எளிதாக தொழில் தொடங்குகிற நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்: மோடி அரசின் விளம்பர பித்தலாட்டம்

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் 100 வது இடத்திற்கு முன்னேரியுள்ளதை மிகப் பெரும்சாதனையாக பாஜக அமைச்சர்கள் விளம்பரப் படுத்தி வருகிறார்கள்.

பத்திரிக்கைகளில் முழுப்பக்க விளம்பரங்கள்,நிதி அமைச்சரின் விளம்பரங்கள் என மிகவும் ஆடம்பரமான வகையில் ,போலியான கருத்துரவக்காத்தை மேற்கொள்ள மோடி அரசு முயற்சித்து வருகிறது.

உலக வங்கி வெளியிட்டு வருகிற இந்த பட்டியலில்.சென்ற ஆண்டில் 130 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஒரே ஆண்டில் (2016- ஜூன் முதலாக 2017 -ஜூன் )வரையிலான கால கட்டத்தில் முப்பது இடங்கள் முன்னேற்றம் பெற்றுள்ளது எவ்வாறு என்பதை சற்று நெருங்கி சென்றுப் பார்ப்போம் .

முதலில் உலக வங்கி வந்தடைந்துள்ள இந்த முடிவில்,சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்திற்கு பிந்தைய,வர்த்தக சூழலை கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை .ஏனெனில் ஜூன்-2016 முதல் ஜூன் -2017 வரையே உலக வங்கி கணக்கில் எடுத்துக் கொண்டது.மாறாக சேவை வரியோ ஜூலை -2017 முதலாக அமலக்கத்திற்கு வந்தது .

ஆக,நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் முடக்கி போட்ட,புதிதாக எந்த தொழிலளையும் தொடங்குவதற்கு மிகப்பெரிய தடை ஏற்பத்திய கோளாறான ஒற்றை வரி முறை அமலாலக்கதிற்கு பிறகு நிலைமை கீழாகியுள்ளதே எதார்த்த உண்மை.

இரண்டாவதாக,நாட்டு மக்ககளின் பணத்தை சூறையாடிய பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை உலக வங்கி கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.ஏனெனில் மற்ற நாடுகளில் ,சமகாலத்தில் இது போன்ற நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் இந்தியாவின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை விளைவை கவனத்தில் கொள்ளவில்லை எனக் கூறியுள்ளது

.எதார்த்தம் என்னவென்றால்,நாட்டில் புழக்கத்தில் இருந்த 86 விழுக்காட்டு ரொக்கப் பணத்தை ஒரே நாளில் செல்லாதது என அறிவித்து முடிவானது நாட்டின் ,சிறு குறு வணிகத்தையும் விவசாயத்தையும் சுத்தமாக நசுக்கியது.

ஆக,நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு துணைக் கராணமாக இருந்த மேற்கூறிய இரு முக்கிய முடிவை உலக வங்கி கணக்கில் எடுக்காமாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளது அபத்தமே !

சென்ற ஆண்டில் ,எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் 130வது இடத்தில் இந்தியா பின்தங்கியிருந்தது பாஜக உருவாக்கியிருந்த போலி பிம்பத்தின் மீது கல் வீசியது.

இதன் காரணமாக,உலக வங்கியின் இந்த ஆய்வு மீது பாஜக தீவிர அக்கறை செலுத்த தொடங்கியது.இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பையில் மேற்கொள்ளப்படுகிற ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகளுக்கு உலக வங்கி வருவதை தெரிந்த கொண்ட மோடி அரசு ,உலக வங்கி அதிகாரிகளை சந்திக்கிற முயற்சியை மேற்கொண்டது.

மகாராஷ்டிரா மாநிலத் முதல்வர் தேவேந்திர பெட்நாவிஸ் தலைமையிலான குழுவொன்று உலக வங்கி அதிகாரிகளை சந்தித்து பேசியது.குறிப்பாக (மும்பையில்) கட்டுமானத் துறையில் அனுமதி வழங்குவது தொடர்பாக உள்ள ஆவண நடைமுறை ,மின்சார தொடர்புக்கான அனுமதி நடைமுறை ஆகியவற்றிக்கு அதிக நாட்கள் ஆவதை உலக வங்கி சுட்டிக் காட்டியது.

இதன் அடிப்படையில் கட்டுமானத் துறையில் நடைமுறையில் உள்ள 42 அனுமயை 8 ஆக குறைத்தும்,9 நாட்களில் மின்சார இணைப்பு கிடைக்கிற வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.மேலும் கட்டுமானத்திற்கான கிலிரியன்சை 160 நாட்களில் இருந்து 60நாட்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இவை நடைமுறை படுத்தப் பட்டனவா எனத் தெரியவில்லை,மாறாக செய்தமாதிரி உலக வங்கி அதிகாரிகளிடம் பவர் பாயின்ட் பிரெசென்டேசன் போட்டு காட்டியது முதலமைச்சர் தலைமையிலான குழு.

இவ்வாறாக மும்பை நகரத்தின் கட்டுமானத் துறையில் சில திருத்தங்களை ஆவண ரீதியாக மேற்கொண்டு,உலக வங்கியின் பட்டியிலில் முன்னேற்றம் காட்டுகிற வேலைகளை திட்டமிட்ட கணக்கசிமாக செய்தார்கள்.

எகனாமிக் டைம்ஸ் இதழானது இது குறித்து விரிவாக எழுதுயிள்ளது.பார்க்க https://economictimes.indiatimes.com/…/article…/61428174.cms

இந்திய பொருளாதாரம் முட்டுச் சந்தில் முட்டி நின்றுகொண்டுள்ள சூழலில் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டு நாட்டை ஏமாற்றி வருகிறது மோடி அரசு.

ஆண்டுக்கு 1.2 கோடி பேர் வேலை வாய்ப்பு வேண்டி இந்திய நகரங்களில் அலைந்து வருகின்றனர்.தொழில் துறை முதலீடு அதள பாதாளத்தில் உள்ளது.நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளோ போதாமையாக உள்ளது.வங்கிகளில் வாராக் கடனோ ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்க்கான எந்த திட்டமும் இந்த அரசிடம் இல்லை.விவசாய உற்பத்தியும் சரிந்து வருகிறது .சேவை துறையை அடித்தளமாக கொண்டே அதிக ஜிடிபி வளர்ச்சி எனும் பிம்பத்தை காட்டியே காங்கிரஸ் போலவே மோடி அரசும் ஏமாற்றி வருகிறது.

மோடி ஆட்சிக்கு வந்த நாள் முதலாக எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வந்தது மட்டுமே இந்த அரசுக்கு சாதமாக இருந்த அம்சமாகும்.தற்போது அதுவும் முடிவுக்கு வருகிறது.இவர்களின் பொய் மூட்டைகள் மக்களிடம் அம்பலமாகிற நாள் வெகு தொலைவில் இல்லை!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.