தமிழகத்தில் தான் அரசு பேருந்துகள் அதிகளவு இயக்கப்படுகின்றன. சிறிய கிராமம், மலைப்பகுதி என அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் 23 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் தமிழக போக்குவரத்து துறையில் கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 2600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றும் இந்தத் துறை 24 மணி நேரம் பொதுமக்களுக்கான சேவையை வழங்கி வருகிறது. இதில் வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்க அரசு ஆண்டுக்கு ஒரு முறை நிதி ஒதுக்குவது அவசியம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.