திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி- தமாகா வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை காலை தஞ்சாவூருக்கு வருகை தந்தார். மிக எளிமையாக வந்திறங்கிய அவரை கூட்டணிக்கட்சியினர் வரவேற்றனர்.
தஞ்சாவூரில் தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கிய மாணிக் சர்க்கார், “மாற்று அணியை ஆதரியுங்கள். திமுக, அதிமுக தலைமைகள் நிறைய பேசுகிறார்கள். ஆனால் எதையும் செய்யவதில்லை. எங்களுடைய கோரிக்கையெல்லாம் ஒன்றுதான். ஒரு வாய்ப்பு கொடுங்கள். குறிப்பாக இளைஞர்களிடம் இதைக் கேட்கிறேன்” என்று பேசியிருக்கிறார். வீடியோ இணைப்பு கீழே…
உங்களுடைய எளிமைக்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, மாணிக் சர்க்கார் “என்னுடைய கட்சிதான் எனக்கு எளிமையைச் சொல்லிக்கொடுத்தது என்கிறார். வீடியோ கீழே…