பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் !

இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக நிலமைகள் மோசமாகிக் கொண்டு இருக்கின்றன; பொதுமக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து இடதுசாரி கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன .

வகுப்புவாத அடிப்படையில் மக்களை அணி திரட்டுவது கூர்மையாக நடக்கிறது ; பாராளுமன்ற ஜனநாயக நிறுவனங்களின் மதிப்பு குறைக்கப்படுகிறது ; ஜனநாயக உரிமைகள் மீதும் , குடிமை உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன.

எதேச்சதிகார முறையில், திடீரென்று பணமதிப்பு நீக்கத்தை பிரதம மந்திரி அறிவித்து ஓர் ஆண்டு ஆகிறது.இடதுசாரி கட்சிகள் எதிர் பார்த்தது போலவே இந்திய பொருளாதாரத்தின் மீதும் வெகுமக்கள் மீதும் சொல்லவொன்னா சுமைகளை இது சுமத்தி உள்ளது.பணமதிப்பு நீக்க நடவடிக்கை அதற்காக சொல்லப்பட்ட எந்த நோக்கத்தையும் நிறைவேற்றவில்லை. ஏறக்குறைய பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட எல்லா பணமும் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டது;அதனால் கறுப்பு பணம் நல்ல பணமாக மாற்றப் பட்டுவிட்து; ஒருவர் கூட இதனால் தண்டிக்கப்படவில்லை .கள்ளநாணயம் சட்டபூர்வமாக மாற்றப்பட்டுவிட்டது .
தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் என்று சொல்லப்பட்டதற்கு மாறாக இராணுவ வீரர்களும், பாதுகாப்பு படை வீரர்களும், பொதுமக்களும் தீவிரவாத தாக்குதல்களினால் உயிர் இழந்து உள்ளனர்.உண்மையைச் சொல்லப் போனால் ஊழலின் அளவு இருமடங்கு அதிகரித்து உள்ளது.

மறுபுறத்தில் மூன்றிலொரு பங்கிற்கு மேல் ஜி்டிபியில் முக்கிய பங்கு வகிக்கும் , 60 சத தொழிலாளர்களுக்கு வேலையளிக்கும் அமைப்புச்சாராத்துறை நிலைகுலைந்து உள்ளது . தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி குறைப்பு,நிலைகுலைந்துள்ள பொதுவிநியோக துறை, ஆதார் அட்டை மூலம் போடப்படும் நிபந்தனைகள் போன்ற காரணங்களால் மிக வறிய மக்கள் மேலும் அல்லல் படுகின்றனர்.

அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் விவசாயம், தொழில்துறை, சேவைத்துறை என மூன்று துறைகளும் மந்தமாகி உள்ளன. இது வேலையின்மையை அதிகரித்து, விவசாய நெருக்கடியை தீவிரப்படுத்தி உள்ளது.இளைஞர்கள் அதிகமாக இருக்கும் இந்தியாவில் அவர்களை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை; அவர்கள் சமூக ,பொருளாதார பாதுகாப்பின்மைக்கு ஆளாகி உள்ளனர்.விவசாயிகளின் தற்கொலை முன்னெப்போதும் இல்லாத விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.இதனால் கிராமப்புறங்களில் விவசாய நெருக்கடி முற்றி மக்களின் வாழ்க்கைத்தரம் குலைந்துவிட்டது.பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது.

பன்னாட்டு நிறுவனங்களின்,உள்நாட்டு முதலாளிகளின் நலனை பாதுகாக்கின்றன வகையில் அரசினுடைய கொள்கைகள் அமைகின்றன என்பதை இது நிரூபிக்கிறது.இதனால் சாதாரண மக்கள் பாதிப்பு அடைகின்றனர்.
இந்த நாட்டு பொருளாதாரத்தையும், வெகுமக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் மத்தியிலும் ,மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 8 ம் நாள் அன்று கண்டனநாள் என அனுசரிக்க உள்ளனர்.

மோடி அரசாங்க மானது , 2014 ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிப்படி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் , உற்பத்தி செலவைவிட ஒன்றரை மடங்கு அதிகம் இருக்கும் வகையில் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், ஆண்டுதோறும் இரண்டு கோடி போருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்; அதாவது பாஜக ஆட்சிக்காலத்தில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு.

எப்படிப்பட்ட போராட்ட முறையை முடிவு செய்வது என்பதை நாடு முழுவதும் உள்ள இடதுசாரி கட்சிகளின் அந்தந்த மாநிலக்குழுக்கள் முடிவு செய்யும். அனைத்து மக்களும் திரண்டு வந்து இந்த அரசுக்கு எதிராக , அதனுடைய கொள்கைகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கேட்டுக் கொள்கின்றன. ஜனநாயக, மதச்சார்பற்ற மக்களும், கட்சிகளும், இயக்கங்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் சேரவேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கேட்டுக் கொள்கின்றன.

CPM/CPI/CPI(ML)/RSP/AIFB/SUCI கூட்டறிக்கை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.