சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தெளுங்கனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் 6 வயது மகள் தர்ஷினி, சனிக்கிழமை இரவு காணாமல் போனார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரின் வீட்டில், பூஜை அறையில், பாத்திரம் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுதொடர்பாக ராமனும், அவரது 15 வயது பேரன் திருமூர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டின் பேரில், 5 மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்களால் ராமன் விரட்டி அடிக்கப்பட்டதாகவும் சம்பவம் நடந்த அன்றுதான் அவர் மீண்டும் அப்பகுதிக்கு வந்துள்ளார்.