன்னுசாமி மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
”கருணையுடன் திரைக்கதை எழுதும் மனம் காலத்துக்கு இல்லை”: எழுத்தாளர் எம்.ஜி. சுரேஷுக்கு அஞ்சலி
பின் நவீனத்துவ கொட்பாடுகளையும் அறிஞர்களையும் எளிமையாக அறிமுகம் செய்யும் விதமாக இஸங்கள் ஆயிரம் என்ற நூலை எழுதினார். மருதா பதிப்பகம் பாலகுரு வெளியிட்ட இந்த புத்தகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்
நவீன தமிழ் இலக்கியத்திற்குத் தன் கவிதைகளாலும், கட்டுரைகளாலும் உணர்வுப்பூர்வமான உரைகளாலும் வளம் சேர்த்துவந்த கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்களின் எதிர்பாரா மரணம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவராகவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மிக நெருக்கமான தோழராகவும் இயங்கி வந்த அவரது மறைவு, தமிழக முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்குப் பேரிழப்பாகும். சமகால வாழ்வின் நெருக்கடிகளைத் தன் நுட்பமும் கவித்துவமும் மிக்க மொழியில் படைப்புகளாக்கித் தந்தவர். தன் சமூகத்துக்குள் நிலவும் பிற்போக்கான நம்பிக்கைகள், … Continue reading கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்
அஞ்சலி: கவிஞர்; விமர்சகர் ஹெச்.ஜி ரசூல்
ஒரு கவிஞராகவும் விமர்சகராகவும் தமிழ் கவிதை மரபிற்கு நவீன இஸ்லாமிய சிந்தனையாளராகவும் அவரது பங்களிப்புகள் ஆழமானவை.
லட்சியவாதி ’அஃக்’ பரந்தாமனுக்கு அஞ்சலி!
திருவல்லிக்கேணியின் நெரிசலான ஒரு தெருவில் அஃக் பரந்தாமன் குடும்பத்துடன் வசித்துவந்தார். குங்குமத்தில் நான் எழுதிக்கொண்டிருந்த 'நான்' தொடருக்காக ஆசிரியர் கே.என்.சிவராமன், அஃக் பரந்தாமன் பற்றி எழுதுங்கள் என சொல்லியிருந்தார். குங்குமம் ஆசிரியர் குழுவில் பரந்தாமன் குறித்து சொல்லி அனுமதி வாங்கினேன். அஃக் பரந்தாமன் சென்னையில் இருக்கிறார்;ஆனால் அவர் முகவரி தெரியாது விசாரித்தவர்களிடமிருந்து பதில் வந்துகொண்டிருந்தது. அப்போது சந்தியா பதிப்பகம், அஃக் தொகுப்புகளை நூலாக்கியிருந்தது. அவர்களிடம் கேட்டு அவருடைய வீட்டின் முகவரியைப் பெற்றேன். 'நான்' தொடருக்காக இலக்கியத்தில் இயங்கிய … Continue reading லட்சியவாதி ’அஃக்’ பரந்தாமனுக்கு அஞ்சலி!
அஞ்சலி: நக்சல்பாரி மூத்த தலைவர் கோவை ஈஸ்வரன்
தமிழ் உணர்வில் துவங்கி தொழிலாளர் போராட்டத்தில் இறங்கி, நக்சல்பாரி இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் விதையிட்டவர்.. அதேசமயம், இடது ஒற்றுமைக்காக அந்தக் காலத்திலும் பணியாற்றியவர்.
நாட்டுப்புறவியல் எழுத்தாளர் கழனியூரன் மறைவு
திருநெல்வேலி மாவாட்டம் கழுநீர்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புறவியல் எழுத்தாளர் கழனியூரன், சென்னையில் இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கழனியூரன், சிகிச்சை பலினின்றி இறந்தார். சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் அவருடைய உடல், நாளை நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. பள்ளி ஆசிரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கழனியூரனி இயற்பெயர் எம்.எஸ்.அப்துல்காதர். திருநெல்வேலி மாவட்டத்தின் நாட்டார் வழக்காறுகள், நாட்டுப்புறக் கதைகள் என தொகுத்து 40-க்கும் அதிகமான நூல்களாக கொண்டுவந்துள்ளார். அவருக்கு சமூக ஊடகங்களில் செலுத்தப்பட்ட அஞ்சலிகளின் … Continue reading நாட்டுப்புறவியல் எழுத்தாளர் கழனியூரன் மறைவு
மஹாதேரே போதிபாலாவுக்கு இரங்கல் !
இலங்கையிலும், தமிழகத்திலும் இன்று காணப்படும் பாலி பாடநூல்கள் மேற்கத்திய அணுகுமுறைகளை உள்வாங்காமல் சிறிதளவு ஆசிய ஆன்மிகத்தின் வழியில் தனித்து நிற்பதற்கு தனித்த பொருள் கோளியல் முறையைக் கையாண்டவர்.
வானம்பாடி மரபில் தனித்துவமானவர் கவிஞர் அப்துல் ரகுமான்!
இளங்கோ கிருஷ்ணன் கவிஞர் அப்துல் ரகுமான் மரணம். வானம்பாடி மரபில் தனித்துவமானவர் ரகுமான். அவரது இஸ்லாமிய பிண்ணனி இதற்கு ஒரு முக்கிய காரணம். தான் வானம்பாடியில் எழுதினேனே தவிரவும், வானம்பாடி கவிஞர் அல்ல என்பார். அதற்கு காரணங்களும் உள. வானம்பாடி மரபின் ரொமாண்டிசைஸ்டு மொழியைப் பயன்படுத்தினாலும் கவிதையை லெளகீக தளத்தில் அல்லாமல் ஆன்மிக தளத்தில் பயன்படுத்தியவர் ரகுமான். என் இளமைப் பருவத்தில் என்னை மிகவும் வசீகரித்த கவிஞர். இவரது பால்வீதி, ஆலாபனை, பித்தன் மூன்றும் முக்கியமானவை. இதில் … Continue reading வானம்பாடி மரபில் தனித்துவமானவர் கவிஞர் அப்துல் ரகுமான்!
உதிர்ந்த கறுப்பு மலருக்கு அஞ்சலி
இரவிக்குமார் "கறுப்புமலர்கள்", "சகாராவைத் தாண்டாத" ஒட்டகங்கள் முதலான தனது புதுக்கவிதைகளால் ஒரு காலத்தின் தமிழ்க் கவிதைத் தேரை முன் நகர்த்திய 75 வயது வரை வாழ்ந்த கவிஞர் நா.காமராசன் மறைவுக்கு கவியார்ந்த அஞ்சலி! நா. காமராசன், தமிழ் புதுக்கவிதை இயக்க முன்னோடியும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்த இவர் காலப்போக்கில் வசனகவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தன் சிறப்பை வெளிப்படுத்தினார். கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் … Continue reading உதிர்ந்த கறுப்பு மலருக்கு அஞ்சலி
வினுச்சக்ரவர்த்தி: நம் மூதாதையரை நினைபடுத்திய கலைஞர்!
கவிஞர் மகுடேசுவரன் எண்பதுகளின் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்த தலைமுறையினராகிய நாங்கள் நம்பியாரைப் பார்த்தோ மனோகரைப் பார்த்தோ பயப்பட்டவர்கள் அல்லர். மண்வாசனையின் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டைப் பார்த்துத்தான் பயப்பட்டோம். “யோவ் கோணைவாத்தி… இது ஒன்னும் கவர்மெண்ட்டுப் பள்ளிக்கூடம் இல்லய்யா… கர்ரஸ்பாண்ட்டுப் பள்ளிக்கூடம்… கர்ரஸ்பாண்ட்டு… பார்த்து நடந்துக்குங்க…” என்று பேசுகையில்தான் பயந்தோம். அந்த நடிகர் பெயர் வினுச்சக்ரவர்த்தி என்பதுகூட வளர வளரத் தெரிந்துகொண்டதுதான்.”மண்வாசனை” திரைப்படத்திற்கு என் பட்டியலில் எப்போதும் இடமுண்டு. கரிசல்பட்டியும் காக்கிநாடன்பட்டியும் அடித்துக்கொள்ளும் அந்தப் படத்தில் காக்கிநாடன்பட்டி பஞ்சாயத்துத் … Continue reading வினுச்சக்ரவர்த்தி: நம் மூதாதையரை நினைபடுத்திய கலைஞர்!
அஞ்சலி: கார்ல் மார்க்ஸ் கண்ணன்
கி. நடராசன் : காரல் மார்க்ஸ் நூலகம் மரியாதைக்குரிய மூத்த தோழர் கண்ணன் காலமானார். அவரது வீட்டை நூலகமாக்கி ஆயிரக்கணக்கான அரிய நூல்களை, இதழ்களை அனைவரும் - குறிப்பாக தோழர்கள் படிக்க வாய்ப்பை வழங்கியவர். பார்வையற்ற மாணவர்கள் படிப்பதற்கு தொடர்ந்து பல பத்தாண்டுகளாக உதவியவர். அவர் வயது 93.. அவரது உடல் மருத்துவமனைக்கும் மதியம் 3 மணிக்கு அவரது விருப்பப்படி வழங்கப்பட உள்ளது..பேரிழப்பு. செவ்வஞ்சலிகள்... யமுனா ராஜேந்திரன்: அறிவு ஊற்றுக்கு ஆதார வேர் காணமுடியாது. அநாதி காலம் … Continue reading அஞ்சலி: கார்ல் மார்க்ஸ் கண்ணன்
‘ நவீன திருமூலர்’ எழுத்தாளர் மா. அரங்கநாதன் காலமானார்
திருப்பூர் கிருஷ்ணன்: எழுத்தாளர் மா.அரங்கநாதன் இன்று(16-4-2017) புதுச்சேரியில் காலமானார். மா. அரங்கநாதன் “வீடுபேறு’, “ஞானக்கூத்து’, “காடன் மலை’ போன்ற சிறுகதை நூல்களையும், “பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூலையும், “பஃறுளியாற்று மாந்தர்’ என்ற புதினத்தையும் எழுதியவர், இவரைப் பற்றி ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ரவிசுப்ரமணியன். நாற்பது நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த ஆவணப்படத்தின் பெயர் “மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்’. “முன்றில்‘ இலக்கிய இதழை நடத்திய பெருமையும் அரங்கநாதனுக்கு உண்டு. சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் … Continue reading ‘ நவீன திருமூலர்’ எழுத்தாளர் மா. அரங்கநாதன் காலமானார்
தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழை அரங்கேற்றிய சிவனடியார் ஆறுமுகசாமிக்கு எம் அஞ்சலி!
சிவனடியார் ஆறுமுகசாமி இன்று (8.4.2017) மதியம் இயற்கை எய்திவிட்டார். தில்லைக் கோயில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று வெற்றி கண்ட எளிய மனிதர் அவர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு அவர் வந்தார். தில்லைச் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடிய தன்னை தீட்சிதர்கள் கையை முறித்து கீழே தள்ளிவிட்டார்கள் என்ற அவரது முறையீடு கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அவருக்குத் துணை நிற்க உறுதியளித்தோம். … Continue reading தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழை அரங்கேற்றிய சிவனடியார் ஆறுமுகசாமிக்கு எம் அஞ்சலி!
அசோகமித்திரன்: வாழ்விலே ஒருமுறை!
முத்துகுமார் வாழ்வின் (பல்வேறு தருணங்களில்) நித்திய அபத்தங்களிலும் அபத்த நித்தியங்களிலும் உழலுபவர்கள் பற்றிய கரிசனையைக் கடந்து சென்று சாந்தி நிறைவுறும் ஆன்மீகமோ, கொதிநிலை, கொந்தளிப்பு அரசியலோ, தத்துவமோ அசோகமித்திரனின் படைப்பு வரைபடத்திற்கு அப்பாற்பட்ட இன்மையே. சமயமற்ற ஆன்மீகம் என்பது அவரது கொள்கையாக இருக்கலாம், ஆனால் அப்பாலைத் தேட்டம் இல்லை, (no trancendance) அற உணர்வு உள்ளார்ந்து அமைதி நிலையில் காந்தியமாக, ஜே.கிருஷ்ணமூத்தியியமாக, பகவத் கீதையியமாகச் சுவடு காட்டுகிறது... என்றாவது ஒருநாள், ஆழமாக உணரும் வாசகர்கள் அவரது நீண்ட … Continue reading அசோகமித்திரன்: வாழ்விலே ஒருமுறை!
அசோகமித்திரன் எனும் பால்கனி தாத்தாவுக்கு அஞ்சலி!
அதிஷா நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபாரமான சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். அவர் நம்முடைய வாழ்வின் அவலங்களை புன்னகையோடு எளிய கதைகளாக எழுதிக்கொண்டிருந்தார். அவை இலக்கியத்தரத்தோடு இருந்தன. அசோகமித்திரனின் கதைகளின் மொழி மூளையை அஷ்டபங்காசனம் பண்ண வைக்கிற வகையில் என்றைக்குமே இருந்ததில்லை. தண்ணீரும் ஒற்றனும் மானசரோவரும் கரையாத நிழல்களும்... ஒவ்வோரு சிறுகதைகளும் மக்களின் மொழியில்தான் உணர்வுகளை கடத்தின. அந்த உணர்வுகளின் அழுத்தம் … Continue reading அசோகமித்திரன் எனும் பால்கனி தாத்தாவுக்கு அஞ்சலி!
அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா மறைந்தார்…
அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை(6-2-2017) உயிரிழந்தார். அவருக்கு வயது 82. அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர் தமிழறிஞர் மணவை முஸ்தபா. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மணவை முஸ்தபா சென்னையில் காலமானார். இதனையடுத்து சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அரசியல் கட்சியினர், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டோர் … Continue reading அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா மறைந்தார்…
எழுத்தாளர் க.சீ. சிவக்குமார் மரணம்; அன்பர்கள் இரங்கல்
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான க.சீ. சிவக்குமார், மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், நண்பர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். Aadhavan Dheetchanya எங்கோ இருந்திருப்பாய், நன்றாக வாழவேண்டும் என்று நான் தானடா சிவா நீ பெங்களூரில் குடியேறக் காரணம். இப்படி அகாலத்தில் சாவதற்கா...? எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மாடியிலிருந்து தவறி விழுந்து இன்று மாலை நம்மை விட்டுப் பிரிந்தேவிட்டான். கருப்பு கருணா அண்ணே...அண்ணே..என மனம் நிறைந்தழைக்கும் அன்புத்தம்பி..தோழன்...எழுத்தாளன் க.சீ.சிவக்குமார்..இன்று மாலை பெங்களூரில் அகால மரணம். … Continue reading எழுத்தாளர் க.சீ. சிவக்குமார் மரணம்; அன்பர்கள் இரங்கல்
ஈழச் சரித்திரத்தில் ஜெயலலிதாவின் பங்களிப்பு எக்காலத்திலும் மறக்க இயலாதது! ஈழக் கவிஞர் தீபச்செல்வன்
தீபச்செல்வன் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் இழப்பு தமிழக மக்களை மாத்திரமின்றி ஈழ மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக முதல்வர் மீண்டு வரவேண்டும் என்று பல கோடிக் கணக்கான தமிழக மக்களுடன் ஈழ மக்களும் வேண்டியிருந்தபோதும் அவரது மரணச் செய்தி எம்மை பெரும் சோகத்தில் தள்ளியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் ஈழ மக்களின் தனி ஈழ கோரிக்கைக்கு எதிராகவும் ஒரு காலத்தில் பேசியிருந்தார். இன்று அவர் அமரத்துவமடைந்த நிலையில் சிலர் … Continue reading ஈழச் சரித்திரத்தில் ஜெயலலிதாவின் பங்களிப்பு எக்காலத்திலும் மறக்க இயலாதது! ஈழக் கவிஞர் தீபச்செல்வன்
முன்னாள் துணை வேந்தர் திரு.வ.செ.குழந்தைசாமி காலமானார்; தலைவர்கள் அஞ்சலி
கல்வியாளரும், முற்போக்கு சமூக சிந்தனையாளரும், மொழி சீர்த்திருத்த ஆய்வு அறிஞரும், கவிஞருமான, முன்னாள் துணை வேந்தர் திரு.வ.செ.குழந்தைசாமி 10.12.2016 அன்று சென்னையில் காலமானார். கல்வியாளர் வா.செ.குழந்தைசாமியின் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின்: முன்னாள் … Continue reading முன்னாள் துணை வேந்தர் திரு.வ.செ.குழந்தைசாமி காலமானார்; தலைவர்கள் அஞ்சலி
முதலமைச்சருக்கு மு. க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில், "சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் உடலுக்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து இன்று இறுதி அஞ்சலி செலுத்தினேன். பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது, "தமிழக முதலமைச்சர் மாண்புமிகு அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. அவரை இழந்து வாடிக் … Continue reading முதலமைச்சருக்கு மு. க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
எண்ணற்ற சவால்களை நெஞ்சுறுதியோடு எதிர்கொண்டவர்: சிபிஎம் இரங்கல்
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிக்கு மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக்குழு தனது இரங்கலை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து கட்சியின் தமிழ்மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழக முதலமைச்சர் அம்மையார் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் ஆளுமை மிக்க தலைவராக திகழ்ந்திருக்கிறார். அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட எண்ணற்ற சவால்களை நெஞ்சுறுதியோடு எதிர்கொண்டவர். தமிழகத்தினுடைய மாநில … Continue reading எண்ணற்ற சவால்களை நெஞ்சுறுதியோடு எதிர்கொண்டவர்: சிபிஎம் இரங்கல்
ஜெயலலிதா ஏன் மக்களால் நேசிக்கப்படுகிறார்?
ஜி. கார்ல் மார்க்ஸ் நேற்று மதியம் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு கிளம்பினேன். மேல்மருவத்தூரைக் கடக்கும்போது, சாலையில் பதட்டத்தை உணர்ந்தேன். வாகனங்கள் தறிகெட்ட வேகத்தில் செல்லத்தொடங்கின. அப்போதுதான், ஜெயலலிதா இறந்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்தி ஒலிபரப்பப் படுவதாக வீட்டிலிருந்து தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள். சென்னையை நோக்கி வந்த வாகனங்கள், சென்னையில் இருந்து வெளியேறிய வாகனங்கள் எல்லாமே அதீத அச்சத்தில் சென்றுகொண்டிருந்ததை உணரமுடிந்தது. நிறைய பேருந்துகள் உடனே நிறுத்தப்பட்டிருந்தன. மக்கள் சாலையின் இருபுறமும் மூட்டை முடிச்சுகளுடன் நடந்து செல்வதையும் காண முடிந்தது. என்ன … Continue reading ஜெயலலிதா ஏன் மக்களால் நேசிக்கப்படுகிறார்?
தமிழ் நாட்டின் CPIML கட்சி நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பி.வி.சீனிவாசன் மறைந்தார்!
சந்திரமோகன் தோழர்.கணேசன்/பி.வி.எஸ் என்று தமிழக நக்சல்பாரி இயக்கத்தில் நன்கு அறியப்பட்ட தோழர்.பி.வி.சீனிவாசன் அவர்கள், நோய்வாய்ப் பட்டிருந்த நிலையில், இன்று டிசம்பர் 6 அதிகாலை சுமார் 3.30 மணியளவில், டில்லியில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவருக்கு வயது 79. டில்லியில் உள்ள CPIML Liberation கட்சி அலுவலகத்தில் தோழரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதி மரியாதைக்குப் பிறகு எரியூட்டப்படவுள்ளது. செவ்வணக்கம்! நக்சல்பாரி இயக்கத்தின் ஆளுமை : புரட்சிகர இலட்சியங்களை நெஞ்சில் ஏந்திய, களத்தில் இறங்கிய தலைவர் பி.வி.எஸ் … Continue reading தமிழ் நாட்டின் CPIML கட்சி நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பி.வி.சீனிவாசன் மறைந்தார்!
‘அம்மா.. அம்மா..’ என அலறி நின்ற அடித்தள மக்களிடம்தான் நாம் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்”
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ. மார்க்ஸ் தன்னுடைய முகநூலில் எழுதிய குறிப்பு... "முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அஞ்சலிகள். மக்கள் அவரைப் பெரிதும் நேசித்தனர். பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர் எனும் எந்த இரத்த பந்தமும் அருகில் இல்லாமல் அவரை நேசித்த மக்கள் மட்டுமே சூழ அவர் மரணம் நிகழ்ந்துள்ளது. வாரிசு என யாரையும் விட்டுச் செல்லவில்லை; நியமித்தும் செல்லவில்லை. அவரது ஆளுகை என்பது மற்ற எல்லா ஆளுகையையும் போல இன்னொரு ஆளுகை. ஒரு … Continue reading ‘அம்மா.. அம்மா..’ என அலறி நின்ற அடித்தள மக்களிடம்தான் நாம் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்”
கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தியவர்: ராமதாஸ் இரங்கல்
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு விடுத்துள்ள இரங்கல் அறிக்கை: தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னையில் சற்று முன் உடல்நலக்குறைவால் காலமானார் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவின் பயணம் அனைத்து வழிகளிலும் குறிப்பிடத்தக்கது என்பதில் ஐயமில்லை. எதிர்நீச்சலும், போராட்டமுமே அவரது வாழ்க்கையாக இருந்தது. எந்த ஒரு விஷயத்திலும் அவரது அணுகுமுறை குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், அவர் தலைமையேற்று இருந்த இயக்கத்தை … Continue reading கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தியவர்: ராமதாஸ் இரங்கல்
தொலைநோக்கு பார்வை கொண்டவர்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
தமிழக முதல்வர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் ஜெயலலிதாவின் அளப்பரிய பங்கு நீண்ட நாட்களுக்கு நினைவு கூறப்படும். தமிழகம் மற்றும் தமிழக மக்களின் பொருளாதார-சமூக முன்னேற்றத்துக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜெயலலிதா. லட்சக்கணக்கான மக்களின் தலைவராக விளங்கிய அவர், தொலைநோக்கு பார்வை கொண்டவராக விளங்கியவர்" என தெரிவித்துள்ளார்.
“சங்கராச்சாரியாரை கைதுச் செய்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டியவர்”
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா மறைவிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் காலமான செய்தி அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரை இழந்து வாடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் உட்பட தமிழக மக்ககள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவாற்றலும் … Continue reading “சங்கராச்சாரியாரை கைதுச் செய்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டியவர்”
சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது: விஜயகாந்த்
முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை: முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, உடல் நலம் பெற்று மீண்டு வரவேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்தனர். தற்போது ஜெயலலிதா மறைந்துவிட்டது சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜெயலலிதாவை இழந்து வாடும் அதிமுகவினருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.