ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்
பிரெஞ்ச் படத்தை இந்திய மொழியில் தயாரிக்கும் உரிமையை கரண் ஜோகர் வாங்க, அதை PVP நிறுவனம் தெலுங்கு தமிழ் உரிமை வாங்கி தோழா படம் எடுத்துஇருக்கிறார்கள். இன்ஸ்பைரேஷன் என்று சொல்லி மற்ற இயக்குனர்கள் போல் திருட்டுவேலைசெய்யவில்லை. இவர்களின்”நேர்மை”யை தொழில் தர்மத்தை நான் பாராட்டுகிறேன். உரிமை வாங்கி பண்ணுகிறோம் என்பதால் “ஈ”யடிச்சான் காப்பி அடித்து இருக்கிறார்கள்.
ஆங்கில படத்தில் உள்ள அத்தனை செட் ப்ராபர்ட்டியும் வாங்கியதுபோல் எதையும் மாற்றாமல் கார்த்தி அந்தப் படத்துல கொஞ்சமாதான் சிரிக்கிறார். நீங்க அப்படியே பண்ணினா போதும்னு எடுத்து இருக்காங்க. அந்தப்படத்துல சாப்பிட்ட தட்டு கூட இந்த படத்துல வருதுப்பா, சூப்பர் இல்லே!
ஆனால் ஆங்கில படத்தில் முக்கியமா சொன்னது “நிறவேற்றுமை”ஒரு வெள்ளைக்காரனுக்கும், கறுப்பனுக்கும் இடையேயான பாசப்பிணைப்பு அதனாலதான் ஆங்கிலத்தில் படத்தலைப்பு கூட தீண்டாமை எனும் பொருள் வரும்படி untouchableனு பேர் வச்சிருப்பாங்க. எப்பேர்பட்ட பதிவு நிறவேற்றுமையினால் வரும் தீண்டாமை குறித்து பேசுவது?
தமிழ்ல எடுத்த புண்ணியவான்களே இஙக இருக்கிற தீண்டாமை குறித்து அருமையான பதிவா இப்படத்தை பண்ணி இருக்கலாம்ல? ஆந்திராவில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. தமிழ்நாட்டில் தலித் கொடுமைகள் இன்னமும் தோடர்ந்து கொண்டேதானே இருக்கிறது? படத்தின் ஜீவனே தீண்டாமை அதை கொலை செய்துவிட்டு அப்படியே நாங்க ஆங்கில படங்களை எடுத்துட்டோம்னு தயவு செய்து குதிக்காதீங்க. அருமையா சாப்பாடு சமைச்சு அத்தனையிலும் உப்பு போடாம வச்ச மாதிரி சொதப்பிட்டீங்களே ! மிக அருமையான படம் untouchable!
ஜி. விஜயபத்மா, எழுத்தாளர் இயக்குனர்.