கூவத்தூர் எம் எல் ஏக்கள் பேரம்; பரபரக்கும் சமூக ஊடகங்கள்!

எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு கோடிகளில் பணம் கொடுக்கப்பட்டதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டிங் ஆபரேஷன் மூலம் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. சரவணனிடம் பேரம் பேசியது குறித்து எடுக்கப்பட்ட வீடியோதான் சமூக ஊடகங்களில் இன்றைய டாபிக்!

சரவணன் அந்த வீடியோவில் எம் எல் ஏக்களை எப்படி சசிகலா அணியினர் பேரம் பேசினர் என்றும் 3 எம் எல் ஏக்களுக்கு மட்டும் ரூ. 10 கோடி பேரம் பேசப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். சரவணின் பேச்சு குறித்து முகநூலில் வெளியான சில கருத்துகள்…

saravanan chandran: மிடிலை. அப்புறம் கூவத்தூரில் சத்தியா கிரகமா இருந்தார்கள்? பெட்டியும் ரொக்கமும் தங்கமும் பாட்டிலும் கட்டிலும் கலந்து வாழ்வாங்கு வாழ்ந்தது தெரியாதா என்ன? வேற எடத்துக்கு நகந்துட்டாங்க பாஸ்! இதெல்லாம் ரெம்பப் பழசு. எங்க ஒரு ஓவாவ பிடிங்க பாப்போம். புதிதாக டுவிஸ்ட் இருக்கா சொல்லுங்க?

கருப்பு கருணா:

தெய்வமே…தெய்வமே…
நன்றி சொன்னேன் தெய்வமே..
வாங்கினேன்…வாங்கினேன்..
பத்து கோடி தெய்வமே…

அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்…ச்ச்சே!

Rajarajan RJ:

கருணாஸ், தனியரசு, தமீம் அன்சாரி ஆகியோருக்கு கூவத்தூர் தீர்மானத்தில் பத்து கோடி கொடுக்கப்பட்டது! இவர்கள் தனிநபர்களாக இல்லாமல் தங்கள் சமூகத்தின் லாபியிஸ்டுகளாக இருந்ததால் விலை அதிகம் போல. #MLAsForSale

பிரதாபன் ஜெயராமன்:

ஆண்டபரம்பரையை 10 கோடிக்கு அடகு வைத்த கருணாஸ், தனியரசு

#MLAsForSale

Swara Vaithee:

இன்னும் கொஞ்ச நாளைக்கி பிரேக்கிங் நியூஸா போட்டு கொல்லப்போறாய்ங்க.

அது நம்மள நோக்கி தான் வருது
எல்லாரும் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க. 🏃🏃🏃

koovathur

Ezhil Arasan:

கன்டெய்னர் ரோட்டுலேயே நின்னுச்சு..அது என்னாச்சுனு யாரும் கேக்கல..இப்ப புலனாய்வு ஒன்னுதான் குறைச்சல்..

Vinayaga Murugan:

டைம்ஸ் நவ்வை பார்த்தால் இந்த ஆட்சியை கலைச்சுடுவாங்க போலிருக்கே. நம்ம ஸ்கூட்டி என்னாகுறது?

Saravanan Savadamuthu: 

ஆட்சிக் கலைப்புக்கு தோதான ஒரு அயிட்டம் இப்பவே மோடி மஸ்தான் கைல சிக்கியிருச்சு.. பார்த்துக்கிட்டேயிருங்க.. வைச்சு செய்யப் போறாரு மோடி என்னும் கேடி..

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்கப் போன வழக்குன்னு சொன்னவுடனேயே விழுந்தடிச்சு கேஸை போட்டு தூக்கி உள்ளார வைச்சாங்களே.. அது மாதிரி இதுவும் சீக்கிரமா ஒர்க்கவுட்டு ஆகும்ன்னா நினைச்சீங்களா..? ஆகவே ஆகாது..!

ஜனாதிபதி தேர்தல் முடிஞ்சவுடனேதான் இந்தப் பிரச்சினையை கேடியும், ஜெட்லியும் இதை கைல எடுப்பாங்க.. அதுவரைக்கும் ஊறப் போடுதல்தான்..!

Bala G:

இதுல கவனிக்க வேண்டியது என்னனா.. மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு அப்புறம் தான் இவ்வளவு அமவுண்டு கொடுத்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கிருக்காங்க..

அவ்வளவுதான் மோடியின் அந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் லட்சணம்.. 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.