தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அதிமுக வேட்பாளரான அமைச்சர் வைத்திலிங்கம், நேற்று முன்தினம் தென்னமநாடு கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது கோபி என்ற காவலர்,
அப்போது அதே ஊரைச்சேர்ந்த போலீஸ்காரர் கோபி, நீங்கள் அமைச்சராகி 5 வருடம் பதவியில் இருந்தீர்கள்… பல முறை எம்.எல்.ஏவாக இருந்தீர்கள் இந்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள், ரோடு கூட சரியாக இல்லை என ஆவேசமாக பேசிய கோபி, ரோட்டை நீங்களே பாருங்கள் என்று கூறினார். இதனால் வைத்திலிங்கமும் அங்கு திரண்டிருந்த அதிமுகவினரும் அதிர்ச்சியடைந்தனர். சில அதிமுகவினர் கோபியை கீழே பிடித்து தள்ளினர். அப்போது சிலர் கோபியை சரமாரி தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த கோபி தனது காலில் கிடந்த செருப்பை கழற்றி வைத்திலிங்கம் மீது வீசினார். அது அமைச்சர் மீது பட்டு கீழே விழுந்தது.
அதிமுகவினர் அடித்தது குறித்து ஒரத்தநாடு காவல்நிலையத்தில் கோபி புகார் அளித்தார். ஆனால் அவரது புகாரை வாங்க மறுத்துள்ளனர். அமைச்சர் மீதான தாக்குதலின் விளைவாக திருவோணம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த கோபி, திடீரென ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த கோபி மண்ணெண்ணை குடித்து, தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.