நடிகர் ரஜினிகாந்தின் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘காலா’. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் இந்தப் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் டீஸர் திங்கள்கிழமை வெளியாகவிருந்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஜெயந்திரர் மறைவை ஒட்டி, அவரை போற்றும்விதத்தில் காலா டீஸர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா செயல்பாட்டாளர் அருண், “ஜெயேந்திர சரஸ்வதிக்கும் காலாவுக்கும் என்ன என்ன தொடர்பு? ஶ்ரீதேவிக்காக காலா டீசரை தள்ளிவைத்தாலும் ஒரு நியாயம் இருக்கு, காஞ்சி மடாதிபதிக்காக ஏன்?” என கேட்டுள்ளார்.
சமூக-அரசியல் விமர்சகர் ராஜசங்கீதன், ராக்கெட் அறிவியலுக்கு எலுமிச்சை பழத்தை வைக்கிற முட்டாள்தனம் போன்றது தனுஷின் அறிவிப்பு என கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வந்த விமர்சனங்கள் சில இங்கே…