கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3 சதவிகித தனி இடஒதுக்கீடு கோரும் திருநங்கைகளின் கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்வுகளில் ஆண்கள் பிரிவில் திருநங்கைகளை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரித்த நீதிமன்றம், இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆறு மாதங்களில் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டது.