புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான ‘கபாலி’: ரஜினிகாந்த் கடிதம்!

சமீபத்தில் வெளியான தனது ‘கபாலி’ படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அதில்,

“என்னை வாழவைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள். ‘லைக்கா’ தயாரிப்பில் திரு. ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் ’2.0’ மற்றும் நண்பர் தாணு அவர்களின் தயாரிப்பில் பா. ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான மலேசியாவிலும் இந்தியாவிலும் எடுக்கப்பட்ட ‘கபாலி’ படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததன் காரணமாக கொஞ்சம் உடம்பிற்கும், மனதிற்கும் ஓய்வு தேவைப்பட்டது. அதையொட்டி இரண்டு மாதங்கள் என்னுடைய புதல்வி ஐஸ்வர்யா தனுஷ் அவர்களுடன் ஓய்வு எடுத்தும், மருத்துவ பரிசோதனைகள் செய்துகொண்டும், நலமாகவும், ஆரோக்கியமாகவும் மிக உற்சாகத்துடனும் தாய் மண்ணிற்கு திரும்பிய எனக்கு ‘கபாலி’ படத்தின் மிகப் பெரிய வெற்றிச் செய்தியை அமெரிக்காவில் கேள்விப்பட்டதை இன்று நேரடியாக பார்த்து, உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன்.

rajini letter 2

இப்படத்தை தயாரித்த என்னுடைய நெடுங்கால நண்பர் தாணு அவர்களுக்கும், எழுதி இயக்கிய பா. ரஞ்சித் அவர்களுக்கும், அவருடைய குழுவினர் அனைவருக்கும் சக நடிக நடிகையர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப் படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக்கிய என்னுடைய அன்பு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் முக்கியமாக தாய்மார்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தலைவணங்கி என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி” என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

One thought on “புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான ‘கபாலி’: ரஜினிகாந்த் கடிதம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.