கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டோர் பேச அழைக்கக்கூடாதென தமிழ்நாடு அரசின் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதை திரும்பப் பெற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில்,
பல்கலைக்கழகம் ,கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டவர்கள்களை பேச அழைக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும். கல்வி நிலையங்கள் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் தளங்கள். விடுதலைப் போராட்ட காலத்திலும் ,பின்னரும் இராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா போன்றோர் கல்லூரி ,பல்கலைக்கழகங்களின் நிகழ்வுகளில் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியுள்ளனர். சமகால அறிவினை இத்தகு அறிஞர்களின் கருத்துரைகளே வழங்கும்.எனவே தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கையினை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..