கந்துவட்டிக்காரர்களால் தமிழ் சினிமாவே தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு வரக்கூடும் என இயக்குநர் மீரா கதிரவன் தெரிவித்துள்ளார். சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார், அன்புச்செழியன் என்ற சினிமா பைனான்சியரின் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் தனது முகநூலில் எழுதியுள்ள பதிவு:
“அதிகாரவர்க்கம், அரசாங்கம் ஆள்வோரின் பெரும்புள்ளிகள், சினிமா அமைப்பின் தலைவர் என சகலரும் அவர் கையில். அவரை ஒன்றும் செய்ய முடியாது. கடவுளுக்கு அவரை தண்டிப்பது மட்டும் வேலை இல்லையே.”-அசோக்குமார்.
தமிழ் சினிமாவில் நான் பார்த்த அபூர்வமான நல்ல மனிதர்களில் அசோக்கும் ஒருவர். பார்க்குமிடங்கெளில்லாம் மீரா என்று சிரித்த முகமாய் அழைப்பார். தைரியாமானவர். கடைசியாக பார்ததது ஒரு பைனான்ஸியர் அலுவலகத்தில்.
நேற்று ஜீ.வி..இன்று அசோக்குமார்..நாளை யாரோ…? அமைப்புகளையும் அரசியல் அதிகாரங்களையும் கையில் வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு ஒரு முடிவு காண வேண்டும். இல்லையென்றால் தமிழ் சினிமாவே தற்கொலை செய்து கொள்ளும்….தமிழ் சினிமா இது போன்ற கந்துவட்டி மாபியாக்களாலும் அரசியல் கட்சிகளின் பினாமிகளாலும் தான் கட்டுப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த( தற்)கொலை ஒரு சாட்சியம்…