யோகா குரு, பாபா ராம்தேவ், “பாரத் மாதா கி ஜெய் என சொல்லாதவர்களின் தலையை வெட்டுவோம். ஆனால் இங்கே சட்டத்தையும் அரசியலமைப்பும் நாம் மதிப்பதால் அதை செய்யவில்லை. இல்லையென்றால் இங்கே ஒருவருடைய தலையை அல்ல, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கானவர்களின் தலையை வெட்டி வீசியிருப்போம்” என ஆர் எஸ் எஸ் ஏற்பாடு செய்திருந்த சத்பாவ்னா சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது தெரிவித்திருக்கிறார். சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஹரியாணாவில் நடந்தது.
முன்னதாக, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “யாரெல்லாம் பாரத் மாதா கி ஜெய் சொல்லவில்லையோ அவர்கள் இந்த நாட்டில் வாழ உரிமையில்லை” என்று தெரிவித்திருந்தார்.