”எழுத்தாளர் பெருமாள் முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!” என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலை தடை செய்யக்கோரி நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலை முன்பு கொங்கு மக்கள் முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாவலை தீயிட்டு கொளுத்தப்பட்டது. மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன்சம்பத் பேசுகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அர்த்தநாதரிஸ்வரர் கோவிலின் வழிப்பாட்டு கலாச்சாரம் மற்றும் குறிப்பிட்ட சமுதாய பெண்களையும் இழிவுப்படுத்தி எழுதியுள்ள மாதொருபாகன் நாவலின் ஆங்கில பதிப்பை தடை செய்திட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நாவலுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதினை திரும்ப பெறவேண்டும் மேலும் நாவலை எழுதிய பெருமாள் முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.