Ladies and Gentle women : தன்பாலின உறவு பற்றி தமிழில் வெளிவந்துள்ள முதல் ஆவணப்படம்

பீட்டர் துரைராஜ்

“ஹோமாசெக்‌ஷூவல்களை வக்கிரமான ரேபிஸ்டுகளாகவும் கொலைக்கார்களாகவும் மட்டும் ‘வேட்டையாடு விளையாடு’ படம் சித்தரிக்கவில்லை; அவர்களுக்கு அமுதன், இறமாறன் என்று தூய தமிழ்ப் பெயர்கள் சூட்டி, தமிழ் ஆர்வலர்களையும் கொச்சைப்படுத்தி இருக்கிறது.ஹோமோக்களும் லெஸ்பியன்களும் குற்றம் செய்யும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள் என்ற சித்தரிப்பு உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல;அத்தகையவர்களை இழிவானவர்களாக நம் சமூகம் கருதுவதன் இன்னொரு அடையாளம் ஆகும்” என்று ஞாநி தனது ‘ஓ’ பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனில் எழுதினார்.

ஞாநி இருந்தால் பாராட்டும்படியான, லெஸ்பியன் உறவு குறித்த ஒரு ஆவணப்படம் Ladies and Gentle women தமிழில் முதலில்(2017) வெளிவந்துள்ளது.பெரியார் திடலில் ஞாயிறன்று அரசியல் ஆவணப்படங்கள் (Political Documentaries ) என்ற முழுநாள் நிகழ்வை ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வில் இந்த 44 நிமிடப்படம் திரையிடப்பட்டது.

இயக்குநர் மாலினி ஜீவரத்னம்

தன்பாலின உறவு ஒரு நோயல்ல என்று உலக சுகாதார நிறுவனம்(WHO) அறிவித்து உள்ளது. தன்பாலின உறவு குற்றமா என்ற விசாரணையை உச்சநீதிமன்றம் நடத்திக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் லெஸ்பியன் தொடர்பான உறவுகள் வெளிப்படையாக பேசப்படும் அளவுக்கு ஆரோக்கியமான சூழல் நிலவுகிறது. எனினும் சமூகப் புறக்கணிப்பு காரணமாக தற்கொலைகள், கொலைகள நிகழ்கின்றன; ஆனால் அவை விபத்தாக காட்டப்படுகின்றன.

இந்தச் சூழலில் தன்பாலின உறவு பற்றிய இந்தப் படம் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தக்கூடும்.பொது புத்தியை மாற்றுவதில் இந்த திரையிடல்கள் ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றன.

இந்தப் படத்தை இயக்கிய மாலினி ஜீவரத்னம் தன்னை லெஸ்பியன் என அறிவித்துக்கொண்டவர்.  தான் எதிர்கொண்ட சமூக புறக்கணிப்பின் வெளிப்பாடுதான் இந்த ஆவணப்படம் ‘ என்று திரையிடலில் கலந்து கொண்டு மாலினி பேசினார்.

“இந்தப் படத்தில் தன் பாலின உறவு தொடர்பான அனைத்து அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது செய்நேர்த்தியிலும்; பின்னணி குரல், இசையிலும் நன்றாக உள்ளது.” என்று அமுதன் கருத்து தெரிவித்தார். இந்தப் படத்தில் பொதுமக்கள், ஆய்வாளர், உளவியலாளர்கள் என பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ள காதலும் இயல்பாக,அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் இதனை தயாரித்து உள்ளார். DYFI யும், காரைக்குடி கம்பன் கழகமும் மாலினிக்கு விருது கொடுத்துள்ளன.அனைவரும் இந்தப் படத்தை பார்க்கலாம். வாழ்த்துகள் மாலினி.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.