அறிவழகன் கைவல்யம்

தேச பக்தாளே, மோடியும் அல்லக்கைகளும் இந்தியாவின் சமூக நீதியை மட்டும் சிதைக்கவில்லை, இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் என்று நம்பப்பட்ட, நம்பப்படுகிற அரசுத் துறை நிறுவனங்களை எல்லாம் ஊற்றி மூடி விட்டார்கள். அரசுத் துறை என்றவுடன் ஏதோ வணிக நிறுவனங்கள் என்று நினைத்துக் குழம்பி விடாதீர்கள். மோடியும், காவி அல்லக்கைகளும் குழி தோண்டிப் புதைத்தது இந்தியாவின் உழைக்கும் எளிய மக்களையும், சமூக நீதியையும் மட்டுமல்ல.
மிக முக்கியமான இந்திய ஜனநாயகத்தின் தூண்களான பொதுத்துறை நிறுவனங்களின் நம்பகத்தன்மையை, உறுதியை, ஆளுமையை முற்றிலுமாக சிதைத்து ஊற்றி மூடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
1) பனால் ஆன உச்ச நீதிமன்றம்
உச்சிக்குடுமிகளின் மன்றமாக இருந்தாலும், கொஞ்சமேனும் சட்டத்தின் மீதான நம்பிக்கையை வேறு வழியின்றிக் காப்பாற்றி வந்த நீதிபதிகள், தெருவுக்கு வந்தார்கள், குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டார்கள். வழக்குகளை யாருக்கு வழங்குவது என்பதில் அரசியல் தலையீடுகளும், நம்பிக்கையின்மையும் தலைதூக்கி இருப்பதாக அவர்கள் பிரஸ் மீட்டில் சொன்னது ஏதோ சட்டப் பஞ்சாயத்து அல்ல. ஒட்டு மொத்த நீதித்துறையின் மீதான காவிகளின் தாக்குதல். இந்திய நீதித்துறை அதன் உள்ளடக்கத்தால் பன்னாட்டு அளவில் மதிக்கப்பட்ட சூழலை மோடியும் அல்லக்கைகளும் மாற்றினார்கள். பன்னாட்டளவில் இந்திய நீதித்துறையின் தரத்தை முற்றிலுமாக கீழிறக்கி இந்தியாவின் மானத்தை வாங்கியது சாட்சாத் மோடியும் அல்லக்கைகளும் தான் தேச பக்தாளே.
2) ரிசர்வ் வங்கியை திவாலாக்கும் மோடி கும்பல்.
மத்திய ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமல் அறிவித்த மனமதிப்பீட்டு நடவடிக்கை, ரகுராம்ராஜன் தெறித்து ஓடியது பிறகு ரிசர்வ் வங்கியின் அடிமடியில் கைவைத்து 30 லட்சம் கோடியை காவிப் பண்டாரங்களுக்குக் கொடு என்று உர்ஜித் படேலையும் தெறிக்க விட்டு, அல்லக்கை சக்திகாந்த தாஸை உட்கார வைத்திருப்பது. இதன் மூலமாக ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு என்று உணரப்படுகிற ரிசர்வ் வங்கியின் தரத்தைக் குறைத்து நாசமாக்கி உலக அளவில் இந்திய பொருளாதார வளர்ச்சியை சிதைத்த மோடியையும் அவரது அல்லக்கைகளையும் கொண்டாடும் தேச பக்தாளே உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா தேசபக்தி பற்றிப் பேச?
3) சிபிஐ கூத்துக்கள்
ராகேஷ் அஸ்தானா காவிகளின் அடிவருடி, பிறகு ஏதோ ஒரு பஞ்சாயத்தில் உளவு பார்க்க அலோக் வர்மாவை உள்ளே நுழைத்தார் மோடி, பிறகு இருவரையும் லீவில் அனுப்பி அல்லக்கை நாகேஸ்வர ராவை கொண்டுவந்திருக்கிறார். இந்திய உளவுத்துறையின் நம்பிக்கையின்மை முற்றிலுமாக உடைக்கப்பட்டு இப்போது அவர்களும் வீதிக்கு வந்திருக்கிறார்கள். இந்திய அரசியல் வரலாற்றில் இவ்வளவு வெளிப்படையாக சிபிஐ வீதிக்குக் கொண்டு வரப்பட்டது சாட்சாத் மோடி சாபின் ஆட்சியில் தான்.
4) மோடிக்கு முறுக்கு சுட்ட தேர்தல் கமிஷன்
குஜராத் தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்து தேர்தல் தேதியை திருட்டு மோடி கும்பலின் பணப்பட்டுவாடாவுக்காக தள்ளிப் போட்ட தேர்தல் கமிஷன் மாமாக்கள், பிறகு ஆம் ஆத்மீயின் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை சட்டங்களுக்கு அப்பாற்பட்டு செல்லாது என்றார்கள், உச்சநீதிமன்றம் தலையிட்டு மோடியின் நடுமண்டையில் கொட்டியது. இன்னும் பல மாநிலத்து தேர்தல் காலச் சேட்டைகள் செய்யும் ஒரு சில்லுண்டி மாமாவாகிப் போன தேர்தல் கமிஷன் இந்தியாவின் அமைப்பு இல்லையா தேச பக்தாள்?
5) பலமிழந்த சி ஐ சி மற்றும் ஆர் டி ஐ
பல்வேறு சட்டப்பாதுகாப்பில்லாத மாற்றங்களை தகவல் அறியும் உரிமையில் புகுத்தி அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மையை, சுதந்திரத்தை அழித்து நாசமாக்கிய காவிக் கூட்டம் தேச பக்தக் கூட்டம் என்றால் உண்மையான தேச பக்தர்களை என்னவென்று அழைப்பது பக்தாள்?
6) ரபேல் ஊழலில் மாமா வேலை பார்த்த மோடியா தேசபக்தர்?
கடைசியாக இந்து போன்ற பார்ப்பனப் ஏடுகள் வேறு வழியே இன்றி இப்போது எழுதத் துவங்கி இருக்கும் ரபேல் ஊழல் தான் மோடியின் சூப்பர் டூப்பர் ஹிட், ஏழை அம்பானிகளின் பாக்கெட்டில் 30 ஆயிரம் கோடியை அலேக்காகத் தூக்கிப் போட்டு தேர்தல் நிதியாகவோ ஹவாலாவாகவோ பின்வாசலில் பெற்றுக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி மோடி தேச பத்தர் என்றால் நீங்கள் எல்லாம் எப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகள் என்று நாடு முழுக்க சிரிக்கப் போகும் காலம் வரப்போகிறது.
தேச பக்தி என்றால் தேசத்தின் மீதும் ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்கிற அந்த தேச நிறுவனங்களின் மீதும் இருக்கிற நம்பகத்தன்மையை குலைக்கும் மோடியையும் மோடியின் அல்லக்கைகளையும் துதி பாடுவதை நிறுத்தி நேர்மையைப் பேசுவது.
நீங்களாவது நேர்மையைப் பேசுவதாவது, தேசபக்தாள் என்றாலே பக்கா பிராடுகள் என்றுதானே பொருள் இந்தியாவில்.
அறிவழகன் கைவல்யம், சமூக-அரசியல் விமர்சகர்.