தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாஜக அரசு எள் என்று சொல்லி முடிக்கும் முன்பே அதிமுக அரசு எண்ணெய்யாக செயல்படுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்ததார். இந்த செய்தி வந்த நாளிதழை மேற்கோள் காட்டி பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், இந்த செய்தி உண்மையானால் தமிழகம் வளர்வதற்கு முதல் படி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் என்பதை பார்க்காமல், பாஜக அரசு சொல்வதை அதிமுக அரசு கேட்கிறது என்பதாக எஸ். வி. சேகர் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது. சேகர் ஆதரவாளர்களோ, நெடுவாசல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழக கைது செய்திருப்பதைத்தான் எஸ்.வி,சேகர் சொல்கிறார் என்கிறார்கள்.