அதிமுக அம்மா அணியின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் டிடிவி தினகரன் ஆளுமை மிக்கவர் எனவும் கருணாநிதி, வைகோ, ஜெயலலிதாவைக் காட்டிலும் ஜனநாயகவாதி எனவும் தெரிவித்தார்.
மதிமுகவிலிருந்து விலகி அதிமுக சேர்ந்தபோது கருப்புத்துண்டு அமங்கலம், அதை எடுத்துவிடுங்கள் என ஜெயலலிதா சொன்னதாக பேட்டியில் தெரிவித்தார் நாஞ்சில் சம்பத்.