பாபரும் அக்பரும் வெளியாட்கள் என்றால் கைபர் கனவாய் வழியாக வந்தவர்கள் இந்தியக் குடிமக்களா மிஸ்டர்.யோகி?….

அக்பர் , பாபர், ஒளரங்கசீப் போன்ற முகலாயர்கள் அனைவரும் வெளியிலயிருந்து வந்து இந்தியாவை ஆண்டார்கள் – உபி முதல்வர் யோகி

தல சொல்லும்போது எல்லாத்தையும் தெளிவா சொல்லணும்…. அப்பதானே மக்களுக்கு புரியும்…

பாபரும் அக்பரும் வருவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே ஒரு கூட்டம் கைபர் கனவாய் வழியாக மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தது….

இந்த மண்ணின் பூர்வ குடி மக்களை மாயம் மந்திரம் வேதம் என்று சொல்லி தங்களுக்கு அடிமைகளாக மாற்றியது….

இந்த மண்ணை ஆண்டுவந்த பல குறுநில மன்னர்களையும் தங்கள் மாய மந்திரத்தால் வளைத்துபோட்டது…. தங்களின் சொல்லுக்கு ஆடும் மூடர்களாக பல மன்னர்களையும் முடக்கி வைத்திருந்தது….

இப்படியே ஆளுக்கு கொஞ்சமா பிரிச்சு வச்சு அடித்துக்கொண்டு இருந்த இரத்த பூமியாக இருந்தது இந்த பூமி….

பாபரும் அக்பரும் அவுரங்கசீபும்…. இந்த பூமியில் பல குறுநில மன்னர்களோடு போரிட்டனர்… பலரோடும் உடன்படிக்கை ஏற்படுதிகொண்டன்ர்…
சிதறுண்டு சின்னாபின்னமாக கிடந்த இந்த மாபெரும் நிலபரப்பை ஒரு உன்னத தேசமாக உருவாக்கியவர்கள் அவர்கள்தான்…

தங்கள் அரசவையில் அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கினர்… சமத்துவத்தை நிலை நாட்டினர்…. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மண்ணிலேயே வாழ்ந்து மடிந்து மண்ணோடு கலந்தனர்…. இந்த தேசத்தை எந்த அந்நியனுக்கும் காட்டி கொடுக்கவும் இல்லை…

ஆனால் இவர்களுக்கு பின் வந்த ஆங்கிலேயர்களுக்கு இந்த தேசத்தை காட்டிக் கொடுத்து யாரென்று நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்….

அப்படிப்பட்ட வழிவந்தவர்கள் தற்போது எங்களுக்கு தேசபக்தி குறித்து பாடமெடுத்தால்…  காரி உமிழ்வதை தவிர வேறு என்ன செய்யமுடியும் யோகி அவர்களே…?????

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.