மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சமீபத்தில் போயஸ் இல்லம் சென்றிருந்தார். அப்போது போயஸ் இல்லத்தில் தன்னையும் தன் கணவரை சிலர் தாக்கியதாக தெரிவித்திருந்தார். மேலும் தன் அண்ணன் தீபக் வேண்டுமென்றே தன்னை வரவழைத்து கொல்ல முயற்சித்ததாகவும் ஜெயலலிதாவை சசிகலாவுடன் சேர்ந்து கொல்ல தீபக் உடந்தையாக இருந்ததாகவும் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். ஊடகங்களில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. போயஸ் இல்லத்திலிருந்து வெளியே வந்தபோது பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட தீபாவின் படத்தை முன் அட்டையில் போட்டு ‘நான் தான் சொப்பனசுந்தரி, என்னை யாரு வெச்சிருக்கா?’ என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளது குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை.
குமுதம் ரிப்போர்ட்டரின் இந்த அட்டைப்படத்துக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுப்பப்பட்டு வருகிறது.