தமிழக அரசியல்வாதிகளுக்கு பதில் சொல்ல நானே போதும்; தரம்தாழ்ந்து சுவரொட்டி ஒட்டி வீண்செலவு செய்ய வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அறிவுறுத்தலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கமர். அதில்,
“தரந்தாழாதீர்.வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை இவருக்கு பதிலளிக்க நானே போதும்” என கூறியுள்ளார்.
முன்னதாக கமல் ரசிகர்கள் சிலர் கமலை விமர்சிக்கும் அரசியல்வாதிகளை ’நீங்கள் கட்ட வேண்டியது எட்டு முழு சேலை’ என குறிப்பிடும்படியான போஸ்டர்களை மதுரை ஒட்டியிருந்ததாக செய்தி வெளியாகி இருந்தது.