அறிவழகன் கைவல்யம்

நீண்ட நாட்கள் என்று சொல்ல முடியாது, இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய்ப்படுகை மற்றும் இயற்கை எரிவாயு நிலைகளைக் கண்டறியும் நிறுவனம், இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் – ONGC கடன்களற்றதாக மட்டுமல்ல, நாட்டின் மிகப்பெரிய லாபமீட்டும் நிறுவனமாகவும் இருந்தது, அதுமட்டுமல்ல, நாட்டின் Cash Rich நிறுவனமும் கூட.
நாட்டின் காவல்காரர் மோடியின் திறமையான ஆட்சிக்காலத்தில் இந்த நிறுவனம் ஒரு பரிதாபமான நிலையை எட்டியிருக்கிறது, 1950-60 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்து நாட்டின் எரிபொருள் பாதுகாப்பில் ஒரு நிலையான இடம் பெற்ற இந்த நிறுவனம். பன்னாட்டு வணிகச் சந்தைப் பொருளாதாரத்திற்குப் பிறகு 1990 களில் 28 மிக முக்கியமான எண்ணெய்ப் படுகைகளையும், எரிவாயு நிலைகளையும் கண்டறிந்தது. இவற்றில் ஒன்று கூட இன்று இந்திய அரசிடம் இல்லை, நாட்டின் பாதுகாவலராக ஐயா திருவாளர் மோடி தனியார் நிறுவனங்களுக்கு இவற்றைத் தாரை வார்த்து விட்டார்.
உலக வங்கியிடமிருந்து 450 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனாகப் பெற்று இன்னும் சில மாநில அரசு நிறுவங்களின் துணையோடு பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்ட இந்த நிறுவனம், தொடர்ந்து நாட்டின் பணக்கார நிறுவனமாக நீடித்தது. உள்நாட்டு உற்பத்தியில் 70 % இந்த நிறுவனத்தின் கைகளில் தான் இருந்தது.
கடந்த நான்காண்டுகளில், ஊர்க்காவலன் மோடியின் தலைமையிலான திருட்டு அரசாங்கம் லாபகரமான அரசின் பொது நிறுவங்களின் உபரிப் பணத்தை குருதி உறிஞ்சும் அட்டையைப் போல குடிக்கத் துவங்கியது, இன்று ONGC தன்னுடைய உபரிப் பணத்தை இழந்தது மட்டுமல்ல, மலைபோல் குவிந்திருக்கும் கடனுக்கும் சொந்தக்காரனாகி இருக்கிறது. நாட்டின் காவல்காரர் மோடி கடந்த 2018 நவம்பரில் ONGC யின் 60 % பங்குகளை தனக்கு வேண்டிய தனியார் நிறுவனங்களுக்கு விற்றுக் கமிஷன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டது. முயற்சி முறியடிக்கப்பட்டது, ஒருவேளை இந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால் காவல்காரன் ONGC யை அம்பானிக்கோ, அதானிக்கோ மடை மாற்றி விட்டிருப்பான்.
நீங்கள் ONGC யின் இந்த வெற்றிகரமான வீழ்ச்சியைப் பார்க்க அதிகம் மெனெக்கெட வேண்டியதில்லை, நிறுவனத்தின் Balance Sheet – http://www.bseindia.com இல் கிடைக்கிறது. 2017 – 18 ஆண்டுகளில் ONGC யின் 90 % வீழ்ச்சி வேதனை அளிப்பது மட்டுமல்ல, மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு எவ்வளவு பெரிய கொள்ளைக்கூட்டம் என்பதையும் உணர வைக்கிற ஒரு சோற்றுப் பதம்.
2014-15 களில் காவல்காரர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 74 % வீழ்ச்சியை அடைந்த இந்நிறுவனம், இதே நிதி ஆண்டில், இந்தியாவின் மிகப்பெரிய லாபமீட்டும் நிறுவனமாக முகேஷ் அம்பானியின் “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்” 18,334 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியது, அதாவது காவல்காரர் மோடி ONGC யின் கோவணத்தை உருவி அம்பானிக்கு ONGC யை பட்டாப் போட்டார் என்று நானோ நீங்களோ சொன்னால் தேசத் துரோகி ஆகி விடுவோம். பரிதாபமாக ONGC மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
இன்று அதாவது காவல்காரர் மோடி ஆட்சியை விட்டு வெளியேறும் 2018-19 நிதி ஆண்டில் மட்டும் ONGC யின் 92 % நிதி சூறையாடப்பட்டு வீதியில் நிற்கிறது.
இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு, இந்தியாவின் லாபகரமான பொதுத் துறை நிறுவனங்களை காவல்கார மோடி அரசு எப்படி சீரழித்தது என்பது இந்திய வரலாற்றில் அழியாத கறையாக நிலைத்திருக்கும், ஆனால், இந்தியப் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிவருடிகளும், மலை முழுங்கி மோடியை, அவரது ஆட்சியின் மிகப்பெரிய ஊழல்களை எல்லாம் மறைத்து இஸ்லாமிய எதிர்ப்பு, தேசபக்தி, பாகிஸ்தான் மீதான காழ்ப்பு என்று திசை திருப்புவதில் மும்முரமாக இருக்கிறார்கள்.
மோடி தலைமையிலான அரசு இந்திய இயற்கை வளங்களை தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு விற்று விட்டது மட்டுமில்லை, இனி ஒருமுறை இந்தத் திருடர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியா பொருளாதாரத்தில் திவாலாகி காங்கோவைப் போலவோ உகாண்டாவைப் போலவோ குழந்தைகளைத் தெருவில் பிச்சை எடுக்க விடும் நாடுகளில் ஒன்றாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை, உலகின் மிகவும் ஏழையான நாடுகளில் இப்போது இந்தியாவின் இடம் 19 என்பதை நினைவில் கொள்ளுங்கள், தேசபக்தி, இந்து என்று சொல்லிக் கொண்டு உணர்வு மயமாக்க வருகிற பார்ப்பனர்களையும், பார்ப்பன அடிவருடிகளையும் செருப்பால் அடித்து விரட்டுங்கள். உயிர் வாழ்வதற்கான தேர்தல் இது, தேசபக்தி பம்மாத்துகளை நம்பி மோசம் போகாதீர்கள்.
Images & Statistics Sources : scroll.in, bseindia.com & ongcindia.com
அறிவழகன் கைவல்யம், சமூக-அரசியல் விமர்சகர்.