தாங்கள் நடத்தும் கருத்து கணிப்பை பிரமிப்புடன் மக்கள் பார்ப்பதாக தினமலர் முதல் பக்க செய்தி வெளியிட்டிருக்கிறது.
“தமிழக வாக்காளர்களின் மனநிலையை படம் பிடித்தும் காட்டும் விதமாக, ‘தினமலர்’ நாளிதழும், ‘நியூஸ் 7’ தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள், அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முதல் முறையாக, மிக பிரம்மாண்ட அளவில் நடத்தப்பட்ட, இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் பிரமிப்பை ஏற்படுத்துவதாக, பொது மக்களும், கட்சி சாராதோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்”
இந்தச் செய்தி தினமலர் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதற்கு வாசகர்கள் அளித்த நிஜ ‘பிரமிப்பு’களில் சில இங்கே…
Premkumar – Chennai,இந்தியா
நானும் கட்சி சாராதவன் தான் என்னிடம் இந்த கருத்து கணிப்பு வரவேற்பை பெற வில்லை. உங்களது கருத்து கணிப்புகள் நம்பும் படி இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அது உங்களுக்கும் நன்கு தெரியும். எது எப்படியோ நான் தினமலர் மேல் வைத்து இருந்த நன் மதிப்பு போய் விட்டது,இந்த கருத்து கணிப்பின் முடிவு தினமலர் நாளிதழின் தனி தன்மையை சீர் குழைத்து விட்டது.எப்பொழுதும் நடு நிலைக்கு பேர் போன நீங்கள் இன்று நடு நிலை தவறி இருக்குறீர்கள். சமூகப் பொறுப்புணர்வுடன் நீங்கள் செயல்படவில்லை, செயல்படத் தயாராக இல்லை. ஜனநாயகத்தின் ஐந்தாம் தூண் உங்களைப் போன்றவர்களின் செயலால் உடைந்து நொறுங்கிவிட்டது. தேர்தல் முடிவுகள் உங்கள் கருத்து கணிபுகளோடு முற்றுலும் மாறுபடும் போது நீங்கள் நிச்சயம் தவறான கணிப்புக்காக வருத்தம் தெரிவிக்க நேரிடலாம். ஒட்டு மொத்தத்தில் இந்த கருத்து கணிப்பை தினமலர் நடத்தி இருக்க தேவை இல்லை.
Ramaswamy Sundaram – Mysore,இந்தியா
அன்பரே…சம்மட்டி அடி கொடுத்து இருக்கிறீர்கள்….உண்மையான தினமலரின் வாசகன் என்ற முறையில் வெட்கத்தால் என் தலை கவிழ்கிறது….இந்த உலகில் பணம் தான் பிரதானமா? உண்மைக்கும் மனசாட்சிக்கும் மதிப்பே இல்லையா? ஐயகோ…
Sugu Maran – chennai,இந்தியா
மேற்படி கருத்து கணிப்பை கவனித்தால் ஒன்று தெரிகிறது. அது இந்துத்வா கட்சி (பி.ஜே.பி.) பா.ஜ.க. குறிப்பிட்ட சதவிகிதத்தில் வாக்கு பெற்றிருப்பதாக தெரிவிக்கிறது. தினமலரையும் இந்துத்வாவையும் பிரிக்க முடியாதுபோல .
rajasekar – abbasiya,குவைத்
என்னாது … வரவேற்ப்பா….. அவனவன் தினமலர கழிவி கழிவி ஊத்துறது தெரியலையா…?
சிவகுருநாதன் பல்லடம் – Palladam
இந்தியா பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழியை தினமலர் உறுதிபடுத்தி உள்ளது. அது எவவளவு என்று சொன்னால் போதும். நேரடியாக இல்லாவிட்டாலும், டீக்ககடை பெஞ்சு, கிசுகிசு என்றாவது சொல்லிவிடுங்கள். பணம் பண்ணுவதற்கு எத்தனை எத்தனை வழிகள், அடேங்கப்பா……ரூம் போட்டு யோசித்தீர்களா…..
Santhosh Gopal – Vellore,இந்தியா
ஐயா poompattinaathan , உங்கள் கருத்தில் பல தவறுகள் உள்ளது. செங்கோட்டையன் தோற்கடிக்க முடியாதவரா என்ற எதிர் கேள்வி கேட்டுள்ளீர்கள். ஆமாம் செங்கோட்டையன் தோற்கடிக்க முடியாதவர் தான். நீங்கள் கோபி தொகுதியின் தேர்தல் வரலாற்றை இணையத்தில் பாருங்கள். அதிமுக தோற்றபோது கூட செங்கோட்டையன் வெற்றி பெற்றே வந்துள்ளார். 2006 ல் கூட செங்கோட்டையன் அமோக வெற்றி பெற்றார். 2011 ல் 40 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எதிர்ப்பு அலை பலமாக இருந்த காலத்திலேயே செங்கோட்டையன் வெற்றி பெற்று வந்துள்ளார். இது வரை கோபி தொகுதியில் 8 முறை வெற்றி பெற்று வந்துள்ளார், அமைச்சர் வேறு அவருக்கு பலம், தொகுதியில் நன்கு அறிமுகமானவர். அவர் எப்படி தோற்பார்? கோபி தொகுதி மாதிரி தான் பொள்ளாச்சி தொகுதியும். எப்படி குமரி மாவட்டம் விளவங்கோட்டில் அதிமுக வெற்றி பெறவே முடியாதோ, அதே போல கோபி, பொள்ளாச்சி மற்றும் இதர கொங்கு மண்டல தொகுதிகளில் திமுக வெற்றி பெறவே முடியாது. இப்போது அதிமுக மீது எதிர்ப்பு அலை இல்லாத தேர்தல் நடைபெறுகிறது, இப்போது எப்படி இந்த தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெரும் என்று கொஞ்சம் விளக்குங்கள்.
Kumar Saranathan Parthasarathy – Chennai,இந்தியா
உங்கள் கருத்துக் கணிப்பை பல வாசகார்கள் ஏற்கவில்லை
Cheran Perumal – Radhapuram,இந்தியா
மற்ற தமிழ் நாளேடுகள் மிரட்டலுக்கு பணிந்து விட்டன. தினமலர் மட்டும் பணியவில்லை என்று கருணா கூறியுள்ளார். அந்த மிரட்டலுக்கு பதில்தான் இந்த கணிப்பா?
ramani – chennai ,இந்தியா
இந்த முறை ஆளும்கட்சி மீது அதிருப்தி எதுவும் இல்லை. அது தவிர ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கும் மாணவர்களுக்கும் ஏராளமான சலுகைகளும் இலவசங்களும் தரப்பட்டுள்ளன. அதிக அளவில் ஓட்டு சாவடிக்கு செல்பவர்களும் அவர்கள் தான். அப்படி இருக்கையில் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க அவர்களுக்கு என்ன அவசியம் வந்தது என்பது தெரியவில்லை. கருத்து கணிப்பு முடிவுகள் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன.
suresh – abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
இது உண்மையான கருத்து கணிப்பு போல தெரியவில்லை. பல இடங்களில் dmk வெற்றி பெறும் என்ற தோற்றத்தை இது காட்டுகிறது. இந்த கருத்து கணிப்பு பொய் என்று மே 19 ல் தெரிந்து விடும்.
Tamil Selvan – Chennai,இந்தியா
சுட்ட தேர்தல் அறிக்கைக்கே இவர்கள் ஆட்சியை பிடிப்பார்கள் என்றால், ஒரு வேளை சுடாத தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தால் நினைத்து பார்க்கவே முடியவில்லை. ஒரு வேளை 234 தொகுதிகளையும் அல்லவா முன்னிலை என்று வந்து இருக்கும்???…
தீப்பொறி – Bengaluru,இந்தியா
நடுநிலை ( என்றால் என்ன என்று கேட்கும் ) தவறாத தினமலரின் கருத்து திணிப்பு , மிகச் சிரிப்பாக இருக்கிறது என, பொது மக்களும், கட்சி சார்ந்தவர்களும் & சாராதவர்களும் வரவேற்றுள்ளனர்.
nallavan – chennai,இந்தியா
அது என்ன செல்லத்தக்க ஒட்டு, செல்லாத ஒட்டு, நீ என்ன election கமிஷனா ?, அ.தி.மு.க ஒட்டெல்லாம் செல்லாத ஒட்டு, தி.மு.க ஒட்டுல்லாம் செல்லத்தக்க ஒட்டு, மே19, C – voter பேர தினமலர் வாங்கபோகுது, உண்மையிலே நீ சொல்லுவது போல தி.மு.க கு அதரவு ந, எதுக்கு இவளோ எதிர்ப்பு கருத்துகளும், எதிர்ப்பு கருத்துகளுக்கு ஆதரவும் வருது, எது எப்படியோ, இப்போ இனிமே தி.மு.க வரகூடாது நு நினைக்குற எல்லாரும் ஒன்னு சேந்து அ.தி.மு.க கு ஒட்டு போடா போறான், உதவி செய்றதா நனைச்சி தி.மு.க கு அப்பு வச்சிடின்களே
anuraju – chennai,இந்தியா
so many media and organisation are taking opinion polls. But why all opinion polls or not same ? தினமலர் கரி பூசிக் கொள்ளப் போகிறது மே 19ம் தேதி.
Madhu Soodhanan – Jabalpur,இந்தியா
வாசகர்களின் பிரமிப்பை பார்த்தாலே தெரியுது உங்களுடைய கணிப்பு எவ்வளவு துல்லியம் என்பது அணைத்து வாசகர் கருத்தையும் படித்துவிட்டேன் 85% எதிர்ப்பு 15% ஆதரவு உங்கள் கணிப்பிற்கு இதுதான் உண்மையான கணிப்பு தேர்தல் முடிவும் இதுதான் இதில் கூற்று என்னவென்றால் வைகுண்டராஜன் யார் என்று சொன்னதே தினமலர் தான் இன்று அவர் நடத்தும் சானலுடன் கணிப்பு தயவு செய்து மிச்சம் இருக்கும் கணிப்பை வெளியிடவேண்டாம் உங்களின் மிச்சம் இருக்கும் மரியாதையை காப்பாற்றி கொள்ளலாம்
maran – madurai,இந்தியா
திருமங்கலம் தொகுதியில் தி மு க தோற்கும் என்றே காங்கிரசுக்கு தள்ளி விட்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் மணிமாறன் மாவட்ட செயலாளர் சொந்த தொகுதியை விட்டு நிற்கிறார். கள்ளிகுடி மற்றும் கல்லுபட்டி ஒன்றியம் முழுக்க இன்னும் எம் ஜி ஆர் இரட்டை இலை சின்னத்தை யாராலும் மாற்ற முடியவில்லை ( சேடபட்டி முத்தையா ) பிறகு எப்படி திமுக ஜெயிக்கும் மேலும் திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை கிழக்கு இரண்டுமே தவறாகத்தான் உள்ளது . இந்த ஒரு முடிவே தினமலரின் தரத்தின் நடுநிலைமையை இழந்து விட்டது .நான் 30 வருடங்களாக தினமலர் படித்தும் தினமும் வாங்கியும் வருகிறேன் . இனிமேலும் வாங்கலாமா படிக்கலாமா என முடிவு செய்ய வேண்டும் போல் உள்ளது உங்களது கருத்து கணிப்பு.