சந்திரமோகன்

சென்னை – சேலம் 8 வழி விரைவுச் சாலைக்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து 2791 ஹெக்டேர் நிலங்களை எடுக்க விரும்புவதாக #தேசியநெடுஞ்சாலைகள்சட்டம்_1956 உட்பிரிவு 3 A (1) ன் அடிப்படையில், ஒரு அறிவிக்கையை Notification மத்திய அரசாங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகங்கள் (சேலம், தருமபுரி ) வெளியிட்டுள்ளன.
1) இத்தகைய ஒரு அறிவிக்கை வெளியான பின்னர், இச் சட்டத்தின் உட்பிரிவு 3 B (POWER TO ENTER) அடிப்படையில், அதிகாரம் பெற்ற அலுவலர்கள் நிலத்தை பார்வையிடலாம், அளக்கலாம் /Survey எனச் சொல்கிறது. ஆனால், இச்செயல்கள் விதிமுறைப்படி செய்ய வேண்டும் என 3B சொல்கிறது.
விதிமுறைகள் என்ன?
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சட்டம் 1988 (NHAI Act 1988) உட்பிரிவு 30 ( Power to Enter) என்ன சொல்கிறது என்றால்… “தாங்கள் நிலத்தை அளக்க/சர்வே செய்ய வருகிறோம்” என நில உரிமையாளருக்கு எழுத்துப் பூர்வமாக முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் ; குறைந்த பட்சம் 24 மணி நேரத்துக்கு முன்பாக தெரிவித்தாக வேண்டும். அப்படி செய்யாமல் எந்தவொரு அதிகாரியும் நிலத்தில், வீட்டில், அவரது அத்துக்குள் செல்ல கூடாது.
NHAI Rules 1990 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 1990 சொல்வது என்னவெனில், இச் சட்டத்தின் உட்பிரிவு 30 ன் அடிப்படையில், நிலத்தில் அதிகாரிகள் நுழைய வேண்டும் என்றால், Form B யில் நில உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்; வழங்கியதற்கான அத்தாட்சியாக அவரிடம் கையெழுத்தையும் பெற வேண்டும்.
2013_சட்டம்சொல்வதுஎன்ன? ( Right to Fair compensation & Transparency in Land acquisition, Rehabilitation & Resettlement Act- 2013) சர்வே /அளக்க விரும்பும் அரசாங்க அதிகாரிகள் நில உரிமையாளர்கள் இல்லாத போதோ அல்லது அவரது எழுத்துப் பூர்வமான அனுமதி இல்லாமலோ நிலத்தின் உள்ளே நுழையக் கூடாது.
குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்னால் தகவல் தராமல் உள்ளே நுழைக் கூடாது. ஒரு நிலத்தில் நிலத்தின் உரிமையாளர் இல்லாமலேயே சர்வே செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றால், 60 நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் தந்து விட்டு தான் நுழைய வேண்டும் என்கிறது.
1956சட்டம் 1988சட்டம் 2013சட்டம் எதையுமே தமிழக அரசாங்கம் கடைபிடிக்கவில்லை. சொந்த நாட்டு மக்களை, அவர்கள் ஏழைகள் என்பதால் சட்டங்களை தூக்கி எறிந்து விட்டு, அலட்சியமாக அணுகுகிறது; எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் விவசாயிகளின் நிலத்தின் உள்ளே நுழைகிறது; அச்சுறுத்துகிறது.
நிலம் வீடு வாழ்வாதாரம் பறிபோகிறதே என அழுது தவிக்கும் இந்த ஏழை விவசாயிகளுக்கு சட்டத்தின் வாய்ப்பு மறுக்கப்படுவதை கரிசனத்துடன் கவனித்து, உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து suomotto வழக்காக எடுத்துக் கொண்டு விசாரிக்குமா?
ஏழையின் குரல் அம்பலத்தில் ஏறுமா? சட்டத்தின் ஆட்சி நிலைக்குமா?
சந்திரமோகன், சமூக -அரசியல் செயல்பாட்டாளர்.
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..